உ
குரு+ புதன் இணைவு எனில்..
குருவின் 5, 7, 9 ம் பாா்வை புதனுக்கு..
10ல் புதன் அமா்ந்து குருவின் பாா்வை புதனுக்கு...
10ல் சூரியன்+ புதன்.. இவற்றுக்கு குரு,பாா்வை..
ஜாதகர்...
ஆசிரியர் பணி... ஜோதிட ஆசிரியர், அரசு ஆசிரியர்..
உ
குரு+ புதன் இணைவு எனில்..
குருவின் 5, 7, 9 ம் பாா்வை புதனுக்கு..
10ல் புதன் அமா்ந்து குருவின் பாா்வை புதனுக்கு...
10ல் சூரியன்+ புதன்.. இவற்றுக்கு குரு,பாா்வை..
ஜாதகர்...
ஆசிரியர் பணி... ஜோதிட ஆசிரியர், அரசு ஆசிரியர்..
ஒவ்வொரு நாளும் மாந்தி உதயமாகும் நேரம் கிழமைகளுக்கு தகுந்தவாறும், பகல், இரவு பொழுதுகளுக்கு தகுந்தவாறும் மாறுபடும். அதை கணிப்பது எப்படி என பார்ப்போம்.
பகல் நேர மாந்தி உதய நாழிகையைக்கணிக்க, நடப்பு கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணி வரும் எண்ணை நான்கால் பெருக்கி, பெருக்கி வந்த எண்ணிலிருந்து இரண்டை கழிக்க, அன்றைய கிழமை பகல் நேரத்திற்குரிய மாந்தி உதய நாழிகை கிடைக்கும். உதய நாழிகை என்பது காலை சூரிய உதயத்திலிருந்து கணிக்கப்படுவதாகும்.
எல்லா கிழமைகளுக்கும் பகல் நேர மாந்தி உதய நாழிகையை கணிப்போம். ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 7 வருகிறது, அந்த 7 ஐ 4 ஆல் பெருக்கினால் 7 * 4 = 28, அந்த 28 லிருந்து 2 ஐ கழித்தால் 28 – 2 = 26. எனவே ஞாயிற்றுக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 26 நாழிகைகளாகும்.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 6 வருகிறது, அந்த 6 ஐ 4 ஆல் பெருக்கினால் 6 * 4 = 24, அந்த 24 லிருந்து 2 ஐ கழித்தால் 24 - 2 = 22.எனவே திங்கள் கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 22 நாழிகைகளாகும்.
செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 5 வருகிறது, அந்த 5 ஐ 4 ஆல் பெருக்கினால் 5 * 4 = 20, அந்த 20 லிருந்து 2 ஐ கழித்தால் 20 - 2 =18.எனவே செவ்வாய்க்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 18 நாழிகைகளாகும்.
புதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 4 வருகிறது, அந்த 4 ஐ 4 ஆல் பெருக்கினால் 4 * 4 = 16, அந்த 16 லிருந்து 2 ஐ கழித்தால் 16 - 2 = 14.எனவே புதன் கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 14 நாழிகைகளாகும்.
வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 3 வருகிறது, அந்த 3 ஐ 4 ஆல் பெருக்கினால் 3 * 4 = 12, அந்த 12 லிருந்து 2 ஐ கழித்தால் 12 - 2 = 10.எனவே வியாழக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 10 நாழிகைகளாகும்.
வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 2 வருகிறது, அந்த 2 ஐ 4 ஆல் பெருக்கினால் 2 * 4 = 8, அந்த 8 லிருந்து 2 ஐ கழித்தால் 8 - 2 = 6.எனவே வெள்ளிக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 6 நாழிகைகளாகும்.
சனிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 1 வருகிறது, அந்த 1 ஐ 4 ஆல் பெருக்கினால் 1 * 4 = 4, அந்த 4 லிருந்து 2 ஐ கழித்தால் 4 - 2 = 2.எனவே சனிக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 2 நாழிகைகளாகும்.
