கேதுவோடு நெருக்கமாக இணையும் கிரகங்கள் அனைத்துமே சூட்சும வலு அடைகிறது...
பாப கிரகங்கள் மட்டுமல்ல சுப கிரகங்களும் வலுப் பெறுகிறது...
தனித்து கேது நின்ற பாவமும் வலுப் பெறுகிறது.....
அதனால் கேதுவை சுபகிரக வரிசையில் சேர்க்க வேண்டும்......
பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு ஜோதிடக் குறிப்புகளின் தொகுப்பு
கேதுவோடு நெருக்கமாக இணையும் கிரகங்கள் அனைத்துமே சூட்சும வலு அடைகிறது...
பாப கிரகங்கள் மட்டுமல்ல சுப கிரகங்களும் வலுப் பெறுகிறது...
தனித்து கேது நின்ற பாவமும் வலுப் பெறுகிறது.....
அதனால் கேதுவை சுபகிரக வரிசையில் சேர்க்க வேண்டும்......
மோட்சத்தை குறிப்பவர் கேது, அவர் காலபுருஷ அஷ்டம ஸ்தானம் (விருச்சிக ராசி) என்றழைக்கப்படும் ஆயுள் ஸ்தானத்தில் உச்சமடையாமல் எப்படி மற்ற வீடுகளில் உச்ச நிலையை பெறுவார், ஒருவர் மோட்சமடைந்தாலும், அடையாவிட்டாலும் அந்த நபர் இறப்பை சந்தித்தே ஆகவேண்டும், ஆக இறப்பு நிகழும் இடமான அஷ்டமத்தில் கேது உச்சமடைவது தானே சரியானது, ஏனெனில் அங்கே தானே ஒருவர் மோட்சமடைய வேண்டுமா, அல்லது மறுபிறப்பு எடுக்க வேண்டுமா என்பதை கேது முடிவு செய்ய இயலும்..?!
உலகியல் இன்பங்களை அள்ளி கொடுப்பவர் ராகு, அவர் காலபுருஷ 2ம் வீடும் (ரிஷபம்) குடும்ப, வருமான ஸ்தானத்தில் உச்சமடையாமல் வேறெங்கு உச்சநிலை பெறுவது பொருத்தமாக இருக்கும்?!, ஒருவருக்கு அமையும் குடும்பம் மற்றும் வருமானமும் தானே உலகியல் இன்பங்களை பெற வழிவகுக்கிறது குடும்பம் இல்லாமல் யாரும் பிறக்க முடியாது, வருமானம் இல்லாமல் சுகங்களை அனுபவிக்க முடியாது அப்படி பார்க்கும் போது ரிஷபத்தில் ராகு உச்சமடைவது தானே சரியான அமைப்பாக இருக்கும்?!..!
இங்கே நீச்சநிலையை எடுத்துக்கொண்டோம் என்றால், ஆசையுள்ளவனுக்கு இறப்பு சீக்கிரம் வராது, என்பதற்கு ஏற்ப விருச்சிகத்தில் ராகு நீச்சம், ஏனெனில் ஆசை துறக்கும் போதே இறப்பு நிகழும், அதே போலத்தான் உலகியல் வாழ்க்கையை அனுபவிக்கும் போது இன்பங்களை எங்கிருந்து துறக்க முடியும், ஆக ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் உச்சம் என்பதே சரியான அமைப்பாகும், இது எனது அனுபவத்திலும் சரியாகவே உள்ளது..!
புதன் என்ற பேச்சு எவ்வாறு இருக்கும்?
-------------------------------------------------
1). புதன் +சூரியன் இணைவு,பார்வை, திரிகோணத்தில் சம்பந்தம் பெற்றவர்களின் பேச்சு சரியான விசயத்தை பேசுவார்கள், கௌவரமாக பேசுவார்கள்.
2). புதன் + குரு சம்பந்தம் பெற்றவர்கள்
வாக்கை காப்பாற்றுவார்கள்
பேச்சு சாதுர்யம் இருக்கும்.
3). புதன் + சுக்கிரன் சம்பந்தம் பெற்றவர்கள் கவர்ச்சியாக, அடுத்தவர்களை கவரும் படி பேசுவார்கள்.
2). புதன் + சனி சம்பந்தம் பெற்றவர்கள் தொனதொனவென்று பேசுவார்கள்
3). புதன் + ராகு சம்பந்தம் பெற்றவர்கள் எதையும் மிகைபடுத்தி பேசுவார்கள்.
