Saturday, December 31, 2011

Happiest 2012!!!!!!!


வாழ்க வளமுடன்! என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....................

Thursday, December 22, 2011

கோ-யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு தனது மூலதிரிகோணத்திலும், 2ம் அதிபதி அந்த குருவுடன் இணைந்தும் அமைந்து, லக்கினாதிபதி உச்சம் பெற்று நின்றால் அந்த அமைப்பிற்க்கு கோ-யோகம் என்று பெயர்.
      இந்த அமைப்பை பெற்ற‌வர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராவார். அவரிடம் எக்கச்சக்கமான செல்வங்கள் குவிந்திருக்கும், அவர் அனைவராலும் மதிக்கப்படுவார். 

Sunday, December 18, 2011

மகுட யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு லக்கினத்திற்க்கு 9ம் அதிபதி இருக்கும் இடத்தில் இருந்து 9ல் அமர்ந்து, அதே குரு இருக்கும் இடத்தில் இருந்து 9ல் ஒரு நல்ல கிரகம் அமைந்து, சனி லக்கினத்திற்க்கு 10ல் அமர்ந்தால் இந்த யோகத்திற்க்கு மகுட யோகம் என்று பெயர்
      இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் மனித சமுதாயத்திற்க்கு மிகவும் சக்திவாய்ந்த‌ தலைவனாக இருப்பார்கள். கெட்டவைகளை அழித்து நியாயத்தை நிலை நாட்டுவார்கள்.

Wednesday, November 30, 2011

கலாநிதி யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு இரண்டாமிடத்திலோ, 5ம் இடத்திலோ அல்லது 9ம் இடத்திலோ இருந்து அதனுடன் சுக்கிரனும் புதனும் இனைந்திருந்தாலோ அல்லது அப்படி அமைந்த குருவை சுக்கிரனும் புதனும் பார்த்தாலோ அதற்கு கலாநிதி யோகம் என்று பெயர். இது மூன்று சுபகிரகங்களால் ஏற்படும் மிகச்சிறந்த ராஜ யோகமாகும். இதில் குரு, புதன், சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றால் சிறப்பு இன்னும் கூடுதல்.....
      ஜாதகத்தில் கலாநிதி யோகம் அமையப் பெற்றவர்கள், நீண்ட ஆயுளுடன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில், மரியாதைக்குறியவர்களாக, மிகநல்லவர்களாக, எல்லாவித சுக செளக்கியங்களை அனுபவிப்பவர்களாக, நோயற்றவர்களாக இருப்பர்.

Friday, November 18, 2011

பாரிஜாத யோகம்


      ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியோ அல்லது லக்கினாதிபதி நவாம்சத்தில் அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியோ ராசியில்(இதில் ஒருவரோ அல்லது இருவருமே இணைந்தோ) கேந்திரத்திலோ, கோணத்திலோ அல்லது உச்சம் பெற்றோ அமர்ந்திருந்தால் அதன் பெயர் பாரிஜாத யோகமாகும்
      இந்த மாதிரி அமைப்புடைய ஜாதகர் தன்னுடைய மத்திம வயதிற்க்கு மேல் சுகபோகங்களை அனுபவிப்பராக இருப்பார். அவருக்கு அரசு அரசாங்க மரியாதைகள் கிடைக்கும். அவரிடம் அதிகமான வசதி வாய்ப்புகள் குவியும்.

Wednesday, November 16, 2011

பேரியோகம் ஜோதிடக்குறிப்பு


1) லக்கினாதிபதியும் குருவும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
2) லக்கினாதிபதியும் சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
3) லக்கினாதிபதியும், குருவும், சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
அதற்க்கு பெயர் பேரியோகம் எனப்படும்.
      இந்த அமைப்பு உடையவர்கள் நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், நோயற்ற வாழ்வு உடையவர்களாகவும், பல வழிகளில் வருமான‌ம் உடையவர்களாகவும், மகிழ்ச்சியாகவும், சகல வசதிகளுடைய வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருப்பர். அவர்களுக்கு நல்ல குடும்பம், குழந்தைகள் அமையும், புண்ணிய ஆத்மாவாக இருப்பர், அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருப்பர். அறிவியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஆர்வமுடயவர்களாக இருப்பர்.

Sunday, November 13, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-5 ஜோதிடக்குறிப்பு


 ஒரு ஜாதகத்தில் சனியின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 6ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
1) அதிக நன்மை தராத வேலை, அதிகவேலையால் பளு.
2) பலர் உங்களைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பது
3) எதிரிகளால் தொல்லை
4) சகமனிதர்கள் ஒத்துழையாமை
5) நோய்களால் தொல்லை
6) திருமண முறிவு
7) தொழில் தொடர்புகள் முறிவு
போன்றவை ஏற்படலாம்...

Friday, November 11, 2011

வித்யுத் யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில், 11ம் இடத்ததிபதி உச்சம் பெற்று சுக்கிரனுடன் கூடி லக்கினாதிபதிக்கு கேந்திரம் பெற வேண்டும், அவ்வாறு அமைந்தால் அது வித்யுத் யோகம் எனப்படும்.
      அந்த அமைப்பு உடைய‌ ஜாதகர் ஒரு உயந்தமனிதர், அன்பானவர், பண்பானவர், மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர், பெரும் புகழுடையவர், பொருளுடையவர், அரசனுக்கு நிகரானவர்.

Thursday, November 10, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-4 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குருவின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 6ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
1) கடவுள் நம்பிக்கை குறையும்
2) ஆன்மீக எண்ணமே தவறு என்ற முடிவுக்கு வரலாம்
3) தான் என்கிற ஆகங்காரம் தலை தூக்கும்
4) மத நம்பிக்கை குறையும்

Tuesday, November 8, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-3 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் புதனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 3ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
      பொதுவாக புதனுக்கு மூன்றில் உள்ள கிரகங்கள் புதன் தசையில் அதன் புத்தி நடைபெறும் போது மனஅழுத்தம், மிக‌அதிகமான சிந்தனை,  வித்தியாசமான் விபரீதமான சிந்தனைகள், அதிகப்படியான‌ பேச்சு, ஓய்வின்மை, கவலை, நரம்புத்தளர்ச்சி போன்றவைகளை உண்டாக்கலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் சனி இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் எதிர்மறையான சிந்தனைகள், குரூர சிந்தனைகள், சிந்திக்க முடியாத நிலை, அளவுக்கு அதிகமான மூளைக்கு வேலை, எரிச்சல், எதிர்பாராத பண இழப்பு(fine போன்ற‌வற்றால்) முக்கியமாக மிகுந்த மன அழுத்தத்திற்க்கு உள்ளாகலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் ராகு இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் ஆபத்தான, தைரியாமான, மற்றவர்கள் செய்யத் தயங்கும் செயல்களைப் பற்றிய‌ சிந்தனைகள், விபரீதமான ஆசைகள், அதை நிறைவேற்றிக்கொள்ளும் செயல்கள், கலாச்சாரத்திற்க்கு ஒத்து வராத செயல்கள் ஆகியவை நடக்கலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் கேது இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் பொருளாதார வாழ்க்கை கசக்கும், சகோதர சகோத‌ரிகள் மேல் பற்று சற்று குறையும், அவர்களிடம் இருந்து விலகுவீர்கள் அல்லது அவர்கள் விலகுவார்கள். ஆன்மீகத்தை நோக்கி மனம் செல்லும்; அதில் ஆர்வமுள்ளவர்கள் அதில் முழுமையாக ஈடுபடுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வமில்லாதவர்கள் குழப்பத்திலேயே ஆழ்ந்திருப்பர்.

Monday, November 7, 2011

எப்போது திருமணம்? இன்னுமொரு பார்வை ஜோதிடக்குறிப்பு


ஒரு ஜாதகத்திற்க்கு திருமணம் எப்போது கூடிவரும் என்றால்
1) குரு கோச்சார ரீதியாக ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 5, 7 மற்றும் 9ல்(வியாழ நோக்கம் என்று சொல்வார்கள்) வரும் காலத்திலும்
2) அதே போல் லக்கினத்திற்க்கு 7ம் இடத்தை(அதாவது லக்கினத்திற்க்கு 11, லக்கினம், மற்றும் லக்கினத்திற்க்கு 3ம் இடத்தில் குரு வரும் காலம்) கோச்சார ரீதியாக குரு பார்வையிடும் காலத்திலும்.
3) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு குரு கோச்சார ரீதியாக‌ வரும் காலத்திலும் (இந்த அமைப்பு திருமணம் நடப்பதற்க்கு கொஞ்சம் வலுவான அமைப்பு)
4) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டை குரு கோச்சார ரீதியாக பார்க்கும் காலத்திலும்
5) லக்கினாதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
6) 7ம் அதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
7) ராகு/கேது கோச்சார ரீதியாக ஜாதகத்தில் லக்கினம், ராசி, நவாம்ச லக்கினம், சுக்கிரன் இருக்கும் ராசி ஆகிய இடங்களுக்கு வரும் காலத்திலும்
8) சனி தசை அல்லது புத்தி காலத்திலும்
9) ஏழரைச் சனி காலத்திலும்
10) சுக்கிரனின் தசை அல்லது புத்தி காலத்திலும்
11) ராகு/கேதுவின் தசை அல்லது புத்தி காலத்திலும்


இவ்வனைத்திலும் ஒரு சில அமைப்புகளாவது ஒன்றாக கூடி வரும் போது கண்டிப்பாக ஜாதகருக்கு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திருமணம் நடைபெரும்

Friday, November 4, 2011

சரஸ்வதி யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு, சுக்கிரன், புதன் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ, 1ம் இடம், 2ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் அகிய இடங்களில் நின்றால் அதற்கு பெயர் சரஸ்வதி யோகம் எனப்படும்.
      சரஸ்வதி யோகம் பெற்ற ஜாதகர் நல்ல கற்றவறாக, புத்திசாலியாக, அணைவரும் பாராட்டத் தக்க வகையில் வாழ்க்கை இருக்கும். மிக நல்ல வசதியுடன், நல்ல மனைவி, குழந்தைகள், குடும்பம், வண்டி வாகனம் அணைத்தும் நல்ல முறையில் அமைந்திருக்கும். அவர் இந்த பூமிதனில் போற்றத் தக்க மனிதராக‌ திகழ்வார்.

Thursday, November 3, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-2 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சந்திரனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 12ல் இருக்கும் கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
1) எதிலும் ஒரு குழப்பமான நிலை, சரியாக முடிவெடுக்க முடையாத தன்மை.
2) எதிலும் அதிகமான அலைச்சல்,பெற்றோர்களிடம் இணக்கம் குறைந்து போதல்.
3) எல்லாவற்ரிலும் கவலை, சோர்வு.
4) ஏமாற்றம், நம‌க்குறியவர்கள் கூட நம்மை அரவணைக்கதது போன்ற உணர்வு.
5) எல்லாவற்றிலும் தவறான முடிவு எடுத்து, அதனால் பாதிக்கப்பெறுதல், இதனால் நிம்மதி குழந்து போதல்.

Monday, October 31, 2011

ஜெய யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் 6ம் இடத்து அதிபதி நீச்சம் அடைந்து, 10ம் இடத்து அதிபதி உச்சம் பெற்றால் அந்த யோகத்திற்க்கு பெயர் ஜெய யோகம் எனப்படும்.
      ஜாதகத்தில் இந்த ஜெயயோகம் உள்ள ஜாதகர், வாழ்க்கையில் நோய் நொடியின்றி, நீண்ட ஆயுளுடன், தோல்வி என்பதே இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்வார்.
      அவர் தொடும் காரியமெல்லாம் வெற்றியிலேயே முடியும். கடன் என்பதே இருக்காது, அவருக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். வாழ்க்கையில் எதிலும் தடை என்பதே இருக்காது. வெற்றி மேல் வெற்றி தான்.

Friday, October 28, 2011

துர்யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் 10ம் இடத்ததிபன் 6ம் இடம்,8ம் இடம் மற்றும் 12ம் இடத்தில் அமைந்தால் துர்யோகம் எனப்படும்.
1) வாழ்க்கையை நல்ல முறையில் நடத்த கடுமையான உழைப்பு தேவைப்படும். ஏனென்றால் ஒருவருக்கு 10ம் இடத்ததிபதி பலம் பெற வேண்டும் இல்லாவிட்டால் உழைப்புக்கு தகுந்த ஊதியமும், சரியான திறமைக்கேற்ற வேலையோ தொழிலோ அமையாது.
2) மற்றவர்களின் பார்வையில் மதிப்பு குறைந்தவராகவே காணப்படுவார். மேலே சொன்னபடி 10ம் அதிபதியின் மறைவால், அவர் எந்த சிறந்த விஷயங்களையும் செய்ய மாட்டார்.
3) மிகுந்த சுயநல வாதியாகவும், மற்றவர்களுக்கு தவறான வழிகாட்டுதல் செய்பவர்களாகவும் இருப்பர்.
4) இவாறான இவர்களின் குணநலன்க‌ளால் இவர்களின் வாழ்கைக்கே இவர்கள் மிகவும் போராட வேண்டியதிருக்கும்.
5) பிறந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தால் இவர்களுக்கு நன்மை.
6) வேறு எந்த யோகமும் இவர்களின் ஜாதகத்தில் இல்லாதிருந்தால், நல்ல கிரகங்கள் வலுக்காதிருந்தால், வேறு நன்மையான அமைப்புகள் ஜாதகத்தில் இல்லாதிருந்தால், இவர்கள் கூலித்தொழிலாளியாக வாழ வேண்டியதிருக்கும்.
7) அவ்வாறு பிரகிரகங்களின் உதவியால் நல்ல நிலையில் ஜாதகர் இருந்தாலும் இவர் நிலைக்கு மற்றவர்களுக்கு(இவர் நிலையில் உள்ள) கிடைப்பதைக் காட்டிலும் சமுதய மதிப்பு என்பது இவர்களுக்கு மிகக்குறைந்ததாகவே இருக்கும்.
      இதில் 12ம் இடம் மிகவும் குறைவான பலன்களை வழங்கக்கூடிய இடமாகும். சில இடங்களில் இவர்களுக்கு மதிப்பு கிடைக்கும்.

திரிலோச்சண யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் இந்த மூன்றும் ஒன்றுக்கு ஒன்று திரிகோணம் பெற்று அமைந்தால் அது திரிலோச்சண யோகம் எனப்படும்.
      இந்த யோகம் உடையவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும், ஆயுள் நீளம் உடையவர்களாகவும், நல்ல வசதி படைத்தவர்களாகவும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்குவர்.
      இந்த மூன்று கிரகம் மட்டுமல்லாது ஏதேனும் மூன்று கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று திரிகோணம் பெற்று அமைந்தாலே அந்த அமைப்பு விசேசமானதே! இவ்வாறு அமைதவர்கள் நல்ல அமைதியான‌ வாழ்க்கையை பெறுவார்கள். மேலும் இவர்களுக்கு எந்த சக்தியாலும் தடங்கல்கள் விளைவிக்கமுடியாது

Wednesday, October 26, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-1 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சூரியனின் தசை நடக்கும் போது சூரியனுக்கு 6ல் இருக்கும் கிரகம் தன்னுடைய புக்தியில் நன்மைகள் தாரா! அதன் புக்தியில் பலன்களாவன‌.......
1) உடல் நலக்குறைவு.
2) தன்னம்பிக்கை குறைந்துபோதல்.
3) பொருளாதாரத்தில் சற்று பின் தங்குதல்.
4) கடவுள் நம்பிக்கை குறைதல்.
5) பொதுவாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள்.
6) நற்பெயருக்கு களங்கங்கள்.
7) தந்தைக்கு உடல்ந‌லக்குறைவு.

Monday, October 24, 2011

தூக்கம்/நடை ஜோதிடக்குறிப்பு

      12ம் இடத்ததிபன் லக்கினத்தில் இருந்தாலோ, 12ம் இடத்ததிபன் கேந்திரத்தில் இருந்து லக்கினாதிபதி பார்வை பெற்றாலோ, 12ம் இடத்ததிபன் ஆட்சி/உச்சம் பெற்று சுபர் பார்வை பெற்றாலோ, 12ம் வீட்டில் சுபர் அமர்ந்தாலோ, 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ, 12ம் வீட்டில் ஆட்சி/உச்சம் பெற்ற கிரகம் அமைந்தாலோ, அந்த ஜாதகர் எந்த மாதிரியான இடத்தில் படுத்தாலும் உடனே தூங்கிவிடுவர், அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானலும் நடப்பர்.

வியாதியுள்ள கணவன்/மனைவி ஜோதிடக்குறிப்பு


      7ம் அதிபதி 6ம் அதிபதி அல்லது 8ம் அதிபதியுடன் இணைந்து ஜாதகத்தில் ஏதொ ஒரு இடத்தில் அமைந்து சுபர் பார்வை அல்லது சேர்க்கை இல்லாவிடில் வியாதியுள்ள கணவன்/மனைவி அமைவர்.
      7ம் அதிபதி 6ம் அதிபதியுடனோ அல்லது 8ம் அதிபதியுடனோ பரிவர்த்தனை பெற்றால் வியாதியுள்ள கணவன்/மனைவி அமைவர்.

