Showing posts with label செவ்வாய். Show all posts
Showing posts with label செவ்வாய். Show all posts

Friday, May 29, 2020

சந்திரன் செவ்வாய் கிரக சேர்க்கை

சந்திரன் செவ்வாய்... கிரக சேர்க்கை.... பார்வை அல்லது பரிவர்த்தனை.....
ஜாதகர் மற்றும் ஜாதகரின் அம்மா கோபம் உடையவராகவும்.... தைரியம் உடையவராகவும்.... எல்லாவற்றிலும் முன்னணியில் இருப்பவர்களாகவும்... இருப்பர்.
ஜாதகர் சுறுசுறுப்பானவராகவும்... விவசாயம் செய்பவராகவும் இருக்க வாய்ப்பு உண்டு.
ஜாதகருக்கு வீடு வாகனம் மற்றும் மிஷனரிஸ் பற்றிய அறிவு இயல்பாகவே இருக்கும்.
இந்த கிரக சேர்க்கை அமைப்பு சிறந்த மெக்கானிக் ஆகவும்.... வாஸ்து நிபுணராகவும்.... நீரோட்டம் பார்ப்பவராகவும்... இருப்பார்கள்.
அதிலும் ஆட்சி பெற்ற செவ்வாய் ஆட்சிபெற்ற சந்திரனை பார்வை செய்யும் பொழுது சிறந்த மெக்கானிக்காக இருப்பவர்களும் உண்டு
சுக்கிரன் வீட்டில் இந்த சேர்க்கை இருக்கும் போது வாஸ்து நிபுணராகவும் நீரோட்டம் பார்ப்பவர் ஆகவும் இருப்பார்கள்.
முக்கியமாக...... செவ்வாய் வீட்டில் சந்திரன் நீசம் ஆவதாலும்....
சந்திரன் வீட்டில் செவ்வாய் நீசம் ஆவதாலும்.....
இக்கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு சில தீய பலன்களும் தந்துவிடுகிறது அல்லது நடந்துவிடுகிறது.
கிரக சேர்க்கை உள்ளவர்கள் வாழ்வில் முன்பாதியில் மிகுந்த ஆரோக்கியம் உடையவர்களாகவும் நல்ல உடல் கட்டமைப்பு உள்ளவர்களாகவும் இருப்பர்
இவர்கள் பின்பாதி வாழ்க்கையில் உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து தினமும் மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதால்......
இந்த அமைப்பு உள்ளவர்கள் 40 வயதிற்கு மேல் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும்..... யோகா... தியானம்... நடைபயிற்சி... மேற்கொள்வது மிகவும் உத்தமம்.
கிரக சேர்க்கையில் ஆண்கள் பெண்கள் இருந்தாலும்.... சகோதர தோஷத்தை தருகிறது இவர்கள் சகோதர உறவுகளுடன் சேர்ந்து வாழும்போது இருவர் வாழ்க்கையுமே குறை உள்ளதாக மாறிவிடுகிறது.
ஆட்சி பெற்ற செவ்வாய் வீட்டில்..... சந்திரனும் சேர்ந்து இருக்கும் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர உறவுகள் ஒன்றாக வாழ்ந்த போது.... இருவருக்குமே குழந்தை பாக்கியம் சிறக்கவில்லை.... தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தபோது தான் இருவருக்குமே குழந்தை பாக்கியம் கிடைத்தது.
மேலும் ஒரே வீட்டில் வசித்து அல்லது ஒரே இடத்தில் தொழில் செய்து என இருந்தால் யாராவது ஒருவருடைய வாழ்க்கை.... குறை உள்ளதாக இருக்கும்.
ஏனெனில் சந்திரன் என்றால் சலனம்.... சகோதரரும் சலனம் உடையவராக இருப்பார்.
சந்திரன் வளர்பிறை தேய்பிறை இது போல் சகோதரரும் வளர்வதும் தேய்வதும் ஆக வாழ்க்கையில் இருப்பார் அதனால் சுப பிரிவாக வேலை விசயமாக வெளிமாநிலம் அல்லது வெளிநாடு என அடிக்கடி பிரிந்து செல்வதும், இருப்பதும் நல்லது.
ஆட்சி பெற்ற செவ்வாய்.... சுக்கிரனின் வீட்டில் இருக்கும் உச்ச சந்திரனை பார்வையிடும் பொழுது... ""பாலியல்ரீதியான"" தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது
பெண்கள் ஜாதகம் எனில்..... ஜாதகி கணவன் மீது மிகவும் பிரியமாக இருப்பார்... மேலும் கிரகசேர்க்கை... ""கணவருக்கு"" இருதார அமைப்பை தந்துவிடுகிறது
ஜாதகருக்கும்..... தன் மனைவி அல்லாத மூத்த வயதுடைய இன்னொரு பெண்ணிடம் பழக்கம் இருக்க வாய்ப்பு உண்டு.
எனக்குத்தெரிந்து கன்னியில் செவ்வாய் சந்திரன் இருக்கும் கிரக சேர்க்கை உள்ள பெண் ஜாதகத்தில்.... ஜாதகிக்கு... நிச்சயம் ஆன பின்புதான் மணமகன் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் வைத்துள்ளது தெரியவந்தது....
மேலும் இந்த கிரகச்சேர்க்கை பெண்.... இரண்டாம் தாரமாக இருந்தால் சிறக்கும் என சொல்லப்படுகிறது.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

