Showing posts with label உச்சம். Show all posts
Showing posts with label உச்சம். Show all posts

Sunday, October 5, 2014

தன்முனைப்பு(ஈகோ) ஜோதிடக்குறிப்பு

      ல‌க்கினாதிபதி வலிமை பெறுவது நல்லது தான் என்றாலும் உச்ச வலிமை பெற்று விட்டால் ஜாதகருக்கு தன் முனைப்பு(ஈகோ) ஏற்பட்டு விடுகிறது. அப்படிபட்ட ஜாதகர் சரியோ தவறோ தான் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று எண்ணுவர். இதனால் வீட்டிலும், சமுகத்தில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.

Thursday, May 30, 2013

மஹாராஜ யோகம் ஜோதிடக்குறிப்பு

      1ம் இடத்டோனும் 5ம் இடத்தோனும் ப‌ரிவர்தனை ஆகியிருந்து அல்லது 1ம் இடத்டோனும் 5ம் இடத்தோனும் லக்கினத்திலோ, 5ம் இடத்திலோ இருந்து ஆல்லது 1ம் இடத்டோனும் 5ம் இடத்தோனும் ஆட்சி, உச்சம் ராசியிலோ அல்லது நவம்சத்திலோ பெற்றிருந்து, அந்த ஜாதகத்திற்கு நன்மை செய்யும் கிரகத்தால் பார்க்கப்பட்டால் அது மஹாராஜ யோகம் எனப்படும்.
      மஹாராஜ யோகம் பெற்றவ்ர்கள், பெயரோடும், புகழோடும், மிகவும் மகிழ்ச்சிகரமாக வாழ்வர்.

Wednesday, November 30, 2011

கலாநிதி யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு இரண்டாமிடத்திலோ, 5ம் இடத்திலோ அல்லது 9ம் இடத்திலோ இருந்து அதனுடன் சுக்கிரனும் புதனும் இனைந்திருந்தாலோ அல்லது அப்படி அமைந்த குருவை சுக்கிரனும் புதனும் பார்த்தாலோ அதற்கு கலாநிதி யோகம் என்று பெயர். இது மூன்று சுபகிரகங்களால் ஏற்படும் மிகச்சிறந்த ராஜ யோகமாகும். இதில் குரு, புதன், சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றால் சிறப்பு இன்னும் கூடுதல்.....
      ஜாதகத்தில் கலாநிதி யோகம் அமையப் பெற்றவர்கள், நீண்ட ஆயுளுடன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில், மரியாதைக்குறியவர்களாக, மிகநல்லவர்களாக, எல்லாவித சுக செளக்கியங்களை அனுபவிப்பவர்களாக, நோயற்றவர்களாக இருப்பர்.

Friday, November 18, 2011

பாரிஜாத யோகம்


      ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியோ அல்லது லக்கினாதிபதி நவாம்சத்தில் அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியோ ராசியில்(இதில் ஒருவரோ அல்லது இருவருமே இணைந்தோ) கேந்திரத்திலோ, கோணத்திலோ அல்லது உச்சம் பெற்றோ அமர்ந்திருந்தால் அதன் பெயர் பாரிஜாத யோகமாகும்
      இந்த மாதிரி அமைப்புடைய ஜாதகர் தன்னுடைய மத்திம வயதிற்க்கு மேல் சுகபோகங்களை அனுபவிப்பராக இருப்பார். அவருக்கு அரசு அரசாங்க மரியாதைகள் கிடைக்கும். அவரிடம் அதிகமான வசதி வாய்ப்புகள் குவியும்.

Sunday, June 19, 2011

சூரியன் தரும் சுகங்கள்


சூரியன் ஆட்சி, உச்ச பலத்துடன் சுபர் பார்வை சம்பந்தம்  பெற்று நின்றால் ஜாதகருக்கு கிடைக்கும் சுகங்களாவன:‍
1. ஜாதகருக்கு அரசு/அர‌சியல் தொடர்புகளால் லாபமுண்டு.
2. வி.ஐ.பிக்களின் தொடர்பு சுலபமாக கிடைக்கும், ஜாதகரும் வி.ஐ.பியாக திகழ‌முடியும்.
3. ஜாதகர் ஒழுங்கு நன்னடத்தை காரணமாக, பாரட்டுகளையும், நல்ல நல்ல வாய்ப்புகளையும் பெறமுடியும்.
4. ஜாதகர் தனது கெளரவம், ஆளுமைத்திறன் இவற்றை உணர்ந்து சமுதாயத்தில் தன்னை எல்லோரும் நல்ல விதமாக பேசுமாறு நடந்து கொள்வார்.
5. எதிரிக்கு அஞ்சமாட்டார், தனது வழியில் குறிக்கிடுபவர்களை பந்தாடுவார். வீரன், சூரன் என பெயர் வாங்குவார்.
6. ஆண்மையும் வீரமும் தரும் சூரியன், தனது வாழ்நாளில் எளியவர்களைக் காப்பாற்றுவார், தான தருமங்கள் செய்வார். ஆலய பணி, தெய்வகாரியங்களுக்கு உதவுவது என அனைத்து நல்ல காரியங்களும் தன்னால் இயன்றவரை செய்வார்.
சூரியன் ஜாதகத்தில் பகை, நீசம், கெட்டவர்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால்:
1. ஜாதகர் இம்சை அரசனாக மாறி மற்றவர்களை துன்புறுத்தி அதில் இன்பம் கான்பார்.
2. தனது சுயநலத்திற்க்காக உலக பாவங்கள், பாதகங்கள் அனைத்தையும் செய்வார்.
3. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி யோக்கியனைப் போல் நடமாடும் மாகாநடிகனாக விளங்குவார்.