பகல் நேர மாந்தி உதய நாழிகைகள்
ஞாயிற்றுக்கிழமை - 26 நாழிகை
திங்கள்கிழமை - 22 நாழிகை
செவ்வாய்க்கிழமை - 18 நாழிகை
புதன் கிழமை - 14 நாழிகை
வியாழக்கிழமை - 10 நாழிகை
வெள்ளிக்கிழமை - 6 நாழிகை
சனிக்கிழமை - 2 நாழிகை
இரவு நேர மாந்தி உதய நாழிகையைக்கணிக்க, நடப்பு கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணி வரும் எண்ணை நான்கால் பெருக்கி, பெருக்கி வந்த எண்ணிலிருந்து இரண்டை கழிக்க, அன்றைய கிழமை இரவு நேரத்திற்குரிய மாந்தி உதய நாழிகை கிடைக்கும்.
எல்லா கிழமைகளுக்கும் இரவு நேர மாந்தி உதய நாழிகையை கணிப்போம். ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 3 வருகிறது, அந்த 3 ஐ 4 ஆல் பெருக்கினால் 3 * 4 = 12, அந்த 12 லிருந்து 2 ஐ கழித்தால் 12 - 2 = 10. எனவே ஞாயிற்றுக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 10 நாழிகைகளாகும்.
திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 2 வருகிறது, அந்த 2 ஐ 4 ஆல் பெருக்கினால் 2 * 4 = 8, அந்த 8 லிருந்து 2 ஐ கழித்தால் 8 - 2 = 6.எனவே திங்கள் கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 6 நாழிகைகளாகும்.
செவ்வாய்க்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 1 வருகிறது, அந்த 1 ஐ 4 ஆல் பெருக்கினால் 1 * 4 = 4, அந்த 4 லிருந்து 2 ஐ கழித்தால் 4 - 2 = 2.எனவே செவ்வாய்க்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 2 நாழிகைகளாகும்.
புதன் கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 7 வருகிறது, அந்த 7 ஐ 4 ஆல் பெருக்கினால் 7 * 4 = 28, அந்த 28 லிருந்து 2 ஐ கழித்தால் 28 - 2 = 26.எனவே புதன் கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 26 நாழிகைகளாகும்.
வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 6 வருகிறது, அந்த 6 ஐ 4 ஆல் பெருக்கினால் 6 * 4 = 24, அந்த 24 லிருந்து 2 ஐ கழித்தால் 24 - 2 = 22.எனவே வியாழக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 22 நாழிகைகளாகும்.
வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 5 வருகிறது, அந்த 5 ஐ 4 ஆல் பெருக்கினால் 5 * 4 = 20, அந்த 20 லிருந்து 2 ஐ கழித்தால் 20 - 2 = 18.எனவே வெள்ளிக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 18 நாழிகைகளாகும்.
சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 4 வருகிறது, அந்த 4 ஐ 4 ஆல் பெருக்கினால் 4 * 4 = 16, அந்த 16 லிருந்து 2 ஐ கழித்தால் 16 - 2 = 14.எனவே சனிக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 14 நாழிகைகளாகும்.
இரவு நேர மாந்தி உதய நாழிகைகள்
ஞாயிற்றுக்கிழமை - 10 நாழிகை
திங்கள்கிழமை - 6 நாழிகை
செவ்வாய்க்கிழமை - 2 நாழிகை
புதன் கிழமை - 26 நாழிகை
வியாழக்கிழமை - 22 நாழிகை
வெள்ளிக்கிழமை - 18 நாழிகை
சனிக்கிழமை - 14 நாழிகை
மாந்தி ஸ்புடம் கணிக்கும் முறை
மாந்திஸ்புடம் என்பது ஒரு குறிப்பிட்ட தினத்தில் பகல் நேரத்திற்கு ஒன்றாகவும், இரவு நேரத்திற்கு வேறாகவும் இருக்கும்.
1 நாள் = 60 நாழிகை = 360 பாகை
1 பகல் = 30 நாழிகை = 180 பாகை
1 இரவு = 30 நாழிகை = 180 பாகை
பகல் நேர மாந்தி ஸ்புடத்தைக்கணிக்க , பகல் நேர மாந்தி உதய நாழிகையை 180 ஆல் பெருக்கி வரும் தொகையை, 30 ஆல் வகுக்க வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டினால் வருவது பகல் நேர மாந்தி ஸ்புடமாகும்.180 ஐ 30 ஆல் வகுத்தால் வருவது 6 ஆகும். எனவே பகல் நேர மாந்தி உதய நாழிகையை 6 ஆல் பெருக்கி அத்துடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டினால் வருவது பகல் நேர மாந்தி ஸ்புடமாகும்.
