Showing posts with label குரு. Show all posts
Showing posts with label குரு. Show all posts

Friday, May 29, 2020

செவ்வாய் குரு கிரக சேர்க்கை

ஜாதகர் தைரியமானவராகவும் சுறுசுறுப்பானவராகவும் எல்லாவற்றிலும் முன்னணியில் இருப்பவராகவும் கோவில் கட்டுபவராகவும் ஏதேனும் இயக்கங்களில் பதவி உடையவராகவும் இருப்பார்....
இவர்கள் கோவில் கட்டட திருப்பணிகளுக்கு.... விழாக்கால திருப்பணிகளுக்கு.... வசூலுக்கு சென்றால் உடன் வசூலாகும்... கோவில் பணிகளை முன்னின்று எடுத்துச் செல்வார் அந்த அளவுக்கு யோகம் மற்றும் புண்ணியம் உண்டு....
மேலும் வாடகை வருமானம் வரும் யோகம் உள்ளவராக இருப்பார்.
மிக சிறப்பான வீடு வாகனம் உடையவராகவும் இருப்பார்.
விளையாட்டுத் துறையில் ஈடுபாடு உடையவராக இருப்பார் வெற்றிகளையும் தருபவராகவும் கொள்பவராகவும் கொடுப்பவராகவும் இருப்பார்...
எமக்கு தெரிந்த இந்த கிரக அமைப்பு உள்ள ஜாதகர் 13 வயதிலேயே விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வாங்கி உள்ளார்.
மேலும் நேர்மையான முறையில் ஆசிரமம் அமைத்து ஆன்மீகப் பணிகள் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் இந்த கிரக அமைப்பு உண்டு
ஜாதகரின் சகோதரர்கள் சமுதாயத்தில்செல்வத்துடனும் செல்வாக்கான மற்றும் மதிப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்..
பெண்கள் ஜாதகம் ஆயின்..... ஜாதகிக்கு ஒழுக்கமான கௌரவமான செல்வம் செல்வாக்கான கணவன் அமைவார்....
மேலும் இந்த கிரக அமைப்பு ஜாதகியின் கணவருக்கு அரசு பணி அதிலும் ஆசிரியப் பணி புரிபவராக கூட இருப்பார்...
கணவரின் பெயரில் சொந்த வீடு வாகனம் அமையும் அரசு உயர் பணியில் இருப்பவர்கள் கூட இருப்பார்கள்..
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்.... உச்ச நீச அடிப்படையில்....
*பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....*

