Showing posts with label சந்திரன். Show all posts
Showing posts with label சந்திரன். Show all posts

Friday, May 29, 2020

திருமண யோகத்திற்கு

1. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும்.
அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு
கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். இந்த வலு
என்னும் வார்த்தைக்குப் பலமுறை விளக்கம் கொடுத்துள்ளேன்.
அது உங்களுக்குத் தெரிந்ததுதான்.
2. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில்
வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ
அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும்.
அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
3.ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம்
என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
4.அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது
நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது
சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!
5.ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால்
திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
6.குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள்
ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது
- ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக்
கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில்
நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
7.தே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம்
அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்
திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
8.அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி,
ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses)
- அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
9.இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக
வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா?
அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை
இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு துபாய் போன்ற தேசங்களில்
போய் உட்கார்ந்து கொள்வது எப்படி நல்ல குடும்ப வாழ்க்கையாகும்?
கைபிடித்த மனனவியைவிட பொருள் ஈட்டல் முக்கியமா?
10. செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது
சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
11. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,
ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து
கொள்கிறவன் பாக்கியசாலி!.
12. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண்
அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
13. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய
பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை
மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
14. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில்
புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
15. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று
பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு
கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள்
யோகமான பெண்தான்.
16. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து,
அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின்
மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள்.
இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள்.
அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
17. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும்.
லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள்
யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால்,
அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
18. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு,
லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய
மூவரும் பலமாக இருக்க வேண்டும்.
19. பெண்களுக்குப் பாகியஸ்தானமும், ஆண்களுக்கு லக்கினமும்
சிறப்பாக இருப்பது முக்கியம்
20. இங்கே கூறப்படும் விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் பொதுவானதுதான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:
1. லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து
இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று
இருப்பதும் கூடாது.
2. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத்
திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர்
உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
3. சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய
கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5. குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன்
பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6. சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8. ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9. எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10. ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11. ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில்
செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12. எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில்
அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில்
அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல!

சந்திரன் செவ்வாய் கிரக சேர்க்கை

சந்திரன் செவ்வாய்... கிரக சேர்க்கை.... பார்வை அல்லது பரிவர்த்தனை.....
ஜாதகர் மற்றும் ஜாதகரின் அம்மா கோபம் உடையவராகவும்.... தைரியம் உடையவராகவும்.... எல்லாவற்றிலும் முன்னணியில் இருப்பவர்களாகவும்... இருப்பர்.
ஜாதகர் சுறுசுறுப்பானவராகவும்... விவசாயம் செய்பவராகவும் இருக்க வாய்ப்பு உண்டு.
ஜாதகருக்கு வீடு வாகனம் மற்றும் மிஷனரிஸ் பற்றிய அறிவு இயல்பாகவே இருக்கும்.
இந்த கிரக சேர்க்கை அமைப்பு சிறந்த மெக்கானிக் ஆகவும்.... வாஸ்து நிபுணராகவும்.... நீரோட்டம் பார்ப்பவராகவும்... இருப்பார்கள்.
அதிலும் ஆட்சி பெற்ற செவ்வாய் ஆட்சிபெற்ற சந்திரனை பார்வை செய்யும் பொழுது சிறந்த மெக்கானிக்காக இருப்பவர்களும் உண்டு
சுக்கிரன் வீட்டில் இந்த சேர்க்கை இருக்கும் போது வாஸ்து நிபுணராகவும் நீரோட்டம் பார்ப்பவர் ஆகவும் இருப்பார்கள்.
முக்கியமாக...... செவ்வாய் வீட்டில் சந்திரன் நீசம் ஆவதாலும்....
சந்திரன் வீட்டில் செவ்வாய் நீசம் ஆவதாலும்.....
இக்கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு சில தீய பலன்களும் தந்துவிடுகிறது அல்லது நடந்துவிடுகிறது.
கிரக சேர்க்கை உள்ளவர்கள் வாழ்வில் முன்பாதியில் மிகுந்த ஆரோக்கியம் உடையவர்களாகவும் நல்ல உடல் கட்டமைப்பு உள்ளவர்களாகவும் இருப்பர்
இவர்கள் பின்பாதி வாழ்க்கையில் உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து தினமும் மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதால்......
இந்த அமைப்பு உள்ளவர்கள் 40 வயதிற்கு மேல் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும்..... யோகா... தியானம்... நடைபயிற்சி... மேற்கொள்வது மிகவும் உத்தமம்.
கிரக சேர்க்கையில் ஆண்கள் பெண்கள் இருந்தாலும்.... சகோதர தோஷத்தை தருகிறது இவர்கள் சகோதர உறவுகளுடன் சேர்ந்து வாழும்போது இருவர் வாழ்க்கையுமே குறை உள்ளதாக மாறிவிடுகிறது.
ஆட்சி பெற்ற செவ்வாய் வீட்டில்..... சந்திரனும் சேர்ந்து இருக்கும் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர உறவுகள் ஒன்றாக வாழ்ந்த போது.... இருவருக்குமே குழந்தை பாக்கியம் சிறக்கவில்லை.... தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தபோது தான் இருவருக்குமே குழந்தை பாக்கியம் கிடைத்தது.
மேலும் ஒரே வீட்டில் வசித்து அல்லது ஒரே இடத்தில் தொழில் செய்து என இருந்தால் யாராவது ஒருவருடைய வாழ்க்கை.... குறை உள்ளதாக இருக்கும்.
ஏனெனில் சந்திரன் என்றால் சலனம்.... சகோதரரும் சலனம் உடையவராக இருப்பார்.
சந்திரன் வளர்பிறை தேய்பிறை இது போல் சகோதரரும் வளர்வதும் தேய்வதும் ஆக வாழ்க்கையில் இருப்பார் அதனால் சுப பிரிவாக வேலை விசயமாக வெளிமாநிலம் அல்லது வெளிநாடு என அடிக்கடி பிரிந்து செல்வதும், இருப்பதும் நல்லது.
ஆட்சி பெற்ற செவ்வாய்.... சுக்கிரனின் வீட்டில் இருக்கும் உச்ச சந்திரனை பார்வையிடும் பொழுது... ""பாலியல்ரீதியான"" தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது
பெண்கள் ஜாதகம் எனில்..... ஜாதகி கணவன் மீது மிகவும் பிரியமாக இருப்பார்... மேலும் கிரகசேர்க்கை... ""கணவருக்கு"" இருதார அமைப்பை தந்துவிடுகிறது
ஜாதகருக்கும்..... தன் மனைவி அல்லாத மூத்த வயதுடைய இன்னொரு பெண்ணிடம் பழக்கம் இருக்க வாய்ப்பு உண்டு.
எனக்குத்தெரிந்து கன்னியில் செவ்வாய் சந்திரன் இருக்கும் கிரக சேர்க்கை உள்ள பெண் ஜாதகத்தில்.... ஜாதகிக்கு... நிச்சயம் ஆன பின்புதான் மணமகன் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் வைத்துள்ளது தெரியவந்தது....
மேலும் இந்த கிரகச்சேர்க்கை பெண்.... இரண்டாம் தாரமாக இருந்தால் சிறக்கும் என சொல்லப்படுகிறது.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