செவ்வாய் புதன் கிரக சேர்க்கை

இக்கிரக சேர்க்கை ஆண்களைவிட பெண்களுக்குத்தான் கெடுபலன்கள் அதிகமாகக் கொடுக்கும்.... படிக்கின்ற வயதில் காதல் விவகாரத்தில் ஈடுபடுத்தி படிப்பை தடைசெய்கிறது.
ஆரம்பத்திலேயே தாண்டிவிட்டால் ஆராய்ச்சி கல்வி வரை படிப்பைத் தொடர முடியும். எனக்குத்தெரிந்து ஜாதகர் படிக்கிற காலத்தில் திருமணமானவரை கூட்டிச் சென்று கல்யாணம் செய்து கல்வி தடையாகி..... திருமண உறவு முறிந்து.... பின்பு.... மீண்டு வந்து உயர்நிலைக் கல்வி முடித்து..... இன்று நல்ல நிலையில் இருக்கின்றார்கள்.
மேலும் திருமணத்துக்குப் பின்பும்.... கணவன் இருக்க காதலனும்... மனைவி இருக்க காதலியும் உண்டு என்கிற நிலையை தந்துவிடுகிறது *(தாங்களாகவே எந்த ஒரு முடிவுக்கு வர வேண்டாம். சுயமான வைத்தியமும்.... சுயமான ஜோதிடமும் எப்பொழுதும் ஆபத்து)*
கல்லூரி காலங்களில் உடன் படித்த மாணவரை.... நீண்ட போராட்டத்திற்கு பின்... திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் உண்டு... அதேசமயத்தில் பட்டப் படிப்பை முடித்திருந்த ஜாதகிக்கு..... எட்டாவது படித்த நபர்.... வாழ்க்கை துணையாக அமைவதும் நிகழத்தான் செய்கிறது...
ஆண்களுக்கு இக்கிரக சேர்க்கைகள்.... கணிதத்துறையில் கில்லாடியாக உருவாக்குகிறது. இன்ஜினியரிங் கல்வி படிப்பதற்கு இந்த கிரக சேர்க்கை மிகவும் நல்லது.
இந்த கிரக சேர்க்கை படிப்பிற்கேற்ற வாழ்க்கைத்துணையை தருவதில்லை.... அறிவு சார்ந்த முடிவுகளில் ஒருவர் எடுக்கும் முடிவு இன்னொருவருக்கு பிடிக்காது..... மேலும் படிப்பு மற்றும் அறிவு சார்ந்த சண்டைகள் இருந்து கொண்டே இருக்கும்.
ஆண்களுக்கு கிரகசேர்க்கை இருக்கும்போது.... வரவு செலவு செய்யும் போதும்... அந்த விஷயங்களில் துல்லியமாக கணிதம் பார்த்து வரவு செலவை கனிப்பர். ஏனெனில் இவர்களுக்கு கணித அறிவு மிக அழகாக அறிவு மிகுந்ததாக இருக்கும்.
காலி இடத்துடன் வீடு அமையும் யோகத்தை தருகிறது. இந்த கிரக சேர்க்கை. இக்கிரகச்சேர்க்கையோடு.... *சனி* சேரும்போது ரியல் எஸ்டேட் துறையில் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும்... அதேநேரத்தில் கணவன் மனைவிக்குள்... பகை என்பதால்...
ஆணுக்கு... பெண்.... படிப்பு ஏற்றத்தாழ்வு கண்டிப்பாக இருக்கும்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்.... உச்ச நீச அடிப்படையில்....
*பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....*

செவ்வாய் குரு கிரக சேர்க்கை

ஜாதகர் தைரியமானவராகவும் சுறுசுறுப்பானவராகவும் எல்லாவற்றிலும் முன்னணியில் இருப்பவராகவும் கோவில் கட்டுபவராகவும் ஏதேனும் இயக்கங்களில் பதவி உடையவராகவும் இருப்பார்....
இவர்கள் கோவில் கட்டட திருப்பணிகளுக்கு.... விழாக்கால திருப்பணிகளுக்கு.... வசூலுக்கு சென்றால் உடன் வசூலாகும்... கோவில் பணிகளை முன்னின்று எடுத்துச் செல்வார் அந்த அளவுக்கு யோகம் மற்றும் புண்ணியம் உண்டு....
மேலும் வாடகை வருமானம் வரும் யோகம் உள்ளவராக இருப்பார்.
மிக சிறப்பான வீடு வாகனம் உடையவராகவும் இருப்பார்.
விளையாட்டுத் துறையில் ஈடுபாடு உடையவராக இருப்பார் வெற்றிகளையும் தருபவராகவும் கொள்பவராகவும் கொடுப்பவராகவும் இருப்பார்...
எமக்கு தெரிந்த இந்த கிரக அமைப்பு உள்ள ஜாதகர் 13 வயதிலேயே விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வாங்கி உள்ளார்.
மேலும் நேர்மையான முறையில் ஆசிரமம் அமைத்து ஆன்மீகப் பணிகள் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் இந்த கிரக அமைப்பு உண்டு
ஜாதகரின் சகோதரர்கள் சமுதாயத்தில்செல்வத்துடனும் செல்வாக்கான மற்றும் மதிப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்..
பெண்கள் ஜாதகம் ஆயின்..... ஜாதகிக்கு ஒழுக்கமான கௌரவமான செல்வம் செல்வாக்கான கணவன் அமைவார்....
மேலும் இந்த கிரக அமைப்பு ஜாதகியின் கணவருக்கு அரசு பணி அதிலும் ஆசிரியப் பணி புரிபவராக கூட இருப்பார்...
கணவரின் பெயரில் சொந்த வீடு வாகனம் அமையும் அரசு உயர் பணியில் இருப்பவர்கள் கூட இருப்பார்கள்..
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்.... உச்ச நீச அடிப்படையில்....
*பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....*