பகல் நேர மாந்தி ஸ்புடம் = (பகல் நேர மாந்தி உதய நாழிகை * 6) + (அன்றைய சூரிய ஸ்புடம்)
எல்லா கிழமைகளுக்கும் பகல் நேர மாந்தி ஸ்புடம் கணிப்போம்.
ஞாயிற்றுக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (26 * 6) =156
=156 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
திங்கள்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (22* 6) = 132
=132 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
செவ்வாய்க்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (18*6)= 108 நாழிகை
=108 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
புதன் கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (14*6)= 84
= 84 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
வியாழக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (10*6)= 60
= 60 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
வெள்ளிக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (6*6)=36
= 36 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
சனிக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (2*6) = 12
=12 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
இரவு நேர மாந்தி ஸ்புடத்தைக்கணிக்க , இரவு நேர மாந்தி உதய நாழிகையை 180 ஆல் பெருக்கி வரும் தொகையை, 30 ஆல் வகுக்க வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டி, அத்துடன் 180 பாகையைக்கூட்டினால் வருவது இரவு நேர மாந்தி ஸ்புடமாகும்.180 ஐ 30 ஆல் வகுத்தால் வருவது 6 ஆகும். எனவே இரவு நேர மாந்தி உதய நாழிகையை 6 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டி, அத்துடன் 180 பாகையைக்கூட்டினால் வருவது இரவு நேர மாந்தி ஸ்புடமாகும்.
இரவு நேர மாந்தி ஸ்புடம் = (இரவு நேர மாந்தி உதய நாழிகை * 6) + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
எல்லா கிழமைகளுக்கும் இரவு நேர மாந்தி ஸ்புடம் கணிப்போம்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (10 * 6) = 60
= 60 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
திங்கள்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (6* 6) = 36
= 36 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
செவ்வாய்க்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (2*6) = 12 நாழிகை
= 12 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
புதன் கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (26*6) = 156
= 156 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
வியாழக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (22*6) = 132
= 132 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
வெள்ளிக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (18*6) = 108
= 108 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
சனிக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (14*6) = 84
= 84 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
மேற்கண்டவாறு கணித்து வரும் பாகைகள் 360 க்கு மேல் இருந்தால், கணித்து வந்த பாகைகளிலிருந்து 360 பாகைகளை கழிக்க வேண்டும்.
1ல் செவ்வாய் எனில்
ஜாதகர் எதிலும் வெற்றி பெற,வேண்டும் என்ற எண்ணம் உடையவா்.. அதற்கான"உழைப்பும் இருக்கும்.
2ல் செவ்வாய் எனில்
ஜாதகர் பேச்சு மூலம்,எந்த விசயத்தையும் முயற்சி செய்வாா். வெற்றி கிடைக்கும்.
3ல் செவ்வாய் எனில் செயலில் தைரியம் அதிகமாக இருக்கும்.. துணிச்சல் அதிகம்.. பின்விளைவுகறை பற்றி யோசிக்க மாட்டாா்.
4ல் செவ்வாய் எனில் ஜாதகர் ,வீடு, மனை , பெற முயற்சி,செய்வாா்.. தனது தாய்க்காக முயற்சி செய்வாா்
5ல் செவ்வாய் எனில் ஜாதகர் தனது முயற்சிகள் அனைத்தும் குழந்தைகளுக்காக இருக்கும்...
6மிடம் செவ்வாய் எனில்..
ஜாதகர் போராடி வாழ்க்கையில் வெற்றி பெறுவாா்..
7ல் செவ்வாய் எனில்.. தனது நண்பா்களுக்காக, வாழ்க்கைத்துணைக்காக முயற்சிகள் செய்வாா்..
8ல் செவ்வாய் எனில் ஜாதகர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க முயற்சி செய்வாா்..
9ல் செவ்வாய்.. தனது தந்தை, ஆசிரியருக்கு.. கோவில் திருப்பணி செய்ய முயற்சி செய்வாா்..
10ல் செவ்வாய்.. தனது பெற்றோருக்கு கடமையை , கர்மாவை நிறைவேற்ற ஜாதகர் முயற்சி செய்வாா்
11ல் செவ்வாய்.. தனது லாபத்தை பெற.. மூத்தோருக்காக முயற்சி செய்வாா்..