சந்திரன் புதன் சேர்க்கை

சந்திரன் புதன் சேர்க்கை அல்லது பார்வை.....
ஜாதகர் சிறந்த அறிவாளியாகவும்.... உள்ளுணர்வு மிக்கவராகவும்.... சமாதான பிரியராகவும்... நகைச்சுவையாளராகவும்.... இருப்பர்
ஜாதகர் சிறுவயதிலேயே பெற்றோரை பிரிந்து வாழும் நிலை ஏற்படும்... இவருக்கும் பெற்றோருக்கும் ஆகாது... பெற்றோர் உடன் ஒத்துப் போக மாட்டார். குறிப்பாக இவருக்கும் அம்மாவுக்கும் ஆகாது. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் யாரையேனும் ஒருவரை காதலித்து கொண்டு இருப்பார்.
""ஒருதலைக் காதல்"" இருக்க வாய்ப்பு உண்டு. காதல் சக்சஸ் கிடையாது . அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடிக்காது. முக்கியமா அம்மாவுக்குப் பிடிக்காது.
பிரிவு உண்டு.... ஏன்னா ஒருத்தரோட ஆதரவு இல்லாமல் போகிறது... போகும்.
உதாரணமா மீனத்தில் இந்த சேர்க்கை உள்ள ஜாதகர் படிப்பில் முதல் மாணவராக திகழ்கிறார்... பத்தாம் வகுப்புக்கு பிறகு ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார்... இவரின் காதல் விவகாரத்தால் பெற்றோர் இருவருக்கும் சண்டை நடந்த வண்ணமே இருக்கிறது.....
மேலும் இந்த இரண்டு கிரகங்களும் நட்சத்திர சார பரிவர்த்தனை பெற்றால் வயது வித்தியாச காதல் ஏற்படும்.
அடுத்து ரிஷபத்தில் இந்த சேர்க்கை இருக்கும் சாதகர் நல்ல படிக்கக்கூடிய மாணவராக நல்ல நினைவாற்றல் உள்ளவராக இருப்பார்... இவரும் தாயாரும் ஓரிடத்திலும் தந்தை ஒரு இடத்திலும் வசிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு.
State Rank வாங்கிய பெரும்பாலானோருக்கு கிரக சேர்க்கை இருக்கும்.
உயர்ந்த இடத்தில் இருந்தாலும்..... தன் தகுதிக்கு மீறி கீழிறங்கி வந்து அனைவருடனும்... மக்களுடனும் பழகுவார்.
பொருத்தமே இல்லாத நண்பர்களால் நட்பு ஏற்பட்டு பெயரை கெடுத்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் கூட ஏற்படும்... இந்த சேர்க்கையின் பலவீனமே இதுதான்
மேலும் எமக்கு தெரிந்து ஒரு ஜாதகர் கல்வியில் முதல் மாணவராக இருந்தார் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிப் படிப்பு வரை ஹாஸ்டலில் தங்கி படித்தார்.
இந்தச் சேர்க்கை உள்ளவருக்கு... யூகிக்கும் திறன் சிறப்பாக இருக்கும் நல்ல பேச்சுத் திறன் உள்ளவராக இருப்பார்.
அடுத்து முக்கியமாக மீனத்தில் இந்த சேர்க்கை இருக்கும் போது ஜாதக காதலித்த பெண்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாததாக இருந்தது இருக்கும் வாய்ப்பு உண்டு..
மேலும் மனம் //செயல் நீசத்தில் கெட்ட விஷயங்களில் வேகம் அதிகம் இருக்கும்.
இந்த கிரக சேர்க்கையோடு ராகு அல்லது கேது இருக்கும்பொழுது... ஜாதகருக்கு மனநிலை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.... அதனால் ட்ரீட்மெண்ட் எடுக்கும் நிலை கூட வரலாம்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

சந்திரன் சுக்கிரன் கிரக சேர்க்கை

ஜாதகத்தில்.... சந்திரன் சுக்கிரன் கிரக சேர்க்கை.... பார்வை பலன் என்ன என்று பார்ப்போமா நண்பர்களே.....
இவ்விரண்டும் பகை கிரகங்கள்.... வீட்டில் மாமியார் மருமகள் சண்டை நடந்து கொண்டே இருக்கும்...
மாமியார் மருமகள் சண்டையில் சுக்கிரன் பலம் பெற்றால் மருமகளின் கை ஓங்கி இருக்கும்.... சந்திரன் பலம் பெற்றால் மாமியார் கை ஓங்கியிருக்கும்...
மேலும் ஜாதகத்தில் இரண்டும் பார்வையோ சேர்க்கையோ இல்லாமல் சம பலத்தில் இருக்கும் போது இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லும் குணம் வந்துவிடும்...
எதிர்பாலினர்களுக்காக அதிகமாக செலவுகள் செய்வார்.... பொழுதுபோக்குக்கும் சிற்றின்பத்திற்கும்...அதிகமாக செலவு செய்வார்கள்.
ஜாதகர் ஆடம்பரப் பிரியராக இருப்பார்...
எப்பொழுதும் எதிர்பாலினரை பற்றிய சிந்தனையில் இருப்பார்...
சொகுசான வாழ்க்கை வாழ்பவராகவும் இருப்பார்....
கலைத்துறையில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார்...
வரவுக்கு மீறி செலவு செய்பவராக இருப்பார்...
மனைவியின் மன உளைச்சலுக்கு ஆளாவார்...
இவர்கள் திருமணத்துக்கு பின் தனிக்குடித்தனமாக வாழ்வது சிறப்பு...
கிரக சேர்க்கை பெண்ணுக்கு இருந்தால் அவர் மற்ற பெண்களிடம் முன்கோபம் ஆக இருப்பார்கள்.... கணவன் குடும்பத்தாருடனும் .... தன் குடும்பத்தாருடனும் ஒற்றுமை இல்லாமல் தனியாக தனிக்குடித்தனமாக இருக்கும் அமைப்பும்வ பெண்களுக்கு வந்துவிடும்....
ஆணுக்கு இருக்கும்பொழுது அம்மாவுக்கும்... மனைவிக்கும்.... சிறிது கூட ஒத்துப் போகாது..
மனைவியின் ஆடம்பர செலவில்( முக்கியமாக... மேக்கப்) பொருளாதாரத்தில் மிகவும் தங்கி விடவும் வாய்ப்பு ஏற்படுத்திவிடும்... இதுதான் மனைவிக்கும் இவருக்கும் ஒற்றுமையின்மை ஏற்படுத்தும்....
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை...