செவ்வாய் சுக்கிரன் கிரக சேர்க்கை

அடுத்தடுத்து கிரகச் சேர்க்கை பலன் வரிசையில்.....
நாம் காண இருப்பது செவ்வாய் சுக்கிரன் கிரக சேர்க்கை பலன்கள்.....
இந்த செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை தசாவதாரிணி யோகம் என சொல்லக்கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட திறமை உள்ளவர்களாக இருப்பர்... பெரும்பாலும் வாழ்க்கைத்துணை பக்கத்திலேயே அமையும்.
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் பெரும்பாலும் காதல் கலப்பு திருமணம் செய்துகொள்வார்கள்....
இவர்கள் சிறுவயதில் பாலியல் விஷயங்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.
முன் ஜென்மத்தில் வாழ்க்கை துணையாக யாராக இருந்தார்களோ... இந்த ஜென்மத்தில் வாழ்க்கைத் துணையாக ஆவார்கள் என முனிவர்களால் கூறப்பட்டுள்ளது.
கணவன் மனைவி மிக அன்னியோன்யமாக இருப்பார்கள். இவர்களுக்குள் நல்ல வசிய சக்தி இருக்கும். கலைத்துறையில் பிரகாசிக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.
ஜாதகருக்கு சொகுசான வீடு வாகனம் அமையும்
இக்கிரக சேர்க்கை உள்ளவர்கள் காமத்தில் அதிக அதீத ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்...
அழகான வாழ்க்கை துணை அமையும் ஒன்றுக்கு மேற்பட்ட திறமை உள்ளவர்களாக இருப்பார்கள்... எனக்குத்தெரிந்து நீசம் பெற்ற செவ்வாயுடன் இணைந்த சுக்கிரன்.... நீசம் பெற்ற சுக்கிரன் உடன் இணைந்த செவ்வாய் உள்ள ஆண் ஜாதகர்.. காதல் திருமணம் செய்து நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்
ஆட்சி பெற்ற சுக்கிரனோடு இணைந்த செவ்வாய் அமைப்பு உள்ள பெண் ஜாதகரும்..... காதல் திருமணம் புரிந்து நல்லதொரு வாழ்க்கை வாழ்கிறார்.... வாழ்கிறார்கள்.
இந்த கிரக சேர்க்கையுடன் ராகு கேது சேருமானால் சேர்ந்து இருக்குமானால்.... அசுபர்களின் பார்வையும்... தசா புத்தியும் இருக்குமானால்.... ஒழுக்கம் கேள்விக்குறியாக இருக்கும் மிக தவறான வகையில் வருமானம் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் (சூழ்நிலையை ஏற்படுத்தும்). மேலும் காமம் எண்ணங்கள் அதிகமாகும். கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கும்.
இந்த கிரகங்களின் இருப்பு அதன் தன்மை கணவன் மனைவி ஒற்றுமையை கடுமையாக பாதிக்கும். எப்படி எனில் செவ்வாய் சுக்கிரன் இரண்டும் ஒருவருக்கு ஒருவர் 6 / 8 ஆக இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை குறைவாகவே இருக்கும் தசாபுத்தி சாதகமாக இல்லாத பட்சத்தில்... பிரச்சனை மற்றும் பிரிவினையை கூட தந்துவிடும். அல்லது தாம்பத்தியத்தில் திருப்தி இருக்காது அல்லது தாம்பத்தியம் இல்லாமல் செய்துவிடும்.
ஜாதகர் மனைவி கூடவே..... இருந்தாலும் கூட மனைவியுடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ள பிடிக்கவில்லை என சொல்பவர்களும் உண்டு.
இவ்விரண்டு கிரகங்களில் ஏதேனும் ஒன்றுடன் ராகு அல்லது கேது சேரும்போது திருமணம் மிகவும் தாமதமாகவும் திருமணத்திற்கு பிறகு பிரிவினையை தருவதும் எளிதில் நடந்து விடும்.
இந்த அமைப்பு உள்ள ஆண் ஜாதகம் கணவன்-மனைவியும் அடிக்கடி பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலையில் உள்ளனர்... மேலும் இந்த அமைப்பில் தாம்பத்திய சுகம் குறைவாகவே இருக்கும் கணவன்-மனைவி ஈர்ப்பு குறைவாகவும் இருக்கும்.... அந்த இடத்தில் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு குருவின் பார்வை இருக்கும்பட்சத்தில் மனைவியை கடைசிவரை கைவிடமாட்டார்.
செவ்வாய் சுக்கிரன் சம சப்தம பார்வையில் ராகு கேது உடன் இருக்கும்பொழுது கணவன் மனைவிக்கிடையில் வழக்கு வம்புகள் கண்டிப்பாக இருக்கும் அல்லது நடைபெறும். திருமணமாகியும் ஒரு சில வருடங்கள் சேர்ந்து இருந்து..... அதன்பிறகு கோர்ட் கேஸ் வழக்கு என்ன என அலைந்து தீர்ப்பும் வராமல் 15 வருடங்களாக இருப்பவர்களும் உண்டு...
ஆறுதலான விஷயம் என்றால் இவர்களுக்கு கலைத்துறையில் யோகமுண்டு... சொகுசான வீடு வாகனம் யோகம் உண்டு.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்.... உச்ச நீச அடிப்படையில்....
*பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....*