Monday, October 3, 2011

தெய்வபலம் ஜோதிடகுறிப்பு

      ஒரு ஜாதகத்தில் 9ம் இடத்தில் ச‌ந்திரன், புதன், சுக்கிரன், குரு, கேது போன்ற கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் அந்த ஜாதகருக்கு தெய்வ நம்பிக்கையும், அதனால் தெய்வ பலமும் உண்டாகும். குறிப்பாக 9ல் சந்திரனிருக்கும் ஜாதகர் தெய்வ பலம் மிகுந்தவராக இருப்பர் அவருக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் எல்லா நேரங்களிலும் தெய்வபலம் துணை புரியும்.

Monday, September 26, 2011

சுலப அரசியல் செல்வாக்கு ஜோதிடக்குறிப்பு

      10ம் இடம் மிதுனம் அல்லது கன்னியாகி அங்கு சூரியன், புதன் இனைந்து நின்றால் ஜாதகருக்கு அரசியல் செல்வாக்கு சுலபமாக கிடைக்கும். அரசியலில் உயரிய பதவிகளை வகிக்க்க முடியும். உதாரணம் பி.வி.ந‌ரசிம்மராவ் ஜாதகம், இவர் மைனாரிட்டி எம்பிக்களுடன் சிறப்பாக 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர் என்பது நீங்கள் அறிந்ததே.

Sunday, September 4, 2011

காதல் திருமணம் ஜோதிடக்குறிப்பு

      7ம் இடத்திற்க்கு ராகு, செவ்வாய் சம்பந்தம் ஏதோ ஒரு வகையில் ஏற்பட்டால் காதல் திருமணம் நடக்கிறது. அந்த ராகு, செவ்வாய் சம்பந்தத்துடன், 7ல் சந்திரன் இருந்து குரு பார்வை ஏற்பட்டால் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் சிறப்பாக நடக்கிறது

Saturday, September 3, 2011

மேஜிக் எண் 108 ஒரு அலசல் ஜோதிடக்குறிப்பு

      ருத்திராட்ச மாலை அல்லது வேறு எந்த மணி மாலைகளனாலும் 108 மணிகளால் கோர்க்கப்பட்டிருப்பது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
      நமது இந்திய மண்ணில் தோன்றிய எந்த கலாச்சாரமானாலும் சரி அது இந்து கலாச்சாரமானாலும், புத்த கலாச்சாரமானாலும் அல்லது ஜெயின் கலாச்சாரமானாலும் அல்லது சீக்கிய கலாச்சாரமானாலும் சரி அவற்றிலும் இந்த 108 மணிகளே பின்பற்றப் படுகின்றன.
      எந்த மந்திரத்தையும் 108 முறை ஓதினால் தான் அதன் பலன் தெரியும் என்பார்கள் ஏன்?
      ஏன் ஜப்பானில் கூட ஜென் கோயில்களில் 108 முறை கோயில் மணியை ஒலிக்கச் செய்வார்களாம்.
      நமது முன்னோராகிய சித்தர்கள் கணித வல்லுனர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதற்க்கு இது ஒரு உதாரணம். அதாவது 108 என்கிற எண் ஒரு முழுமையான மொத்த பிரபஞ்சத்தையும், அதன் ஆற்றலையும், அறிவையும் குறிக்கும். அதாவது கடவுள் தன்மையை குறிக்கும்
      இந்த 108 என்கிற எண் முழுமையை குறிக்கிறது என்பதற்க்கு சில உதாரணங்கள்.......
1) எண் 9 முழுமையை குறிக்கும் எண், எண் 108ஐ கூட்டினால் 1+8=9 வரும், 108ம் முழுமையை குறிக்கிறது. அதே போல் 9துடன் எந்த எண்னை பெருக்கினாலும் வரும் விடையை கூட்டிப்பார்த்தால் 9 வரும் 1x9=9. 2x9=18. 1+8=9. 285x9=2565 2+5+6+5=18 1+8=9. 8543x9=76887 7+6+8+8+7=36 3+6=9. அதாவது 9 என்கிற எண் கடவுள் நிலையை ஒரு முழுமையை குறிக்கும் எண்.
2) 9 கிரகங்கள் 12 ராசிகளில் பயணிக்கும் நிலை இருப்பை ஒரு முழுமையை குறிக்கிறது 9 x 12 = 108.
3) மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்கும் 4 பாதம் வீதம் மொத்தம் நட்சத்திரங்களுக்கு 108 பாதங்கள் 27 x 4 = 108.
4) வேதகால புத்தகங்களின் படி பிரபஞ்ச‌த்தில் உள்ள கணிமங்களின் எண்ணிக்கை 108. இப்பொழுது இன்னும் சில கணிமங்கள் உள்ளதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.
5) கணிததில் 1,2 மற்றும் 3 ஆகிய எண்களின் ஆற்றல் பற்றிய உண்மை எண் 1க்கு ஆற்றல் 1. எண் 2க்கு ஆற்றல் 4 (2x2). எண் மூன்றிர்க்கு ஆற்றல் 27 (3x3x3). இந்த மூன்றையும் (1x4x27) பெருக்கினால் வரும் மொத்த ஆற்றல் 108. இது தான் பிரபஞ்ச ஆற்றல். எண் 1 ஒரு பரிமான ஆற்றலையும், எண் 2 இரண்டு பரிமான ஆற்றலையும், எண் 3 முப்பரிமான ஆற்றலையும் குறிக்கிறது.
6) சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 108 சந்திரன்களை வரிசையாக அடுக்கி வைத்தால் எவ்வளவு துரம் வருமோ அவ்வளவு தான்.
7) சூரியனின் விட்டம் சரியாக பூமியின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம்.

Friday, September 2, 2011

வயதில் மூத்தவர்களின் மேல் இச்சை ஜோதிடக்குறிப்பு

      லக்கினத்தில் கேது, 7ல் ராகு, 10ல் புதன் எனும் அமைப்பு ஆண்களின் ஜாதகத்தில் இருக்குமானால், அவர்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்களின் மேல் இச்சை ஏற்படுகிறது. அவர்கள் விதவைக்கு வாழ்வளித்தால் வாழ்வு சுகப்படும்.

Sunday, August 28, 2011

மாகா புண்ணியவான்கள் யார்? ஜோதிடக்குறிப்பு


      1. நல்ல மருத்துவர்கள் அன்னை தெரசா போன்று சேவை மனப்பான்மையுடன் புண்ணியம் சேர்ப்பவர்கள்.
      2. கோயிலில் நல்ல விதமாக பூஜை செய்து பக்தகோடிகளின் மனம்குளிரச் செய்யும் அர்ச்சகர்கள்.
      3. நலிந்தோருக்கு முடிந்த உதவிகளைச் செய்பவர்கள்.
      4. இலவசமாக நல்ல அலோசனைகளை வழங்குபவர்கள்.
      5. அனாதை இல்லங்கள், மடங்கள், கோயில்களில் முழு ஈடுபாட்டுடன் உடல் உழைப்பில் ஈடுபட்டு புண்ணியம் தேடுபவர்கள்.
      6. மாணவர்களுக்கு உண்மையான ஈடுபாட்டுடன் கல்வி கற்ப்பிப்பவர்கள்.
      7. தனது வருமாணத்திற்க்கு உட்பட்டு அதில் சில வகைகளில் புண்ணியம் தேடுபவர்கள்.
      8. குழந்தைகளின் கல்வி, அனாதைக்குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பவர் மற்றும் பலர் இந்த வரிசையில் சேர்க்கலாம் அல்லவா. அவர்களுக்கான ஜாதகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்று ஒரு சிறு அலசல்.

1) ஜாதகத்தில் குருமங்கள யோகம் அமைந்திருந்தால் ஜாதகர் தனது சக்திக்கு உட்பட்டு ஏதேனும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டேஇருப்பார்.
2) ஜாதகத்தில் சூரியன் சந்திரன் இனைந்திருந்தால் அவர்கள் இவ்வுலகை விட்டு விலகும் வரை ஏதேனும் புண்னிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்.
3) 5,9 ஆகிய திரிகோண ஸ்தனங்களில் சுபர் அமர்ந்திருந்தால் பொதுநலத் தொண்டுகள் செய்து புண்ணியம் தேடிக்கொள்வர் எப்பொழுதும்.
4) சுபாவ பாவிகள் லக்கினாதிபதியாக அமைந்து திரிகோணம் ஏறினாலும் புண்ணியவானாக இருப்பர்.
5) ஜாதகத்தில் புதஆதித்ய யோகம் அமையப்பெற்றவர்கள் புண்ணியம் தரும் காரியங்களில் ஈடுபடுவர்.
6) குரு சூரியன் இனைப்பு பலனே கருதாது பொது காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.
7) புதன் கேது லாபத்தில்(11ம் இடம்) இனைந்தால் தெய்வ காரியங்களுக்கு உத‌வுவதால் புண்ணியம் கூடும்.
8) கேந்திர ஸ்தானங்களில் புதன், சூரியன், சுக்கிரன் இருக்கும் அமைப்பு தெய்வ காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.
9) குருசந்திர யோகம், கஜகேசரியோகம், கிரகமாலிகா யோகம் ஆகியவை பொதுகாரியம், தெய்வத்தொண்டு ஆகியவற்றை தனது செல்வம் செல்வாக்கால் நிறைவேற உத‌வும்.
10) 5,9,10 க்கு உடையவர்கள் ஒரே வீட்டில் இனைந்து நின்றால் பொதுஇ சேவைகளில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும் அமைப்பு.
11) குரு, சுக்கிரன், சந்திரன் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தம், இனைப்பு ஏற்ப்பட்டால் தெய்வ காரியம், பொது நலத்தொண்டு வாயிலாக புண்ணியம் சேர்க்க முடியும்.

Friday, August 26, 2011

சுப-சுக விரயம் ஜோதிட‌க்குறிப்பு


      12ம் இடத்திற்குரியவர் சுக ஸ்தானமாகிய 4ம் இடத்தில் நின்றால் ஜாதகருக்கு சுகவிரயம் அதிகமாக இருக்கும்.
      அதே போல் 12ம் இடத்தில் சுபாவ சுபர்கள் நின்றாலும், 12ம் இடத்தின் உச்ச அதிபன் 12ல் நின்றாலும் ஜாதகருக்கு சுபவிரயம் அதுகமிருக்கும். குடும்பத்தில் நிறைய செலவுகள் ஏற்படும். குடும்பம், உற்றார், உறவினர் என்றால் உதவத்தான் வேண்டும். ஜாதகர் புலம்பாமல் பரந்த மனப்பான்மையுடன் செலவுகள் செய்தால் சுகப்படலாம்.

Thursday, August 25, 2011

குருசண்டாள‌ யோகம் இன்னுமொரு பார்வை ஜோதிடக்குறிப்பு


      இந்த யோகத்திற்க்கான நிலை
1) ஒரு ஜாதகத்தில் குரு ராகுவுடன் இனைந்து ராகுவினால் குருவின் தன்மை கெடும் நிலை.
2) குரு கேதுவுடன் இனைந்து கெட்ட கிரகத்தால் பார்க்கப்படும் நிலை.
3) 9ம் இடமும், குருவும் கெட்டுவிடுதல்.
4) 6ம் இடத்ததிபனுக்கும் 9ம் இடத்ததிபனுக்கும் சம்பந்தம் ஏற்ப்பட்டு, இதில் யாராவது ஒருவர் பகை நீசம் பெற்றாலும் அல்ல‌து பாவியாக இருந்தாலும், அல்லது வக்கிரம் பெற்றாலும் அவர்களுடைய சம்பந்தம் இந்த யோகத்தை ஏற்படுத்தும்.

      இந்த யோகத்தின் பலன்களை குரு, ராகுவின் தசா புத்திகளில் கண்டிப்பாக பார்க்கலாம். இந்த யோகம் வாழ்க்கை முழுதும் ஜாதகரின் வாழ்வில் இருப்பதை காணலாம், இருந்தாலும் குரு, ராகுவின் தசா புத்திகளில் மிகவும் தீவிரமாக இயங்குவதைப் பார்க்கலாம்.

      குரு சண்டாள‌ யோகம் யோகத்தின் பலன்கள்...
1) இந்த அமைபுடையவர்களின் வாழ்க்கையில் நன்றி உணர்வு என்பதே இருக்காது.
2) இந்த அமைபுடையவர்களின் வாழ்க்கையில் அவர்களாக முன்னேற மாட்டார்கள், அவர்களுக்கு யாருடைய உதவியாவது தேவைப்படும், உதவியும் சுலபமாகப் பெறுவார்கள், ஆனால் உதவி செய்தவர்களை முன்னேறிய பிறகு கைவிட்டு விடுவார்கள். தன் திறமையால் முன்னேறியதாக நினைத்துக் கொள்வார்கள்.
3) இந்த அமைபுடையவர்களின் வாழ்க்கையில் யாரையுமே உயர்வாக நினைக்க மாட்டார்கள், மாறாக அவர்கள் செய்வதே சரி என்று இருப்பர், வாழ்க்கையில் குற்றஉணர்ச்சி என்பதே இவர்களுக்கு கிடையாது.
4) அடுத்தவர்களை குறை உள்ளவர்களாகவே பார்ப்பர், குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருப்பர், எதையும் ஒருகுறுகிய எதிர்மறையான நோக்கோடவே பார்ப்பர்.  மற்றபடி கெட்டவர்கள் என்பதில்லை
5) குரு ராகுவுடன் 5ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் பாதிக்கப்பட்டிருந்தால் இவர்கள் நாத்திகவாதியாக இருப்பர். ஆன்மீகம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்ப்பர்.

      இந்த யோகமானதின் பலன்களை ஜாதகரின் காலத்தில் ராகுவின் தசையிலும் அதைத் தொடர்ந்து குருவின் த‌சையிலும் கண்கூடாக பார்க்கலாம்.மற்ற தசைகளில் குரு ராகுவின் புத்தி, அந்தரங்கங்களில் பார்க்கலாம்.

Saturday, August 20, 2011

குளிகன் என்ற மாந்தி பலன்கள் ஜோதிடக்குறிப்பு


      ஜெனன ஜாதகத்தில் குளிகன் என்ற மாந்தி இருக்கும் இடத்தை பொறுத்து பலன்கள்.........
      லக்கினத்தில் மாந்தி இருந்தால் குண்டான உடல‌மைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்ரும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
      2ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.
      3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.
      4ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும்.
      5ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்லவம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாத்வராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.
      6ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், பிற‌ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள்.
      7ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.
      8ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்ப்படும் நிலையும், வீண் விரயம் செய்பவராகவும் இருப்பர்.
      9ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.
      10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்ப்படும்.
      11ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் செல்வம், செல்வக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை கொண்டவராகவும் இருப்பர்.
      12ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல்த்தனம் கொண்டவராகவும் இருப்பர்.
       இது மாந்தியின் அமைப்பை பொறுத்து பொதுவான பலன்களே, மற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம். ஆனால் இந்த பலன்கள் பெரும்பாலானோருக்கு பொருந்தும்.

Friday, August 19, 2011

வெளிநாட்டு யோகம் சில அமைப்புகள் ஜோதிடக்குறிப்பு



      வெளிநாட்டில் படிப்பத‌ற்காகவும், தொழில் அல்லது வேலை நிமித்தமாகவும், ஊர் சுற்றிப் பார்க்கவும் செல்லுவோர் ஜாதக‌ அமைப்பு பற்றி ஒரு சிறு அலசல்.

1. குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கெடாது, வலுவாக(ஆட்சி, உச்சம், நட்பு, சுபர் பார்வை அல்லது சேர்க்கை) இருக்க வேண்டும்.

2. குரு, சனி( வாயு கிரகங்கள்), சந்திரன், சுக்கிரன்( நீர் கிரகங்கள்) ஆகியோர் கெடாது நீர் ராசிகளில்(கடகம், விருச்சிகம், மீனம்) அமைந்தால் வெளிநாட்டு யோகம் அமையும்.

3. 9, 12க்குடையவர்கள் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தப்பட்டால் வெளிநாடு சென்று வரலாம்.