4). புதன் + கேது சம்பந்தம் பெற்றவர்கள் மிகவும் குறைவாக பேசுவார்கள்.
மேற்கூறிய கிரகங்கள் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இரண்டாம் அதிபதியுடன் சேர்ந்தாலும் இதே பலன் தான். மற்ற கூட்டு கிரக சேர்க்கை மேற்கூறிய பலனை மாற்றும்.
ஜோதிட உலகத்தில் இதுவரை யாரும் சொல்லப்படாத "திதி சூன்யம்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்.
★"திதி சூனியம்" என்பது ஜோதிடத்தில் அனைத்தையும் விட மிக மிக முக்கியமானதாகும்.
★திதி சூனியம் தான் நம்முடைய அடுத்தடுத்த பிறவிகளுக்கு காரணமாக இருக்கக் கூடிய ஒன்றாகும்.
★இந்த ஜென்மத்தில் நாம் செய்யக்கூடிய தவறுகளை சேகரித்து அதற்குத் தகுந்தாற்போல் நம்முடைய கர்மாவை சுமந்து கொண்டு அடுத்த பிறவியில் அதற்குத் தகுந்தவாறு நமக்கு தண்டனை கொடுக்கக் கூடியததே இந்த திதி சூன்ய வீடுகள் தான்.
★அதனால்தான் திதி சூன்யம் என்பது ஜோதிடத்தில் மிக மிக முக்கியமானதாகும்.
★இப்போது ஒவ்வொரு திதிக்கும் 2 திதி சூனியம் வீடுகள் இருக்கின்றன
அவற்றைப் பார்ப்போம்.
1.பிரதமை ~ துலாம், மகரம்
2.துவிதியை. ~ தனுசு,மீனம்
3.திருதியை. ~ சிம்மம் மகரம்
4.சதுர்த்தி. ~ ரிஷபம்,கும்பம்
5.பஞ்சமி ~ மிதுனம்,கன்னி
6.சஷ்டி. ~ மேஷம், சிம்மம்
7.சப்தமி. ~ கடகம்,தனுசு
8.அஷ்டமி ~ மிதுனம்,கன்னி
9.நவமி. ~ சிம்மம்,விருச்சிகம்
10.தசமி. ~ சிம்மம்,விருச்சிகம்
11.ஏகாதசி. ~ தனுசு, மீனம்
12.துவாதசி ~ துலாம்,மகரம்
13.திரியோதசி. ~ ரிஷபம்,சிம்மம்
14.சதுர்த்தசி. ~ மிதுனம், கன்னி
தனுசு, மீனம்
★அம்மாவாசையில் மற்றும் பவுர்ணமி பிறந்தவர்களுக்கு திதி சூன்யம் கிடையாது.திதி சூன்ய வீடுகளும் கிடையாது.
★அமாவாசையில் பிறந்தவர்களுக்கு ராகு பகவானும்,பௌர்ணமியில் பிறந்தவர்களுக்கு கேது பகவானும் திதி சூன்ய அதிபதிகள் ஆகும்.
மேலும் இவர்களைத்தான் இவர்கள் வணங்க வேண்டும்.
★திதி சூனியம் என்பது நாம் பிறந்து திதிக்கு எத்தனை வீடுகள் இருக்கிறதோ. அந்த வீடுகள் சூன்ய வீடுகளாக மாறி விடும்.அதாவது power cut ஆகி விடும்.no signal ஆக மாறிவிடும்.
★அதாவது நமது லக்னத்திலிருந்து திதி சூன்ய வீடுகள் எந்த பாவமாக வருகிறதோ அந்த 2 பாவங்களும் திதி சூனியமாகி விடும்
★அதாவது திதி சூன்ய வீடுகள் எத்தனாவது பாவமாக வருகிறதோ அந்த பாவம் சார்ந்து நாம் என்ன தவறு செய்தாலும்,என்ன பித்தலாட்டம் செய்தாலும்,பொய் சொன்னாலும்,அந்த பாவம் சார்ந்து நாம் என்ன தீய செயல்கள் செய்தாலும்.நாம் செய்த குற்றம் யாராலும் நிரூபிக்கப்பட முடியாது.யாராலும் நாம் செய்த தவறை கண்டுபிடிக்க முடியாது.சாட்சியும் இருக்காது.