Thursday, July 25, 2019

சுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா ? மற்றுமொரு பார்வை

சுக்கிர தசை உனக்கு ஆரம்பிக்கப் போகிறது என்றாலே மயங்காதவர்கள் யாரும் இல்லை. வாழ்வில் உச்ச நிலைக்கு சென்று கொண்டிருக்கும் ஒருவரை அல்லது மேல் நிலைக்குச் சென்று விட்ட ஒருவரை “அவனுக்கென்னப்பா சுக்கிர தசை” என்று சொல்வது உலகியல் வழக்கு.
ஆனால் நடைமுறையில் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் சுக்கிரனின் தசை ஆரம்பித்ததும் தன் நிலையிலிருந்து சரிவடைவதும், தசையின் முடிவில் கீழான நிலைக்கு வருவதையும் பார்க்கிறோம். எனவே சுக்கிரனின் தசை நடக்கும் ஒருவர் கொடுத்து வைத்தவர் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை சரிதானா என்பதைப் பார்ப்போம்.
முதலில் சுக்கிர தசைக்கு மட்டும் இந்த எதிர்பார்ப்பு ஏன் என்று பார்க்கப் போவோமேயானால், வேத ஜோதிடத்தில் ஒரு மனிதனின் ஆயுளை நூற்றியிருபது வருடங்களாகப் பிரித்து, அவற்றை சமமற்ற ஒன்பது பங்குகளாக அமைத்து, மனித வாழ்வின் நன்மை, தீமைகளை பகுதி பகுதியாகக் கணித்துச் சொல்லும் தசா, புக்தி வருடங்கள் என்ற அமைப்பை நமக்கு அருளிய பராசர மகரிஷி அவர்கள் சுக்கிரனுக்கு மட்டும் இருபது வருடங்களை ஒதுக்கியிருக்கிறார்.
ஒரு மனிதனின் வாழ்வில் சுக்கிரதசை வருமானால் அது இருபது வருடங்களுக்கு அவனை ஆளுமை செய்யும் என்பதோடு, ஒன்பது கிரக தசைகளிலும் அதிகமான வருடங்களைக் கொண்டது சுக்கிரன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மனிதன், எண்பது வயது வரை உயிரோடு இருப்பான் எனத் தோராயமாகக் கொண்டால் அவனது வாழ்நாளின் கால் பகுதியை சுக்கிரன் எடுத்துக் கொள்வார். விபரமறியாப் பருவங்களான குழந்தை மற்றும் பள்ளி பருவத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கைப் பகுதியை சுக்கிரன் ஆக்கிரமித்துக் கொள்வார் என்பதால்தான், ஒருவருக்கு சுக்கிர தசை வரப் போகிறது எனும் போது அதைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிறது.
சுக்கிரன் ஒருவரே நல்ல மனைவி, அருமையான வீடு, உயர்தரமான வாகனம், உல்லாச வாழ்க்கை, எங்கும் எதிலும் சொகுசாக இருத்தல், பெண்கள் உள்ளிட்ட அனைத்து விதமான இன்பம் ஆகியவற்றைத் தருபவர் என்பதாலும் சுக்கிர தசை வரப் போகிறது என்றவுடன் இதயத் துடிப்பு அதிகமாகிறது.
ஜோதிடம் எனும் தேவ ரகசியம் கட்டுரைகளின் ஆரம்பத்திலேயே ஒரு முக்கிய விஷயத்தை எளிமையாக விளக்கியிருந்தேன்.
நமது ஞானிகள் வானில் ஒரு ஒழுங்கான நியதிக்குக் கட்டுப்பட்டு சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்களை மனித வடிவமாக்கி, அவர்களுக்கு கணவன்-மனைவி, தந்தை-மகன் போன்ற உறவுமுறைகளையும் கற்பித்ததற்கு மறைமுகமாக விளக்கங்கள் இருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரைகளின் ஆரம்ப அத்தியாயத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.
ஒன்பது கிரகங்களுக்குள்ளும் ஞானிகள் நட்பு, பகை உறவுகளை நமக்கு விளக்கிச் சொன்னது, அந்தக் கிரகங்களின் தசைகள் ஒருவருக்கு வரும்போது, எது நன்மை செய்யும் எது தீமையைத் தரும் என்பதை எளிமையாகப் புரிந்து கொள்வதற்காகத்தான்.
அதன்படி கிரகங்களுக்குள் ஜென்ம விரோதிகளாக உருவகப்படுத்தப்பட்ட குரு, சுக்கிரன் இருவரும் அடுத்தவரின் லக்னங்களுக்கு நன்மைகளைச் செய்ய மாட்டார்கள். அப்படி அவர்கள் நன்மைகளைத் தர வேண்டுமெனில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்க வேண்டும்.
அதாவது அசுர குரு எனப்படும் சுக்கிரனின் ரிஷப, துலாம் லக்னங்களுக்கு தேவகுருவான வியாழன் நன்மைகளைத் தரமாட்டார். அதேபோல தனக்கு எதிர்த் தன்மை உடையவரான குருவின் தனுசு, மீன லக்னங்களுக்கு சுக்கிரன் நல்லது செய்யமாட்டார்.
அதிலும் ஒரு ஜாதகருக்கு எதிரிகளை உருவாக்கித் தரும் மறைவு ஸ்தானமான ஆறாம் பாவத்தின் அதிபதிகளாக இவர்கள் இருவரும் அமைகையில் தங்களது தசையில் கெடுபலன்களை அதிகமாகச் செய்வார்கள். இந்நிலை தனுசு லக்னத்திற்கு ஆறாம் பாவ அதிபதியாக சுக்கிரன் வரும்போதும், துலாம் லக்னத்திற்கு ஆறாம் பாவ அதிபதியாக குரு வரும்போதும் நடக்கும்.
துலாம் லக்னத்திற்கு குரு உச்சம் பெறும் நிலையில் ஆறாம் பாவத்தைப் பார்த்து வலுப்படுத்தி, வேறு வகையில் பலவீனமடையாவிட்டால் அந்த ஜாதகருக்கு ஆறாம் பாவத்தின் கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு, சிறை போன்ற கெடுபலன்களை தனது தசையில் வலிமையுடன் செய்வார்.
அதேபோல சுக்கிரன் தனுசு லக்னத்திற்கு ஆறாமிடத்தில் ஆட்சி பெற்றிருந்தாலோ, வேறுவகைகளில் ஆறாமிடத்தோடு தொடர்பு கொண்டு அந்த பாவத்தை பலப்படுத்தி இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு கெடுபலன்களையே அதிகமாகத்  தருவார். எனவே சுக்கிர தசை மற்றும் புக்தி நன்மைகளைத் தரும் என்பது எல்லா ஜாதகங்களுக்கும் பொருந்தாது.
அதேநேரத்தில் பாவத்பாவ விதிகளின்படி ஒரு ஸ்தானாதிபதி அந்த பாவத்திற்கு ஆறு, எட்டில் மறைந்தால் கெடுதல்களைச் செய்ய மாட்டார். இதுபோன்ற நிலையில் தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் ஆறாம் பாவத்திற்கு ஆறாமிடமான பதினொன்றாம் வீட்டில் இருந்தாலும், துலாம் லக்னத்திற்கு குரு பதினொன்றாம் வீட்டில் இருந்தாலும் கெடுதல்களைச் செய்ய மாட்டார்கள்.
ஆறாமிடத்தை அடுத்து அஷ்டமம் எனும் எட்டாமிடத்திற்கு சுக்கிரன் அதிபதியாகும் நிலை மீன லக்னத்திற்கு ஏற்படும். சுக்கிரன் மீன லக்னத்திற்கு வலுவாக இருக்கும் நிலையில் அவரது தசையில் பெரும்பாலும் ஜாதகனை வெளிநாடு, வெளிமாநிலங்களில் அலைந்து திரிந்து பொருள் தேட வைப்பார்.
சிலநிலைகளில் பெண்கள் விஷயத்தில் அவமானம் வழக்கு போன்ற விஷயங்களையும் செய்வார். அதுபோலவே ரிஷபத்திற்கு எட்டிற்கு அதிபதியாகும் குருவும் தனித்து வலுப்பெறும் நிலையில் கெடுதல்களையும், வெளிநாடு வெளிமாநில அமைப்புகளையும் தருவார்.