4. ராகு - கேதுக்கள் 3,6,11 ஆமிடங்கள் மற்றும் 5,7,9 ஆமிடங்கள்(3-9,6-12,5-11,1-7 என அமர்ந்திருப்பது) நின்றாலும் வெளிநாட்டு யோகம் அமையும்

லாபதிபதி யார்? ஜோதிடக்குறிப்பு

      சரலக்கினகாரர்களுக்கு(மேஷம், கடகம், துலாம், மகரம்) லாபாதிபதியாகிரவர் பாதகாதிபதியாவதால் நன்மைகளை செய்வதில்லை. பாதகாதிபதி எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் பெரும் நன்மைகளை செய்வதில்லை.
      மற்ற லக்கினகாரர்களுக்கு.......
      ரிஷப லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி குரு அவர் லக்கினாதிபதி சுக்கிரனுக்கு பகை, குருவுக்கு மற்றொரு அதிபத்தியம் 8ம் இடம் ஆதலால் அவருடைய திசா புத்தி காலங்களில் நன்மைகள் கிடைப்பதில்லை.
      மிதுன லக்கினகாரகளுக்கு லாபாதிபதி செவ்வாய் லக்கினாதிபதி புதனுடன் பகை, செவ்வய்க்கு மற்றொரு ஆதிபத்தியம் 6ம் இடம் ஆதலால் நன்மைகள் செவ்வாயும் தனது திசா புத்தி காலங்களில் அளிப்பத்ற்கில்லை.
      சிம்ம லக்கினகாரர்களுக்கு தனலாபாதிபதி புதன் லக்கினாதிபதி சூரியனுடன் நட்பு அதலால் மற்ற லக்கினகாரர்களை விட இந்த லக்கினத்திற்க்கு மட்டும் பலன் பரவாயில்லாமல் இருக்கும்.
      கன்னியா லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி சந்திரன் இவரும் அமர்ந்த இடத்தைப்பொறுத்து சாமன்ய பலன்களை அளிப்பார். ஆனாலும் லக்கினதிபதியுடன் அவ்வளவாக சுமூகமான உறவு இல்லை என்பதால் பரவாயிலாமல் பலன்கள் கிடைக்கும்.
      அதே போல் துலாலக்கினகாரர்களுக்கும் ஒரே அத்பத்தியம் உள்ள சூரியன் லாபாதிபதியானாலும், லாபதிபதியே பாதகாதிபயாவதாலும், லக்கினாதிபதி சுக்கிரனுக்கு சூரியன் நல்லவனல்ல என்பதாலும் பெரும்பாலும் துலாலக்கின காரர்களுக்கு சூரியனின் காரகங்கள் கிடைப்பதில்லை. மூத்த சகோதரர்கள் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் அவர்களால் குடும்பத்திற்க்கு பிரயோஜனம் இருக்காது. த‌ந்தை மகனின் பாசங்கள் காரணத்திற்க்கு உட்பட்டே இருக்கும், காரணம் முடிந்தவுடன் பாசமிருக்காது. ஆதலால் இவர்களுக்கு சூரியன் நன்மையை செய்வான் என்று நம்புவதற்கில்லை.
      விருச்சிக லக்கினகாரர்களுக்கு புதன் அஷ்டமலாபாதிபதியாகிரார். லக்கினாதிபதி செவ்வாயுடன் பகை ஆத்லால் இவர்களுக்கும் லாபாதிபதியால் நன்மையில்லை.
      த‌னுசு லக்கினகாரர்களுக்கும் லாபதிபதி சுக்கிரன் ஆறாம் ஆதிபத்தியம் வருவதாலும், லக்கினாதிபதியுடன் சுமூகமான நிலையில்லாததாலும் சுக்கிரன் தனது திசா புத்திகாலங்களில் நன்மைகள் செய்வார் என்பத‌ற்கில்லை.
      கும்ப லக்கினகாரர்களுக்கு தனலாபாதிபதி குரு லக்கினாதிபதி சனியுடன்  பெருத்த பகையில்லை, ஆகையால் பரவயில்லாத் பலன்களை அளிப்பார்.
      மீன லக்கினகாரர்களுக்கு லாபாதிபதி சனி விரயாதிபதியும் ஆவதால் லாபம் நிஷ்பலம் ஆகும். ஆனால் பயப்படுவதிற்க்கு ஒன்றும் இல்லை.
      மொத்தத்தில் லாபாதிபதியால் எந்த லாபமும் இல்லை. எதனால் என்றால்...
லக்கினத்திக்கு மூன்றுக்குடையவன் ஒரு பாபி,

லக்கினத்திற்க்கு ஆறாமிடத்திர்குறியவன் மூன்றாம் இடத்ததிபனை விட பாபி,

ஆறுக்கு ஆறாம் இடத்ததிபன் 11ம் இடத்திற்குறியவன் இவர்கள் இருவரையும் விட பாபி.

ஆதலால் 11ம் இடத்ததிபனை லாபாதிபன் என்று எப்படி சொல்லுவது?

Thursday, August 11, 2011

சுயமுன்னேற்றம் ஜோதிக்குறிப்பு

      சந்திரனுக்கு இரண்டில், சூரியன், ராகு, கேது தவிர மற்ற கிரகங்கள் நிற்பது சுனபா யோகமாகும் பதவி, புகழ் அந்தஸ்த்து அனைத்தும் கிடைக்கும். அதிலும் குரு நிற்பது விசேஷ‌ சுனபா யோகமாகும். ஜாதகர் தனது சுய முயற்சியினால் பதவி தனலாபம் அடைவார்.

Tuesday, August 9, 2011

தலைக்கன‌ம் ஜோதிடக்குறிப்பு

      ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் குரு சேர்க்கையால் ஏற்படும் யோகத்திற்க்கு பெயர் குருமங்கள யோகம். இந்த யோகம் உடையவர்களுக்கு பதவி, புகழ்,பெரும் செல்வம் கிடைக்கும். ஆனால் இவர்களிடம் மிகுந்த கர்வம் மற்றும் பிறரை மதியாமை போன்ற‌ குணங்கள் இருக்கும்

Sunday, August 7, 2011

குறைகூறும் மனைவி யாருக்கு? ஜோதிடக்குறிப்பு


      ஆண்களின் ஜாதகத்தில் 7ம் இடத்ததிபன் மிதுனம்/கன்னியில் கெட்டு நிற்க அல்லது 7 அதிபன் புதனாக இருந்து பகை நீசம் பெற்றோ அல்லது பாவிகளுடன் இனைந்தோ கெட்டு நின்றால்,
      அவர்களுக்கு வாய்த்த மனைவி வாயாடிகளாகவும், வெட்டிப் பேச்சு பேசுபவர்களாகவும், கணவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லிக்கொண்டு கண‌வனை வார்த்தைகளால் வறுத்து எடுத்துக்கொண்டு உட்கார்ந்து தின்று கொண்டு இருக்கிறவர்களாகவும்.
       எனக்கு வீட்டு வேலையே சரியாக இருக்கிறது, நான் ஏன் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும். அந்த வீட்டு வேலையையும் சரிவர செய்யாமல் பேச்சு செயல் அனைத்திலும் பதட்டம் கொண்டு செயல் படுபவர்களாகவும் இருக்கின்றனர். எனக்கு சந்தோசம் இல்லை நீயும் சந்தோசமாக இருக்ககூடாது என்று செயல்படுபவர்களாக இருக்கின்றனர்.
      இவர்கள் முழுக்க முழுக்க கணவனை குறைகூறிக்கொண்டு இருந்தாலும், இவர்களை சமூகம் மற்றும் குழந்தைகள் நலன் கருதி இந்த ஜாதகர்கள் சகித்துக் கொண்டு வாழ்பவர்களாக இருப்பதைப்பார்க்க முடிகிறது. இந்த ஜாதகர்களின் வாழ்க்கை தாமரை இலை தண்ணிர் போல் அமையும் வாழ்க்கை என்று குறிப்பிடலாம் அல்லவா?

Sunday, July 31, 2011

நிம்மதி யோகம் ஜோதிடக்குறிப்பு


1) ஜாதகத்தில் குருசந்திர யோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம் ஆகியவற்றில் ஒன்றாவது இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நிம்மதியை பயிற்ச்சியில் உருவாக்கிக்கொள்ள முடியும்.
2) 2,12ம் இடங்களில் சுபர்கள் இருந்தால் நிம்மதி மிகவும் நன்றாக இருக்கும்.
3) 2,12ம் இடங்களில் பாபர்கள் இருந்தாலும் சுபர் பார்வை இருந்தால் நிம்மதியை பயிற்ச்சியால் உருவாக்கி கொள்ள முடியும்.
4) லக்கினத்தை பாபிகள் பார்க்காது, சுபர் பார்வை இருந்தால் நிம்மதி நிறைவு நன்றாக இருக்கும். குறிப்பாக குருவின் பார்வை லக்கினத்துக்கு கிடைத்தால் மிக நிம்மதியாக, மரியாதை மிக்க வாழ்க்கை வாழமுடியும்.

Saturday, July 30, 2011

கணக்கில் புலி ஜோதிடக்குறிப்பு

      ஜாதகத்தில் குருவும், புதனும் பலமுடன் இருந்தால் அவர்களுக்கு கணிதத்தில் திறமை அபாரமாக இருக்கும். கஷ்டமான கணக்குகளைக் கூட மனக்கணக்காகவே போட்டுவிடுவர். அதிலும் குருவும் புதனும் உச்சம் பெற்றிருந்தால் அபாரமாக இருக்கும். அவர்களை கணக்கில் புலி என்று சொல்லுவர். கணக்கில் நூற்றுக்குநூறு வாங்கும் குழந்தைகளின் ஜாத‌கத்தில் இந்த அமைப்பு இருப்பதைக் காண முடிகிற‌து

Friday, July 29, 2011

கம்பீர யோகம் ஜோதிடக்குறிப்பு

      சந்திரனுக்கு 12ல் சூரியன் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் அனபா யோகமாகும். அதிலும் சந்திரனுக்கு 12ல் குரு இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக கம்பீரமாக காட்சி தருவார். தொழிலில் சாதனைகள் புரிவார். அரசாங்க பரிசுகளும், பாராட்டுகளும் இவருக்கு கிடைக்கும்

பானு யோகம் ஜோதிடக்குறிப்பு


      1ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் ஆகிய 6 இடங்களில் நவநாயகர்கள் அனைவரும் வீற்றிருக்க அந்த அமைப்பிற்க்கு "பானு யோகம்" என்று பெயர்
      இந்த அமைப்பைப் பெற்ற ஜாதகர் அனைத்து விசயங்களிலும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். வாழ்க்கை வசதிகள் நிறைந்து அமைதியயும் ஆனந்தத்தையும் அனுபவிப்பார்.

Thursday, July 28, 2011

வாழ்க்கைச்சிறை ஜோதிடக்குறிப்பு

      ராகுவோ கேதுவோ லக்கினேசனுடன் சம்பந்தப்பட்டு கேந்திர கோணங்களில் இருப்பது யோகமான அமைப்பு, உயர்வு தரும். ஆனால் இந்த அமைப்புக்கு 6ம் வீட்டோனின் சம்பந்தம் ஏற்படுமாயின் ஜாதகருக்கு வாழ்க்கை சிறைவாசம் போல் தெரியும். வயது கூடக்கூட குடும்பப்பற்று மறைந்து, துறவு மனப்பான்மை ஏற்ப்படும். ஆனால் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல முடியாது. குடும்ப வாழ்க்கையினை சிறையில் இருப்பது போல் கருதி வாழ்க்கையினை ஓட்ட வேண்டியிருக்கும்.

உள்ளங்கவர் கள்வன் ஜோதிடக்குறிப்பு


      சுக ஸ்தானமான 4ம் இடத்தில் ராகு இருந்து, அவரை பாவிகள் பார்க்கும் அமைப்பு ஜாதகத்தில் இருந்தால், ஜாதகர் வெளிப்பார்வைக்கு பரம யோக்கியவானாகவும், சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களாக இருப்பர். ஆனால் உள்ளே முழுவதும் கள்ளத்தனமானவர்களாகவும், அயோக்கியர்களாகவும் இருப்பர். பேச்சும் செயலும் நல்லது செய்வது போல் இருக்கும், ஆனால் இவர்களை நம்பினவர்களை சீர்குலைக்கும் போக்கு இவர்களது செயல்களில் மறைந்திருக்கும். பிசினஸ் பார்ட்னர்களை ஏமாற்றிக் கவிழ்ப்பதில் கில்லாடிகளாக இருப்பர்.
      இதே போல் சுகஸ்தானத்தில் மற்ற பாபகிரகங்கள் இருந்து பாபகிரகங்கள் பார்த்தாலும் இதே நிலை தான், அதாவது ஜாதகர் ஒழுக்ககுறைவானவராக மிகுந்த கள்ளம் நிறைந்தவராக இருப்பார்.

கடனாளி யார்? ஜோதிடக்குறிப்பு



      பொதுவாக லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன்பட்டிருப்பார். உதாரணமாக மகர லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 12ஆம் வீட்டில் சனியும், 2வது வீட்டில் செவ்வாயும் இருந்தது. இதன் காரணமாக அவர் வாழ்க்கை முழுவதும் கடன்பட்டவராகவே இருந்தார்.

      இவ்விச‌யத்தில் லக்னத்தை மட்டுமல்லாது லக்னாதிபதி, 6ஆம் அதிபதி ஆகியோரின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது லக்கினாதிபதி பலமிலந்து 6க்குடையவன் பலமானால் கடன் தொல்லை அதிகமாகவே இருக்கும். உதாரணமாக மீன லக்னத்திற்கு அதிபதி குரு; 6ஆம் அதிபதி சூரியன். இதில் குரு நீச்சமாகி, 6ஆம் அதிபதி சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை கடன்காரராக இருப்பார்.

      அதே போல் பலம் பெற்ற ஆறாமதிபதி தசை கடன்களை ஏற்ப்படுத்தும், அதே போல் ஆறில் அமர்ந்த கிரகங்களின் தசையில், ஆறாமதிபதியோடு இனைந்த கிரகங்களின் தசையில் கடன்கள் உண்டாகும். அதோடு ஆறாமதிபனின் நட்சத்திரக்காலில் அமர்ந்த கிரகத்தின் தசையிலும் கடன்கள் உண்டாகும்

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான ராஜயோக அமைப்பு 3


 தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சூரியன், செவ்வாய், புதன் நல்லவர்கள் இவர்களில் இருவர் ஆட்சி உச்ச பலத்துடன் நின்றாலே போது முதல் நிலை ராஜயோகம் அமையும்.

      மகர லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன் சுக்கிரனால் தருமகருமாதிபதி யோகம் ஏற்ப்படுமால் முதல் நிலை ராஜயோகம் அமையும்.

      கும்ப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன், சுக்கிரன், செவ்வாய் நல்லவர்கள். செவ்வாய் சுக்கிரனால் தருமகருமாதிபதி யோகம் ஏற்ப்பட்டாலும். அல்லது மூன்று நாயகர்களில் ஜாதகத்தில் ஏதேனும் இருவருக்கு சுபத்துவ சம்பந்தம் ஏற்ப்பட்டாலும் முதல் நிலை ராஜயோகம் கிடைக்கும்.

      மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி குரு, பாக்கியாதிபதி செவ்வாய் ஆகிய இருவரால், தருமகருமாதிபதி யோகமோ, அல்லது குருமங்கள யோகமோ, 5ம் அதிபதி சந்திரனால், குரு சந்திரயோகமோ, சந்திரமங்கள யோகமோ ஏற்ப்பட்டால் முதல் நிலை ராஜயோகத்தினை பூரணமாக அனுபவிக்கலாம்.

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான‌ ராஜயோக அமைப்பு 2


      சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குருவும் செவ்வாயும் சுபர்கள், இவர்கள் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் இனைந்திருந்தாலோ, ஒருவருக்கொருவர் கேந்திரம், திரிகோணம் பெற்றாலோ முதல் நிலை ராஜயோகம் கிடைக்கும். லக்கினத்தில் குரு, 4ல் செவ்வாய் எனும் அமைப்பு சிறப்பான யோகபலனைத் தரும்.

      கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சுக்கிரன் யோகாதிபதி ஆவார். 1,2ம் இடங்களில் அல்லது 9,10ம் இடங்களில் புதன் சுக்கிரன் இனைந்து நிற்ப்பது, 2, 9ல் சுக்கிரன் மட்டும் தனித்து நின்றாலும் முதல் நிலை ராஜயோகம் சிறக்கும்.

      துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 4,5க்குடைய சனி நல்லவர். 9, 10க்குடைய புதனும், சுக்கிரனும் நல்லது செய்வர், ஜாதகத்தில் சனி ஆட்சி உச்சம் பெற்று, புதன் அல்லது சுக்கிரன் சம்பந்தம் பெற்று இருந்தால் ஜாதகர் முதல் நிலை ராஜயோகத்தினை சிறப்பாக அனுபவிப்பார்.

      விருச்சிக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு, லக்கினாதிபதி செவ்வாய், குரு, சூரியன், சந்திரன் ஆகியோர் மிக நல்லதைச் செய்வர். இவர்களுக்கு தர்மகருமாதிபதி யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம் இவற்றில் ஒன்றிரண்டு இருந்தாலே ஜாதகர் சிறப்பான பலன்களை அனுபவிப்பார். சூரியன் சந்திரன் 9,10ல் ஆட்சி அல்லது லக்கினத்தில் செவ்வாய் 9ல் சந்திரன் அல்லது லக்கினத்தில் செவ்வாய் 9ல் குரு மிகச்சிறப்பைத் தரும்.

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான ராஜயோக அமைப்பு 1


      முதல் தரமான ராஜயோக அமைப்பு என்றால்...........
நல்ல பண வசதி, கெளரவமான வேலை, ஒற்றுமையான குடும்பம், நல்ல சந்ததிகள், ஜன வசியம், கெளவரமான வசீகரத்தோற்றம், எல்லாம் அமைந்த ஆனந்தமான, நிம்மதியான‌ வாழ்வு அமையுமானால் அது முதல் தரமான ராஜயோகம் என்று சொல்லலாம் அல்லவா.