சந்திரன் சனி சேர்க்கை

சந்திரன் சனி சேர்க்கை அல்லது பார்வை அல்லது பரிவர்த்தனை.......
இது ஒரு மீள்பதிவு
இது புனர்பூ தோஷம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
அதாவது வாழ்நாள் முழுவதும் செத்து பிழைப்பது.
இது பொதுவாழ்க்கைக்கு சிறப்பாகவும்....
குடும்ப வாழ்க்கைக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று பொருள்.
இவர் கடும் உழைப்பாளியாக இருப்பார்.
எப்போதும் ஒருவித சோகத்துடனும்.... தாழ்வு மனப்பான்மையுடனும் இருப்பர்.
இவர் பழமைவாதி..... பழம்பெரும் விஷயங்களைப் பேசுபவராக இருப்பார்.
பிறரை குறை கூறிக் கொண்டே இருப்பார் அதனால் இவரிடம் யாரும் நட்புடன் பழக மாட்டர்.
இவர்களுக்கு யூக அறிவு சிறப்பாக இருக்கும்.
இந்த சேர்க்கை உள்ளவர்கள் பகலில் சாமியாராகவும்...... இரவில் சம்சாரியாகவும் இருப்பர்.
இவர்களுக்கு எந்த சுபகாரியமும் தாமதமாகத்தான் நடக்கும்.
ஒவ்வொரு முயற்சியும் முதலில் தோல்வியும் அதன் பிறகு வெற்றியையும் தரும்.
ஏதேனும் ஒன்றை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பர்.
மற்றவர்களின் சுமைகளை இவர்கள் தாங்கிக் கொண்டிருப்பதனால்.... இவர்கள் அடிக்கடி சாமியாராக போய்விடுவேன்..... என்று கூறிக் கொண்டே இருப்பர்.
இவர்களிடம் தொழில் பற்றிய அறிவு மிக சிறப்பாக இருக்கும்..
இவர்கள் யோசனை சொல்லி முன்னுக்கு வந்தவர்கள் அதிகம் இருப்பர்.
இவர்கள் வாழ்வியல் சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருப்பதால் மற்றவர்களுக்கு இவர்களை கண்டாலே பிடிக்காது.
எல்லாவற்றிற்கும் கணக்கு பார்ப்பவர்களாக இருப்பார்கள்.... மேலும் இவர்கள் இல்வாழ்க்கையை விட்டுவிட்டு பொதுவாழ்க்கைக்கு வருவார்களானால் தன்னுடைய உழைப்பினால் மிகப்பெரிய அளவில் புகழடைவார்கள்.
தொழிலில் கவனம் முழுவதும் செலுத்தும்போது மிகப்பெரிய அளவில் புகழடைவார்கள்....
குடும்பம் அமைப்பு என்று வரும்போது சுமாராகத்தான் குடும்ப விஷயங்களை கவனிப்பார்கள்.
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு.... நிச்சயித்த திருமணம் கூட.....
கடைசி நேரத்தில் நின்று விடும் வாய்ப்பு உண்டு.
எப்பொழுதுமே தொழில் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி செய்கின்ற தொழில்களையும் செய்கின்ற இடத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
சந்திரன் என்றாலே பாதிநாள் வளர்ச்சியையும் பாதிநாள் தேய்மானத்தையும் குறிக்கும் இவர்கள் செய்கின்ற தொழிலும் அப்படியே நிலை இல்லாமல் இருக்கும்.
ஒரு மளிகைக் கடை வைத்திருக்கும் நபர் கூட இந்த சேர்க்கை இருந்தால் வாழ்நாளில் எப்படியும் குறைந்தது 10முறையாவது கடை நடத்தும் இடத்தை மாற்றி இருப்பார்.
அதே மாதிரி சந்திரன் என்பது இடமாற்றத்தை குறிப்பதால் அடிக்கடி பயணம் செய்துகொண்டே இருப்பது இவர்களில் அமைப்பாகும் மெடிக்கல் representative மற்றும் மார்க்கெட்டிங் வேலையில் உள்ள நபர்கள் இந்த கிரக சேர்க்கை இருக்கும்.
முக்கியமாக எங்களைப்போன்ற ஜோதிடர்களுக்கு இந்த கிரக சேர்க்கை இருக்குமானால் வாடிக்கையாளர்களின் நிறைகுறைகளை அல்லது குற்றங்களை எளிதில் கண்டுபிடித்து விடும் வாய்ப்பு வந்து விடும்.
ஒரு சில நேரங்களில் திருமண தாமதத்திற்கு இந்த கிரகமும் பங்காற்றுகிறது. தாலிகட்டும் வரை நிச்சயம் இருக்காது.
இது பொதுவான பலன்களே.... அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை..