ஆனால் எட்டாமிடத்தை விட ஆறாமிடமே அதிகமான அசுபத் தன்மை வாய்ந்தது என்பதாலும், ஒரு ஜாதகனின் எதிரியையும், அவனுக்கு வேண்டாதவைகளையும் குறிக்கும் பாவம் ஆறாமிடம் என்பதாலும், தனுசு லக்னத்திற்கு லக்னாதிபதி குரு வலுவிழந்து, சுக்கிரன் ஆறில் ஆட்சி பெறும் போதோ, அல்லது வேறு வகைகளில் வலுப் பெற்று இருக்கும்போதோ சுக்கிர தசை வந்தால் கொடிய பலன்கள் நடக்கும்.
இதுபோன்ற நிலையில் சுக்கிர தசை ஜாதகரை மிகக் கீழான ஒரு நிலைக்கு கொண்டு சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இதுபோன்ற ஜாதக அமைப்பில் கேது தசையில் வலிமையான அதிகார அமைப்பில் இருந்து, பொருள் சம்பாதித்து, சுக்கிர தசையில் தவறு செய்து பிடிபட்டு, அதிகாரத்தையும், அந்தஸ்தையும் இழந்து வழக்கு, சிறை என்று அலைந்து திரியும் ஜாதகங்களை என்னால் உதாரணம் காட்ட முடியும்.
மேலும் சுக்கிரன், பெண்கள், காமம், உல்லாசம், ஆடம்பரம், கேளிக்கை இவற்றிற்கு அதிபதி என்பதால் சுக்கிர தசையில் பெண்களின் மூலமாக கெடுதல்களும், அவமானங்களும், தோல்விகளும் இருக்கும். இப்படிப்பட்ட நிலை துலாம் லக்னத்திற்கு சுக்கிரன் வலுவிழந்து குரு ஆறாமிடத்தில் ஆட்சி பெற்றாலும் நடக்கும்.
எந்த ஒரு லக்னத்திற்குமே லக்னாதிபதி வலுவிழந்திருக்கும் நிலையில்  ஆறுக்குடையவன் பலம் பெற்றிருக்கக் கூடாது. அப்படி ஒருநிலையில் நாம் வலுவிழந்து நம் எதிரி பலத்தோடு இருக்கிறார் என்பதுதான் பொருள்.
இதுபோன்ற ஒரு நிலை ஜாதகத்தில் அமைந்தால் அவரது முன்னேற்றத்திற்குத் தடை இருக்கும் என்பது ஒரு சூட்சுமமான, ஞானிகளால் வெளிப்படையாகச் சொல்லப்படாத விதி. இதையே அடிக்கடி கட்டுரைகளிலும் கேள்வி-பதில்களிலும் எழுதி வருகிறேன்.
மேலும் குரு, சுக்கிரனுக்கு எதிர்த் தன்மையுடையவர் மற்றும் ஆகாதவர்  என்றாலும் நமது மூல நூல்களில் சுக்கிரனின் அறிவிக்கப்பட்ட எதிரியாகச் சொல்லப்படுவது சூரியனும், சந்திரனும்தான்.
எனவே இவர்கள் இருவரின் கடக, சிம்ம லக்னங்களுக்கும் சுக்கிரன் வலிமையாகத் தனியாக இருக்கும் அமைப்பில் முழுமையாக நன்மைகளைத் தர மாட்டார். இதுபோன்ற அமைப்பில் தனது வீடு, வாகனம், பெண் சுகம் போன்ற காரகத்துவங்களைக் கொடுத்து தனது ஆதிபத்தியத்தைக் கெடுப்பார்.
மற்றபடி சுக்கிரனின் நட்பு லக்னங்களான மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு சுக்கிர தசை அபாரமான நன்மைகளைச் செய்யும். மேற்கண்ட லக்னங்களுக்கு சுக்கிரன் வலுவிழந்த நிலையில் இருந்தாலும் சுக்கிர தசை பெரிய அளவில் தீமைகளைச் செய்யாது.
ஒரு முக்கியக் கருத்தாக எந்த ஒரு தசையிலும் இரு ஆதிபத்தியமுள்ள கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகியோர் இரண்டு விதமான முரண்பட்ட பலன்களை செய்வார்கள் என்பதால் ஒரு மகா தசை முழுக்க முழுக்க நன்மைகளையோ, முழுவதும் தீமைகளையோ செய்து விடுவது இல்லை.
நல்ல ஆதிபத்தியத்தின்படி முதலில் நன்மைகளைச் செய்யும் ஒரு கிரகம் அடுத்து தீய ஆதிபத்தியத்தின்படி தசையின் பிற்பகுதியில் கெடுபலன்களையோ, சாதகமற்ற பலன்களையோ செய்யும்.
ஒரு தசையின் முதற் பகுதியில் ஒரு கிரகம் தீமைகளைச் செய்யுமாயின், அடித்த கையே அணைக்கும் என்பதன்படி அதே கிரகத்தின் பிற்பகுதி தசை முதலில் தந்த தீமைகளால் நடந்த விளைவுகளை நீக்கி நன்மைகளைச் செய்து விட்டுப் போகும். இதுவே சிருஷ்டியின் ரகசியம்.
சுக்கிர தசைக்கு இந்த அமைப்பு சரிபாதியாக அமையும்போது, சுக்கிரன் நன்மைகளை செய்யும் நிலையில் இருந்தால், தனது தசையின் முதல் பத்து வருடங்கள்  தனது நல்ல காரகத்துவங்களை ஜாதகருக்கு குறைவின்றித் தருவார்.
ஜாதகனின் வயதைப் பொருத்து அவருக்கு திருமணத்தின் மூலம் நல்ல மனைவியையும், அருமையான சொகுசான வீடு, உயர்தர வாகனம், பெண் குழந்தைகள், எந்த ஒரு நிலையிலும் சொகுசாக, சுகமாக வாழும் நிலை, பெண்களால் நன்மை போன்ற அமைப்புகளைச் செய்வார்.
அதேபோல இளம் பருவத்தில் வரும் சுக்கிர தசை மற்றும் புக்திகள் ஒரு ஜாதகருக்கு காதல் அனுபவங்களை வலுவாகத் தரும். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து வரும் இருவரை திடீரென ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி காதல் எனும் அமைப்பில் நுழைய வைப்பவர் சுக்கிரன்தான்.
காதலின் அடிப்படையே காமம்தான் என்பதால் சுக்கிரன் வலுப் பெற்றவர்கள் காதல் என்ற பெயரில் காமத்தைப் பெறுவதிலேயே குறியாக இருப்பார்கள்.
கலைத்துறையில் ஜெயிப்பவர் யார்?
கலைகளின் அதிபதி சுக்கிரன்தான். இசை, நடனம், பாட்டு, நடிப்பு போன்ற அனைத்திற்கும் அடிப்படை இவர்தான் என்பதால் ஜாதகத்தில் இவர் எந்த பாவத்தோடு தொடர்பு கொள்கிறாரோ அந்த பாவத்திற்கு சம்பந்தப்பட்ட கலைத்துறையில் ஜாதகரை ஈடுபடுத்துவார்.
உதாரணமாக சுக்கிரன் மூன்றாமிடத்தோடு சம்பந்தப்பட்டால் இசையிலும், லக்னம் மற்றும் ஐந்து பத்தாமிடங்களோடு தொடர்பு கொண்டால் நடனம், நடிப்பிலும், சினிமா எடுப்பதிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதிலும் ஒருவருக்கு ஆர்வம் இருக்கும். மேற்கண்ட துறைகளில் ஜாதகர் புகழோடும் இருப்பார்.
ஒருவருக்கு சுக்கிர தசையோ, சுக்கிர புக்தியோ நடைபெற ஆரம்பித்து விட்டாலே அவருக்கு சினிமா மற்றும் மீடியாத் துறைகளில் ஆர்வம் வந்து விடும். குறிப்பாக சிம்ம லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுக்கிரன் ஜீவனாதிபதி ஆவதால் இந்த லக்னத்தவர்களே அதிகமாக கலைத்துறையில் முயற்சிப்பவராக இருப்பார்கள்.
ஜாதகத்தில் சுக்கிரனின் வலுவைப் பொறுத்து இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், கேமிரா இயக்குனர், லைட்பாய், டிராலி தள்ளுபவர், ஸ்டுடியோ வாட்ச்மேன் என அவரவரின் ஜாதக வலுக்கேற்ப ஒருவர் கலைத்துறையில் இருப்பார்.
சுக்கிரன் சுப வலுவில்லாமல் அந்த ஜாதகருக்கு தீமை தரும் அமைப்பில் இருந்தால் பயனற்ற வழிகளில் கலைத்துறையில் வாய்ப்புத் தேட வைத்து வாய்ப்பும் கிடைக்காமல், வேறு வாழ்க்கை வழிகளையும் காட்டாமல் இளமைப் பருவம்  முழுவதையும் தொலைக்க வைத்து பின்னால் வருந்தவும் வைப்பார்.