      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி செவ்வாய், யோகாதிபதியின் சுபத்துவ சம்ப‌ந்தம் முதல் நிலை ராஜயோகத்தினைத்தரும்.
9,10ம் இடங்களில் குருவும் செவ்வாயும் இருப்பது, 4ல் குரு லக்கினத்தில் அல்லது 10ல் செவ்வாய் இருப்பது சிறப்பான அமைப்பாகும்

      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 10ல் சனி, லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு அல்லது 6ல் சனி உச்சம் லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

      மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு யோகாதிபதி சுக்கிரன் 5ல் அல்லது 10ல் இருப்பது முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

      கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி சந்திரன், யோகாதிபதி குருவும் செவ்வாயும் ஆவர். இவர்கள் ஜாதகத்தில் சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு யோகம் இருந்தாலே முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும். லக்கினத்தில் சந்திரன் 5ல் செவ்வாய், 9ல் குரு மிகவும் சிறப்பைத்தரும்

Tuesday, July 26, 2011

12ம் இடம் ஜோதிட‌க்குறிப்பு


      12ஆம் இடம் நித்திரைக்கான இடம். 1, 2 என்று 12 வீடுகள் இருக்கிறது. 1 லக்னம், உடல், தோற்றம் இதெல்லாம் அடங்கும். 2ஆம் இடம் வாஸ்து, குடும்பம் என்று சொல்கிறோம். இதுபோல 12ஆம் இடம் சயனத்தானம். இந்த சயனத்தானம் நன்றாக இருக்க வேண்டும். 
      சயனத் தானத்தில் ராகு, கேது, சனி, செவ்வாய் இந்த மாதிரியான கிரகங்கள் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் இருக்காது. கோழித் தூக்கம் என்று சொல்வார்களே அந்த மாதிரியான அமைப்புகள் இருக்கும். இதை ஜாதக அமைப்பை வைத்து கண்டுபிடிக்கலாம். 
      இவர்கள் சரியாக உறங்குவார்களா, நிம்மதியா உறங்க முடியாதா? என்பதையெல்லாம் கண்டுபிடிக்கலாம். அதனால், இந்த 12ஆம் இடமான சயனத்தானம் நன்றாக இருக்க வேண்டும். அப்படி நன்றாக இருந்தால் அவர்கள் ஆழ்ந்த நித்திரை கொள்வார்களா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். 
      பொதுவாக சந்திரன் உடலிற்குரிய கிரகம். இந்த சந்திரன் சனி, ராகு மாதிரியான கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் நிம்மதியான தூக்கம் வரவே வராது. சந்திரன் சனி, ராகுவுடன் சேர்ந்திருந்தால் சிறு வயதில் ஏற்பட்ட இழப்புகள், அவமானங்கள், ஏமாற்றங்கள் இதை நடுநடுவில் நினைத்து நினைத்து தூக்கம் கெட்டுப்போய் பரிதவிப்பார்கள். இந்த மாதிரியான அமைப்புகளும் உண்டு. 
      இதேபோல பார்த்தீர்களென்றால், 12இல் செவ்வாய், 6க்குரிய கிரகங்கள் இருந்தாலும் ஏதேனும் கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தைக் கெடுக்கும். 12இல் கெட்ட கிரகங்கள் அமர்ந்தால் தரையில் படுத்து உறங்குதல், சரியான படுக்கை இல்லாமல் போவது, காற்றோட்டம் இல்லாத அறையில் படுத்து உறங்குதல், உட்கார்ந்த நிலையில் தூங்குதல் இந்த மாதியான பாதிப்புகளும் உண்டாகும். 
      அதனால் இந்த சயனத்தானமான 12ஆம் இடம் மிகவும் முக்கியமான இடம். இந்த 12ஆம் இடத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால்(குரு,சுக்கிரன்ம, புதன்), “படுத்தால் தூக்கம் வருதுங்க, ஒன்றும் பிரச்சனை இல்லைங்க, நிறைய பேர் கோடி கோடியாய் வைத்துக்கொண்டு தூக்கம் இல்லாம தவிக்கிறார்கள். அந்தப் பிரச்சனை எனக்கு இல்லைங்க” என்பார்கள்.

Monday, July 25, 2011

7ல் நீச்ச கிரகம்? ஜோதிடக்குறிப்பு


      பொதுவாகவே 7ஆம் இடத்தில் நீச்ச கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி நீச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு எதிலுமே மனத்திருப்தி இல்லாத நிலை காணப்படும்.
      ஒருவர் எந்த லக்னமாக இருந்தாலும் ஏழாம் இடத்தில் எந்த கிரகம் நீச்சமடைந்தாலும், ஏதாவது ஒரு வகையில் வாழ்க்கைத் துணை மனதிற்கு பிடிக்காமல் போகும். ஆனால் உண்மையிலேயே அந்த பெண்/ஆண் சிறப்பான குணநலன்களையும், அழகையும் பெற்றிருப்பர். இவரது மனதிற்கு அப்படித் தோன்றும் நிலை காணப்படும்.
      தனக்குப் பார்த்த பெண் சிறப்பாக படித்திருந்தாலும், குறிப்பிட்ட கல்லூரியில் படித்திருந்தால் சிறப்பாக இருக்குமே என்று அந்த ஜாதகர் கருதுவார். இதன் காரணமாகவும் திருமணம் தள்ளிப்போகும் நிலை ஏற்படும். 7இல் நீச்ச கிரகம் இருப்பதும் இதனை உணர்த்துவதற்காகவே.
      எனவே, 7இல் நீச்ச கிரகம் உள்ளவர்கள் தங்கள் தகுதிக்கு (படிப்பு/பொருளாதாரம்) குறைந்த இடத்தில் குணத்தில் உயர்ந்த வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து சிறப்பான மணவாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.
      பொதுவாகவே 7ஆம் இடத்தில் நீச்ச கிரகம் இருப்பவர்கள் மனதளவில் திருப்தியடைய முயல வேண்டும். வாழ்க்கைத் துணை வசதி குறைவாக இருந்தாலும் நல்ல ஒழுக்கமான, படித்த ஆண்/பெண் ஆக இருந்தால் உடனே திருமணத்தை முடித்துவிட வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது.

குரு சந்திர யோகம் ஜோதிடக்குறிப்பு


      குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம் என்று கூறப்படும். குருவும் சந்திரனும் எந்த வீட்டில் (மேஷம் முதல் மீனம் வரை) இருந்தாலும் அது குருசந்திர யோகமாகவே கருதப்படும்.
      இந்த யோகம் உடையவர்கள் மிகவும் சிரத்தையுடன், தீர்க்கமான சிந்தனை, எதிலும் நேர்வழியை கடைபிடிப்பது, நீண்ட ஆயுள், சத்தியம் தவறாமை, மனசாட்சிக்கு கட்டுப்படுவது போன்ற குணங்கள் உடையவர்களாக இருப்பர். மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாய்ப்பாசம் அதிகம் உடையவர்கள்.
      சந்திரன் ஆட்சி பெறுவதாலும், குரு உச்சம் பெறுவதாலும் கடகத்தில் குருசந்திர யோகம் அமையப் பெற்றவர்கள் மிகப் பெரிய ராஜயோகம் உடையவர்களாகவும், நான்கு வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்தவர்களாகவும், மற்றவர்களுக்கு போதிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
      அதே குருசந்திர யோகம் மீனத்தில் இருந்தால் சிறப்பான பலன்கள் கிட்டும். ரிஷபத்தில் குருசந்திர யோகம் இருந்தால் நாடாளும் யோகம் கிடைக்கும்.
      பொதுவாக குருசந்திர யோகம் பெற்றவர்கள் பலர் மதிக்கக் கூடிய பதவியில் அமர்வார்கள். எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவர்.

Sunday, July 24, 2011

7ம் இடத்தில் சனி? ஜோதிடக்குறிப்பு


      பொதுவாகவே ஏழாவது வீட்டில் சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகியவை இல்லாமல் இருப்பது நல்லது. அதே நேரத்தில் எந்த லக்னத்திற்கு 7ல் சனி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
      உதாரணமாக ரிஷப லக்னத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு 7வது வீடு விருச்சிகமாகும். ரிஷபத்தில் விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வருகின்றன. அதில் அனுஷம் நட்சத்திரத்திற்கு சனி 7ல் இருப்பது நல்ல பலன்களைத் தரும்.
      ஏனென்றால் அனுஷம் சனியின் நட்சத்திரமாகும். ரிஷப லகனத்திற்கு யோகாதிபதியும் சனி ஆவார். இதன் காரணமாக அனுஷ நட்சத்திரத்தில், ரிஷப லக்னத்தைக் கொண்ட ஜாதகருக்கு சனி 7இல் இருந்தால் அதிகம் படித்த, தன்னை விட அழகான, அதிகம் சம்பாதிக்கும், பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த வாழ்க்கைத் துணை அமையும்.
      இதேபோல் மிதுனம், கன்னி ஆகிய லக்னத்திற்கும் 7இல் சனி இருந்தால் சிறப்பான பலன்களே கிடைக்கும். கடகம், சிம்ம லக்னத்திற்கு 7இல் சனி இருப்பது (சொந்த வீட்டில் உள்ளதால்) நல்ல பலன்களை கொடுக்கும்.
      ஆனால் மேஷ லக்னத்திற்கு 7இல் சனி இருந்தால் வாழ்க்கைத் துணை வழியில் கெடு பலன்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையால் அவமானங்கள், சிறைத் தண்டனை, அவமதிப்புகள், நீதிமன்ற வழக்குகளை சந்திப்பது போன்றவை ஏற்படும்.
      பொதுவாக 7இல் சனி இருப்பவர்களுக்கு சனி தசை வந்தால் சில பாதிப்புகள் ஏற்படும். அந்த நேரத்தில் வாழ்க்கைத் துணைக்கு நல்ல தசை நடந்தால் சிக்கல் குறையும்.
      எந்த லக்னமாக இருந்தாலும் 7இல் சனி இருந்து சனி தசை நடக்கும் போது பாதிப்புகள் ஏற்படுவது இயல்பானது. குறிப்பாக மேஷத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
      ஒருவருக்கு 7இல் சனியுடன், குரு, புதன் போன்ற சில சுப கிரகங்கள் சேர்க்கை பெற்றிருந்தால் பலன்கள் வேறுபடுமா? 7ல் சனி இருந்து அதனுடன் குரு சேர்க்கை பெற்றிருந்தாலோ, பார்த்தாலோ, சனியால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். இதனால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. தம்பதிகளுக்கும் குறுகிய கால பிரிவுகள் ஏற்பட்டாலும் இறுதியில் இணைந்து விடுவர்.

குரு சனி தொழில் சூட்சுமம் ஜோதிடக்குறிப்பு


      லக்னாதிபதி 6, 8, 12ல் போய் மறைகிறார் என்றால், உட்கார்ந்து கொண்டு சொகுசாக பார்க்கக் கூடிய வேலைகள் கூடாது.
      சனி என்பது நின்று கொண்டு வேலை பார்க்கக் கூடிய கிரகம். நிற்றல், நடத்தல் போன்றவைதான் சனிக்குரிய செயல்பாடுகள். குருவினுடைய ஆதிக்கம் அமர்தல். சனியினுடைய தாக்கம் தனியாக நடந்துபோதல், நடை பயணம் மேற்கொள்ளுதல் போன்றவை. வேலை பார்ப்பவர்களுக்கு, 10ஆம் இடத்தில் சனி இருந்தாலோ, 10ஆம் இடத்தை சனி பார்த்தாலோ, 10க்கு உரியவருடன் சனி சேர்ந்து இருந்தாலோ இவர்களெல்லாம் நின்று, நடந்து வேலை பார்க்கும் தொழிலை ஏற்றுக்கொள்வது நல்லது. மெடிக்கல் ரெப் போன்றவர்கள் பயணித்து, நின்று வேலை பார்க்கிறார்களே இதெல்லாம் சனியினுடைய வேலைதான்.

Saturday, July 23, 2011

8ம் வீட்டில் கிரகங்கள் அமர்வ‌தால் பலன் ஜோதிடக்குறிப்பு


      பொதுவாக 8வது வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்லது. “இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன்” என வேதங்கள் கூறுகின்றன.
      ஜோதிடத்தைப் பொறுத்தவரை 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக 8இல் உள்ள கிரகம் 2ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
      எனவே, 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும்.
      சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். அதேபோல் 8ல் சனி அமர்ந்தால் நீண்ட ஆயுள் என்று கூறுவர். இது பொதுவானது. ஆனால் லக்னத்தைப் பொறுத்தும் 8இல் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நல்லது என்பது மாறுபடும்.
      உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி, 8இல் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு எனக் கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8க்கு உரியவர் குரு. அவர் 8இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

Friday, July 22, 2011

கண்களில் கோளாறு? ஜோதிடக்குறிப்பு


      ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீடு, 12ம் வீடு ஆகிய வீடுகளை வைத்து கண்களில் கோளாறு, நோய்  போன்றவற்றை கணிக்க வேண்டும். 2ம் வீடு வாலது கண்ணையும், 12ம் வீடு இடது கண்ணையும் குறிக்கும். கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றை வைத்து கண் நோய் மற்றும் கோளாறு ஆகியவற்றை பார்க்க வேண்டும்.
      ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீட்டுக்கதிபதி 6,8,12ல் மறந்து காணப்பட்டாலோ, பகை, நீசம் பெற்று காணப்பட்டாலோ கண்களில் குறைகளோ, நோய்களோ ஏற்பட்டபடி இருக்கும். அதுமட்டுமில்லாமல் அசுபகிரகங்கள், 6,8,12ம் வீட்டுக்கதிபதிகள் 2ம் வீட்டில் இருந்தால் கண்களில் கோளாறு, குறைகள் இருக்கும்.
      ஜாதகத்தில் சூரியன் பகை நீசம் பெற்று அம்சத்திலோ, ராசியிலோ காணப்பட்டால் கண் கோளாறு ஏற்படும், அதே போல் சூரியன் சுக்கிரன் இனைந்து கெட்டு பலவீனம் அடைந்து காணப்பட்டால் கண் கோளாறு, கண்களில் புரை போன்றவை ஏற்படும், அதே போல் சூரியன் சந்திரன் இனைந்து 6,8,12ல் இருந்தால், கண் கோளாறு, மாறுகண் போன்றவை ஏற்ப்படும்

லக்கினப்படி கோடீஸ்வர யோகம் 2


7) துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனியும் சுக்கிரனும் சிறந்து விளங்கினாலே கோடீஸ்வரர் ஆக முடியும்.
8) விருச்சிக‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு செவ்வாய் மற்றும் சூரிய சந்திரர்கள் பிராகாசிப்பதைப் பொறுத்து கோடீஸ்வர யோகம் அமையும். குரு பலம் மற்றும் குரு பார்வை அதில் விசேட சிறப்பைத்தரும்
9) தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 2ம் இடம், 4ம் இடம், 10ம் இடம் மற்றும் 11ம் இடம் ஆகியவற்றில் இரு இடங்களாவது குரு பார்வை பெறுவது மற்றும் சூரியன் புதன் குரு பார்வை பெற்று சிற‌ப்பான இடங்களில் இருந்தால் கோடீஸ்வரர் ஆக முடியும்.
10) மகர‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் ஆகியோர் சிறந்து விளங்கினால் கோடீஸ்வரர் யோகம் அமையும்.
11) கும்ப‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி, சுக்கிரன், செவ்வாய் சிறந்து விளங்குவதை பொறுத்து கோடீஸ்வரர் யோகம் ஏற்படும்.
12) மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு கேந்திரங்கள் அல்லாத இடங்களில் நல்ல விதமாக அமைந்து, நல்ல இடங்களைப் பார்ப்பது மற்றும் செவ்வாய் பலத்தினால் கோடீஸ்வர யோகம் அமையும்.

லக்கினப்படி கோடீஸ்வரயோகம் அமையும் வாய்ப்பு1


1) மேஷ லக்கினதில் உதித்தவர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு ஜாதகத்தில் பிரகாசித்தால் கோடீஸ்வர யோகம் ஏற்படும்.
2) ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு  சனி நட்பு நிலையில் நல்லவர்கள் சம்பந்தம் பெற்றிருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.
3) மிதுன லக்கினத்தில் உதிதவர்களுக்கு புதன், சுக்கிரன் ஜாதகத்தில் சிறந்து விளங்கினால் கோடீஸ்வரர் ஆக முடியும்.
4) கடக லக்கினத்தில் குரு, செவ்வாய் பலம் கோடீஸ்வர யோகம் பெற உதவும்.
5) சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோர்களது சுபத்துவ சம்பந்தம் கோடீஸ்வரர் ஆக உதவும்.
6) கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன் உச்சம், சுக்கிரனின் சுபத்துவ சம்பந்தம் பெற்று வலுவுடன் விளங்கினால் கோடீஸ்வரர் ஆகலாம்.