12ல் செவ்வாய்.. மருத்துவ செலவுகளை"குறைக்க முயற்சி செய்வாா்
பொது பதிவு
லக்னத்தில் 5ல் புதன் இருந்தால் உங்கள் மகளின் சிந்தனை தான்.. எப்போதும்
மகளின் வாழ்க்கை யை பற்றிய அக்கறை அதிகம்
உ
வாக்குஸ்தான அதிபதியுடன் செவ்வாய்.. இணைவு..
சந்திரன் + செவ்வாய் இணைவு...
செவ்வாய் + ராகு..
சந்திரன்+ ராகு...
செவ்வாய்+ சந்திரன்+ ராகு...
ஜாதகர் வேகமாக உணவு உண்ணக்கூடியவா்... பொறுமை இருப்பதில்லை
சந்திரன்+செவ்வாய்
ஜனன ஜாதகத்தில் சந்திரன் செவ்வாய் சாரத்தில் இருந்தால் அல்லது சந்திரன் செவ்வாயை தொட்டால்,
1.சந்திர மங்கள யோகம்.
2.நல்ல பதவி, பொருளாதாரம்,
நிர்வாக திறமை இருக்கும்.
3.தாயாருக்கு சொத்துண்டு.
4.தாயாருக்கு கோபம் அதிகம்.
5.வாகன பயணம் விரும்புவர்
அல்லது அதிகம் இருக்கும்.
6.ஜாதகருக்கு தாயார் முன்னின்று
திருமணம் செய்து வைப்பார்கள்.
திருவாதிரை, சுவாதி, சதயம் .
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறக்கும் பொழுது முதல் திசையாக ராகு திசை சந்திப்பார்கள் ..குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ராகு தசையின் சில விசித்திர அல்லது முரண்பாடான விஷயங்களை பார்ப்போம்.
1.குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ராகுதசை 3,6,10,11.ஆகிய இடங்களில் இருந்து தசா நடந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் அதிகமான படிப்பில் ஈடுபாடு, பிறமொழி பயில்தல் ,இசையில் ஆர்வம். என சுபத்துவம் ஆன விஷயங்கள். நடக்கும் பொழுது ஜாதகரின் பெற்றோர் வழியில் ஏதேனும் உயிர் காரகத்துவ சம்பந்தமான விஷயங்களில் பாதிப்பை தருகிறார்.
2.சிலருக்கு குழந்தைப் பருவத்திலேயே படிப்பில் மந்தமாக /ஞாபகத் திறன் குறைவாக. படிப்பில் கை வைத்து விடுகிறார்.
3.அதிகபடியான அசைவ உணவை விரும்ப வைக்கிறார்.
4.நாத்திகம் பேச வைக்கிறார்.
5.மர்மமான, (Thriller movie),பேய் சம்பந்தமான படங்கள், அதிகமாக சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்கள் ஆகியவற்றை விரும்பி பார்க்க வைக்கிறார்.
6.விளையாட்டுகளில், குத்துச்சண்டை, கால்பந்து போன்ற துரிதமான விளையாட்டுகளின் மீது ஆர்வம்.
7.எதையுமே ஒரு அலட்சியப்படுத்துதல் உறவாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும்,
8.உயிர் காரகத்துவம் ஆன விஷயங்கள் தந்தை தந்தை வழி தாத்தா உறவுகள், தாய் தாய் வழி தாத்தா உறவுகளின் கை வைக்கிறார் (உறவு இழத்தல்) .
9.இன்னும் சில குழந்தைகளுக்கு இளம் வயதில் காதல் மோகம். (அதாவது 15 லிருந்து 23 வயதிற்குள்) ஏற்பட வைத்து அதற்குள் படிப்பில் கவனம் சிதற வைக்கிறார்.
10.வெகு சிலருக்கு குழந்தைகளுக்கு வரக்கூடிய ராகு தசா பெற்றோரை பாதிக்கிறது. குறிப்பாக தந்தைக்கு பாதிப்பு.
11.கனவு பயம்.
12.அதிகமாக விஷப்பூச்சிகள், அரவம், போன்றவற்றை கனவிலும் நேரிலும் காணுதல்.
மேற்கூறிய அனைத்தும் குழந்தைப்பருவத்தில் வரக்கூடிய ராகு தசையில் சந்திக்கக்கூடிய பொதுபலன்கள்.