சந்திரன் ராகு கிரக சேர்க்கை

சந்திரன் ராகு கிரக சேர்க்கை பலன்... பார்வை பலன்... பார்வைங்கறப்ப இங்க கேதுவும்...ஜ வந்துவிடுவார்....
பலன் என்னவென்று பார்ப்போமா நண்பர்களே.....
ஜாதகருக்கு அடிக்கடி கண்டங்களும் விபத்துக்களும் ஏற்படும் ஜாதகர் தகுதிக்கு மீறி பேராசை காரராக இருப்பார்... அதனால் அவமானத்தையும் அடைவார்
சட்டத்திற்கு புறம்பான செயல்களில் துணிந்து ஈடுபடுவார்கள்... ஙவந விஷ பூச்சிகளால் தொல்லைகள் ஏற்படும்
செய்வினை பாதிப்புகளும் ஆவிகள் தொல்லைகளும் ஏற்படும்..... எதையும் புரிந்து கொள்ளாமல் தான் சொல்வதே சரி.... என்று வாதிடுவார்..
எதைக் கொடுத்தாலும் திருப்தி இருக்காது ... அதிகம் பேராசை காரணமாகவும்.... பொய்யராகவும், நோய் உள்ளவராகவும், அவமானங்களை சந்திப்பராகவும் பழிவாங்கும் உணர்வு உள்ளவராகவும் மாந்திரீக ஈடுபாடு அதிகம் உள்ளவராகவும் இருப்பார்.. ஜாதகருக்கு அடிக்கடி கண்டங்களும் கஷ்டங்களை இருக்கும்
சந்திரன் உணவு என்பதால் ஜாதகருக்கு எது சாப்பிட்டாலும் ஒவ்வாமை நோயாக மாறும் வாய்ப்புண்டு... கட்டுப்பாடில்லாத உணவு பழக்க வழக்கத்தால் அடிக்கடி நோய்வாய்ப் பட்டு அவதியுடக்கூடிய சூழ்நிலை ஏற்படும்
விதவைப் பெண்கள் மீது மோகம் கொள்வார் வெளிநாடு செல்லும் யோகத்தை பெறுவார்.... காரணம் தெரியாத நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு
கிரக சேர்க்கை அம்மாவை இளமையிலே மிகவும் கஷ்டப்பட வைக்கும்... (மனதளவில், உடலளவில், வாழ்க்கை அளவில்)..வறுமையாலும் நோயாலும் கஷ்டப்படக் கூடிய நிலையும் ஏற்படும்...
தன் தாயாராலே தவறாக வழி நடத்தப்பட்டு( தவறு என்று உணர கூடிய சூழ்நிலை இல்லாமலே) வாழ்க்கைக் எ
கெடுத்துக் கொள்பவர்களுக்கும் கிரக சேர்க்கை உண்டு.
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் அதிகம் வாய் பேசாமல் தானுண்டு தன் வேலையுண்டு என தொழிலில் கருத்தாக இருப்பார்களேயானால் *மஹாசக்தி யோகம்* என்னும் யோகத்தை தந்து பெரும் பணக்காரராகவும்... புகழுடையவராகவும்.. மாற்றும்.|
ஜாதகர் வெளிப்பார்வைக்கு தைரியசாலியாக தெரிந்தாலும் கூட.... வாழ்க்கையில் திடீரென ஏற்படும் மாற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை எண்ணம் அல்லது முயற்சி செய்யும் அளவுக்கு செல்வார்கள்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

சந்திரன் கேது கிரகசேர்க்கை

ஜாதகர் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட்டால் ஞானம் எளிதில் கிடைக்கும்...
பின்னால் வருபவரை முன்கூட்டியே அறிந்து தெளிவார்..
தெய்வ தரிசனமும் குருவின் ஆசிகளும் எளிதில் கிடைக்கும் ஆனால் இல்வாழ்க்கையில் இருப்பார்களேயானால் இல்வாழ்க்கையை புரிந்து கொள்ளாமல் விரக்தியுடனனும் வெறுப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.. வாழ்க்கையில் கசப்பை ஏற்படுத்தும் சட்ட சிக்கல்கள் வரும் தனிமை வாட்டும் உறவுகள் முழுவதும் பகையாகும் நோயினால் பாதிக்கப் படக்கூடும் இதே அமைப்பு உள்ள பெண் ஜாதகத்தில் கணவனும் மனைவியும் பிரச்சனை ஏற்பட்டு அதிக தடவை போலீஸ் ஸ்டேஷன் படி ஏறி இறங்கி இருப்பர்
இவர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறையேனும் அறுவைசிகிச்சை கண்டிப்பாக நடக்கும் இந்த கிரக சேர்க்கை 90% சாமியாரா போவதற்கான வாய்ப்புகள் உண்டு அம்மாவுக்கும் ஜாதகருக்கும் பிரிவினை வரும்.... எமக்குத்தெரிந்து ஜோதிடத்தில் சிறந்த நிலையில் இருக்கும் ஒரு ஜாதகர் இல்வாழ்க்கையில் சிறப்பு இல்லாமல் இருக்கிறார் அவர் தன்னுடைய உள்ளுணர்வின் ஆனால் மற்றவர்களுக்கு சொல்லும் விஷயம் சரியானதாக... இருக்கிறது சிறந்த ஜோதிடராக இருக்கிறார்...
பொதுவாகவே வாழ்க்கையில் ஜாதகருக்கு மனப்போராட்டம் அதிகமாக இருக்கக்கூடிய கிரகசேர்க்கை அமைப்பு இது....
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.... பாவக ரீதியாக இருக்கும் இடத்தை பொருத்து...
அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