உச்ச புத‌னும் நீச்ச சுக்கிரனும்


      கன்னி வீட்டில் புதன் உச்சம், சுக்கிரன் நீச்சம் இந்த அமைப்பினால் ஜாதகருக்கு ஏற்படும் பலன்களாவன.....
      பெண்களால் உருவாகும் பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக சமாளிக்க முடியும். ஜாதகருக்கு குடும்பப் பற்று பாசம் சிறப்பாக இருக்கும். நெறிதவர மாட்டார். உச்ச,நீச்ச சுக்கிரனால் வரும் சர்க்கரை வியாதி வராது. பெண்களுடனான தவறான தொடர்புகள் இருக்காது. அப்படியே வேறு கிரக சூழ்நிலைகளால் ஏற்ப்பட்டால் பெயர் கெடாமலும், பொருள் இழப்புகளும் இருக்காது.புத்தி சாதுர்யத்தினை நேர் வழியில் பயன்படுத்துவர்.

Wednesday, July 20, 2011

பர்வத யோகம் ஜோதிடக்குறிப்பு

ஒரு ஜாதகத்தில் பர்வதயோகத்திற்க்கான அமைப்புகள் பின் வருமாறு....
1) சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது 1, 4, 7 மற்றும் 10ம் இடங்களில் அமர வேண்டும். 6 மற்றும் 8ம் இடங்களில் எந்த கிரகமும் அமராமல் இருக்க வேண்டும்.
                              அல்லது
2) சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது 1, 4, 7 மற்றும் 10ம் இடங்களில் அமர வேண்டும். 6 மற்றும் 8ம் இடங்களில் சுபகிரகங்கள் அல்லது யோகதிபதிகள் கெடாது அமரவேண்டும்.
                              அல்லது
3) லக்கினாதிபதியும், 12ம் அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெற்று அமைய வேண்டும்.
      இந்த அமைப்பு பெற்றவர்கள் நல்ல வசதியான வாழ்க்கையும், எதிரிகள் இல்லாத்வர்களாகவும், ஒரு குறிப்பிட்ட அளவிற்காகவாவது பிரபலமானவர்களாகவும் இருப்பர். ஜாதகத்தில் மற்ற யோக நிலைகளைப் பொறுத்து இந்த பர்வத யோகம் இன்னும் பலப்படும்.

Tuesday, July 19, 2011

சில கோடீஸ்வர யோகங்கள்‍ ஜோதிடக்குறிப்பு

1) ஒரு ஜாதகத்தில் 4,7,12க்கு உடையவர்கள் வலுவுடன் சுபர் பார்வை பெற்று நின்றால் கோடீஸ்வர யோகம் அமையும்.
      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 4,9 ஒன்றில் குரு நின்று, 2ல் சுக்கிரன், 7ல் சந்திரன் எனும் அமைப்பு ஏற்ப்பட்டாலே கோடீஸ்வர யோகம் ஏற்ப்படும்.
2) ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அவர்கள் லக்கினாதிபதிக்கும், ராசிநாதனுக்கும் வேண்டியவர்களாக அமைந்தால் கோடீஸ்வரயோகம் ஏற்படும்.
3) லக்கினாதிபதி, ராசிநாதன், யோகாதிபதி கெடாது ஜாதகத்தில் நல்ல விதமாக இவர்கள் சம்பந்தம் பெற்றால் கோடீஸ்வரர் ஆகலாம். இவர்கள் கெடாது சாதாரண நிலையில் அமர்ந்து சுபர் பார்வை பெற்றாலும் சுய முயற்ச்சியால் ஜாதகர் கோடீஸ்வரர் ஆகமுடியும்.

Monday, July 18, 2011

ராகு கேதுவால் யோகம் ஜோதிடக்குறிப்பு


      ராகு, கேதுக்கள் ஜாதகத்தில் உச்சம் பெற்று நிற்க அவர்களுக்கு 9ல் சுபாவ சுபர்கள் ஆட்சி, உச்சம், நட்பு என்னும் நிலையில் இருப்பது கோடீஸ்வர யோகத்தில் ஒரு வகை.
அ) விருச்சிகத்தில் கேது, கடகத்தில் சந்திரன் அல்லது குரு நிற்பதால் இந்த யோகம் அமையும். கடகத்தில் குரு நிற்பது பிரபல யோகமாகும்.
ஆ) ரிஷபத்தில் ராகு, மகரத்தில் சுக்கிரன் நட்பு நிலையில் அல்லது குரு நீசம் பெற்று பங்கம் ஏற்பட்டு நின்றாலும் இந்த அமைப்பு பிரபல யோகமாகும்.
இ) கும்பத்தில் கேது நிற்க, துலாத்தில் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் நின்றாலும் இந்த யோகம் உண்டு.
      பராசர ஹோரையில் ரிஷபத்தில் ராகு உச்சம் எனவும், விருச்சிகத்தில் கேது உச்சம் எனவும், கும்பத்தில் ஆட்சி எனவும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த இடங்களில் ராகு, கேதுக்கள் மிகுந்த பலம் பெறுவர். நன்மைகள் செய்வர் என நாம் எடுத்துக் கொள்ளலாம்.

Sunday, July 17, 2011

அஷ்டலட்சுமி யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6ல் ராகுவும், குரு கேந்திரம்(1, 4, 7, 10ல்) பெற்று அமைந்தால் அந்த அமைப்பு அஷ்டலட்சுமி யோகம் எனப்படுகிறது.
      இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் மிக எளிதாக நல்ல நிலையை அடைந்துவிடுவர். மற்ற கிரகங்கள் நல்ல முறையில் அமைந்திருந்தால் இவர்கள் கோடீஸ்வரர்களாக, சாதனையாளராக‌ பிரகாசிக்க‌ முடியும்

Saturday, July 16, 2011

உச்ச சூரியனும் நீச சனியும் ஜோதிடக்குறிப்பு

      மேஷத்தில் சூரியன் உச்சம், சனி நீசம் என்ற அமைப்பில் இருவரும் இனைந்து நிற்பது சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஜாதகர் அதிகாரப் பதவிகளில் தூங்கி வழிந்து கொண்டு இருப்பார் என சொல்லப்படுகிறது. அதாவது இவர்கள் அதிகாரப்பதவிகளை வகிக்கலாம் ஆனால் சோபிக்க முடியாது என்பது பல ஜோதிடர்களின் கருத்து.
      அனுபவத்தில் பார்க்கும் போது இவர்களைத் திட்டிக்கொண்டே இவரது வேலைகளை கீழே வேலை செய்பவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் சம்பளம் மட்டும் சரியாக கண‌க்குப் பார்த்து வாங்கிக்கொண்டிருப்பர்.இவர்கள் தவறான வழிகளில் சம்பாதிப்ப‌திலும் ஆர்வம் காட்டுவர்

அமலா யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் லக்கினத்திலிருந்தோ அல்லது சந்திரனிலிருந்தோ 10ம் வீட்டில் சுபகிரகம் அமைந்திருந்தால் அந்த அமைப்பிற்க்கு அமலா யோகம் எனப்படும்.
      இந்த யோகம் பெற்ற ஜாதகர் வாழ்வில் தனக்கென ஒரு இடத்தையும், பெரும் புகழையும், எல்லா சுகங்களும் பெற்றவராவார்.
      லக்கினத்திலிருந்தோ அல்லது சந்திரனிலிருந்தோ 10ம் இடத்தில் சுபகிரகம் அமைந்தால் அமலா யோகம் ஏற்படும். ஆனால் ஏதோ ஒரு கிரகம் (பாபகிரகமானலும்) 10ல் அமைந்த கிரகத்தின் தசா புத்தியில் நல்ல செல்வ வளத்தைத் தரும். பாபகிரகமானால் செல்வம் வரும் வழி வேண்டுமானால் மாறுபடும் நல்வழியில் வராது.

அதியோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் புதன், குரு, சுக்கிரன் போன்ற‌ சுபகிரகங்கள் லக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ 6,7 மற்றும் 8ல் அமைந்தால் அந்த அமைப்பிற்கு அதியோகம் என்று பெயர்.
      அதியோக அமைப்பு பெற்றவர்கள் மிகவும் அமைதியான அன்பானவர்களாகவும், வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவிப்பவர்களாகவும், மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற்றவர்களாகவும் இருப்பர். மேலும் எதிரிகள் இல்லாத நிலையும், ஆரோக்கியமான நல்ல நீண்ட‌ ஆயுள் பெற்றவர்களாகவும் இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அம‌ர்ந்தால் ஒரு ஊருக்கோ, கிரம்மத்துக்கோ நகரத்துக்கோ தலைவராக இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் ஏதாவது இரண்டு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அம‌ர்ந்தால் அமைச்சராக இருப்பர்.
      இதில் அமரும் கிரகங்களில் மூன்று கிரகங்களோ அல்லது அதற்க்கு மேலோ கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றோ, வலிமையாகவோ அம‌ர்ந்தால் ஒரு நாட்டுகே தலைவராக இருப்பர்.
     

     

Friday, July 15, 2011

டுபாகூர் பேர்வழி, கோழை ஜோதிடக்குறிப்பு

      ஒருவருடைய ஜாதகத்தில் புதனும் செவ்வாயும் சேர்ந்து இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ ஜாதகர் டுபாகூர் பேர்வழியாக இருப்பார், பொய்யராக இருப்பார், பொய்யை நம்பும் படியாக கூறுபவராக இருப்பார். அவர் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்காது.
      ஒருவருடைய ஜாதகத்தில் பலமற்ற செவ்வாய் லக்கினத்தைப் பார்த்தால் ஜாதகர் பயந்தாங்கொள்ளியாக, கோழையாக‌ இருப்பார்.

யாரை குரு தசை குபேரனாக்கும்? ஜோதிடக்குறிப்பு

      மேஷ லக்கினம், மேஷ ராசியில் பிறந்த ஜாதகருக்கு, 10ல் செவ்வாய், 9ல் சூரியன் குரு இனைந்து நின்றால், லக்கினத்தில் நிற்க்கும் சுகாதிபதி சந்திரனை யோகாதிபதிகள் இருவரும் பார்க்கும் நிலையும், லக்கினாதிபதி உச்சம் பெற்ற நிலையும், யோகாதிபதி குரு ஆட்சி பெறும் நிலையும் ஒரு சேர ஏற்ப்படும் அல்லவா?
      இந்த ஜாத‌கரை குரு தசை குபேரனாக்கும். இதர தசைகளில் சந்திரன், செவ்வாய், சூரியன், குரு புத்தி அந்தரங்களில் மிக நல்ல பலன்கள் ஏற்படும்.

இசை மழையும், பண ம‌ழையும் ஜோதிடக்குறிப்பு

      புதன் சுக்கிரன் இருவரும் இனைந்து 2ம் இடத்தில் இருக்க, தைரியாதிபதியாகிய 3க்குடையவன் ஜாதகத்தில் வலுவான நிலையில் இருந்தாலும் அல்லது 3க்குடையவர் ஆட்சி உச்சம் பெற்று, அவருடன் புதன் சுக்கிரன் இனைந்து நின்றாலும் ஜாதகர் இசை வல்லுனராக இருப்பார், அவருக்கு அதனால் பண ம்ழையும் பொழியும்.
     

Monday, July 11, 2011

பார்வதியோகம் ஜோதிடக்குறிப்பு

      ஜாதகரை சாதனையாளராக்கி பெருமளவில் பெருளீட்டி பெயரும் புகழும் சம்பதித்துக் கொடுப்பது சக்தி யோகங்கள் ஆகும். அதில் இப்போது பார்வதியோகம் பற்றி பார்ப்போம்.
      ஜீவனாதிபதி 10க்குடையவன், அம்சக்கட்டத்தில் நிற்க்கும் வீட்டிற்க்குரியவன் ராசிக்க்ட்டத்தில் 10ம் இடத்தில் வலுவுடன் நிற்பது பார்வதியோகமாகும்
      உதாரணமாக ஒரு ஜாதகத்தில் 10க்குடையவன் அம்சக்கட்டத்தில் கடகத்தில் நிற்ப்பதாகக்கருதுவோம். கடக‌த்திற்க்குரியவர் சந்திரன் அவர் ராசிக்கட்டத்தில் 10ல் நின்றால் அது பார்வதி யோகமாகும்.
      அவ்வாறு அந்த பத்தமிடம் அந்த கிரகத்திற்க்கு ஆட்சி உச்ச வீடாக அமைந்தால் அது பிரபல பார்வதியோகமாகும்.
      ஜாதகர் அரசாங்கத்தில் உயர் அதிகாரியாகவோ, அல்லது மிகப்பெரிய தொழிலதிபர்களாகவோ பிரகாசிக்க முடியும்.
      அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பவர் லட்சங்களைத்தான் குவிக்க முடியும், கோடிகள் என்பது எட்டாக்கனி என்ற நிலை மாறி வருகிறது. அதிகாரிகள் கோடிகளைக் குவிப்பது சாதாரணமாகி வருகிறது.
      எனவே பார்வதி யோகம் கோடிகளைக் குவிக்கும் சாதனையாளராக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மஹாசக்தியோகம் ஜோதிடக்குறிப்பு

      ஜாதகரை சாதனையாளராக்கி பெருமளவில் பெருளீட்டி பெயரும் புகழும் சம்பதித்துக் கொடுப்பது சக்தி யோகங்கள் ஆகும். அதில் இப்போது மஹாசக்தியோகம் பற்றி பார்ப்போம்
சந்திரனுக்குரிய தெய்வம் பார்வதி
ராகுவிற்குரிய தெய்வம் துர்க்கை
      சந்திரனும் ராகுவும் சுபத்துவ சம்பந்தம் பெறுவது மஹாசக்தி யோகமாகும்.
      சந்திரனுக்கு 12ல் ராகு நிற்ப்பது இந்த யோகத்தினை ஏற்படுத்தும். அதிலும் இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறுவது இந்த யோகம் பிரமாதமாக இருக்கும்.
1. த‌னுசுவில் சந்திரன், விருச்சிக ராகு
2. ரிஷபத்தில் சந்திரன், மேஷ ராகு
3. கடகத்தில் சந்திரன், மிதுன‌ ராகு
      இத்துடன் ஜாதகத்தில் குரு மங்கள யோகமும் இருந்தால் அவர் மிகப்பெரிய கோடீஸ்வரராவார்.
     இந்த யோகம் அமையப் பெற்ற ஜாதகர்
1. வெளிநாட்டு வணிகம் மூலம் பொருளீட்டுதல்
2. வெளிநாடுகளில் பெரிய பதவி, அல்லது வெளிநாடுகளில் தொழில் மூலம் பொருளீட்டுதல்
3. முத‌ல் தர வழக்குறைஞர்.
4. பிரபல பேச்சுத் திறமை மிக்க அரசியல் வாதி.
5. அரசியல், நிதி அலோசகர்.
6. கடல் வழி வாணீபம்.
7. அரசாங்கத்தில் பெரு செல்வாக்கு பெற்று, அரசாங்கத்தால் தனது பொருளாதார வளர்ச்சிக்கு சலுகைகள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் பெறுவர்

Sunday, July 10, 2011

இளைய சகோதர சகோதரிகளால் யோகம் ஜோதிடக்குறிப்பு

      3ம் இடத்ததிபன் அல்லது செவ்வாய் அல்லது 3ம் வீடு இவை சுபகிரகங்களின் பார்வையோ சேர்கையோ பெற்றாலும், இவைகள் பலம் பெற்றாலும் இந்த யோகம் ஏற்ப்படுகிறது. 3ம் இடத்ததிபன் அல்லது செவ்வாய் அசுபகிரகங்களின் வீட்டில், மறைவு ஸ்தானங்களில் அமரக்கூடாது.
      இந்த யோகத்தின் பலன் யாதெனில், ஜாதகர் இளைய சகோதர, சகோதரிகளால் நன்மை அடைவர். அவர்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பர், அதனால் ஜாதகருக்கு உதவுவர். ஜாதகரும் அவர்களிடம் மிகவும் அனுசரித்து நடந்துகொள்வார். இளைய சகோதர, சகோத‌ரிகளும் மிகவும் இவர்களை மதித்து நடந்துகொள்வர்

12 பாவங்கள் ஜோதிடக்குறிப்பு

முதல் பாவம்:
      உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாம் பாவம்:
      குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது
மூன்றாம் பாவம்:
      இளைய சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீத ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.
நான்காம் பாவம்:
      கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.
ஐந்தாம் பாவம்:
      இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்தி – குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.
ஆறாவது பாவம்:
      தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.
ஏழாவது பாவம்:
      காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.
எட்டாவது பாவம்:
      ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
ஒன்பதாம் பாவம்:
      பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.
பத்தாம் பாவம்:
      இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.
பதினொன்றாம் பாவம்:
      லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.
பன்னிரண்டாம் பாவம்:
      இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.
பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

கிரகங்களின் மறைவு ஸ்தானங்கள்

      சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, – லக்னத்துக்கு 8, 12-ல் இருந்தால் மறைவு.
      சந்திரன், புதன், குரு – லக்னத்துக்கு 3, 6, 8, 12 –ல் இருததால் மறைவு.
      சுக்கிரன், லக்னத்துக்கு 3, 8-ல் மட்டும் இருந்தால் மறைவு 6, 12-ல் இருந்தால் மறைவு இல்லை.