★உதாரணமாக ஒருவர் தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.அவர் பிறந்த திதி "சஷ்டி" என்று வைத்துக் கொள்வோம்.
★சஷ்டி திதிக்கு" மேஷம்,சிம்மம்" என்ற 2 வீடுகள் திதி சூன்ய வீடுகளாகும்.அதாவது 5 மற்றும் 9ம் பாவங்கள் ஆகும்.
★இந்த தனுசு லக்கின ஜாதகர் 5,9 இந்த இரண்டு பாவம் சார்ந்து என்ன தவறு செய்தாலும் என்ன பித்தலாட்டங்கள் செய்தாலும் என்ன பொய் சொன்னாலும்.அந்தக் குற்றம் வெளி உலகத்தில் யாராலும் நிரூபிக்க பட முடியாது. ஏனென்றால் அந்த இரண்டு பாவங்களும் சூனிய வீடுகள் ஆகிவிட்டது.
★இந்த தனுசு லக்ன ஜாதகர். காதல் சார்ந்த விஷயத்திலும் அல்லது காமம் சார்ந்த விஷயத்திலும் மற்றும் தொலைதூரப் பயணம் சார்ந்த விஷயத்திலும் என்ன தவறு செய்தாலும் என்ன பித்தலாட்டங்கள் செய்தாலும் என்ன பொய் சொன்னாலும் அந்த குற்றம் யாராலும் நிரூபிக்க முடியாது.
★இதில் இருக்கும் nagative என்னவென்றால் திதி சூனியம் பாவங்கள் சார்ந்த நாம் என்ன தவறு செய்தாலும் நிரூபிக்க முடியாது என்பது போல.அந்த பாவம் சார்ந்து நமக்கு மற்றவர்கள் என்ன தவறு செய்தாலும் அந்த குற்றத்தையும் நம்மால் நிரூபிக்க முடியாது.
★இப்பொழுது 5ம் பாவம் திதி சூன்யமாக எடுத்துக் கொள்வோம்.5ம் பாவம் என்பது காதல் உறவு இதனை சார்ந்து மற்றவர்கள் நமக்கு துரோகம் செய்தாலும் அந்த குற்றத்தை நம்மால் நிரூபிக்க முடியாது.
★அதாவது திதி சூனியம் வீடுகள் சார்ந்து நாம் என்ன தவறு செய்கிறோமோ அதற்கு தண்டனையாக நமக்கு அந்த பாவம் சார்ந்து மற்றவர்கள் என்ன தவறு செய்தாலும் அதனை நம்மால் நிரூபிக்க முடியாது.இதுதான் திதி சூன்யமாகும்.
★திதி சூனியம் பாவம் சார்ந்து நாம் எந்த தவறையும் செய்யக்கூடாது.மீறி தவறு செய்தால் அது நமது கர்மாவில் கலந்து நம்முடைய அடுத்தடுத்த பிறவிகளுக்கு காரணமாகிவிடும்.
அடுத்த பிறவியில் அதற்கு தகுந்தார்போல் நமக்கு தண்டனையும் கொடுத்துவிடும்.
★நமது லக்னத்திலிருந்து திதி சூனியம் வீடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக சிம்ம லக்னத்தில் பிறந்தவரை எடுத்துக் கொள்வோம்.சப்தமி திதியில் பிறந்திருக்கிறார் என்றால் அவருக்கு கடகம் மற்றும் தனுசு இரண்டு வீடுகள் திதி சூன்ய வீடுகள் ஆகும்.சிம்ம லக்னத்திற்கு கடகம் மற்றும் தனுசு எத்தனாவது பாவமாக வருகிறது என்று பாருங்கள்.
★அந்த இரண்டு பாவங்கள் தான் திதி சூனியமாகும்.அதாவது 5 மற்றும் 12 பாவங்கள் வரும்.இப்படித்தான் எல்லா திதிகளுக்கும் கண்டுபிடிக்க வேண்டும்.
★அம்மாவாசை மற்றும் பௌர்ணமியில் பிறந்தவர்களுக்கு இந்த சூட்சமம் பொருந்தாது.
★மேலும் திதி சூன்ய அதிபதியை அசுப கிரகங்களாகிய ராகு, கேது, சனி,செவ்வாய், சூரியன், போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையோ, பார்வையோ, தொடர்போ இருந்தால் நம்முடைய உறவுநிலைகள் கெட்டுவிடும்.