Wednesday, November 20, 2019

கேந்திர,கோணங்களில் இருக்கும் ராகு தரும் பலன்கள்

நமது பூமியில் உயிரினங்கள் தோன்றக் காரணமான சூரியனின் ஒளியையே, சிறிதுநேரம் மறைத்துத் தடுக்கும் ஆற்றல் ராகு,கேதுக்களுக்கு இருப்பதாலேயே நமது மூலநூல்கள் கிரகங்களின் வலிமையைக் கணக்கிடும்போது சாயாக் கிரகங்களுக்கு முதலிடம் அளிக்கின்றன.
ஒரு கிரகத்தின் காரகத்துவம் மற்றும் ஜாதகத்தில் அந்தக் கிரகம் ஏற்றுள்ள ஆதிபத்தியத்தின் தன்மைகளைத் தர விடாமல் முழுமையாகத் தடுக்கும், அல்லது குறைக்கும் ஆற்றல் நவ கிரகங்களில் ராகுவிற்கு மட்டுமே உண்டு
சூரியனுக்கு அருகே ஒரு குறிப்பிட்ட டிகிரிக்குள் நெருங்கும் கிரகங்கள் அஸ்தங்கம் எனும் பெயரில் எவ்வாறு வலுவிழக்கின்றனவோ, அதேபோல் ராகுவிடம் நெருங்கும் கிரகமும் வலுக் குறையும். குறிப்பாக ராகுவிற்கு எட்டு டிகிரிக்குள் நெருங்கும் ஒரு கோள் ராகுவினால் சுத்தமாக பலவீனமாக்கப்பட்டு தனது இயல்புகள் அனைத்தையும் பறி கொடுத்து விடும்.
அதாவது அதிக ஒளியையும்ஒளியே இல்லாத ஆழமான இருட்டையும் நெருங்கும் கிரகங்கள் தங்களின் சுயத் தன்மையை இழப்பார்கள்.
உதாரணமாக, ராகுவிடம் மிக நெருங்கும் குரு, குழந்தைகளையும், அதிகமான பண வசதியையும், நேர்மையான குணத்தையும், ஆன்மீக ஈடுபாட்டையும் தரும் சக்தி அற்றவர்.
ராகுவுடன் நெருங்கி இணையும் சுக்கிரன், பெண் சுகத்தையும், உல்லாசத்தையும், காதல் அனுபவம் மற்றும் சுக வாழ்வையும் தர மாட்டார். செவ்வாய் தன் இயல்புகளான கோபம், வீரம், வெறித்தனம், கடினமனம், சகோதரம் போன்றவற்றை இழப்பார்.
ராகுவிடம் சரணடையும் சனியால் வறுமை, தரித்திரம், கடன், நோய், உடல் ஊனம் போன்றவற்றைத் தர இயலாது. சந்திரன் மனதிற்கும், மனம் எடுக்கும் முடிவுகளுக்கும் காரணமானவர் என்பதால் ராகுவிடம் நெருங்கும்போது மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை ஜாதகர் இழந்து மனநலம் குன்றுவார். தாயன்பு பறி போகும்.
புதனுடன் இணையும் ராகுவால் நிபுணத்துவம் குறையும். அறிவாற்றல் அளவோடுதான் இருக்கும். கணிதத் திறமை காணாமல் போகும். சூரியன் ஆன்ம பலத்தையும், அரசுத் தொடர்பு, அரசலாபம், தந்தையின் ஆதரவு போன்றவற்றைத் தரும் வலிமையை இழப்பார்.
ஒரு கிரகம் உச்சம், மூலத் திரிகோணம், ஆட்சி போன்ற எத்தகைய வலிமை நிலையில் இருந்தாலும் சரி…! அது ராகுவுடன் மிகவும் நெருங்கினால் அத்தனை வலிமையையும் இழக்கும். மேலே சொன்னவைகளை நீங்கள் நன்றாக அறிந்த ஜாதகத்தில் ஒப்பிட்டுப் பாருங்கள். சரியாக இருக்கும்.
உதாரணத்திற்கு நம் காலத்தில் வாழ்ந்த தெய்வம், காமாட்சி என்ற பெயர் தவிர பெண்ணின் வாசனை கூட அறியாமல், துறவுக்கு உண்மை அர்த்தமாய் சொகுசு வாழ்க்கை தவிர்த்து, நம் கண்முன் நடமாடிய மகான் காஞ்சி மகாபெரியவரின் அவதார ஜாதகத்தில் மீனத்தில் உச்ச சுக்கிரனுடன் ராகு இணைந்ததைச் சொல்லலாம்.
சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் பெற்றிருக்கும் நிலையில் கூட ஒரு கிரகம் பரிவர்த்தனை அடைந்திருந்தால் தன் சுயபலத்தை பெறும் என்று நமது கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ராகுவிடம் இணைந்த கிரகங்களுக்கு அவ்வாறு விமோசனம் கிடையாது.
(எப்போதும் சூரியனுடன் இணைந்தே இயங்குவதால் புதனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்று மகாபுருஷர் காளிதாசர் சொல்லுகிறார். அதுபோல சுக்கிரனுக்கும் அஸ்தங்க தோஷம் இல்லை என்று வேறு சில மூலநூல்கள் சொல்லுகின்றன.)
நான் மேலே சொன்னவைகள் குறிப்பிட்ட கிரகங்களின் காரகத்துவங்கள் மட்டும்தான். ஜாதகத்தில் மேற்கண்ட கோள்கள் எந்த ஆதிபத்தியங்களுக்கு உரியனவோ அவைகளும் அந்தக் கிரகங்கள் வலுவிழந்ததால் பாதிக்கப்படும்.
அதாவது ஐந்துக்குடையவன் ராகுவுடன் நெருங்கினால் புத்திர பாக்கியம், அதிர்ஷ்டம், சிந்தனை மற்றும் செயல்திறன் பாதிக்கப்படும். ஆறுக்குடையவன் ராகுவுடன் இணைந்தால் ஜாதகர் நோயற்ற நிலை, கடன் வாங்க அவசியமின்மை, எதிரிகளற்ற வாழ்வு போன்றவைகள் அமையப் பெறுவார்.
ஏழுக்குடையவனுடன் ராகு இணைவு பெற்றால் தாமத திருமணம் அல்லது திருமணமே இல்லாத நிலை, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் போன்ற பலன்கள் நடைபெறும். அஷ்டமாதிபதி ராகுவுடன் மிக நெருங்கி இருந்தால் அந்த ஜாதகர் தீர்க்காயுள் வாழுவது கடினம்.
அதேநேரத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். தன்னுடன் மிக நெருங்காமல் அதேராசியில் குறிப்பிட்ட டிகிரி இடைவெளியில் இருக்கும் கிரகங்களின் இயல்பை ராகு பெறுவார் என்பதால், தன்னுடன் இணைந்த கிரகங்களின் காரக மற்றும் ஆதிபத்திய பலன்களை ராகுபகவான் தனது தசை, புக்திகளில் செய்வார். அதாவது அவர்களிடமிருந்து பறித்ததை ராகு தனது தசையில் தருவார்.
உதாரணமாக, குருவுடன் இணைந்து நல்ல ஸ்தானங்களில் அமர்ந்த ராகுவின் தசையில் மிகப் பெரிய தனலாபம், புத்திர பாக்கியம் போன்றவைகளும், சுக்கிரனுடன் இணைந்து நல்ல இடங்களில் அமர்ந்த ராகுவின் தசையில் சொகுசு வாழ்க்கையும், பெண்களால் சுகமும் இருக்கும்.
அதேபோல பாபக் கிரகங்களுடன் இணைந்த ராகு அவர்களின் கெட்ட காரகத்துவங்களை தனது தசையில் பிரதிபலித்து ஜாதகரை கஷ்டங்களுக்கு உள்ளாக்குவார். குறிப்பாக சனி, செவ்வாயின் பார்வை மற்றும் இணைவைப் பெற்ற ராகு தன் தசையில் நல்ல பலன்களைச் செய்வது கடினம். மேற்கண்ட இருவரும் லக்ன சுபர்களாக இருந்தாலும் இதே நிலைதான்.
ஒரு கிரகம் ராகுவுடன் எத்தனை டிகிரியில் இணைந்திருக்கிறது, வேறு ஏதாவது பலவீனத்தை அந்தக் கிரகம் அடைந்திருக்கிறதா, அதோடு அவர்கள் இருக்கும் ராசி எப்படிப்பட்டது, லக்னத்திற்கு அந்த ராசி எத்தனையாவது பாவம், மற்றும் ராகுவிற்கு அந்த பாவம் வலிமையான இடமா என்பதோடு,
வேறு யாருடைய பார்வை மற்றும் தொடர்பு ராகுவிற்கு இருக்கிறது, ராகுவும் அவருடன் இணைந்த கிரகமும் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார்கள், அந்த நட்சத்திரநாதன் லக்னத்திற்கு சுபரா, அசுபரா, என்ன பாவத்திற்கு உரியவர், போன்ற நுணுக்கமான விஷயங்களை சரியாகக் கணிக்க முடிந்தால் போதும். ஒருவருக்கு ராகுதசை எத்தகைய பலன் தரும் என்பதை துல்லியமாகச் சொல்லி விடலாம்.
கேந்திர, கோணங்களில் இருக்கும் ராகு என்ன பலன்களைத் தருவார்?
கேந்திர, கோணங்களில் இருக்கும் ராகு தனது தசா, புக்திகளில் அந்த பாவத்தைக் கெடுப்பார் என்பது பொதுவான ஜோதிட விதி.
ஆனால் இயற்கைச் சுப கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற விதியின் மறைவில் இயற்கை பாபக் கிரகங்கள் திரிகோணங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற சூட்சுமம் உள்ளது. இதுவே பாதகாதிபதிகளின் தத்துவம் என்ற எனது ஆய்வு முடிவினை ஒட்டியும், இயற்கைப் பாபரான ராகு, தான் இருக்கும் வீட்டு அதிபதியின் தன்மையை பிரதிபலிப்பவர் என்பதாலும், சனி செவ்வாயின் வீடுகள் ஐந்து, ஒன்பதாம் இடங்களாகி அந்த வீடுகளில் இருந்தால் மிகக் கடுமையான பலன்களைத் தருவார்.
இந்த அமைப்பின்படி கடகம், துலாம் ஆகிய லக்னக்காரர்களுக்கு ராகு ஐந்தாமிடத்தில் கெடுதல்களைச் செய்வார்.
மேற்கண்ட அமைப்பில் நடக்கும் ராகு தசை, புக்திகளில் குழந்தைகள் சம்பந்தப் பட்டவைகளில் கெடுபலன்களும், புத்திர சோகமும், வாரிசு விரோதம், அவர்களால் அவமானம், அதிர்ஷ்டக்குறைவு, பூர்வீக சொத்துக்கள் இழப்பு போன்ற பலன்கள் நடக்கும். மேலும் ஐந்தாமிட ஆதிபத்தியங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.
அதேபோல மிதுனம், மீனம் ஆகிய லக்னத்தவர்களுக்கு ராகு ஒன்பதாமிடத்தில் கெடுபலன்களை நடத்துவார்.
இந்த லக்னத்தவர்களின் ஒன்பதாமிட ராகு தசையில் தந்தையின் ஆதரவை இழத்தல், தந்தையின் மறைவு, விரோதம், பாக்யங்கள் பறிபோகுதல் போன்றவை நடக்கும்.
மேலே கண்ட லக்னங்களுக்கு திரிகோணங்களில் ராகு தனித்த நிலையில் இருந்தால் சொன்ன பலன்களே நடக்கும். அதேநேரத்தில் ராகு இந்த இடங்களில் சுபர் பார்வை பெற்றோ, ஒரு கேந்திராதிபதியுடன் இணைந்திருந்தாலோ சிறிது மாறுபாடான பலன்களைத் தருவார். ஆனாலும் அடிப்படையில் கெடுபலன்கள் என்பது மாறாதது.
இதைப் போலவே சுப கிரகங்கள் கேந்திராதிபத்திய தோஷம் பெறும் கேந்திர ஸ்தானங்களில் தனித்திருக்கும் ராகு அந்த பாவத்தை முழுமையாகக் கெடுப்பார்.
ஏற்கனவே இந்தத் தொடரில் “காரஹோ பாவ நாஸ்தி” அமைப்பை செயல்படுத்துவது ராகு,கேதுக்கள் தான் என்று நான் எழுதியதைப் போலவே கேந்திராதிபத்திய தோஷத்தை எடுத்துச் செயல்படுத்துவதும் பெரும்பாலும் ராகு, கேதுக்கள் தான்.
அதிலும் சந்திரன் பூரணத்தை நெருங்கும் சமயத்தில் வளர்பிறைச் சந்திரனாக இருக்கும்போது கடகத்தில் தனித்து அமரும் ஏழாமிட ராகு மிகவும் கடுமையானவர். இந்த அமைப்பில் மகரத்தில் சந்திரன் அமர்ந்து ராகுவைப் பார்க்கும் நிலையில் ராகுதசை, புக்திகளில் வாழ்க்கைத் துணையைப் பாதிப்பார்.
அதாவது கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகங்களின் தொடர்பைப் பெற்ற ராகு,கேதுக்கள் அவர்களின் செயல்களை தாங்களே எடுத்து நடத்துவார்கள். இது ராகுதசை, கேதுபுக்தியிலோ அல்லது சம்பந்தப்பட்ட கிரகங்களின் புக்தியிலோ நடக்கும்.

