Sunday, May 30, 2021

குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ராகுதசை

 திருவாதிரை, சுவாதி, சதயம் .


இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறக்கும் பொழுது முதல் திசையாக ராகு திசை சந்திப்பார்கள் ..குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ராகு தசையின் சில விசித்திர அல்லது முரண்பாடான விஷயங்களை பார்ப்போம்.


1.குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ராகுதசை 3,6,10,11.ஆகிய இடங்களில் இருந்து தசா நடந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் அதிகமான படிப்பில் ஈடுபாடு, பிறமொழி பயில்தல் ,இசையில் ஆர்வம். என சுபத்துவம் ஆன விஷயங்கள். நடக்கும் பொழுது ஜாதகரின் பெற்றோர் வழியில் ஏதேனும் உயிர் காரகத்துவ சம்பந்தமான விஷயங்களில் பாதிப்பை தருகிறார்.


2.சிலருக்கு குழந்தைப் பருவத்திலேயே படிப்பில் மந்தமாக /ஞாபகத் திறன் குறைவாக. படிப்பில் கை வைத்து விடுகிறார்.


3.அதிகபடியான அசைவ உணவை விரும்ப வைக்கிறார்.

4.நாத்திகம் பேச வைக்கிறார்.

5.மர்மமான, (Thriller movie),பேய் சம்பந்தமான படங்கள், அதிகமாக சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்கள் ஆகியவற்றை விரும்பி பார்க்க வைக்கிறார்.

6.விளையாட்டுகளில், குத்துச்சண்டை, கால்பந்து போன்ற துரிதமான விளையாட்டுகளின் மீது ஆர்வம்.

7.எதையுமே ஒரு அலட்சியப்படுத்துதல் உறவாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும்,

8.உயிர் காரகத்துவம் ஆன விஷயங்கள் தந்தை தந்தை வழி தாத்தா உறவுகள், தாய் தாய் வழி தாத்தா உறவுகளின்  கை வைக்கிறார் (உறவு இழத்தல்) .


9.இன்னும் சில குழந்தைகளுக்கு இளம் வயதில் காதல் மோகம். (அதாவது 15 லிருந்து 23 வயதிற்குள்) ஏற்பட வைத்து அதற்குள் படிப்பில்  கவனம் சிதற வைக்கிறார்.

10.வெகு சிலருக்கு குழந்தைகளுக்கு வரக்கூடிய ராகு தசா பெற்றோரை பாதிக்கிறது. குறிப்பாக தந்தைக்கு பாதிப்பு.

11.கனவு பயம்.

12.அதிகமாக விஷப்பூச்சிகள், அரவம், போன்றவற்றை கனவிலும் நேரிலும் காணுதல். 


மேற்கூறிய அனைத்தும் குழந்தைப்பருவத்தில் வரக்கூடிய ராகு தசையில் சந்திக்கக்கூடிய பொதுபலன்கள்.

Wednesday, May 26, 2021

"ராகு கேது" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்.