உறவுகள் மூலமாக நமக்கு கஷ்டங்களும் பிரச்சினைகளும் ஏற்படும்.
★உதாரணமாக பகவான்
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பிறந்த திதி நவமி திதி ஆகும்.நவமித் திதிக்கு அதிபதி சூரியனாகும்.
★அவருடைய ஜாதகத்தில் சூரியனை அசுப கிரகங்களாகிய சனியும் செவ்வாயும் உச்சமாக தொடர்பு கொண்டிருப்பார்கள்.
★இதனால்தான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தனது வாழ்க்கையில் உறவுகள் மூலமாக அனைத்து கஷ்டத்தையும் அனுபவித்தார்.
★ஸ்ரீராமருக்கு அனைத்து கஷ்டங்களும், பிரச்சினைகளும் மற்றும் வேதனைகளும் உறவுகள் மூலமாக தான் ஏற்பட்டது.
★மேலும் அவரவர் பிறந்த திதிக்கு அதிபதியை ஒன்றுக்கு மேற்பட்ட அசுப கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ தொடர்போ இருக்கிறதா என்று பாருங்கள்.அப்படி இருந்தால் உறவுகள் சார்ந்த விஷயத்தில் மிக மிக கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
★இல்லை என்றால் பிரச்சினைகளும், வேதனைகளும், கஷ்டங்களும், நமக்கு உறவுகள் மூலம் வந்து விடும்.
★இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்டு நாம் கவனமாக இருந்து கொண்டால் ஓரளவுக்கு சமாளித்து விடலாம்.
★பரிகாரத்திற்கு நாம் பிறந்த திதி வேலை செய்யாது.இந்த பூமியில் நம்முடைய ஆத்மா முதன்முதலில் ஜனனம் எடுத்த கரு உருவான திதி தான் வேலை செய்யும்.
★எந்த திதியில் நம்முடைய முதல் கரு உருவானது என்பதை கண்டுபிடிக்க நாம் பிறந்த திதியில் இருந்து 9 திதிகளை கழித்தால் வரும் திதி தான் நம்முடைய தாயின் கர்ப்பப்பையில் நாம் உருவான திதியாகும்.
★உதாரணமாக தசமி திதியில் ஒருவர் பிறந்து இருக்கிறார் என்று எடுத்துக் கொள்வோம். அதிலிருந்து 9 திதிகளை கழித்துக் கொண்டால் பிரதமை திதி வரும்.இந்த திதியில் தான் இவருடைய கரு முதன்முதலில் உருவானதாகும்.
★திரியோதசி திதியில் பிறந்தவர்கள் எடுத்துக் கொள்வோம்.இவர்களின் கரு உருவான திதி சதுர்த்தி திதி ஆகும்.
★நம்முடைய ஆத்மா உருவான திதிக்கு எந்த கிரகம் அதிபதியோ அந்த கிரகத்திற்கு தான் நாம் பரிகாரம் செய்ய வேண்டும்.
அப்போதுதான் பரிகாரம் வேலை செய்யும்.இல்லையென்றால் பரிகாரம் வேலை செய்யாது.
★நாம் பிறந்த திதியும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதில் இருந்து ஒன்பது திதிகளை கழிக்க வேண்டும்.
சிறந்த கல்வி தரும் யோகங்கள்
1, சங்க யோகம் :- லக்கனாதிபதி பலம் பெற்று 5 --- 6 ஆம் அதிபதிகள ஒன்றுக்கொன்று கேந்திரம் பெறுவது.
2 , திரியோசன யோகம் :- சூரியன், சந்திரன், செவ்வாய் ஒன்றுக்கொன்று திரிகோணம் பெறுவது.
3, சரஸ்வதி யோகம் :- குரு + சுக்கிரன்,
1 -- 2 -- 4 -- 5 --- 7 --- 9 --- 10 இல் இருந்து குரு பலம் பெறுவது.
4 , புத்திமாதுரு யோகம் :- 5 ஆம் அதிபதி சுபனாக சுபருடன் சம்பந்தப்படுவது.
5 , புத்தி யோகம் :- 5 ஆம் அதிபதி சுபனாக அவர் இருந்த நவாம்சாதிபதி சுபராக ராசியில் சுபர் சம்பந்தம் பெறுவது.
6, பலமொழிகளை அறிந்தவர் :- சூரியனுக்கு 12 இல் செவ்வாய், குரு இருப்பது.