Tuesday, July 16, 2019

மூச்சு

ஜாதகத்தில் குரு+கேது சேர்க்கை உள்ளவர்களால் அதிக நேரம் மூச்சை அடக்கியிருக்க முடியும். கேதுவின் அம்சமான மீன்கள் நாம் சுவாசிப்பது போல் காற்றை நேரடியாக மூக்கு வழியாக சுவாசிப்பதில்லை. ஆனால் வாய் வழியே நீரை உள்ளிழுத்து நீரில் உள்ள பிராண வாயுவை நேரடியாக ரத்தத்தில் சேர்த்துக்கொள்கிறது. 
ஜாதகத்தில் குரு+ராகு சேர்க்கை உள்ளவர்களால் அதிக நேரம் மூச்சை அடக்கமுடியாது. ராகுவின் அம்சமான பன்றிகள் வேக வேகமாக மூச்சை விடுபவை , அது போல் குரு+ராகு சேர்க்கை உள்ளவர்கள் வேக வேகமாக மூச்சை விடுவார்கள். பன்றி போல் மூச்சு விட்டால் அது ஆயுளைக்குறைக்கும். 
மீன் மூச்சு விடுவது குரு+கேது 
பன்றி மூச்சு விடுவது குரு+ராகு
ஆமை மூச்சு விடுவது குரு+சனி

வக்கிர கதி பலன்

வக்கிர கதி பலன் உரைத்தல்
இந்த ஜாதகத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் வக்கிரகதியில் சனி துலாத்தில், குரு கன்னி ராசியில்
செவ்வாயும் சனியும் பரம எதிரிகள்
சனியும் குருவும் நல்ல நட்பு
சனி முன்னோக்கி செவ்வாயை நோக்கி செல்கிறது தொழிலில் தீவிரமாக எதிரியினால் பிரச்சனை ஏற்படுகிறது சனி பயந்து வக்கிர கதியாகி குருவிடம் நோக்கி செல்கிறது.
குருவின் உதவியால்
செவ்வாயின் பிரச்சனையிலிருந்து சனி தப்பியது.