Friday, October 3, 2014

சுக்கிரன் ஒருபார்வை ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனுக்கு 4ம் இடத்தோனும் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்ப்படும். ஜாதகர் ஆன்மீகத்தில், ஞானமர்கத்தில், சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பர். சித்த புருஷர்களாக இருப்பர்.
      சுக்கிரன் லக்கினத்திற்கு 2ம் இடத்திலாவது, 11 ம் இடத்திலாவது இருப்பது சிறப்பானதாகும். வீடு, வாகன வசதிகளை ஏற்ப்படுத்தும்.
      சுக்கிரன் 4ம் இடத்திலோ அல்லது 4ம் இடத்துக் காரனுடன் சேர்ந்து வலுத்துக் காணப்பட்டாலோ வீடு, வாகன யோகம், நல்ல புகழ் ஏற்படும்.
சுக்கிரனுடன் 2ம் இடத்ததிபதி மற்றும் 7ம் இடத்ததிபதி சம்பந்தம் ஏற்பட்டு வலுத்துக்காணப்பட்டால் நல்ல, குணமான, தீர்க்க ஆயுளுடன் கூடிய மனைவி வாய்ப்பாள்.
      சுக்கிரன் 12ம் இடத்துடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் நல்ல சயன சுகம் ஏற்படும்.
      சுக்கிரனுக்கு 10ம் இடத்துடன் அல்லது 10க்கதிபதியுடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் கலைத்துறையின் மூலம் ஜீவனம் ஏற்படும்.
      லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், நல்ல புகழ், நல்ல மனைவி, வீடு, வாகனம் எல்லாம் ஏற்படும்.
      சுக்கிரன் 5ல் இருந்தால் பாக்கியசாலி, மனைவி சொல்லைத்தட்டாதவர்.
      சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் தொழில்த்துறை படிப்பு ஏற்படும், பற்றற்ற வாழ்வை விரும்புபவர்களாக இருப்பர்.
      சந்திரனுக்கு 4 அல்லது 10ல் சுக்கிரன் இருந்தால் நிலம், வீடு, வாகனம் அமையும்.
      சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை எழுத்தார்வம் ஏற்படும், எழுத்தாளர்களாக இருப்பர்.
      சுக்கிரன் செவ்வாய்க்கு 4 அல்லது 7ல் இருந்தால் நிலம், வாகனம், வீடு அமையும்.
      சுக்கிரன் 7ல் தனித்து இருந்தால் திருமணம் தடை. ஆனால் சுக்கிரனும் அவர் நின்ற வீட்டுக்குடையவரும் சஷ்டாஷ்டகம் ஆனால் திருமணம் நடைபெறும்.
      சுக்கிரன் சந்திரனுடன் இனைந்து எந்த‌ இடத்தில் நின்றாலும் திருமணம் தடை. ஆனால் அதுவே  கடகம், ரிஷ‌பம், துலாத்தில் இருந்தாலும், 6, 8, 12ல் இருந்தாலும், அம்சத்தில் இருவரும் சஷ்டாஷ்டகம் பெற்றால் திருமணம் நடைபெறும்.
      துலா லக்கினத்திற்க்கு சுக்கிரன் ஆட்சி பெற்ற சனியுடன் கூடி 4ம் இடத்தில் இருந்தால் பொது ஜனத்தொடர்பு ஏற்படும். புகழ் பெறுவார்கள்.