7 , திரிகால ஞானயோகம் :- குரு பலம் பெற்று நவாம்சத்திலும் பலம் பெற்று சுபர் சம்பந்தம் பெறுவது.
யோகி அவயோகி கணிதம்..!
சோதிடத்தில் ஒவ்வொரு ஜாதகத்திற்க்கும் யோகி/அவயோகி உண்டு, இவ்விரண்டை ஜாதகத்தில் எவ்வாறு கணிக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் சாரம்சம்..!
எந்த ஜாதகம் என்றாலும் காலபுருஷ லக்னம் மேஷத்தில் இருந்து மட்டுமே யோகியை கணிக்க வேண்டும், சூரியன் நின்ற தீர்க்கரேகை+சந்திரன் தீர்க்கரேகை+93.20 டிகிரி இதனை காலபுருஷ லக்னத்தில் இருந்து கணிதம் செய்தால் யோக நட்சத்திரத்தை கணிக்கலாம், அந்த நட்சத்திராதிபதியே யோகி..!
உதாரணமாக: சூரியன் கும்பத்தில் 15.11 டிகிரியில் என்றால் மேஷத்தில் இருந்து 315.11 டிகிரி ஆகும், சந்திரன் கும்பத்தில் 2 டிகிரியில் என்றால் மேஷத்தில் இருந்து 302 டிகிரி ஆகும், இவ்விரண்டையும் கூட்டினால் (315.11+302) 617.11 டிகிரி வரும், இப்பொழுது இதனுடன் 93.20 டிகிரியை கூட்டினால் 710.31 டிகிரி ஆகும், இது முழு ஜாதக கட்டத்தின் 360 டிகிரியை விட அதிகம் என்பதனால் 710.31-360 கழித்தால் 350.31 டிகிரி ஆகும், இது சரியாக மீனத்தில் 20.31 டிகிரியில் ரேவதி நட்சத்திரத்தில் விழும், ரேவதி நட்சத்திரம் யோக நட்சத்திரமாகவும், ரேவதி நட்சத்திராதிபதி புதன் யோகியாகவும் வருவார், இதில் போலி யோகி அந்த நட்சத்திரம் நின்ற வீட்டின் அதிபதி குரு ஆவார், போலி யோகி என்பவர் யோகிக்கு 2 ம் நிலை ஆவார்..!
அவயோகி என்பவர் ஜாதகருக்கு தீய கர்ம பலன்களை வழங்குபவர், இவரை யோக நட்சத்திரம் விழுந்த டிகிரியில் இருந்து 186.40 டிகிரி கூட்டி கணிக்க வேண்டும்..!
உதாரணமாக: மேலே யோகியானவர் ரேவதி நட்சத்திரம் என்றாகி அது மீனத்தில் 20.31 டிகிரியிலும் காலபுருஷ லக்னத்தில் இருந்து 350.31 டிகிரியாகவும் உள்ளது அல்லவா, ஆக இப்பொழுது இதனுடன் 186.40 டிகிரியை கூட்டினால் 537.11 வரும், இந்த எண்ணிக்கை முழு ராசிகட்ட டிகிரி 360 க்கு மேல் உள்ளதால் 537.11 ல் 360 கிழிக்க வேண்டும் (537.11-360)= 177.11 டிகிரி அவயோகி டிகிரியாகும், இது சரியாக கன்னி ராசியில் 27.11 டிகிரியில் சித்திரை நட்சத்திரத்தில் விழுகிறது, ஆகவே இந்த ஜாதகருக்கு அவயோக நட்சத்திரம் சித்திரை, அவயோகி செவ்வாய் ஆவார்..!
யோக நட்சத்திரத்தின் திரிகோண நட்சத்திரங்கள் யோக பலனையும், அவயோக நட்சத்திரத்தில் திரிகோண நட்சத்திரங்கள் அவயோக பலனையும் செய்யும், மேலே கூறிய உதாரண கிரகநிலைக்கு இதனை ஒப்பிட்டால், யோக நட்சத்திரத்தில் கோண நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, அவயோக நட்சத்திரத்தின் கோண நட்சத்திரங்கள் அவிட்டம், மிருகசிரீஷம் ஆகும், மீண்டும் சந்திப்போம்..!
எந்த லக்னமாக இருந்தாலும் அந்த லக்னத்திற்கு மாரகாதிபதி நட்சத்திரம் லக்னத்தில் ஒளிந்திருக்கும் ..