பூச்சியினால் அவதி

கோச்சார சனி கோசார கேது ஜாதகத்தில் உள்ள ராகு, குருவை சந்திக்கும் நேரம் அந்த அந்த காலகட்டத்தில் ஜாதகர் ஏதாவது ஒரு பூச்சியினால் தினமும் தூங்காமல் அவதிப்படுவார்.. 
குறிப்பு: 
சனி- இருட்டு,
ராகு- கடித்தல், 
கேது - பூச்சிகள் ( insects)
குரு - Native...

பல‌ பெண்களுடன் தொடர்பு

குரு ,சுக்கிரன் ஏதாவது ஒரு கட்டத்தில் இருந்து, குருவுக்கும் சுக்கிரனுக்கும் அடுத்த கட்டத்தில் அல்லது அதற்கு முன் கட்டத்தில் புதன் அமர்ந்து இருந்தாள், அந்த ஜாதகருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.... இது பொதுப்பலன் மட்டுமே. உங்களுடைய ஜாதகத்தை பார்த்து விட்டு கூறவும். 

Monday, August 4, 2014

சிராக யோகம் ஜோதிடக்குறிப்பு

சிராக யோகம் என்றால் என்ன?
புதனும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் கேந்திரம் பெறுவதோடு, வியாழனும் அவ்விரு கிரகங்களுக்கும் கேந்திரம் பெற்று நின்றால் அது சிராக யோகம் எனப்படும். இது ஒரு அரிய யோகம் எப்போதாவது ஏற்ப்படுவது. இதன் பலன்கள்...
1. உயர் கல்வி உண்டாகும்
2. நல்ல செல்வம் உண்டாகும்
3. வாகனம் முதலான வசதிகள் உண்டாகும்
4. அசையா சொத்துக்கள் சேரும்
5. நல்ல மனைவி, புத்திரர்கள் ஏற்ப்படுவார்கள்
6. கெளரவமான உயர்பதவி, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்
அதாவது சிறப்பான ராஜ யோக பலன்களை இந்த யோகம் தரும்
சிராக யோகம் குறித்து நாபச யோகங்கள் குறித்த விளக்கங்களில் பராசுரர் எடுத்துக்கூறியுள்ளார். மால யோகம் எனவும் இந்த யோகம் அழைக்கப்படுகிறது.

Saturday, October 19, 2013

கேந்திராதிபத்ய தோஷம் ஒரு பார்வை ஜோதிடக்குறிப்பு

      முதலில் கேந்திராதிபத்ய தோஷம் என்றால் என்ன? என்று பார்ப்போம்! அதாவது நைசர்க்கிக சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகியவை லக்கின கேந்திரங்களுக்கு(4,7,10க்கு) அதிபதியாகி லக்கினத்திற்க்கு மற்ற கேந்திரங்களில் அமருமேயானால், அந்த கிரகம் கேந்திராதிபத்ய தோஷம் அடைந்து, அந்த பாவத்தையும் அதைச்சேர்ந்த கிரகங்களின் ஆதிபத்தியத்தையும் பாழ்படுத்திவிடும். இதற்கான விதிமுறைகளைக் இனி காண்போம்.....
விதி எண் 1. 
      குரு, புதன், சுக்கிரன் அமரும் கேந்திரங்கள் அதன் மற்றொரு ஆட்சி உச்ச வீடாக அமைந்தால் அந்த கிரகங்கள் கேந்திராதிபத்ய தோஷம் அடையாது. யோகமாக மாறி நல்ல பலன்களையே தரும்.
விதி எண் 2.
      கேந்திராதிபத்ய தோஷம் இருவகை (1) லக்கின கேந்திரம் நைசர்க்கிக சுப கிரகங்களின் கேந்திரங்களாக வந்தால் சுப கேந்திராதிபத்ய தோஷம், (2)லக்கின கேந்திரம் நைசர்க்கிக அசுப கிரகங்களின் கேந்திரங்களாக வந்தால் அசுப கேந்திராதிபத்ய தோஷம் எனப்படும்
விதி எண் 3. 
      சுப கிரக கேந்திராதிபத்ய தோஷம் ஏற்ப்படும் போது அந்த ஆதிபத்யம் பாதிப்புக்குள்ளாகும். அதில் நின்று கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கிய கிரகத்தின் காரகம் கெடாது.
விதி எண் 4. 
      அசுப கிரக கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படும் போது அந்த ஆதிபத்யம் பாதிப்புக்குள்ளாகும். அதில் நின்று கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கிய கிரகத்தின் காரகமும் கெடும்.
விதி எண் 5. 
       கேந்திராதிபத்ய தோஷம் அடைந்த பாவத்தின் கிரகம் லக்கினத்திற்கு திரிகோணத்தில் (5,9ல்) நின்றால் அந்த பாவம் கேந்திராதிபத்ய தோஷத்தை அடையாது.
விதி எண் 6. 
       கேந்திராதிபத்ய தோஷம் அடைந்த பாவத்தின் கிரகம் அந்த பாவத்திற்கு திரிகோணத்தில் (5,9ல்) நின்றால் அந்த பாவம் கேந்திராதிபத்ய தோஷத் தன்மை கூடுதலாகவே அளிக்கும்.
விதி எண் 7. 
       பொதுவாக சுப கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாக வந்தால் மட்டுமே அக்கிரகங்கள் கேந்திராதிபத்ய தோஷம் அடைந்து தீமை செய்வார்கள்,ஆனால் அவர்களே மற்றொரு ஆதிபத்யமாக ஒரு திரிகோண ஸ்தானத்திற்கும் அதிபதியாக வந்தால் அக்கிரகங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் ஏற்ப்படாது
..................................தொடரும்