  ★இந்த ஜகத்தை ஆளக் கூடிய சக்தி படைத்தவர்கள் ராகு-கேது பகவான்கள். ★ராகு கேது நிழல் கிரகங்கள் கிடையாது நிழல் கதிர்கள். ★ராகு பகவான் கரு நாகப்பாம்பு,கேது பகவான் செம்பாம்பு, செம் பாம்பே உன்னை சிரம் தாழ்த்தி பணிகிறேன் என்று கேதுவிற்கு ஒரு ஸ்லோகமே உள்ளது. ★பரிபூரண சூரியகிரகணம் ராகு,பரி பூர்ண சந்திர கிரகணம் கேது, ★பரிபூர்ண அமாவாசை ராகு, பரி பூரண பௌர்ணமி கேது, ★சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் தான் ராகுவும், கேதுவும் ★ஒரு சூரிய கிரகணதிற்கும், சந்திர கிரகணதிற்கும் இடையிலுள்ள இடைவெளி காலம் தான் ராகு கேது பெயர்ச்சியே. ★அந்த ஒன்றரை வருட ராகு கேது பெயர்ச்சி காலம் வேறொன்றும் கிடையாது ஒரு சூரிய கிரகணத்திற்கும் அடுத்த சூரிய கிரகணத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி காலம் தான் ராகு கேது பெயர்ச்சியே, ★அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் ஒரு மாதத்தை எப்படி கணக்கில் எடுத்து கொண்டார்கள் என்றால்,ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் இடையிலுள்ள இடைவெளி காலம் தான் ஒரு மாதமாக கணக்கில் எடுத்துக் கொண்டார்கள். ★ராகு வைரஸை பரப்பும் கூடிய வைரஸ்,மிருதன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல,வைரஸை பரப்ப கூடிய வைரஸ். ★கேது வைரஸை அழிக்க கூடிய வைரஸ் அதாவது நாயகன் சினிமாவில் வரும் கமலஹாசன் போல Negativeஐ அழிக்கக்கூடிய Nagative. ★ராகு அமானுஷ்ய விஷயங்களுக்கு அதிபதி பில்லி ,சூனியம், ஏவல் மாந்திரீகம், செய்வினை,போன்ற விஷயங்கள் ராகு பகவானின் காரகத்துவம். ★ஏன் பில்லி,சூனியம் ,ஏவல், மாந்திரீகம், செய்வினை செய்பவர்கள் எல்லாம் அம்மாவாசையில் செய்கிறார்கள் ஏனென்றால் அம்மாவாசை தான் ராகு. ★ஏனென்றால் அம்மாவாசையில் தான் பூமிக்கு ராகுவின் கதிர்கள் வந்து விழும்.அதனால் தான் பில்லி சூனியம் ஏவல் செய்வினை செய்வார்கள் ராகுவின் நாளிலேயே செய்கிறார்கள். ★கேது யாகத்திற்கு அதிபதி ஆன்மீகத்திற்கு காரணமான கிரகம்.அதனால் தான் பௌர்ணமி நாளில் கடவுள்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகளும் யாகங்களும் மூலிகை செடிகள் அல்லது மூலிகை பொருட்கள் பரிக்க செல்வதும் செய்கிறார்கள். ★பௌர்ணமி நாளில் கேதுவின் கதிர்வீச்சு பூமிக்கு அதிகமாக வந்து விழும்.அப்பொழுதுதான் சிறப்பு யாகங்களை நடத்துவார்கள். ★ராகு நம்முடைய மூதாதையர்கள் அதனால்தான் நம்முடைய மூதாதையர்களுக்கு அமாவாசையில் திதி கொடுக்கிறோம் அமாவாசையே ராகு பகவான் தான். ★ராகு தீராத ஆசையுடன் இறந்து போன பிரேத ஆத்மாக்கள் அல்லது ஆவிகள் அதனால்தான் அம்மாவாசையில் இரவு நேரத்தில் யாரும் வெளியே வரக்கூடாது என்று சொல்வது. ★நமது உடலில் தீராத ஆசையுடன் உயிர் இருந்தால் அது ராகு.உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அது கேது. ★கேது தான் முக்திக்கு அதிபதி.நம் உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் நமக்கு முக்தியா அல்லது மறுபிறவியா என்பதை சொல்பவரே கேது பகவான் தான். ★கேது தோஷம் என்று ஒன்று கிடையவே கிடையாது 8 அஷ்ட கர்மங்கள் தான் ஜோதிடத்தில் உள்ளது. ★கேது தோஷம் ஆகிவிட்டால் ஒரு மனிதனுக்கு இறப்பும் கிடையாது பிறப்பும் கிடையாது. ★ராகு தீராத ஆசையை உடையவன் கேது தீராத கடமை உள்ளவன்.