Showing posts with label ரிஷப லக்கினம். Show all posts
Showing posts with label ரிஷப லக்கினம். Show all posts

Thursday, July 28, 2011

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான ராஜயோக அமைப்பு 1


      முதல் தரமான ராஜயோக அமைப்பு என்றால்...........
நல்ல பண வசதி, கெளரவமான வேலை, ஒற்றுமையான குடும்பம், நல்ல சந்ததிகள், ஜன வசியம், கெளவரமான வசீகரத்தோற்றம், எல்லாம் அமைந்த ஆனந்தமான, நிம்மதியான‌ வாழ்வு அமையுமானால் அது முதல் தரமான ராஜயோகம் என்று சொல்லலாம் அல்லவா.

      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி செவ்வாய், யோகாதிபதியின் சுபத்துவ சம்ப‌ந்தம் முதல் நிலை ராஜயோகத்தினைத்தரும்.
9,10ம் இடங்களில் குருவும் செவ்வாயும் இருப்பது, 4ல் குரு லக்கினத்தில் அல்லது 10ல் செவ்வாய் இருப்பது சிறப்பான அமைப்பாகும்

      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 10ல் சனி, லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு அல்லது 6ல் சனி உச்சம் லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

      மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு யோகாதிபதி சுக்கிரன் 5ல் அல்லது 10ல் இருப்பது முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

      கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி சந்திரன், யோகாதிபதி குருவும் செவ்வாயும் ஆவர். இவர்கள் ஜாதகத்தில் சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு யோகம் இருந்தாலே முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும். லக்கினத்தில் சந்திரன் 5ல் செவ்வாய், 9ல் குரு மிகவும் சிறப்பைத்தரும்

Saturday, July 2, 2011

சனி தெசை யாருக்கு யோகம் செய்யும்


      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி பாதகயோகாதிப்தி, தருமகருமாதிபதி ஆகிறார் எனவே இவர்களை சனி தசை செல்வச்சீமானாக்கும்.
அதிலும் கீழ்க்கண்டவாரு ஜாதகதில் கிரகங்கள் அமைந்தால் யோகம் தரும்.

      1) 9,10க்குடைய சனி 10ல் ஆட்சி பலத்துடன் இருப்பது. 9ல் ஆட்சி பலம் பெற்றாலும் பாதக ஸ்தானம் என்பதால் 10மிடமே சாலச் சிற‌ந்தது.
      2) சுக பூர்வபுண்ணியாதிபதிகளான சூரியன், புதன் கன்னியில் புதஅதித்ய யொகம் என்ற அமைப்பில் இருப்பது.
      3) கடகத்தில் குரு உச்சம் பெற்று நிற்பதுடன் யோகதிபதி சனி மற்றும் கோணாதிபதி புதன் ஆட்சி உச்ச பலம் பெற்று நின்றால் யோகம் பல மடங்கு இருக்கும்.
      இவர்களுக்கு சனி தசை மட்டுமல்லாது குரு தசை, புதன் தசை, இதர தசைகளில் சனி, குரு, புதன் புத்தி அந்தரங்களில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
      இவர்கள் ஷேர் மார்கெட், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயரிப்பு, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வெற்றி வாய்ப்புகள் இவர்களைத் தேடி வரும்.

Saturday, June 18, 2011

அதிர்ஷ்டசாலி-ஜோதிடக் குறிப்பு


9,10க்கு உடையவர்கள் தரும கருமாதிபதி ஆவர். இவர்கள் பரிவர்தனையாகி நின்றாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக விளங்க முடியும்.
ரிஷப லக்கினகாரர்களுக்கு 9,10க்கு உடையவர் சனியாவார். அவர் கெடாது நல்ல நிலையில் இருந்தாலே ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக விளங்க முடியும்.
9, 10க்கு உடையவர் பரிவர்த்தனை மகர லக்கினகரர்களைத் தவிர இதர லக்கினகாரர்களுக்கு யோக பலன்களைத் தரும்.
மகர லக்கினகாரர்களுக்கு 9, 10ம் இடம் கன்னி, துலாம் ஆகும். கன்னியில் சுக்கிரன் நீசமடைவார். இவர்களுக்கு கன்னியில் சுக்கிரனும் புதனும் இனைந்து நின்றால் சுக்கிரனுக்கு நீச பங்கம் ஏற்ப்படும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக விளங்க முடியும்.
9, 10க்கு உடையவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அமைப்பில் இருவரும் கெடாது சாதாரண நிலையில்(ந‌ட்பு, சமம்) இருந்தால் யோகம் தான். இருவரில் ஒருவர் வலுவாகவும் ஒருவர் சாதாரணமாக இருந்தால் யோகம் அதிகமுண்டு. இருவரும் வலுவாக சுபர் பார்வையுடன் சேர்க்கையுடன் இருந்தால் பிரபல யோகமாகும்.