Thursday, October 10, 2013

சுகபா யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் குருவும் சந்திரனும் சேர்ந்து இருக்க, 11ம் இடத்தில் 2ம் இடத்ததிபதியும் லக்கினாதிபதியும் சேர்ந்து இருந்து, மேலும் இந்த சேர்க்கைக்கு சுபர் சேர்க்கை மற்றும் பார்வை இருந்தால், அதற்கு "சுகபா யோகம்" ஆகும். இந்த யோகம் பெற்ற ஜாதகர், பிறந்ததிலிருந்து எந்த துன்பமும் இல்லாமல்,கோடீஸ்வரர்களின் வீட்டில் பிறந்து சகல செளக்கியங்களையும் அனுபவிப்பார்கள். கவலையில்லாதவர்களாக‌, புகழுடையவர்களாக இருப்பர்.

Wednesday, October 9, 2013

காம்பயோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் 2ம் இடத்தில் குரு இருக்க, 4ம் இடத்தில் சுக்கிரன் இருக்க, 7ம் இடத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்க, லக்கினாதிபதி வலுப்பெற்றிருந்தால் அதற்கு "காம்பயோகம்" என்று பெயர். இந்த யோகம் இருக்கப்பெற்றவர்கள், வாகன வசதி, மாளிகை போல வீடு, அழகான அன்பான மனைவி, நல்ல குழந்தைகள், வாக்கு வன்மை போன்ற பலன்கள் உண்டாகும்.

Tuesday, October 8, 2013

மதன யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் லக்கினம் விருச்சிகமாக அமைந்து அதில் குரு மற்றும் சுக்கிரன் அமர, 11ம் இடத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் அது மதன யோகம் எனப்படும். இந்த யோகத்தை உடைய ஆண்கள் பெண்கள் விரும்பும்படியாக பேசுவர், பெண்களால் விரும்பப்படுவர்!

Wednesday, July 3, 2013

கலைத்துறையில் பிரகாசிக்க ஜோதிடக்குறிப்பு

      கலைத்துறையில் பிரகாசிக்க, கவிஞ‌ர்களாக, இசைக்கலைஞர்களாக, எழுத்தாளர்களாக, நடிகர், நடிகையாக, கதாசிரியர்களாக, பிரகாசிக்க புதன், சுக்கிரன், சந்திரன், குருவின் பலமே பெரிதும் உதவுகின்றது.
1) ப‌லமுள்ள சுக்கிரனை, சந்திரன் பார்த்தால், தமது திறமையை எழுத்து கவிதைகள் மூலம் பேரும் புகழும் பெற்று பிரகாசிப்பர்
2) சுக்கிரன் புதன் சேர்ந்து இரண்டில் இருந்து குரு பார்த்தால் கவிஞர்களாக, எழுத்தாளர்களாக திகழ்வர்.
3) 1ம் இடம் 5ம் இடம் கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்தால் நல்ல கலைஞர்களாவர்.
4) சுக்கிரன் லக்கினத்தில் இருந்து அத‌ற்கு கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ சந்திரன் இருந்தாலும் அல்லது சந்திரன் லக்கினத்தில் இருந்து அத‌ற்கு கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ சுக்கிர‌ன் இருந்தாலும் கலைத்துறையில் பிரகசிப்பர்.
5) லக்கினத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று, 1ம் இடத்திலோ அல்லது 2ம் இடத்திலோ புதன் இருந்து, 10ம் இடத்தை குரு பார்த்தால் கலையுலகில் சிறப்புடன் பிரகாசிப்பர்.
6)சூரியன் புதன் சந்திரன் செவ்வாய் சேர்க்கை நல்ல எழுத்தாற்றலைத் தருகிறது.
7) கேது 1, 5, 9 ல் நவம்சத்தில் இருந்தால் புத்தக எழுத்தாளர்.
8) குரு சந்திரன் இனைந்து 5 அல்லது 9ம் இடத்தில் இருந்தாலும், சந்திரன் 5 அல்லது 9ம் இடத்தில் இருந்து குருவின் பார்வை பெற்றிருந்தால் கதை, கட்டுரை எழுதுபவர்.
9) சந்திரன் இருக்கும் இடத்திற்க்கு 10ல் புதன் சனி சேர்க்கை பெற்று கெடாமல் இருந்தால், கவிதை, கதை, கட்டுரை எழுதுபவர்.
10) புதனும் குருவும் இனைந்து 1, 2, 5 அல்லது 9ல் பழுதுராமல் இருந்தால் சிறந்த கவிஞர், கதாசிரியராவார்.

Sunday, June 9, 2013

பிரம்ம யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் குரு 9ம் அதிபதிக்கு கேந்திரத்திலும், சுக்கிரன் 11ம் அதிபதிக்கு கேந்திரத்திலும், புதன் லக்கினாதிபதிக்கோ அல்லது 10ம் அதிபதிக்கோ கேந்திரத்தில் அமர்ந்தால் அது பிரம்ம யோகம் எனப்படும். இந்த யோகத்தின் பலன்கள் என்பது அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற முழுமையான எண்ணம், அதற்கான பொருள், ஆரோக்கியம், புகழ் ஆகியன நன்றாக அமையும். இந்த ஜாதகர் நன்றாக கல்வி கற்றவராகவும், கற்றவர்களிடம் மதிப்பு பெற்ற‌வர்களாகவும், நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவும் மிக நல்லவராகவும், நல்லது செய்வதற்காக வளைந்து கொடுப்பவராகவும் இருப்பர் என்கிறது ஜோதிடவிதி.