சுக்கிரனும் சித்த புருஷர்களும் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனுக்கு 4ம் இடத்தோனும் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்ப்படும். ஜாதகர் ஆன்மீகத்தில், ஞானமர்கத்தில், சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பர். சித்த புருஷர்களாக இருப்பர்.

Saturday, October 19, 2013

கேந்திராதிபத்ய தோஷம் ஒரு பார்வை ஜோதிடக்குறிப்பு

      முதலில் கேந்திராதிபத்ய தோஷம் என்றால் என்ன? என்று பார்ப்போம்! அதாவது நைசர்க்கிக சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகியவை லக்கின கேந்திரங்களுக்கு(4,7,10க்கு) அதிபதியாகி லக்கினத்திற்க்கு மற்ற கேந்திரங்களில் அமருமேயானால், அந்த கிரகம் கேந்திராதிபத்ய தோஷம் அடைந்து, அந்த பாவத்தையும் அதைச்சேர்ந்த கிரகங்களின் ஆதிபத்தியத்தையும் பாழ்படுத்திவிடும். இதற்கான விதிமுறைகளைக் இனி காண்போம்.....
விதி எண் 1. 
      குரு, புதன், சுக்கிரன் அமரும் கேந்திரங்கள் அதன் மற்றொரு ஆட்சி உச்ச வீடாக அமைந்தால் அந்த கிரகங்கள் கேந்திராதிபத்ய தோஷம் அடையாது. யோகமாக மாறி நல்ல பலன்களையே தரும்.
விதி எண் 2.
      கேந்திராதிபத்ய தோஷம் இருவகை (1) லக்கின கேந்திரம் நைசர்க்கிக சுப கிரகங்களின் கேந்திரங்களாக வந்தால் சுப கேந்திராதிபத்ய தோஷம், (2)லக்கின கேந்திரம் நைசர்க்கிக அசுப கிரகங்களின் கேந்திரங்களாக வந்தால் அசுப கேந்திராதிபத்ய தோஷம் எனப்படும்
விதி எண் 3. 
      சுப கிரக கேந்திராதிபத்ய தோஷம் ஏற்ப்படும் போது அந்த ஆதிபத்யம் பாதிப்புக்குள்ளாகும். அதில் நின்று கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கிய கிரகத்தின் காரகம் கெடாது.
விதி எண் 4. 
      அசுப கிரக கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படும் போது அந்த ஆதிபத்யம் பாதிப்புக்குள்ளாகும். அதில் நின்று கேந்திராதிபத்ய தோஷத்தை உண்டாக்கிய கிரகத்தின் காரகமும் கெடும்.
விதி எண் 5. 
       கேந்திராதிபத்ய தோஷம் அடைந்த பாவத்தின் கிரகம் லக்கினத்திற்கு திரிகோணத்தில் (5,9ல்) நின்றால் அந்த பாவம் கேந்திராதிபத்ய தோஷத்தை அடையாது.
விதி எண் 6. 
       கேந்திராதிபத்ய தோஷம் அடைந்த பாவத்தின் கிரகம் அந்த பாவத்திற்கு திரிகோணத்தில் (5,9ல்) நின்றால் அந்த பாவம் கேந்திராதிபத்ய தோஷத் தன்மை கூடுதலாகவே அளிக்கும்.
விதி எண் 7. 
       பொதுவாக சுப கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாக வந்தால் மட்டுமே அக்கிரகங்கள் கேந்திராதிபத்ய தோஷம் அடைந்து தீமை செய்வார்கள்,ஆனால் அவர்களே மற்றொரு ஆதிபத்யமாக ஒரு திரிகோண ஸ்தானத்திற்கும் அதிபதியாக வந்தால் அக்கிரகங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் ஏற்ப்படாது
..................................தொடரும்

Thursday, October 10, 2013

சுகபா யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் குருவும் சந்திரனும் சேர்ந்து இருக்க, 11ம் இடத்தில் 2ம் இடத்ததிபதியும் லக்கினாதிபதியும் சேர்ந்து இருந்து, மேலும் இந்த சேர்க்கைக்கு சுபர் சேர்க்கை மற்றும் பார்வை இருந்தால், அதற்கு "சுகபா யோகம்" ஆகும். இந்த யோகம் பெற்ற ஜாதகர், பிறந்ததிலிருந்து எந்த துன்பமும் இல்லாமல்,கோடீஸ்வரர்களின் வீட்டில் பிறந்து சகல செளக்கியங்களையும் அனுபவிப்பார்கள். கவலையில்லாதவர்களாக‌, புகழுடையவர்களாக இருப்பர்.

Wednesday, October 9, 2013

காம்பயோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் 2ம் இடத்தில் குரு இருக்க, 4ம் இடத்தில் சுக்கிரன் இருக்க, 7ம் இடத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்க, லக்கினாதிபதி வலுப்பெற்றிருந்தால் அதற்கு "காம்பயோகம்" என்று பெயர். இந்த யோகம் இருக்கப்பெற்றவர்கள், வாகன வசதி, மாளிகை போல வீடு, அழகான அன்பான மனைவி, நல்ல குழந்தைகள், வாக்கு வன்மை போன்ற பலன்கள் உண்டாகும்.