ராகு போன ஜென்மத்தில் நமக்கு தீராத ஆசையை எடுத்துச் சொல்லும்.கேது போன ஜென்மத்தில் நிறைவேறாத கடமையை எடுத்து சொல்லும். ★ராகு பகவானுக்கு வெறும் தலை மட்டும்தான் வெறும் தலை மட்டும் கொண்ட ராகு பகவானுக்கு ஜூனரம் என்பதே கிடையாது எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது. ★ராகு பகவானுக்கு ஒரு விஷயம் தனக்கு வேண்டும் என்றால் அல்லது அடைய வேண்டுமென்றால் அடுத்தவர்களின் மூலமாகத்தான் அந்த ஆசையை ராகு பகவான் நிறைவேற்றிக் கொள்ளும். ★அதனால்தான் தீராத ஆசை உடைய ஆவிகள் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அடுத்த வர்களின் உடம்பிற்குள் சென்று தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறது.அந்தத் தீராத ஆசை உடைய ஆவிகள் தான் ராகு பகவான். ★அதே போன்றுதான் நமது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ராகு பகவான் எந்த இடத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ அந்த கிரக காரகத்துவங்களும் அந்த பாவ கிரக காரகத்துவங்கள் இந்த ஜாதகருக்கு இந்த ஜென்மத்தில் எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது. ★கேது நம் லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவ விஷயங்களும் பாவ காரகத்துவ விஷயங்களும் நாம் இந்த ஜென்மத்தில் கடனுக்கு அல்லது கடமைக்கு என்றே செய்வோம். ★நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. *மூலாதாரம் *சுவாதிஷ்டானம் *மணிப்பூரகம் *அனாஹதம் *விசுக்தி *ஆக்நீயா *சகஸ்ராரம். ★இந்த ஏழு சக்கரங்களும் ராகு கேது உடைய நட்சத்திரங்களாகும்.அதாவது ★மூலாதாரம் மூலம் நட்சத்திரம். ★சுவாதிஷ்டானம் சுவாதி நச்சத்திரம். ★மணிப்பூரகம் மகம் நட்சத்திரம். ★அனாஹதம் சதயம் நட்சத்திரம். ★விசுக்தி அஸ்வினி நட்சத்திரம். ★இந்த ஏழு சக்கரங்கள் தான் ஒரு மனிதனை இயக்குகிறது.அப்போது இந்த ஏழு சக்கரங்களே ராகு கேது உடையது. ★இந்தப் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையே இருக்கும் தொடர்பு அல்லது Connectionஐ ஏற்படுத்துபவர்களே இராகு கேது தான். ★ஏன் செய்வினை செய்பவர்கள் ஏவல், பில்லி ,சூனியம், மாந்திரீகம் செய்பவர்கள் நமது உச்சந் தலை முடியையும்.கால் நகத்தையும் கேட்கிறார்கள். ★ஏனென்றால் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இருக்கும் தொடர்பை நீக்குவதற்கு அதனால்தான் அமாவாசையில் இது எல்லாம் செய்கிறார்கள். ★அம்மாவாசை செய்தால் தான் இதையெல்லாம் செய்ய இயலும்.அல்லது பலிக்கும். ★அதனால்தான் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமே இராகு கேதுவின் கையில் உள்ளது. ★இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திர மண்டலங்களை மூன்று பிரிவுகளாக 1 5 9 திரிகோணங்களாக பிரிக்கின்றனர். ★அதனால்தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திர மண்டலங்களில் முதல் நட்சத்திர மண்டலம் "அஸ்வினி" என்ற கேதுவின் நட்சத்திரத்தில் ஆரம்பிக்கிறது. இரண்டாவது நட்சத்திர மண்டலம்"மகம்" நட்சத்திரத்திலும் மூன்றாவது நட்சத்திர மண்டலம் "மூலம்' நட்சத்திரத்திலும் அமைகிறது.இந்த மூன்று நட்சத்திர மண்டலங்களின் ஆரம்ப புள்ளிகளே கேதுவின் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்கிறது. ★இதனால்தான் ஜோதிடத்தில் ராகு கேது பகவானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.