வாகனயோகம் யாருக்கு ஜோதிடக்குறிப்பு

      நான்காம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் லக்கினத்தில் சேர்ந்து அமர்ந்து இருந்தால் ஜாதகர் அதிக தனமும் ,வாகனங்களும் உடையவராக இருப்பார் .
      குருபாகவானும் நான்காம் இடத்தில் அமர அல்லது நான்காம் பாவத்தை பார்க்க நல்ல சுகமும் வாகன யோகமும் உண்டாகும் .
      சுக்கிரன் நான்காம் அதிபதி ஆகி பதினொன்றில் அமர்ந்தால் அதிகமான வாகனயோகம் உள்ளவர் ஆவார் .
      நான்காம் அதிபர் சந்திரனோடு சேர்ந்து இருந்தால் அநேக வாகனங்கள் உண்டு.
      சுக்கிரன் சந்திரனோடு சேர்ந்து இருந்தாலும் அல்லது சுக்கிரன் சந்திரனுக்கு 5, 9ல் அமர்ந்து இருந்தாலும் கண்டிப்பாக நான்கு சக்கர வாகன யோகம் உண்டு.
      கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் சுக்கிரன் சேர்ந்து நான்காம் பாவத்தில் இருந்தால் புதன் திசையில் சுக்கிர புத்தி நடக்கும் போது வாகனயோகம் உண்டாகும் .
      நான்காம் பாவாதிபதியும் ஒன்பதாம் பாவதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்போதும் வாகன‌ யோகம இருக்கும்.
      நாலாம் பாவாதிபதியும் பதினொன்றாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற நல்ல வாகனங்கள் அமையும்.
      நாலாம் பாவாதிபதியும் ஐந்தாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் வாகனயோகம் உண்டு .
      நாலாம் பாவாதிபதியும் இலக்கினாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் ஜாதகர் வாகனம் மூலம் வருமானம் பெறுவார்.
      குரு சுக்கிரன் சனி நான்காம் இடத்தில் அல்லது கேந்திரகோணம் அடைந்து இருந்தாலும் வாகனயோகம் உண்டு .
      நான்காம் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருந்தால் வாகன யோகம் உண்டு.
      சுக்கிரன் செவ்வாய் ஜாதகத்தில் கெடாமல் இருந்தால் வாகன யோகம் உண்டு.
     

Friday, July 8, 2011

சுக்கிரனால் ஏறுமுகம் ஜோதிடக்குறிப்பு

      சுக்கிரன் பூர்வபுண்ணியாதிபதியாக சூரியனின் உத்திர நட்சத்திரம், புதனின் ரேவதி நட்சத்திரம் ஆகியவற்றில் ஒன்றில் அமர்ந்தால் ஜதகரின் வாழ்க்கை ஏறுமுகமாக வெற்றியும், நன்மையும் மிக்கதாக அமையும்.
      மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் 4,10ம் இடங்களில் அமர்ந்தால் முறையாக ரேவதி, உத்திரம் நட்சதிரத்தில் அமர்வார். யோகமுண்டு. புதன் சுக்கிரனுக்கு வேண்டியவர் எனவே புதனுடைய நட்சத்திரத்தில் அமர்ந்தால் யோகம் சிறப்பாக அமையும்.
      மகர லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 3, 9ம் இடங்களில் ஒன்றில் அமர்ந்தால் முறையே ரேவதி, உத்திரம் நட்சதிரத்தில் அமர்வார். யோகமுண்டு.
      சூரியன் சுக்கிரனுக்கு வேண்டாத‌வர் என்றாலும் சுக்கிரனை விட வலிமையான சூரியன் சுக்கிரனை தன்னுள் அடக்கிக்கொண்டு யோக பலன்களைத் தருவார் என க்ருதவேண்டியுள்ளது.
      சுக்கிரன் சிம்ம வீட்டில் நின்றாலும் உத்திர நட்சத்திரத்தில் அமர வாய்புள்ளது. மிதுன லக்கினகாரர்களுக்கு 3ம் இடத்திலும், மகர லக்கினகாரர்களுக்கு 8ம் இடத்திலும் நிற்பார்.
      சுக்கிரனுக்கு 3, 8ம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் ஆகும். ஆனால் சுக்கிரன் 3, 8ம் இடங்களில் நின்றாலும் உயர்வான பலன்களே நடக்கும் என்று சொல்லப் பட்டுள்ளது.
      இருந்தாலும் சுக்கிரன் மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் கன்னி வீட்டில் 4மிடத்தில் நீசபங்கம் ஏற்ப்பட்டு நின்றாலும், மீன வீட்டில் 10ல் உச்சம் பெற்று நின்றாலும் யோகம் பிரமாதமாக இருக்கும். சிம்மத்தில் நிற்ப்பது யோகம் தராது.
      மகர லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் கன்னியில் (நீசபங்கம் ஏற்ப்பட்டு) அல்லது சிம்மத்தில் நிற்பது யோகம் தரும்.

Thursday, July 7, 2011

வேதாந்தி ஜோதிடக்குறிப்பு

ஒரு ஜாதகத்தில் குருவுடன் 2க்குரியவன் சேர்ந்தால் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் அந்த ஜாதகர் வேதம், வேதாந்தம், காவியங்கள் அகியவைகளைக் கற்றுத் தேர்வார். அதில் ஞானம் பெற்றவராவார்.

மிகச்சிறந்த யோகம் ஜோதிடக்குறிப்பு

ஜோதிடத்தில் மிகச்சிறந்த யோகமாக சொல்லப்பட்டிருப்பது சன்னியாசி யோகமாகும். காரணம் ஒரு மனிதன் தெய்வத்தை, தெய்வநிலையை அடைவதை விட சிறந்த விசயம் ஏதுமில்லை. அதற்கான சில கிரக நிலைகள் பின்வருமாறு...
1. 9ம் இடத்தில் நான்கும், அதற்க்கு மேற்ப்பட்ட கிரகங்களும் இருந்தால் அந்த ஜாதகர் மிகவும் சிறந்த ஞானியாக இருப்பார்.
2. 10ம் இடத்தில் மூன்றும் அதற்கு மேற்ப்பட்ட கிரகங்கள் அமைந்தால் அந்த ஜாதகர் உலகம் புகழும் சன்னியாசியாக இருப்பார்.
3. ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் இனைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்போ காண‌ப்பட்டால் அந்த ஜாதகம் சன்னியாசி யோகமுடைய ஜாதகமாகும். ஒரு வேளை அந்த ஜாதகர் மற்ற கிரகங்களின் வலிமையால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும், வாழ்க்கையில் சிறிது காலமாவது சன்னியாசி போல் வாழ்வார்.

Wednesday, July 6, 2011

எப்போது திருமணம் ஜோதிடக்குறிப்பு


      குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்பார்கள். குரு பகவான் லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ அல்லது சந்திர ராசியையோ அல்லது சந்திர ராசிக்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ கோச்சாரத்தில் சுற்றிவரும் போது, 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்பார்கள்.
      சுக்கிரனின் தசா புத்தி நடைபெறும் பொழுதும் திருமண யோகம் உண்டு. அதுபோல தனிப்பட்ட சில ஜாதகங்களில் ஏழாம் வீட்டதிபரின் தசா புத்தி நடைபெறும்போதும் திருமண யோகம் உண்டு.
      அதுபோல ஒரு சில ஜாதகருக்கு கோசார குரு ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு கோசாரரீதியாக வந்தமரும் கால‌த்தில் திருமண யோகம் உண்டு

ஒரு குறுக்கு வழி

      லக்கினத்தின் பாகைகள் கூட்டல் ஏழாம் வீட்டு அதிபதியின் பாகைகள் வகுத்தல் 30 பாகைகள் = என்ன ராசி வருகிறதோ, அந்த ராசியில் கோச்சார குரு வரும்போது திருமணம் நடைபெறும் (இது பொது விதி!)
      லக்கினாதிபதி, ஏழாம் அதிபதி, சுக்கிரன் ஆகியோர்கள் தங்கள் சுயவர்க்கத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால் உரிய காலத்தில் திருமணம். அதாவது 21 வயது முதல் 25 வயதிற்குள் திருமணம்.
      அவர்களில் இருவர் 3 அல்லது 4 பரல்களைக் கொண்டிருந்தால் சற்று வயதான காலத்தில் திருமணம். அதாவது 30 அல்லது 32 வயதில் திருமணம்.
      மூவருமே, 1 அல்லது 2 பரல்களை மட்டும் கொண்டிருந்தால் திருமண வாழ்க்கை அமையாமலே போகலாம்!

கேதுவால் யோகம்

      கேது லக்கினதிற்கு கோண‌ங்கலான‌ 1, 5, 9ம் இடத்திலும், லாபஸ்தானமான 11ம் இடத்திலும் நிற்க பிறந்த ஜாதகர் சொந்த இடத்திலும், வெளிதேசங்களிலும் வாசம் செய்வான். பொன், பொருள் ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மிகவும் அதிர்ஷ்டசாலியாக விளங்குவான். இல்லறத்தில் மகிழ்ச்சி பொங்கும்

கணவன் பேச்சைக் கேட்காத மனைவி


      5ம் இடத்திற்க்குரியவர் ராகு அல்லது கேதுவுடன் கூடி 3ல் நிற்க, அந்த ஜாதகருக்கு மனைவியால் எப்போது தொந்திரவு தான். கண‌வனுடன் எப்போதும் சண்டை போடக்கூடியவளாகவும், மிகவும் கொடூர குணம் கொண்டவளாகவும் இருப்பாள்.
      லக்கினத்திற்கு 3க்குடையவன் ராகு அல்லது கேதுவுடன் கூட கணவனை, மனைவி மதிக்க மாட்டாள், அவன் சொல் பேச்சு கேட்கமாட்டாள், கணவனை விட மனைவி அதிக வயதுடையவளாக இருப்பாள். இவர்கள் இருக்கும் ஊர் அருகில் கடல் உண்டு.
      லக்கினத்திற்கு 3க்குடையவன் சனியுடன் கூட அல்லது சுக்கிரன் சனியுடன் கூட ஜாதகரை மனைவி மதிக்க மாட்டாள், அவன் சொல் பேச்சு கேட்கமாட்டாள், கோபக்காரியாக இருப்பாள்.

Tuesday, July 5, 2011

பாராட்டுமழை ஜோதிடக்குறிப்பு

பாக்கியாதிபதி என்கிற 9க்குடையவன் லக்கினமேறி குரு பார்வை பெற்றாலும், லக்கினாதிபதியுடன் 9க்குடையவன் சம்பந்தப்பட்டு குரு பார்வை பெற்றாலும் ஜாதகர் எப்போதும் பாராட்டு மழியில் நனைந்து கொண்டே இருப்பார்.

Monday, July 4, 2011

விபரீத ராஜயோகம்


      துர்ஸ்தானாதிபதிகள் என்று சொல்லக்கூடிய 3,6,8,12ம் அதிபதிகள், அந்த 3,6,8,12ம் இடங்களில்(துர்ஸ்தானாதிபதிகள் துர்ஸ்தானங்களில்) இடம் மாறி அமர்ந்திருந்தால் அது விபரீத ராஜயோகமாகும்.
      அதாவது உதாரணத்திற்க்கு 3ம் அதிபதி 8ல், 6ம் அதிஅப்தி 12ல், 12ம் அதிபதி 3ல், 8ம் அதிபதி 3ல் இவ்வாறு அமர்வது விபரீதராஜயோகமாகும். இதில் அனைத்து அதிபதிகளும் இடம் மாறி இருக்க வேண்டும் என்பதல்லாமல் இருவரோ மூவரோ இடம் மாறியிருந்தால் கூட போதும், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற ஜோதிட மொழிக்கேற்ப்ப ராஜயோக பலன்களைத்தருவர்.
      இதன் பலன் என்னெவெனில் எதிர்பாராமல் வரும் நல்ல பலன்கள், உழைப்பிற்க்கு அதிகமான ஊதியம், திடீர் வரவுகள், திடீர் சொத்துகள், திடீர் சம்பத்து என கூறிக்கொண்டே போகலாம்.

ராகுவால் ராஜயோகம்

      எந்த லக்கினம், எந்த ராசியானலும் சரி ராகு மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, மகரம் இந்த ராசிகளில் த‌னித்து நின்று அதற்க்கு கேந்திரங்களில்( ராகுவிற்க்கு கேந்திரத்தில் 1, 4, 7, 10ம் இடங்களில்) ஒரு கிரகமோ அல்லது பல கிரகங்களாவது இருந்தால் அது மிகச்சிறந்த ராஜயோகமாகும்.

Sunday, July 3, 2011

வளமான வாழ்வு அமைய‌


1) லக்கினம், லக்கினாதிபதி சிறப்பாக அமைய வேண்டும். ஜாதகருக்கு செல்வம் செல்வாக்கு பெற இந்த அமைப்பு உதவும்...
   அ) லக்கினாதிபதி ஆட்சி, உச்ச, நட்பு வீட்டில் இருப்பது.
   ஆ) லக்கினத்தை குரு பார்ப்பது, ராசியை குரு பார்ப்பது.
   இ) லக்கினாதிபதி சுபர் பார்வை, சேர்க்கை பெற்றிருப்பது.
2) 5,9ம் இடங்கள் அதன் அதிபதிகள் சிறப்பாக இருக்க வேண்டும்
   5,9ம் இடத்ததிபதிகள் ஜாதகத்தில் வலுபெற்றிருக்க வேண்டும், அவிடங்கள் சுபர் பார்வை பெற்றிருந்தால் இன்னும் சிறப்பு. ஜாதகரின் பூர்வபுண்ணிய பலன் அதிகரித்து, நல்ல சுக செளக்கியங்களை அனுபவிப்பார்.
3) தன ஸ்தானமும் லாப ஸ்தானமும் அதன் அதிபதிகளும் பலம் பெற வேண்டும். இருவரும் பரிவர்த்தனை ஆகிருப்பது பிரபல யோகமாக க‌ருதப்படுகிறது.
4) சுகமான வாழ்வு பெற சுகஸ்தானதிபதியும், சுகஸ்தானமும் சிறப்பாக இருக்க வேண்டும்.கல்வி, சொந்தவீடு, வாகனம், நிம்மதியான வாழ்வு, தாய் குறித்த ஸ்தானம் ஆகையால் இந்த ஸ்தானம் நன்றாக அமைவது சிறப்பு.
5) ஒருவரது வேலை, தொழில் முயற்சி வெற்றி பெறவும், நல்ல விதமாக அமையவும் ஜீவன ஸ்தானம் நல்ல விதமாக அமைய வேண்டும். பத்தில் ஒரு பாவியாவது அமைய வேண்டும் என்ற் ஜோதிட மொழிப்படி, பத்தில் கிரகம் நிற்க்க சுபர் பார்வை சேர்க்கை பதமிடத்திற்க்கும், பத்தம்மதிபதிக்கும் ஏற்படுமாயின் வளமான வாழ்வு அமையும்.
6) நல்ல மனைவி அமைந்தால் தானே இல்லறம் இனிக்கும். அதற்க்கு கள‌த்திர ஸ்தானம், அதன் அதிபதி நல்லவிதமாக அமைய வேண்டும். களத்திர ஸ்தானத்தில் பகை நீசம் பெறும் கிரகங்கள் அமராதிருத்தலும், களத்திர ஸ்தானாதிபதி பகை நீசம் மறைவு பெறமலும், சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமரமலும் இருந்தாலே போதுமானது, இல்லற வாழ்வு இனிக்கும்.

   வளமான வாழ்வு பெற ஒருவரது ஜாதகத்தில் லக்கினாதிபதி, தானாதிபதி, சுகாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி, களத்திராதிபதி, பாகியாதிபதி, ஜீவனாதிபதி, லாபாதிபதி ஆகிய 8 பேரும் அந்த 8 இடங்களும் சிறப்பாக அமைய வேண்டும். ஆனால் அவ்வாறு அமைவது அபூர்வமே.
   அதனால் இதில் ஏதாவது 3, 4 இடங்கள் அதன் அதிபதிகள் சிறப்பாக இருந்தாலே வளமான வாழ்வு அமையும்.

சிறந்த தன யோகங்கள்


கீழ்க்கண்ட தன யோக அமைப்பு உள்ளவர்கள் அவர் அவர் பூர்வ புண்ணியங்களுக்கு ஏற்ப, அதிக வளமோ அல்லது மிதமான வளத்தையோ அந்த அந்த திசை, புக்தி காலங்களில் ஏற்படுத்தும்.

1. கேந்திர யோகம் : ஐந்து (5) கிரகங்கள் கேந்திரங்களில் (லக்னம் முதல் 1 , 4 , 7 , 10 ம் இடங்கள்) சேர்ந்தோ அல்லது தனியாகவோ இருந்தால் தன யோகம் மேற்படி கிரகங்கள் நடத்தும் தசா புக்தி காலங்களில் ஏற்படும்.

2. யவன யோகம் : 2 இல் சுப கிரகம் இடம் பெற்று , ரெண்டுக்கு உரிய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் தன யோகம் ஏற்படும்.

3. நிஷப யோகம் : நான்காம் (4 ) இடத்தில ஜீவன ஸ்தானமான பத்தாம் வீட்டு (10 )அதிபதி இடம் பெற்றால், தன் வீட்டையே பார்க்கும் அமைப்பு எற்ப்படுகிறது, இது ஒரு நல்ல‌ தன யோக அமைப்பு.

