Wednesday, July 6, 2011

கணவன் பேச்சைக் கேட்காத மனைவி


      5ம் இடத்திற்க்குரியவர் ராகு அல்லது கேதுவுடன் கூடி 3ல் நிற்க, அந்த ஜாதகருக்கு மனைவியால் எப்போது தொந்திரவு தான். கண‌வனுடன் எப்போதும் சண்டை போடக்கூடியவளாகவும், மிகவும் கொடூர குணம் கொண்டவளாகவும் இருப்பாள்.
      லக்கினத்திற்கு 3க்குடையவன் ராகு அல்லது கேதுவுடன் கூட கணவனை, மனைவி மதிக்க மாட்டாள், அவன் சொல் பேச்சு கேட்கமாட்டாள், கணவனை விட மனைவி அதிக வயதுடையவளாக இருப்பாள். இவர்கள் இருக்கும் ஊர் அருகில் கடல் உண்டு.
      லக்கினத்திற்கு 3க்குடையவன் சனியுடன் கூட அல்லது சுக்கிரன் சனியுடன் கூட ஜாதகரை மனைவி மதிக்க மாட்டாள், அவன் சொல் பேச்சு கேட்கமாட்டாள், கோபக்காரியாக இருப்பாள்.

No comments:

Post a Comment