செவ்வாய் சனி கிரகச் சேர்க்கை பலன்கள்

இவ்விரு கிரகங்களும் ஒன்று கொண்டு பகையானது நன்மையும் தீமையும் கலந்து பயன்களைத் தருகிறது...
சொல்லப்போனால் அதிகமாக கெடுபலன்களை தருவதாகவே ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.... ஏனெனில் கால புருஷ தத்துவப்படி சனிபகவான் மேஷத்திற்கு பாதகாதிபதியாகவும்... செவ்வாய் பகவான் அட்டமாதிபதியாகவும் வருகிறது... பாதகாதிபதியும் அட்டமாதிபதியும் சேர்ந்தால் என்ன ஆவது..... இந்த இரண்டு கிரகங்களும் பார்வை செய்யக் கூடிய இடம் கடுமையாக பாதிக்கப்படுகிறது பாவக ரீதியாகவும்.... உடல் உறுப்புகள் ரீதியாகவும்.....
லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் சனி இருந்தால்... கண்டிப்பாக முகத்திலோ அல்லது நாட்களிலோ சிறிய அளவிலாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூழ்நிலை வரும்
விருச்சிகத்தில் இந்த கிரக சேர்க்கை இருக்கும் பெண் ஜாதகிக்கு..... சிறுவயதிலேயே பற்களை இழந்து... செயற்கை பல் கட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது பெண்ணுக்கு ஒரு சில காலகட்டங்களில் கர்ப்பப்பை எடுக்கும் சூழ்நிலை வந்துவிடும்....
மேலும் சனி மந்த காரகன் என்று சொல்லப்படுவதுண்டு... செவ்வாய் தைரியம் வேகம் காரணம் சொல்லப்படுகிறது.... வேகமான ஒருவனும் மந்தமான ஒருவனும் சேர்ந்து என்ன செய்வார்கள்.... விவேகமற்ற வேகம் ... கெடு பலன்களைத்தானே.... தரும்...
இதில் இன்னொரு விஷயம் இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் செவ்வாய் திறமையான போலீஸ்.... சனி திறமையான திருடன்...
அப்ப இந்த கிரக சேர்க்கை ஜாதகருக்கு மிகப்பெரிய போராட்டமாக தான் இருக்கும் வெற்றி பெறுவது கடினம்....
அடுத்து.......
இந்த இரு கிரகங்களும் சேர்ந்து இருக்கும்போது தொழில்துறையில் யோகத்தை தருகிறது அதிலும் முக்கியமாக மெக்கானிக் துறை கட்டிடத் துறை டிரைவிங் துறை இவற்றில் சிறப்பான நிலைப்பாட்டை தருகிறது...
ஜாதகருக்கு பழமையான வீடு வாகன யோகத்தை தருகிறது. தன் வீட்டை சுத்தமாக வைத்திருக்க மாட்டார்... கண்டிப்பாக இவர்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கும்... வாங்கின வீடாக இருந்தாலும் சரி கட்டுன வீடாக இருந்தாலும் சரி வாஸ்துக்காக என்று செலவு செய்து இருப்பார்
கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறையேனும் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை நடைபெறும்.
பெண்களுக்கு கிரக சேர்க்கை இருக்கும் போது கணவருடன் சேர்ந்து பிசினஸ் செய்யும் பெண்களாக இருப்பர் இருவருக்கும் தொழில் சம்பந்தப்பட்ட சண்டைகள் நடந்து கொண்டே இருக்கும் அல்லது கணவன் செய்யும் தொழிலில்.... தொழில் செய்யும் விதம் மனைவிக்கு பிடிக்காமல் போகும்...
சனி ஒரு அலி கிரகம் என்பதால் கணவனால் தாம்பத்திய சுகம் திருப்தியாக இருக்காது...
ஜாதகரின் சகோதர உறவுகள் மந்தமாகவும்
அல்லது ஏதேனும் ஊனம் அல்லது குறை உள்ளவராகவும் இருப்பார்.... அதேநேரத்தில் ஜாதகர் சகோதரருக்கு மிகுந்த கஷ்டத்தை தரும் ஏன் சகோதர உறவுகள் மிகவும் பகையாக கூட வாய்ப்பு உண்டு..... பழைய அல்லது பூர்வீக சொத்துக்கள் யோகத்தையும் தரும்
இந்த கிரக சேர்க்கை இருக்கும் இடத்தைப் பொறுத்து..... எம் அனுபவத்தில் பலன்கள் மாறுபடுகிறது..... கன்னி ராசியில் இந்த சேர்க்கை இருக்கும் ஜாதகி திருமணமாகி ஒரே மாதத்தில் கணவன் தன்னுடன் ஒரு நாள் கூட சேரவில்லை என திரும்ப வந்து விடுகிறார்.... இந்த கிரக சேர்க்கை திருமண வாழ்க்கையை.... கடுமையாக பாதிக்கும் கணவனால் தாம்பத்திய சுகம் கிடைக்காது பெரும்பாலும் மறுமணத்தைத் தரும்... குறிப்பாக கிரக சேர்க்கை சனியின் வீடுகளான மகரம் கும்பத்தில் புதனின் வீடான கன்னியில் மிதுனத்தில் இருக்கும் போது திருமண வாழ்வை கடுமையாக பாதிக்கும் ஏனெனில் புதனும் சனியும் அலி கிரகம் என்பதால்....
ரிஷப ராசியில் இதே கிரக சேர்க்கை இருக்கும் ஜாதகர் படிக்காவிட்டாலும் மிகப்பெரிய அளவில் ஒர்க்ஷாப் வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பவரும் உண்டு....
சனி தொழில் காரகன் வேலைக்காரகன்.... என்பதால் செவ்வாயின் காரகத்துவ தொழில்களான மெக்கானிக் டிரைவர்... மற்றும் போக்குவரத்து நெருப்பு மின்சாரம் கட்டட பணி விவசாயம் போலீஸ் ராணுவம் டாக்டர்... இவற்றில் சிறப்பைத்தரும்.... சகோதர உறவுகளுடன் சேர்ந்து தொழில் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்தும்....
பொதுவாக ஜட காரகத்துவத்திற்கு நன்மையையும்.... உயிர் காரகத்துவத்திற்கு தீமையையும் ஏற்படுத்தும்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்.... உச்ச நீச அடிப்படையில்....
*பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