      குறிப்பாக இந்த அமைப்பில் மூன்று நல்ல கிரகங்களும் ஈடுபட்டுள்ளன என்பதுடன் அனைத்து லக்கினகாரர்களுக்கும் இது அமையாது, காரணம் மேஷ லக்கின காரர்களுக்கு குருவே 9ம் அதிபதியாக வருவதால் 9ம் அதிபதிக்கு குரு கேந்திரம் என்பது சாத்தியமில்லை.
      கடக லக்கின‌ காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிரனே 9 மற்றும் 11ம் அதிபதியாக வருவதால் இங்கு முதல் இரண்டு விதிகள் அடிபட்டுப் போகின்றன‌
      அதேபோல் கன்னியா லக்கின காரர்களுக்கு புதனே 10ம் அதிபதியாக வருவதாலும், தனுர் லக்கினகரர்களுக்கு புதன் மற்றும் சுக்கிரனே 10 மற்றும் 11ம் அதிபதியாக வருவதாலும் மேலே சொல்லப்பட்ட விதிகள் சாத்தியமில்லை.
      ஆனால் தனுர் லக்கினகாரர்களுக்கு 10ம் அதிபதிக்கு பதிலாக விதியில் சொல்லப்பட்டபடி லக்கினாதிபதியை கணக்கில் கொள்ளலாம்.
      யோக நிலையின் விதிப்படி கடகம், கன்னி மற்றும் மேஷ லக்கினகாரர்களை தவிர மற்ற அனைவருக்கும் முழுவீச்சில் பலன் தரும்.
      மூன்று விதிகளும் ஒன்றாக அமைந்தால் தான் யோகம் முழுதாக பயன் கொடுக்கும் மாறக எதோ ஒன்றிரண்டு விதிகள் ஒத்து போனால் முழு யோகம் இல்லாவிட்டாலும், மிக குறைந்த அளவில் பலன் கொடுக்கலாம்.

Tuesday, May 21, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 3 ஜோதிடக்குறிப்பு


      காலசர்ப்ப யோகமானது, விஷ கடி, திடீர் ஆபத்து, வாழ்க்கையே புரட்டி போடுமளவுக்கு திடீர் மாற்றம், எல்லா விதமாகவும் அவமானப்படுதல் ஆகியவற்றைத் தரலாம்.
      காலசர்ப்ப யோகம், ஜாதகருக்கு, வேலையின்மை, திருமணம் நடக்காமை, வீடற்ற நிலமை, பரதேசி போல் ஒரு வாழ்க்கை, இந்த ஒரு கிரக அமைப்பே தரலாம்.
      இந்த யோகமானது,வாழ்க்கையில் ஒருமுறை மிகமுன்னேற்றமான பாதையில் பயணிக்கவும் (பொருள் வாழ்க்கையில் இதை எற்படுத்துபவர் ராகு), பின் ஒரு முறை பொருள் ப்யணத்தில் தடங்கல் ஏற்ப்பட்டு, அசிங்கப்பட்டு ஆன்மீக வாழ்க்கை அல்லது ஏதுமற்ற ஒரு குழப்பமான் நிலைக்கு தள்ளப்படுதல் (இதை ஏற்படுத்துபவர் கேது). அதாவது பற்று மற்றும் பற்றற்ற நிலையை ஏற்படுத்தும்.
      இதில் ராகுவானவர் பயங்கர தன்னம்பிக்கையை கொடுத்து வாழ்க்கையில் உயர்ந்த பாதைக்கு(பொருள் வாழ்க்கைக்கு) பயணிக்கச் செய்துவிடுவார், இதில் ராகுவனவர் லக்கினம் முதல் ஆறு இடங்களில் அமைய வேண்டும்.
      காலசர்ப்ப யோகத்தில் லக்கினம் முதல் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்கிடையில் அமைய வேண்டும். இதில் லக்கினம் அல்லது ஒரு கிரகம் வெளியே இருந்தாலும் அது காலசர்ப்ப யோகத்தில் வராது.
      அந்த மாதிரி அமைப்பை(ஒரு கிரகமோ அல்லது லக்கினமோ வெளியே அமையப்பெற்றவர்கள்) உடையவர்கள், மிகசிறந்த ஒரு இனத்துக்கோ அல்லது நாட்டுக்கோ தலைவனாகக் கூட ஆகிவிடுவர். அதுவும் உலகப் புகழ் பெற்ற மிக நல்ல தலைவராக இருப்பர்(முக்கியமாக சுக்கிரனோ அல்லது குருவோ ராகு கேதுவை விட்டு வெளியே இருந்தால்).
      பல உலகப்புகழ் பெற்ற நல்ல தலைவர்களின் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்களுக்கு இடையில் அடைபட்டு, ஒரு சில கிரகங்கள் ராகு கேது அமைந்திருக்கும் அதே இடத்தில் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ அதே டிகிரியில் அமையப்பெற்று இருப்பதைக்காணலாம்..........
                                                                                         தொடரும்