4. தர்ம கர்மாதிபதி யோகம் : 9 மற்றும் 10ம் இடத்து அதிபதிகள் வலுப்பெற்று இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் அமைப்பு தன யோகத்தினை உண்டாக்கும் .

5. குரு திருஷ்டி யோகம்: குரு பகவான் சனி அல்லது கேது இருவரையுமோ அல்லது ஒருவரையோ இணைந்தாலோ அல்லது பார்த்தாலோ ஏற்படக்கூடிய தன யோகம்.  (உதாரணம் : குருவும் கேதுவும் இணைந்தால் கோடீஸ்வர யோகம் ஏற்படும் )

6. லாப ஸ்தானத்தில் (11 ம் வீட்டில்) ஒரு கிரகமோ அல்லது பலவோ வலுப்பெற்று இருக்கும் அமைப்பு தன யோகம் ஏற்படுத்தும்.

7. சனியும் புதனும் 11 ம் இடத்தில இணைவது தன யோகத்தினை ஏற்படுத்தும்.

8. ராஜ யோகம் : கேந்திரங்களில் 1 , 4 , 7 , 10 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் ராகுவோ அல்லது குருவோ பகை நீசம் பெறாமல் இருந்தால் ஏற்படும் தன யோகம்.

9. எட்டாம் இடத்தில குரு அல்லது சுக்கிரன் அமைவது தன யோகத்தினை ஏற்படுத்தும்.

மேற்கண்ட ஜாதக அமைப்புகள் தன யோகம் அடைவது உறுதி . மேலும் பல வித கிரக அமைப்புகள் தன யோகத்தினை ஏற்படுத்தினாலும், மேலே சொல்லப்பட்ட ஜாதக கிரக அமைப்புகள் மட்டுமே மிக முக்கியமாக கருதப்படுகிறது.

Saturday, July 2, 2011

குருசண்டாள யோகம்


      ஒருவருடைய ஜாதகத்தில் குருவுடன் ராகு சேர்ந்து நின்றால் அது குருசண்டாள யோகமாகும். இந்த யோகத்தில் குருவோ ராகுவோ ஆட்சி உச்சம் பெற்றால் யோகம் அபரிதாமாக இருக்கும்.
      இதில் ராகுவோடு சேர்ந்த குரு தன் தசா, புத்தி, அந்தரங்களில் கொடுக்கும் பலன்களை விட, குருவோடு சேர்ந்த ராகு மிக நல்ல பலன்களை (பூவுடன் சேர்ந்த நாறும் மனப்பது போல‌) கொடுப்பார்.
      இதில் குருவோ, ராகுவோ பகை, நீசம் பெற்று கெட்டுவிட்டால் யோகம் கெட்டுவிடும்.
      இந்த யோகம் பெற்ற ஜாதகர் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதியாக இருப்பார் அல்லது கடவுள் நம்பிக்கை இருந்தாலும் ஏதோ பெயரளவிற்க்கு பக்தி செய்வார்.

சனி தெசை யாருக்கு யோகம் செய்யும்


      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி பாதகயோகாதிப்தி, தருமகருமாதிபதி ஆகிறார் எனவே இவர்களை சனி தசை செல்வச்சீமானாக்கும்.
அதிலும் கீழ்க்கண்டவாரு ஜாதகதில் கிரகங்கள் அமைந்தால் யோகம் தரும்.

      1) 9,10க்குடைய சனி 10ல் ஆட்சி பலத்துடன் இருப்பது. 9ல் ஆட்சி பலம் பெற்றாலும் பாதக ஸ்தானம் என்பதால் 10மிடமே சாலச் சிற‌ந்தது.
      2) சுக பூர்வபுண்ணியாதிபதிகளான சூரியன், புதன் கன்னியில் புதஅதித்ய யொகம் என்ற அமைப்பில் இருப்பது.
      3) கடகத்தில் குரு உச்சம் பெற்று நிற்பதுடன் யோகதிபதி சனி மற்றும் கோணாதிபதி புதன் ஆட்சி உச்ச பலம் பெற்று நின்றால் யோகம் பல மடங்கு இருக்கும்.
      இவர்களுக்கு சனி தசை மட்டுமல்லாது குரு தசை, புதன் தசை, இதர தசைகளில் சனி, குரு, புதன் புத்தி அந்தரங்களில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
      இவர்கள் ஷேர் மார்கெட், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயரிப்பு, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வெற்றி வாய்ப்புகள் இவர்களைத் தேடி வரும்.

நல்ல காலம் எப்போது?


      ஒருவருடைய ஜாதகத்தில் இருந்து அவருக்கு எப்போது நல்ல காலம் பிறக்கிறது? என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து சொல்ல முடியும்.
      ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் அவருக்கு 22 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் சந்திர‌ன் வலுவாக இருந்தால் அவருக்கு 24 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால் அவருக்கு 28 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் புதன் பலமுடன் இருந்தால் அவருக்கு 32 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      குரு பலமாக‌ இருந்தால் அவருக்கு 16 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      சுக்கிரன் பலமாக‌ இருந்தால் அவருக்கு 25 வயதுக்கு மேல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      சனி பலமாக‌ இருந்தால் அவருக்கு 35 வயதுக்கு மேல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் ராகு பலமுடன் இருந்தால் அவருக்கு 42 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் கேது பலமுடன் இருந்தால் அவருக்கு 48 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      இவ்வாறு பலன் சொல்லும் போது கூடுதலாக கவனிக்க வேண்டியவை எதுவெனில்...........
      ஒரு ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ பலமாக அமைந்தால், அந்த ஜதகத்தின் லக்கினாதிபதி, சந்திரலக்கினாதிபதி ஆகியோர்களின் நிலை அதாவது அவர்கள் பகை நீசம் பெற்று கெடாமல் இருந்தாலே போதும், ஜதகருக்கு நல்ல காலம் முன்னரே ஆரம்பித்து விடுவதை பார்க்க முடிகிறது.
      உதாரணத்திற்க்கு மேஷ லக்கினத்தில் பிறந்த ஜாதகர் ஒருவருக்கு கேது பலமாக அமைந்து, ஜதகத்தில் செவ்வாய் கெடாமல் இருந்து, பாதாகாதிபதி குரு 11ல் அமர்ந்ததால், அவர் குருவிற்குறிய 16 வயதில் +2 முடித்தவுடன், சின்ன சின்ன வேலையில் அமர்ந்து முன்னேறி, பின்பு செவ்வாய்க்குறிய 28 வயதில்  சொந்தமாக வீடு கட்டி, கார் வாங்கி நல்ல நிலையில் செட்டிலாகி விட்டார்.
      ராகு கேது பலமுடன் உள்ள ஜாதகர், லக்கினாதிபதி, சந்திர லக்கினாதிபதி, யோகாதிபதி, இந்த மூவரில் எவர் வலுவாக உள்ளனரோ அல்லது மூவரில் இருவரோ அல்லது மூவரும் வலுவாக உள்ளனர் என்றாலோ, எந்த கிரகத்திற்க்கு குறைந்த வயது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த வயதில் அவருக்கு நல்ல காலம் ஆரம்பித்துவிடும்.


Friday, July 1, 2011

பட்டதாரி யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் புதன் இணைப்பு புதாஅதித்ய யோகம் எனப்படுகிறது. இந்த அமைப்பு அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குகிறது. அதாவது குறைந்தபட்சம் அவர் பட்டதாரியாக இருப்பார், அத்துடன் இந்த அமைப்பிற்க்கு குருவின் சேர்க்கை, பார்வை மூலமாக சிறப்பான‌ சம்பந்தம் ஏற்பட்டால் அவர் பட்ட‌மேல்ப்படிப்பு, முனைவர் பட்டம், போன்றவைகளை பெறுவார்.

குழந்தை பாக்கியம் எப்போது?


      ஒருவருடைய ஜாதகத்தில் 5ம் இடத்தை வைத்து புத்திர பாக்கியத்தை கணிக்க வேண்டும்.
      ஆனால் பெண்கள் ஜாதகத்தில் 5ம் இடத்தை பார்ப்பதோடு, 5க்கு 5ம் இடமான 9ம் இடத்தை வைத்து புத்திர பாக்கியத்தை கணிக்க வேண்டும்.
      குரு பகவான் புத்திரகாரகன் ஆகிறார், அவருடைய நிலையை வைத்தும் புத்திர பலனைக் கானலாம்.
      ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதியும், குருவும் நன்றாக அமையவில்லை என்றால், அதாவது பகை நீசம் பெற்று கெட்டு நின்றால் புத்திர பாக்கியம் நன்றாக அமைவதில்லை.
      புத்திர ஸ்தானாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்று அஸ்தங்கம் அடைந்தால் புத்திர பலன் உண்டாவதில்லை அல்லது புத்திர இழப்பு ஏற்ப்படுகிறது.
      புத்திர ஸ்தானத்தில் குரு அமர்ந்திருந்தாலும்(காரகா பாவ நாஸ்த்தி) புத்திர பலன் உண்டாவதில்லை. அது குருவினுடைய ஆட்சி உச்ச வீடாக இருந்தால் மாறாக‌ நற்பலன்கள் ஏற்ப்படுகிறது.
      புத்திர ஸ்தானாதிபதி, புத்திரகாரகன், இவர்கள் அம்சத்தில் நின்ற இடத்ததிபதி ஆகியோருடைய திசை புத்தி காலங்களில் புத்திர பலன் உண்டாகிறது.
      கோசார ரீதியாக குரு ராசியிலிருந்து 2,5,7,9,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது புத்திர பலன் உண்டாகிறது.
      ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிகள் புத்திர ஸ்தானமாக வந்தால் புத்திர வழியில் நற்பலன்கள் அமைவதில்லை.
      புத்திர ஸ்தானம் கடகமாக இருந்து அதில் சனி தனது நட்சத்திர காலில் வீற்றிருந்தால் நிறைய புத்திர பாக்கியம் ஏற்படுகிறது.
      புதன் 5ம் இடத்தில் இருந்தால் பெண் புத்திர பாக்கியம் ஏற்படும், அல்லது புத்திர பக்கியம் குறைவாக இருக்கும்.
      5க்குடையவர் எத்தனை கிரகங்களுடன் சேர்க்கை பெற்றுள்ளாரோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
      அதே போல் 5ம் இடத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளதோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
      புத்திர ஸ்தானத்தில் ராகு, கேது வீற்றிருந்தால் புத்திர தோஷம் ஏற்படுகிறது.
      புத்திர ஸ்தானாதிபதி அம்சத்தில் அமர்ந்த இடத்தில் இருந்து ஜென்ம லக்கினம் வரை எண்ணினால் எத்தனை ராசிகள் வருகிறதோ அத்தனை புத்திர பாக்கியம் ஏற்படும்.
      ஒருவருடைய ஜாதகத்தில், சூரியன், புதன், சனி சேர்க்கை பெற்று 11ம் இடத்தில் வீற்றிருந்தால் பல பிள்ளைகளை பெற்றெடுக்கும் யோகம் உண்டாகும்.
      இதில் எது மிக அதிக பலமோ அதன்படி பலன்கள் நடக்கும்.

சிறப்பான குரு யோகம்

மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு 5ல் உச்சம் பெற்றாலும், கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு லக்கினத்தில் உச்சம் பெற்றாலும் அதனை சிறப்பான குரு யோகம் என்று சொல்லலாம். இவர்கள் சிறு வயதிலேயே செல்வச் சீமானாகி விடுவர். விளம்பரப் படங்கள், சினிமாக்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களும், 15,16 வயதில் நடிகைகளாகி திரைஉலகில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களும், பெற்றோர், மூதாதையர் சொத்துக்களை வாழ்நாள் முழுவதும் சிறுவயதிலிருந்தே அனுபவிக்கும் யோகமும், சிறு வய‌திலேயே பரம்பரைத் தொழிலை கவனிகத் தொடங்குவதாலும், இந்த சிறப்பான குரு யோகம் செயல்படுகிறது.

லக்கினத்தில் சந்திரன்

லக்கினத்தில் சந்திரன் ஆட்சி பெற்று அமர்ந்தால் ஜாதகர் கவர்ச்சிகரமான தோற்றம், கற்பனை வளம் மற்றும் தெளிவான சிந்தனைகளை அருவியாகப் பொழியக்கூடிய பேச்சாற்றல் மிக்கவராகத் திகழ்வார். பேச்சில் உளறல் குழறல் இருக்காது

Thursday, June 30, 2011

லக்கினத்தில் கேது

மகரம், கும்ப லக்கினங்களில் உதித்தவர்களுக்கு கேது லக்கினத்தில் நின்றால் சந்தான பாக்கியத்துடன் செல்வவளமும் சேருகிறது.

மனைவியால் ராஜயோகம்

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7ம் இடத்தில் வளர்பிறைச் சந்திரன் அல்லது புதன் தனித்து, பகை நீசம் பெறாமல் இருந்தால் அவளது கணவருக்கு உயர்வான ராஜயோக வாழ்க்கை அமையும். அதனால் அந்த பெண் செலவ சுகங்களை அனுபவிப்பாள்

6ல் ராகு/கேது

ஜாதகர் எந்த லக்கினத்தில் உதித்தவராக இருந்தாலும், அவருடைய ஜாதகத்தில் 6மிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் ஜாதகருக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். இவரை எதிர்ப்பவர்கள் தாமாகவே அழிந்து விடுவர், அல்லது மனம் திருந்தி நண்பர்களாகி விடுவர்.

Wednesday, June 22, 2011

போராட்ட வாழ்க்கை ஜோதிடக்குறிப்பு

      லக்கினாதிபதி 6,8,12ல் மறைய சுக தர்ம கர்மாதிபதிகள் பகை நீசம் மறைவு ஸ்தானங்களில் கெட்டு நின்றால் ஜாதகருடைய வாழ்க்கை பெரும் போராட்டமாகிவிடும்

கல்வியால் செல்வம் ஜோதிடக்குறிப்பு

      தன ஸ்தானமான 2ம் இடத்தில் தனாதிபதி ஆட்சி பெற்று இருந்து அவருடன் சுபாவ சுபர் இணைந்து இருந்தாலும் அல்லது யோகதிபதி இணைந்து இருந்தாலும் அல்லது சுபாவ சுபர் பார்த்தாலும் அல்லது யோகதிபதி பார்த்தாலும் ஜாதகருக்கு குறையாத செல்வமும் நிறைவான கல்வியும் அமைகிறது. கல்வியால் செல்வம் சேருகிறது.

பேச்சில் இனிமை ஜோதிடக்குறிப்பு

      வாக்கு ஸ்தானத்தில்(2ம் இடத்தில்) புதன் ஆட்சி பலத்துடன் நின்றாலும், குரு புதனுடைய வீடுகளான மிதுனம், கன்னியில் நின்றாலும், அம்சத்தில் புத்னுடைய வீடுகளில் குரு நின்றாலும், ஜாதகர் அனைவரையும் கவரும் வகையில் இனிமையாக பேசுவார்.

சுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும்


      மிதுன லக்கின, கடக ராசிக்காரர்களுக்கு ஜீவன ஸ்தானத்தில் குருவும் சனியும் இணைந்து நின்று, பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று நின்றால் ஜாதகரை சுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும்.
1. சுக்கிரன்-பூர்வபுண்ணியாதிபதி
2. சனி-பாக்கியாதிபதி
3. குரு-ஜீவனாதிபதி

      மேலே சொன்ன அமைப்பில் தரும‍-கர்மாத்பதி இணைப்பால் தரும-கர்மாதிபதி யோகம் ஏற்ப்படுகிறது. மிதுன லக்கின காரர்களுக்கு தரும-கர்மாதிபதி இணைப்பு யோகம் தராது என்று பழைய நூல்களில் சொல்லப் பட்டிருந்தாலும். இவிணைப்பு கேந்திரத்தில் ஏற்ப்படுவதால் கேந்திராதிபத்திய தோஷத்திற்க்கு ஆளாகிய குருவினுடைய தோஷம் சனியுடன் இணைவதால் விலகி விடுவதால். நற்பலன்கள் எதிர்பார்க்கலாம்.
      இந்த அமைப்பு உடையவர்கள் சுக்கிர தசை சூப்பர் மேன் ஆக்கும். சனி தசை, குரு தசை யோகமளிக்கும். ஆண்களானால் பெண்களால் யோகமும், பெண்களானால் ஆண்களால் யோகமும் கிடைக்கும்.
      மற்ற லக்கின, ராசிக்காரர்களுக்கும் சுக்கிர தசை குறித்து தொடர்ந்து வரக்கூடிய பதிவுகளில் வரும். வாழ்க வளமுடன்!

மோசடிப் பேர்வழி ஜோதிடக்குறிப்பு

      சந்திரன் செவ்வாயை பார்ப்பது சிறப்பான அமைப்பு சந்திரமங்கள யோகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனால் ஒருவரது ஜாதகத்தில் 3ம் வீட்டில் செவ்வாய் இருந்து அவரை 9ம் வீட்டில் நின்ற சந்திரன் பார்த்தால் ஜாதகர் நம்பிக்கை மோசடிப் பேர்வழியாக இருப்பார். சொன்னது ஏதும் செய்ய மாட்டார். ஏமாறுபவர்களிடம் நம்பிக்கை தருவது போல் பேசி மோசடி செய்வார். காசு பறிப்பார். வாங்கிய கடனைத் திருப்பித் தரமாட்டார்.