Tuesday, July 16, 2019

வக்கிர கதி பலன்

வக்கிர கதி பலன் உரைத்தல்
இந்த ஜாதகத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் வக்கிரகதியில் சனி துலாத்தில், குரு கன்னி ராசியில்
செவ்வாயும் சனியும் பரம எதிரிகள்
சனியும் குருவும் நல்ல நட்பு
சனி முன்னோக்கி செவ்வாயை நோக்கி செல்கிறது தொழிலில் தீவிரமாக எதிரியினால் பிரச்சனை ஏற்படுகிறது சனி பயந்து வக்கிர கதியாகி குருவிடம் நோக்கி செல்கிறது.
குருவின் உதவியால்
செவ்வாயின் பிரச்சனையிலிருந்து சனி தப்பியது.

Friday, October 3, 2014

சுக்கிரன் ஒருபார்வை ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனுக்கு 4ம் இடத்தோனும் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்ப்படும். ஜாதகர் ஆன்மீகத்தில், ஞானமர்கத்தில், சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பர். சித்த புருஷர்களாக இருப்பர்.
      சுக்கிரன் லக்கினத்திற்கு 2ம் இடத்திலாவது, 11 ம் இடத்திலாவது இருப்பது சிறப்பானதாகும். வீடு, வாகன வசதிகளை ஏற்ப்படுத்தும்.
      சுக்கிரன் 4ம் இடத்திலோ அல்லது 4ம் இடத்துக் காரனுடன் சேர்ந்து வலுத்துக் காணப்பட்டாலோ வீடு, வாகன யோகம், நல்ல புகழ் ஏற்படும்.
சுக்கிரனுடன் 2ம் இடத்ததிபதி மற்றும் 7ம் இடத்ததிபதி சம்பந்தம் ஏற்பட்டு வலுத்துக்காணப்பட்டால் நல்ல, குணமான, தீர்க்க ஆயுளுடன் கூடிய மனைவி வாய்ப்பாள்.
      சுக்கிரன் 12ம் இடத்துடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் நல்ல சயன சுகம் ஏற்படும்.
      சுக்கிரனுக்கு 10ம் இடத்துடன் அல்லது 10க்கதிபதியுடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் கலைத்துறையின் மூலம் ஜீவனம் ஏற்படும்.
      லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், நல்ல புகழ், நல்ல மனைவி, வீடு, வாகனம் எல்லாம் ஏற்படும்.
      சுக்கிரன் 5ல் இருந்தால் பாக்கியசாலி, மனைவி சொல்லைத்தட்டாதவர்.
      சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் தொழில்த்துறை படிப்பு ஏற்படும், பற்றற்ற வாழ்வை விரும்புபவர்களாக இருப்பர்.
      சந்திரனுக்கு 4 அல்லது 10ல் சுக்கிரன் இருந்தால் நிலம், வீடு, வாகனம் அமையும்.
      சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை எழுத்தார்வம் ஏற்படும், எழுத்தாளர்களாக இருப்பர்.
      சுக்கிரன் செவ்வாய்க்கு 4 அல்லது 7ல் இருந்தால் நிலம், வாகனம், வீடு அமையும்.
      சுக்கிரன் 7ல் தனித்து இருந்தால் திருமணம் தடை. ஆனால் சுக்கிரனும் அவர் நின்ற வீட்டுக்குடையவரும் சஷ்டாஷ்டகம் ஆனால் திருமணம் நடைபெறும்.
      சுக்கிரன் சந்திரனுடன் இனைந்து எந்த‌ இடத்தில் நின்றாலும் திருமணம் தடை. ஆனால் அதுவே  கடகம், ரிஷ‌பம், துலாத்தில் இருந்தாலும், 6, 8, 12ல் இருந்தாலும், அம்சத்தில் இருவரும் சஷ்டாஷ்டகம் பெற்றால் திருமணம் நடைபெறும்.
      துலா லக்கினத்திற்க்கு சுக்கிரன் ஆட்சி பெற்ற சனியுடன் கூடி 4ம் இடத்தில் இருந்தால் பொது ஜனத்தொடர்பு ஏற்படும். புகழ் பெறுவார்கள்.