Tuesday, September 4, 2012

கொடுமனம் கொண்டவர்கள்? ஜோதிடக்குறிப்பு


      ராகு இருந்த இடத்தில் இருந்து 5ல் மற்றும் 9ல் சனி, குரு இருந்தால் ஜாதகர் சண்டாளன் ஆவார்.
      ராகு இருந்த இடத்துக்கு பத்தாம் அதிபதி நீச்சமடைந்து ராகுவுடன் இருப்பின், அந்த ஜாதகர் செய்யும் பாவச்செயல்கள் பெரும் பிரசித்தி அடையும்.
      சனி லக்கினாதிபதியாகி 6ல் அமர, 6ம் அதிபதி 10ல் அமர்ந்து அவருக்கு இருபுறமும் பாபர்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகம் அடைந்தால். அந்த ஜாதகர்கள் தமக்கு யார் நன்மை செய்திருந்தாலும் பதிலுக்கு அவர்களுக்கு தீமையே செய்வர்.
      லக்கினாதிபதியும் 5ம் அதிபதியும் நீசமடைந்திருந்தாலும் அல்லது லக்கினத்திலும் ஐந்திலும் நீசமடைந்த கிரகங்கள் அமர்ந்திருந்தாலும் அவர்கள் கொடுமையான சித்தம் கொண்டவர்கள்.
      லக்கினாதிபதி லக்கினத்தில் அமர, அவருடன் 5, 6, 10, 11ம் அதிபதிகள் இனைந்திருந்தால், ஜாதகர் தினமும் பலரை ஏமாற்றுபவராக இருப்பார்.
      லக்கினத்திற்க்கு 2ம் வீட்டில் சனியோ, சுக்கிரனோ அமர்ந்து இருந்தாலும் அல்லது 2ம் வீட்டைப் பார்த்தாலும், 5,10ம் அதிபதிகள் பகை நீசமடைந்து 2ல் இருந்தாலும், இத்தகையோர் பேசிப் பேசியே பிறரை ஏமாற்றுபவர்களாக இருப்பர்

Thursday, December 22, 2011

கோ-யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு தனது மூலதிரிகோணத்திலும், 2ம் அதிபதி அந்த குருவுடன் இணைந்தும் அமைந்து, லக்கினாதிபதி உச்சம் பெற்று நின்றால் அந்த அமைப்பிற்க்கு கோ-யோகம் என்று பெயர்.
      இந்த அமைப்பை பெற்ற‌வர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராவார். அவரிடம் எக்கச்சக்கமான செல்வங்கள் குவிந்திருக்கும், அவர் அனைவராலும் மதிக்கப்படுவார். 

Sunday, December 18, 2011

மகுட யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு லக்கினத்திற்க்கு 9ம் அதிபதி இருக்கும் இடத்தில் இருந்து 9ல் அமர்ந்து, அதே குரு இருக்கும் இடத்தில் இருந்து 9ல் ஒரு நல்ல கிரகம் அமைந்து, சனி லக்கினத்திற்க்கு 10ல் அமர்ந்தால் இந்த யோகத்திற்க்கு மகுட யோகம் என்று பெயர்
      இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் மனித சமுதாயத்திற்க்கு மிகவும் சக்திவாய்ந்த‌ தலைவனாக இருப்பார்கள். கெட்டவைகளை அழித்து நியாயத்தை நிலை நாட்டுவார்கள்.

Wednesday, November 30, 2011

கலாநிதி யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு இரண்டாமிடத்திலோ, 5ம் இடத்திலோ அல்லது 9ம் இடத்திலோ இருந்து அதனுடன் சுக்கிரனும் புதனும் இனைந்திருந்தாலோ அல்லது அப்படி அமைந்த குருவை சுக்கிரனும் புதனும் பார்த்தாலோ அதற்கு கலாநிதி யோகம் என்று பெயர். இது மூன்று சுபகிரகங்களால் ஏற்படும் மிகச்சிறந்த ராஜ யோகமாகும். இதில் குரு, புதன், சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றால் சிறப்பு இன்னும் கூடுதல்.....
      ஜாதகத்தில் கலாநிதி யோகம் அமையப் பெற்றவர்கள், நீண்ட ஆயுளுடன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில், மரியாதைக்குறியவர்களாக, மிகநல்லவர்களாக, எல்லாவித சுக செளக்கியங்களை அனுபவிப்பவர்களாக, நோயற்றவர்களாக இருப்பர்.

Wednesday, November 16, 2011

பேரியோகம் ஜோதிடக்குறிப்பு


1) லக்கினாதிபதியும் குருவும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
2) லக்கினாதிபதியும் சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
3) லக்கினாதிபதியும், குருவும், சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
அதற்க்கு பெயர் பேரியோகம் எனப்படும்.
      இந்த அமைப்பு உடையவர்கள் நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், நோயற்ற வாழ்வு உடையவர்களாகவும், பல வழிகளில் வருமான‌ம் உடையவர்களாகவும், மகிழ்ச்சியாகவும், சகல வசதிகளுடைய வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருப்பர். அவர்களுக்கு நல்ல குடும்பம், குழந்தைகள் அமையும், புண்ணிய ஆத்மாவாக இருப்பர், அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருப்பர். அறிவியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஆர்வமுடயவர்களாக இருப்பர்.

Thursday, November 10, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-4 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குருவின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 6ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
1) கடவுள் நம்பிக்கை குறையும்
2) ஆன்மீக எண்ணமே தவறு என்ற முடிவுக்கு வரலாம்
3) தான் என்கிற ஆகங்காரம் தலை தூக்கும்
4) மத நம்பிக்கை குறையும்