பெண்களால் உயர்வு ஜோதிடக்குறிப்பு

      தனுசு, மீனம் ஆகிய குரு பகவானின் வீடுகளில் 7ம் வீட்டுக்கு உரியவனுடன் ராகு இணைந்து நின்றால் ஜாதகர் மரியாதையும் மதிப்பிற்க்குரிய பெண்களால் உயர்வினைப் பெறுவார்.

ஆயுளைக் கொடுக்கும்/கெடுக்கும் ராகு


      ராகு சுக ஸ்தானத்தில் சுபர் சம்பந்தம் பெற்று நிற்க 2,7,12ம் இடங்களில் சுபாவ சுபர்கள் இருந்தால் தீர்க்காயுளைக் கொடுக்கும் ராகுவாக விளங்குவார்.
      அதே ராகு சுக ஸ்தானத்தில் பாவிகள் சம்பந்தம் பெற‌ 2,7,12ம் இடங்களில் சுபாவ பாவிகள் இருந்தால் ஆயுளைக் கெடுக்கும் ராகுவாக விளங்குவார். மத்திம அல்லது அற்ப ஆயுள் தான்.

Tuesday, June 21, 2011

இன்பமான வாழ்க்கை ஜோதிடக்குறிப்பு

சுகமான, இன்பமான வாழ்க்கை அமைய கேந்திர திரிகோணாதிபதிகள் 2,11க்குரியவர்களுக்கு 6,8,12க்கு உரியவர்கள் பார்வை சேர்க்கை கூடாது. மேலும் 6,8,12ம் பாவங்களில் கேந்திர திரிகோணாதிபதிகள் 2,11க்கு உரியவர்கள் மறைந்து விடக்கூடாது. மறைவு ஸ்தானங்களில் நல்லவர்கள் மறைந்தால் வாழ்க்கையில் சாண் ஏற முழம் சறுக்குகிறது எனும் நிலை தான் உருவாகும்.

5ல் சூரியன்

சூரியன் 5ல் நின்றால் பிள்ளைகளால் நிம்மதி, சந்தோசம் கெடும். சக்திக்கு மீறிய செலவுகளை பிள்ளைகள் உருவாக்குவர். அனுதினமும் சூரிய நமஸ்காரமும், சிவனை ஞாயிற்றுக் கிழமைகளில் விரதமிருந்து வழிபடவேண்டும்

விரயாதிபன் த‌ரும் ராஜயோகம்2


      விருச்சிக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சுக்கிரன், அவர் 5ம் இடமான மீனத்தில் உச்சம் பெறுவார். அவரை பாக்கியதிபதி சந்திரன் பார்த்தாலே யோகம் பிரமாதமாக இருக்கும்.
      தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி செவ்வாய் அவர் 2ல் உச்சம், அவரை பக்கியதிபதி சூரியன் நண்பர் பார்த்தாலே யோகம் நன்றாக இருக்கும்.
      கும்ப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி லக்கினாதிபதி சனியே ஆகிறார், அவர் 9ல் துலாத்தில் உச்சம், அவரை பாக்கியாதிபதி சுக்கிரன் பார்க்கும் போது தன் வீட்டையே பார்க்கும் அமைப்பு ஏற்படுகிறது. பாதக யோகதிபதி சுக்கிரனால் நல்ல பலன்களே நடக்கும் என்பதில் ஐயமில்லை.
      மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சனி, அவர் 8ல் துலாத்தில் உச்சம், அவரை பாக்கியதிபதி செவ்வாய் பார்த்தாலும் பார்க்கவிட்டாலும் யோக பலன் கிடைக்கும்.
      எனவே விரயாதிபன் உச்சம் பெற்று, பாக்கியதிபதி பார்வையை பெறுவது யோகமே. விரையாதிபன் மறைவு ஸ்தனங்களில் இருப்பதை விட, உச்சம் பெற்று சுபர் பார்வை பெறும் போது நல்ல பலன்கள் கூடுதலாக நடக்க வாய்ப்பு அதிகம்

விரயாதிபன் த‌ரும் ராஜயோகம்1


      விரயாதிபன் எனில் 12க்குடையவன், விரயாதிபன், விரயஸ்தானம் என்றாலே நம்மில் பலர் முகத்தை சுளிக்கிறோம். ஆனால் முன்னோர் விரயஸ்தானத்தை சுகசயன ஸ்தானம், மோட்ச ஸ்தானம் என்று கூறிச் சென்றுள்ளனர்.
      விரயாதிபன் என்று சொல்லக்கூடிய 12க்குடையவன் உச்சம் பெற்று நிற்க, அவனை பாக்கியாதிபன் என்று சொல்ல்க்கூடிய 9க்குடையவன் பார்த்தால் ஜாதகர் அநேகசுகங்களை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்லாம்.
      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி குரு சுக கேந்திரத்தில் உச்சம் பெறுகிறார். பாக்கியதிபதியும் ஆகிறார். அவர் கடகத்தில் உச்சம் பெறுதலே வாழ்வில் எல்லாசுகங்களையும் தரும்.
      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி செவ்வாய் ஆகி அவர் 9ம் இடமான பாதகஸ்தானத்தில் உச்சமடைவார். அவரை 9ம் அதிபதி சனி பார்ப்பதை விட குரு அல்லது லக்கினாதிபதி பார்ப்பது கூடுதல் நல்லது. சனியும் பாக்கிய, யோக, பாதகதிபதி என்பதால் யோகம் சுமாராக அமையும்.
      மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சுக்கிரன் அவர் 10ம் இடமான கேந்திரத்தில் உச்சம் பெறுகிறார். அவரை 9க்குடைய சனி பார்ப்பது யோகம் தரும் என்றே கருத வேண்டியுள்ளது.
      கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி புதன் அவர் 3ல் உச்சம் பெற அவரை பாக்கியதிபதி குரு பார்ப்பது யோகம் தான்.
      சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சந்திரன் அவர் 10ல் உச்சம் பெற அவரை பக்கிய பாதகதிபதி செவ்வாய் பார்த்தால் சந்திரமங்கள யோகம் எற்ப்படுகிறது. பிரபல யோகமே.
      கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சூரியன் அவர் 8ல் உச்சம் பெற அவரை பாக்கியதிபதி சுக்கிரன் பார்ப்பது யோகம் தான்.
      துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி புதன், அவர் விரயத்திலேயே உச்சம் பெற 9க்குடையவரும் அவரே என்பதால் யோகபலன்க‌ளைத் த‌ருவார். லக்கினாதிபதி குருவின் பார்வை அவருக்கு கிடைகுமானால் யோகம் சிறப்பாக இருக்கும்.

தொழிலில் நஷ்டம் ஜோதிடக்குறிப்பு

லாபதிபதி 8ல் மறைந்தால் சுயதொழில் உதவாது. அடிமைத்தொழில் செய்யும் இடத்திலும் பிரச்சனைகள் வரும். பொறுமை காக்க வேண்டும், நல்ல வேலை அமைந்துவிட்டால் அதனை நல்ல முறையில் உழைத்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பணத்தை தொழிலில் முதலீடு செய்வதை விட நீண்டகால் வங்கி டெபாசிட்டுகள் அல்லது நிலபுலன்களில் முதலீடு செய்வது நல்லது.

11ம் இடத்ததிபதி

லாப ஸ்தானத்தில் லாபாதிபதி ஆட்சி பலத்துடன் விளங்கினால் அவர் பூர்வபுண்ணிய ஸ்தானத்தினை பார்ப்பார். தொழிலில் மிதமான லாபம், சகோதரர்கள் ஆதரவு, அமைதியான வாழ்க்கை ஜாதகருக்கு அமையும். வாழ்வில் படிப்படியான முன்னேற்றத்தினை அடைவார். தெய்வீக வழிபாடுகளை ஜாதகர் சிறப்பாக செய்வார். குடும்ப கெளரவம் மேண்மையாக இருக்கும்.

தெளிவும் சந்தோசமும் தரும் யோக அமைப்புகள் ஜோதிடக்குறிப்பு


      பேச்சிலும் செயலிலும் தெளிவு இருந்தால்தான் நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் மதிப்பார்கள்! வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக் கொள்ளமுடியுமல்லவா.
      தரும ஸ்தானங்கள் எனப்படுகிற 1,5,9க்கு உடையவர்களும் அந்த இடங்களும் ஜாதகத்தில் சிறப்பாக அமைந்தால் உயர் எண்ணங்களுடன் தெளிவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். அளவான ஆசைகள், அவற்றிட்க்கு ஏத்த திட்டமிட்ட உழைப்பு, பலருக்கு உத‌வுவதால் பலருடைய அரவணைப்பு எல்லாமே எளிதில் வசப்படும்.
      கீழ்கண்ட அமைப்பில் ஒன்றிரண்டு ஜாத‌கத்தில் இருக்குமானால் நீங்கள் தெளிவும் சந்தோசமும் மிக்க யோகசாலியாக விளங்க முடியும்.
1. ஜாதகத்தில் 1,5,9க்குடையவர்கள் நல்ல விதமாக நிற்ப்பது.
2. லக்கினத்தில் குரு, 9ல் சூரியன், 5ல் செவ்வாய் நிற்ப்பது.
3. லக்கினத்தில் சூரியன், 9ல் செவ்வாய், 5ல் குரு நிற்ப்பது. மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு இவ்வாறு இருந்தால் தெளிவும் சந்தோச மிக்க வாழ்க்கை அமைய உதவும்.
      1,5,9க்குடையவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் பிரபல யோகமாக அமையும்.
      1,5,9க்குடையவர்கள் அவரவர் வீடுகளில் ஆட்சி பலத்துடன் நின்றாலே யோகமுண்டு.
      9ம் இடம் திரிகோண ஸ்தானம் என்பதால் அங்கு நிற்க்கும் கெட்டவர்களும் நல்லது செய்வர் என்ற விதிக்கேற்ப்ப ஸ்திர லக்கினகாரர்களுக்கு 9ம் இடம் பாதக ஸ்தானம் ஆனாலும் அங்கு அமர்ந்த 9ம் அதிபதி யோகாதிபதியே என்றே கருதவேண்டும். யோகமே செய்வார்.
      1,5,9க்குடையவர்கள் கேந்திர திரிகோணங்கள், தனலாப ஸ்தானங்களில் கெடாது அமர்ந்திருந்தால் தெளிவும் சந்தோசமும் மிக்க வாழ்க்கையே அமையும்.
      1,5,9க்குடையவர்கள் 6,8,12ல் மறைந்து விட்டால் ஜாதகர் குழப்பவாதியாகத் திகழ்வார். சின்ன சின்ன விசய‌ங்களில் கூட முடிவெடுக்க திண‌றுவர். சிறு வயதில் பெற்றோரும், வாலிப வயதில் மனைவியும், முதுமையில் பிள்ளைகளும் வழிகாட்டியாக வேண்டும்.
      1,5,9க்குடையவர்கள் நல்ல இடங்களில் அமர்ந்திருந்தாலும் பகை, நீசம் பெற்று கெட்டிருந்தாலும் அல்லது 1,5,9க்குடையவர்கள் கெட்டு சுபர் பார்வை, சேர்க்கை பெற்றிருந்தால் சில சமயம் ஜாதகர் குழப்பவாதியாகவும், சில சமயம் தெளிவானவராகவும் காட்சி த‌ருவார்.
      1,5,9க்குடையவர்கள் ஜாதகத்தில் கெட்டு, 1,5,9ம் இடங்கள் சுபர் பார்வை பெற்றிருந்தால் ஜாதகர் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டால் தெளிவான, சந்தோசமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
      மேலும் ஜாதகத்தில் 1,5,9க்குடையவர்கள் மூவருமே சுத்தமாக கெட்டிட வாய்ப்பில்லை. ஒருவர் நன்றாக அல்லது ஒரு இடம் நன்றாக இருந்தாலே போதும் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு சந்தோசமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

Monday, June 20, 2011

தொட்டது துலங்க ஜோதிடக்குறிப்பு


      ஒருவரது ஜாதகத்தில் ஜீவனாதிபதி எனப்படும் 10க்கு உடையவர், கெடாது நல்ல இடங்களில் இருக்க அவரை சுபர் பார்க்கும் அமைப்பு அல்லது அவர் சுபருடன் இனைந்திருப்பது அல்லது ஜீவனஸ்தானத்திற்க்கு சுபர் பார்வை, சுபர் சம்பந்தம் இருக்குமானால் ஜாதகர் தொட்டது துலங்கும். அவரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் தொழிலை நடத்துபவர் நல்ல லாபம் பெறுவார். இவருக்கும் நிறைய ஊதியம் கொடுத்து மகிழ்விப்பார். ஜாதகர் சுயதொழில் செய்தாலும் உயர்வடைவார்.
     ஜீவனாதிபதி எனப்படும் 10க்கு உடையவர், பகை, நீசம் பெற்று கெட்டு இருந்தாலும் அவரை சுபர் பார்க்கும் அமைப்பு அல்லது அவர் சுபருடன் இனைந்திருப்பது போன்ற அமைப்பு இருக்குமானால். ஜாதகர் திறமைசாலியாக இருந்தாலும் பெரிதாக ஏதும் சோபிக்க முடியாது. அவரை வேலைக்கு அமர்த்தியிருக்கும் தொழிலை நடத்துபவர் சுமாரான‌ லாபம் பெறுவார். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்காவிட்டாலும் சுமாரான ஊதியம் பெறுவார். ஒரு இடத்தில் வேலை செய்யும் போது இவர் ப‌த்தோடு பதினொன்றாக இருப்பர். இவருக்கு மற்றவருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் போது இவருக்கும் கிடைக்கும். வாழ்வு இவர் அதிர்ஷ்டக்கட்டை என்று நொந்து கொள்ளக்கூடிய விதமாகத் தான் இருக்கும்.
     ஜீவனாதிபதி எனப்படும் 10க்கு உடையவர், பகை, நீசம் பெற்று கெட்டு இருந்தாலும் அவரை கொடியவர் பார்க்கும் அமைப்பு அல்லது அவர் கொடியவருடன் இனைந்திருப்பது போன்ற அமைப்பு இருக்குமானால். இவர்கள் எந்த இடத்திலும் வேலைக்கு ஒழுங்காக இருக்கமாட்டார். இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிக்கு நஷ்டம் தான் வரும். இவர்களை முதலாளி வேலையை விட்டு நீக்கி விடுவர் அல்லது ஊதியம் போதவில்லை என்று இவர்களாகவே வேலையை விட்டு நின்று விடுவர்.
இந்த மாதிரி அமைப்புடையவர்கள் நீச்சத்தொழில்கள் எனப்படுகிற பொருட்களை அழிக்கும் தொழிலை காண்ட்ராக்ட் எடுத்து செய்தால் சோபிக்கலாம்
நீச தொழில்கள்:
1. பழைய கட்டிடங்களை இடிப்பது
2. பழைய பாலங்களை இடிப்பது,
3. பாழடைந்து கிடக்கும் தோட்டம், துறவு இவைகளை சுத்தம் செய்யும் தொழில்
4. மருத்துவமனைக் கழிவுகளை அகற்றுவது போன்றவை.
      இவர்கள் இதைக் க‌ருத்தில் கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் சோபிக்கலாம்.

அதிபுத்திசாலி-ஜோதிடக்குறிப்பு

மகரம் கும்பத்தில் புதனும் செவ்வாயும் இனைந்து நிற்ப்பது நல்லதல்ல. அவ்வாறு இனைந்து நின்றால், ஜாதகர் உலகில் உலாவி எல்லோரையும் விட நான் தான்  மகாபுத்திசாலி எனும் கர்வம் உடையவராக எல்லோரையும் கேலி செய்துகொண்டும், பிறரது செயல்களில் குற்றம் கண்டுபிடுத்துக் கொண்டும், விமர்சித்துக் கொண்டும் இருப்பார். தனது இந்த குண இயல்பால் விரோதிகளை நிறையவே தேடிக்கொள்வார்.

பிரபல ராஜயோகம்

லக்கினாதிபதி லாபம் ஏற வேண்டும், 9,10க்குடையவர்களை 8,11க்குடையவர்கள் பார்க்கவோ, இனையவோ கூடாது. இந்நிலை ஜாதகத்தில் இருந்தால் பிரபல ராஜயோகம்

அதிர்ஷ்டசாலி1‍‍-ஜோதிடக்குறிப்பு

அனைத்து லக்கினத்தில் உதித்தவர்களுக்கும், லக்கினாதிபதி கேந்திர வீடுகளில் ஒன்றில் கெடாது இருக்க அதை 5க்கு உடையவர் லக்கினாதிபதிக்கு சப்தம ஸ்ப்தம ஸ்தானத்தில் இருந்து பார்க்கும்( அதாவது 1, 5க்கு உடையவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்க்க) அமைப்பு ஜாதகத்தில் இருந்தால், அந்த ஜாதகர் வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டசாலியாக விளங்குவார்.