Wednesday, October 9, 2013

காம்பயோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் 2ம் இடத்தில் குரு இருக்க, 4ம் இடத்தில் சுக்கிரன் இருக்க, 7ம் இடத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்க, லக்கினாதிபதி வலுப்பெற்றிருந்தால் அதற்கு "காம்பயோகம்" என்று பெயர். இந்த யோகம் இருக்கப்பெற்றவர்கள், வாகன வசதி, மாளிகை போல வீடு, அழகான அன்பான மனைவி, நல்ல குழந்தைகள், வாக்கு வன்மை போன்ற பலன்கள் உண்டாகும்.

Friday, July 5, 2013

களத்திர தோசம் சில‌ விதிகள் ஜோதிடக்குறிப்பு

      களத்திர தோசம் என்பது திருமண தாமதம், திருமணம் அமையாத நிலை, திருமணம் நடந்தும் பிரச்சனைகள், பிரிவு, மறுமணம் ஆகியவையே. அதற்கான சில விதிகள் இதோ...............

1) களத்திர காரகன் சுக்கிரன் (அ) களத்திராதிபதி கன்னியில் அமரக்கூடாது. அது களத்திரதோஷத்தை உண்டு பன்னும்.

2) எந்த ஒரு கிரகங்களாயிருந்தாலும் கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்தால் பலம் வாய்ந்தவர்களாகி விடுவார்கள். பொதுவாக 7ம் அதிபதியை விட 11ம் அதிபதி பலம் பெற்றால் மறுதார அமைப்பை ஏற்ப்படுத்தி விடும். 11ம் இடம் மறுதாரத்திற்க்குரிய இடம்.

3) பொதுவாக சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோசத்தை உண்டு பன்னுவார்கள். காலம் க்டந்த திருமணம், திருமணம் நடக்காத நிலை, திருமணம் நடந்தாலும் சற்று சன்னியாச வாழ்க்கை தான்.

4) களத்திர பாவத்திற்கு (அ) களத்திராதிபதிக்கு (அ) சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோசம் தான்.

5) 2ல் வக்கிரகிரகங்கள் இருந்தாலும், 2ம் இடத்தை வக்கிரகிரகங்கள் பார்த்தாலும், 2ம் அதிபதி பகை நீசம் பெற்று கெட்டிருந்தாலும் குடும்பம் அமைவதை தடை செய்யும், திருமணம் காலதாமதமாகும்.

6) சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை பல தாரத்தை உண்டு பண்ணும்.

7) பொதுவாக களத்திர காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி, சந்திரனுக்கு 7ம் இடத்ததிபதி, சுக்கிரனுக்கு 7ம் அதிபதி ஆகிய அனைவருக்கும் களத்திரத்தில் பங்கு உண்டு. அனைவரையுமே ஆராய வேண்டும்.

8) 7ம் இடத்திற்கு அம்சாதிபதி நின்ற அம்சாதிபதி அலி கிரகமானாலும் மறுமணத்திற்க்கு வித்திடும்.

Friday, June 7, 2013

தண்டனை! ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் ராசியிலோ அம்சத்திலோ சனியும் செவ்வாயும் பரிவர்த்தனையில் இருந்தாலோ அல்லது இருவரும் இனைந்து லக்கினத்தில் இருந்து கேந்திரத்தில் அமைந்து கெட்டிருந்தால் (இதில் வேறு கிரக இனைப்போ அல்லது வேறு கிரகங்களின் பார்வையோ, இந்த‌ இரு கிரகங்கள் ஆட்சி உச்சம் நீசம் பெறாமல் இருந்தால்)ஜாதகர் அரசின் கோபத்தால், அரச‌தண்டனை பெற்று மரணமடைவர் அல்லது கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டப்பட்டு மரணமடைவர் என்பது விதி

Thursday, June 6, 2013

பல ஆண்களுடன் தொடர்பு! ஜோதிடக்குறிப்பு

      ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆகியிருந்து    அந்த அமைப்பை எந்த‌ ஒரு கிரகமும் சேராமலும் அல்லது எந்த மற்ற கிரகத்தாலும் பார்க்கப்படமலும் இருந்தால் அந்த ஜாதகி பல ஆண்களுடன் ரகசியமாக தொடர்பு வைத்திருப்பாள். அந்த ஜாதகத்தில் ஏழாமிடத்தில் சந்திரன் இருந்தால் அவள் கணவனும் அவ்வாரே! அவளும் கணவனுக்கு தெரிந்தே அந்தத் தொடர்புகள் கொண்டிருப்பாள்.

