Showing posts with label ஆட்சி. Show all posts
Showing posts with label ஆட்சி. Show all posts

Thursday, May 30, 2013

மஹாராஜ யோகம் ஜோதிடக்குறிப்பு

      1ம் இடத்டோனும் 5ம் இடத்தோனும் ப‌ரிவர்தனை ஆகியிருந்து அல்லது 1ம் இடத்டோனும் 5ம் இடத்தோனும் லக்கினத்திலோ, 5ம் இடத்திலோ இருந்து ஆல்லது 1ம் இடத்டோனும் 5ம் இடத்தோனும் ஆட்சி, உச்சம் ராசியிலோ அல்லது நவம்சத்திலோ பெற்றிருந்து, அந்த ஜாதகத்திற்கு நன்மை செய்யும் கிரகத்தால் பார்க்கப்பட்டால் அது மஹாராஜ யோகம் எனப்படும்.
      மஹாராஜ யோகம் பெற்றவ்ர்கள், பெயரோடும், புகழோடும், மிகவும் மகிழ்ச்சிகரமாக வாழ்வர்.

Thursday, January 19, 2012

விமலா யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் 12ம் இடத்ததிபதி 12ல் ஆட்சியாக அமைந்தால், அந்த அமைப்பிற்க்கு விமலா யோகம் எனப்படும்.
      விமலா யோகம் அமையப்பெற்ற ஜாதகர், மிக நல்லவராகவும், சிக்கனமானவராகவும், அமைதியானவராகவும், ஆனந்தமானவராகவும், சுதந்திரமானவராகவும் இருப்பார். விமலா என்றால் சுத்தம் என்று பொருள்.

Wednesday, November 30, 2011

கலாநிதி யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு இரண்டாமிடத்திலோ, 5ம் இடத்திலோ அல்லது 9ம் இடத்திலோ இருந்து அதனுடன் சுக்கிரனும் புதனும் இனைந்திருந்தாலோ அல்லது அப்படி அமைந்த குருவை சுக்கிரனும் புதனும் பார்த்தாலோ அதற்கு கலாநிதி யோகம் என்று பெயர். இது மூன்று சுபகிரகங்களால் ஏற்படும் மிகச்சிறந்த ராஜ யோகமாகும். இதில் குரு, புதன், சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றால் சிறப்பு இன்னும் கூடுதல்.....
      ஜாதகத்தில் கலாநிதி யோகம் அமையப் பெற்றவர்கள், நீண்ட ஆயுளுடன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில், மரியாதைக்குறியவர்களாக, மிகநல்லவர்களாக, எல்லாவித சுக செளக்கியங்களை அனுபவிப்பவர்களாக, நோயற்றவர்களாக இருப்பர்.

Tuesday, June 21, 2011

11ம் இடத்ததிபதி

லாப ஸ்தானத்தில் லாபாதிபதி ஆட்சி பலத்துடன் விளங்கினால் அவர் பூர்வபுண்ணிய ஸ்தானத்தினை பார்ப்பார். தொழிலில் மிதமான லாபம், சகோதரர்கள் ஆதரவு, அமைதியான வாழ்க்கை ஜாதகருக்கு அமையும். வாழ்வில் படிப்படியான முன்னேற்றத்தினை அடைவார். தெய்வீக வழிபாடுகளை ஜாதகர் சிறப்பாக செய்வார். குடும்ப கெளரவம் மேண்மையாக இருக்கும்.

Sunday, June 19, 2011

சூரியன் தரும் சுகங்கள்


சூரியன் ஆட்சி, உச்ச பலத்துடன் சுபர் பார்வை சம்பந்தம்  பெற்று நின்றால் ஜாதகருக்கு கிடைக்கும் சுகங்களாவன:‍
1. ஜாதகருக்கு அரசு/அர‌சியல் தொடர்புகளால் லாபமுண்டு.
2. வி.ஐ.பிக்களின் தொடர்பு சுலபமாக கிடைக்கும், ஜாதகரும் வி.ஐ.பியாக திகழ‌முடியும்.
3. ஜாதகர் ஒழுங்கு நன்னடத்தை காரணமாக, பாரட்டுகளையும், நல்ல நல்ல வாய்ப்புகளையும் பெறமுடியும்.
4. ஜாதகர் தனது கெளரவம், ஆளுமைத்திறன் இவற்றை உணர்ந்து சமுதாயத்தில் தன்னை எல்லோரும் நல்ல விதமாக பேசுமாறு நடந்து கொள்வார்.
5. எதிரிக்கு அஞ்சமாட்டார், தனது வழியில் குறிக்கிடுபவர்களை பந்தாடுவார். வீரன், சூரன் என பெயர் வாங்குவார்.
6. ஆண்மையும் வீரமும் தரும் சூரியன், தனது வாழ்நாளில் எளியவர்களைக் காப்பாற்றுவார், தான தருமங்கள் செய்வார். ஆலய பணி, தெய்வகாரியங்களுக்கு உதவுவது என அனைத்து நல்ல காரியங்களும் தன்னால் இயன்றவரை செய்வார்.
சூரியன் ஜாதகத்தில் பகை, நீசம், கெட்டவர்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால்:
1. ஜாதகர் இம்சை அரசனாக மாறி மற்றவர்களை துன்புறுத்தி அதில் இன்பம் கான்பார்.
2. தனது சுயநலத்திற்க்காக உலக பாவங்கள், பாதகங்கள் அனைத்தையும் செய்வார்.
3. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி யோக்கியனைப் போல் நடமாடும் மாகாநடிகனாக விளங்குவார்.