Saturday, October 20, 2012

செவ்வாயின் நலம் தரும் நிலை ஜோதிடக்குறிப்பு

      செவ்வாய் கேந்திர ஆதிபத்யம் அடைந்து, 6ம் இடத்தில் தனித்து இருந்தாலும் அல்லது சனி, சூரியன் ஆகியோரோடு சம்பந்தம் பெற்றாலும் அல்லது கேந்திர ஆதிபத்யம் பெற்ற செவ்வாய், சனி சூரியனோடு சம்பந்தம் பெற்று கோணத்தில் அமர்ந்தாலும் அந்த செவ்வாயால் நன்மையே.

Monday, March 12, 2012

நன்மை செய்யாத அமைப்புகள்-7 ஜோதிடக்குறிப்பு


ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் தசை நடைபெறும் போது அதற்கு 12ல் இருக்கும் கிரகத்தின் புத்தியில் நன்மைகள் தாரா...
1) தவறு செய்பவர்களை கண்டிக்க தண்டிக்க முடியாத(கோபத்தை அடக்க வேண்டிய) நிலை
2) ஒரு நிலையில்லாத நிமிடத்திற்க்கு நிமிடம் மாறும் உணர்வு நிலை
3) அமைதியற்ற தண்மை
4) மனநிலை பிறள்தல்
5) வேலை செய்யும் இடத்தில் நம்முடைய வேகத்தை மதிக்காத நிலை,
அதனால் திடீரென்று வேகத்தை வெளிக்காட்டி, அதனால் தொல்லை, நிம்மதியற்ற நிலை அகியவற்றை சந்திக்க நேரலாம்.

Friday, October 28, 2011

திரிலோச்சண யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் இந்த மூன்றும் ஒன்றுக்கு ஒன்று திரிகோணம் பெற்று அமைந்தால் அது திரிலோச்சண யோகம் எனப்படும்.
      இந்த யோகம் உடையவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும், ஆயுள் நீளம் உடையவர்களாகவும், நல்ல வசதி படைத்தவர்களாகவும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்குவர்.
      இந்த மூன்று கிரகம் மட்டுமல்லாது ஏதேனும் மூன்று கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று திரிகோணம் பெற்று அமைந்தாலே அந்த அமைப்பு விசேசமானதே! இவ்வாறு அமைதவர்கள் நல்ல அமைதியான‌ வாழ்க்கையை பெறுவார்கள். மேலும் இவர்களுக்கு எந்த சக்தியாலும் தடங்கல்கள் விளைவிக்கமுடியாது

Sunday, September 4, 2011

காதல் திருமணம் ஜோதிடக்குறிப்பு

      7ம் இடத்திற்க்கு ராகு, செவ்வாய் சம்பந்தம் ஏதோ ஒரு வகையில் ஏற்பட்டால் காதல் திருமணம் நடக்கிறது. அந்த ராகு, செவ்வாய் சம்பந்தத்துடன், 7ல் சந்திரன் இருந்து குரு பார்வை ஏற்பட்டால் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் சிறப்பாக நடக்கிறது

Tuesday, August 9, 2011

தலைக்கன‌ம் ஜோதிடக்குறிப்பு

      ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் குரு சேர்க்கையால் ஏற்படும் யோகத்திற்க்கு பெயர் குருமங்கள யோகம். இந்த யோகம் உடையவர்களுக்கு பதவி, புகழ்,பெரும் செல்வம் கிடைக்கும். ஆனால் இவர்களிடம் மிகுந்த கர்வம் மற்றும் பிறரை மதியாமை போன்ற‌ குணங்கள் இருக்கும்

Thursday, July 28, 2011

கடனாளி யார்? ஜோதிடக்குறிப்பு



      பொதுவாக லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன்பட்டிருப்பார். உதாரணமாக மகர லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 12ஆம் வீட்டில் சனியும், 2வது வீட்டில் செவ்வாயும் இருந்தது. இதன் காரணமாக அவர் வாழ்க்கை முழுவதும் கடன்பட்டவராகவே இருந்தார்.

      இவ்விச‌யத்தில் லக்னத்தை மட்டுமல்லாது லக்னாதிபதி, 6ஆம் அதிபதி ஆகியோரின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது லக்கினாதிபதி பலமிலந்து 6க்குடையவன் பலமானால் கடன் தொல்லை அதிகமாகவே இருக்கும். உதாரணமாக மீன லக்னத்திற்கு அதிபதி குரு; 6ஆம் அதிபதி சூரியன். இதில் குரு நீச்சமாகி, 6ஆம் அதிபதி சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை கடன்காரராக இருப்பார்.

      அதே போல் பலம் பெற்ற ஆறாமதிபதி தசை கடன்களை ஏற்ப்படுத்தும், அதே போல் ஆறில் அமர்ந்த கிரகங்களின் தசையில், ஆறாமதிபதியோடு இனைந்த கிரகங்களின் தசையில் கடன்கள் உண்டாகும். அதோடு ஆறாமதிபனின் நட்சத்திரக்காலில் அமர்ந்த கிரகத்தின் தசையிலும் கடன்கள் உண்டாகும்

Tuesday, July 26, 2011

12ம் இடம் ஜோதிட‌க்குறிப்பு


      12ஆம் இடம் நித்திரைக்கான இடம். 1, 2 என்று 12 வீடுகள் இருக்கிறது. 1 லக்னம், உடல், தோற்றம் இதெல்லாம் அடங்கும். 2ஆம் இடம் வாஸ்து, குடும்பம் என்று சொல்கிறோம். இதுபோல 12ஆம் இடம் சயனத்தானம். இந்த சயனத்தானம் நன்றாக இருக்க வேண்டும். 
      சயனத் தானத்தில் ராகு, கேது, சனி, செவ்வாய் இந்த மாதிரியான கிரகங்கள் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் இருக்காது. கோழித் தூக்கம் என்று சொல்வார்களே அந்த மாதிரியான அமைப்புகள் இருக்கும். இதை ஜாதக அமைப்பை வைத்து கண்டுபிடிக்கலாம். 
      இவர்கள் சரியாக உறங்குவார்களா, நிம்மதியா உறங்க முடியாதா? என்பதையெல்லாம் கண்டுபிடிக்கலாம். அதனால், இந்த 12ஆம் இடமான சயனத்தானம் நன்றாக இருக்க வேண்டும். அப்படி நன்றாக இருந்தால் அவர்கள் ஆழ்ந்த நித்திரை கொள்வார்களா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். 
      பொதுவாக சந்திரன் உடலிற்குரிய கிரகம். இந்த சந்திரன் சனி, ராகு மாதிரியான கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் நிம்மதியான தூக்கம் வரவே வராது. சந்திரன் சனி, ராகுவுடன் சேர்ந்திருந்தால் சிறு வயதில் ஏற்பட்ட இழப்புகள், அவமானங்கள், ஏமாற்றங்கள் இதை நடுநடுவில் நினைத்து நினைத்து தூக்கம் கெட்டுப்போய் பரிதவிப்பார்கள். இந்த மாதிரியான அமைப்புகளும் உண்டு. 
      இதேபோல பார்த்தீர்களென்றால், 12இல் செவ்வாய், 6க்குரிய கிரகங்கள் இருந்தாலும் ஏதேனும் கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தைக் கெடுக்கும். 12இல் கெட்ட கிரகங்கள் அமர்ந்தால் தரையில் படுத்து உறங்குதல், சரியான படுக்கை இல்லாமல் போவது, காற்றோட்டம் இல்லாத அறையில் படுத்து உறங்குதல், உட்கார்ந்த நிலையில் தூங்குதல் இந்த மாதியான பாதிப்புகளும் உண்டாகும். 
      அதனால் இந்த சயனத்தானமான 12ஆம் இடம் மிகவும் முக்கியமான இடம். இந்த 12ஆம் இடத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால்(குரு,சுக்கிரன்ம, புதன்), “படுத்தால் தூக்கம் வருதுங்க, ஒன்றும் பிரச்சனை இல்லைங்க, நிறைய பேர் கோடி கோடியாய் வைத்துக்கொண்டு தூக்கம் இல்லாம தவிக்கிறார்கள். அந்தப் பிரச்சனை எனக்கு இல்லைங்க” என்பார்கள்.

Friday, July 22, 2011

லக்கினப்படி கோடீஸ்வர யோகம் 2


7) துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனியும் சுக்கிரனும் சிறந்து விளங்கினாலே கோடீஸ்வரர் ஆக முடியும்.
8) விருச்சிக‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு செவ்வாய் மற்றும் சூரிய சந்திரர்கள் பிராகாசிப்பதைப் பொறுத்து கோடீஸ்வர யோகம் அமையும். குரு பலம் மற்றும் குரு பார்வை அதில் விசேட சிறப்பைத்தரும்
9) தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 2ம் இடம், 4ம் இடம், 10ம் இடம் மற்றும் 11ம் இடம் ஆகியவற்றில் இரு இடங்களாவது குரு பார்வை பெறுவது மற்றும் சூரியன் புதன் குரு பார்வை பெற்று சிற‌ப்பான இடங்களில் இருந்தால் கோடீஸ்வரர் ஆக முடியும்.
10) மகர‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் ஆகியோர் சிறந்து விளங்கினால் கோடீஸ்வரர் யோகம் அமையும்.
11) கும்ப‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி, சுக்கிரன், செவ்வாய் சிறந்து விளங்குவதை பொறுத்து கோடீஸ்வரர் யோகம் ஏற்படும்.
12) மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு கேந்திரங்கள் அல்லாத இடங்களில் நல்ல விதமாக அமைந்து, நல்ல இடங்களைப் பார்ப்பது மற்றும் செவ்வாய் பலத்தினால் கோடீஸ்வர யோகம் அமையும்.

Friday, July 15, 2011

டுபாகூர் பேர்வழி, கோழை ஜோதிடக்குறிப்பு

      ஒருவருடைய ஜாதகத்தில் புதனும் செவ்வாயும் சேர்ந்து இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ ஜாதகர் டுபாகூர் பேர்வழியாக இருப்பார், பொய்யராக இருப்பார், பொய்யை நம்பும் படியாக கூறுபவராக இருப்பார். அவர் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்காது.
      ஒருவருடைய ஜாதகத்தில் பலமற்ற செவ்வாய் லக்கினத்தைப் பார்த்தால் ஜாதகர் பயந்தாங்கொள்ளியாக, கோழையாக‌ இருப்பார்.