Wednesday, July 3, 2013

கலைத்துறையில் பிரகாசிக்க ஜோதிடக்குறிப்பு

      கலைத்துறையில் பிரகாசிக்க, கவிஞ‌ர்களாக, இசைக்கலைஞர்களாக, எழுத்தாளர்களாக, நடிகர், நடிகையாக, கதாசிரியர்களாக, பிரகாசிக்க புதன், சுக்கிரன், சந்திரன், குருவின் பலமே பெரிதும் உதவுகின்றது.
1) ப‌லமுள்ள சுக்கிரனை, சந்திரன் பார்த்தால், தமது திறமையை எழுத்து கவிதைகள் மூலம் பேரும் புகழும் பெற்று பிரகாசிப்பர்
2) சுக்கிரன் புதன் சேர்ந்து இரண்டில் இருந்து குரு பார்த்தால் கவிஞர்களாக, எழுத்தாளர்களாக திகழ்வர்.
3) 1ம் இடம் 5ம் இடம் கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்தால் நல்ல கலைஞர்களாவர்.
4) சுக்கிரன் லக்கினத்தில் இருந்து அத‌ற்கு கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ சந்திரன் இருந்தாலும் அல்லது சந்திரன் லக்கினத்தில் இருந்து அத‌ற்கு கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ சுக்கிர‌ன் இருந்தாலும் கலைத்துறையில் பிரகசிப்பர்.
5) லக்கினத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று, 1ம் இடத்திலோ அல்லது 2ம் இடத்திலோ புதன் இருந்து, 10ம் இடத்தை குரு பார்த்தால் கலையுலகில் சிறப்புடன் பிரகாசிப்பர்.
6)சூரியன் புதன் சந்திரன் செவ்வாய் சேர்க்கை நல்ல எழுத்தாற்றலைத் தருகிறது.
7) கேது 1, 5, 9 ல் நவம்சத்தில் இருந்தால் புத்தக எழுத்தாளர்.
8) குரு சந்திரன் இனைந்து 5 அல்லது 9ம் இடத்தில் இருந்தாலும், சந்திரன் 5 அல்லது 9ம் இடத்தில் இருந்து குருவின் பார்வை பெற்றிருந்தால் கதை, கட்டுரை எழுதுபவர்.
9) சந்திரன் இருக்கும் இடத்திற்க்கு 10ல் புதன் சனி சேர்க்கை பெற்று கெடாமல் இருந்தால், கவிதை, கதை, கட்டுரை எழுதுபவர்.
10) புதனும் குருவும் இனைந்து 1, 2, 5 அல்லது 9ல் பழுதுராமல் இருந்தால் சிறந்த கவிஞர், கதாசிரியராவார்.

Monday, June 10, 2013

இந்திர யோகம் ஜோதிடக்குறிப்பு

      ஒரு ஜாதகத்தில் 5ம் அதிபதியும் 11ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆகியிருந்து, சந்திரன் 5ம் இடத்தில் அமர்ந்திருந்தால் இந்திர யோகம் எனப்படும். இந்த யோகத்தின் பலன்கள்.... மிகுந்த தைரியசாலி, மறையாத புகழ், அரசனுக்கெல்லாம் அரசன், ஆனந்தமான வாழ்க்கை, வாழ்க்கைக்காலம் 40 ஆண்டுகளுக்கு கீழ் மட்டுமே என்பதி விதி.
      இந்த மாதிரியான் அமைப்பில் ஆயுள் ஸ்தானமும் அதன் அதிபதியும் பலமாக இல்லாவிட்டால் ஆயுள் குறைவே. மற்றபடி இது ஒரு மிகச்சிறந்த யோகமாகும்.
      இதற்க்கு உதாரணங்களாக ஏசுகிறிஸ்து, ஆதிசங்கரர் மற்றும் அலெக்ஸான்டர் ஆகியோரை உதாரணமாக சொல்லலாம். குறைவான ஆயுள் ஆனால் மறையாத புகழ் ஆகியவற்றைச் சொல்லலாம்.

Thursday, June 6, 2013

பல ஆண்களுடன் தொடர்பு! ஜோதிடக்குறிப்பு

      ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆகியிருந்து    அந்த அமைப்பை எந்த‌ ஒரு கிரகமும் சேராமலும் அல்லது எந்த மற்ற கிரகத்தாலும் பார்க்கப்படமலும் இருந்தால் அந்த ஜாதகி பல ஆண்களுடன் ரகசியமாக தொடர்பு வைத்திருப்பாள். அந்த ஜாதகத்தில் ஏழாமிடத்தில் சந்திரன் இருந்தால் அவள் கணவனும் அவ்வாரே! அவளும் கணவனுக்கு தெரிந்தே அந்தத் தொடர்புகள் கொண்டிருப்பாள்.

Wednesday, January 2, 2013

புனர்பூ தோஷம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சனி சந்திரன் இரண்டுக்கும் சம்பந்தம் ஏற்பட்டிருந்தால் அது புனர்பூ தோஷம் எனப்படும். சனி சந்திரன் சம்பந்தம் என்பது, இருவரும் இனைந்து ஒரே ராசியில் இருப்பது, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது, ஒருவருக்கொருவர் பரிவர்த்தனையாகி நிற்பது.
இதன் பலன் திருமணத்தில் தாமதமும் பல விதமான த‌டைகளும் ஏற்படுதல்.

Monday, March 12, 2012

நன்மை செய்யாத அமைப்புகள்6 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனின் தசை நடை பெறும் போது அதில் சுக்கிரனுக்கு நாலில் இருக்கும் கிரகத்தின் புத்தியில் நன்மைகள் தாரா...
      சுக்கிரனுக்கு நாலில் இருக்கும் கிரகத்தின் புத்தியில் தன் துணைவருடன் ஒற்றுமை குறையும். ஆனால் பிரிவைத்தராது மனதளவில் அன்யோன்யத்தை குறைக்கும். இதில் சுக்கிரன் மேஷ‌த்தில் இருந்து சந்திரன் நாலில் இருந்தால் சிக்கல் அதிகம் தான். அதே போல் ராகுவும் சுக்கிரனுக்கு நாலில் இருந்தால் துணைவருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ந‌ம்முடைய நிலைபற்றிய‌ போராட்டத்தை கொடுக்கும்
      ஆனால் தாய்/தகப்பன் உணர்வை அதிகரிக்க செய்யும். அதாவது பிள்ளைகளின் மீது பொறுப்பைக் கொடுக்கும்.
     

Wednesday, January 4, 2012

புஷ்கலா யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி சந்திரனுடன் இணைந்து கேந்திர திரிகோணத்திலோ அல்லது சந்திரனுடைய அதிநட்பு வீட்டிலோ இருந்து, அந்த சந்திரன் அமர்ந்த, ராசியாதிபதி லக்கினத்தில் அமர்ந்திருக்கும் இருக்கும் கிரகத்தை பார்ப்பது புஷ்கலா யோகம் எனப்படும்.
      புஷ்கலா யோகம் அமையப் பெற்றவர்கள், சமுதாயத்தில் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்களாகவும், செல்வம் செல்வக்க்கோடு கூடிய அந்தஸ்த்து உடையவர்களாகவும், நாட்டை ஆள்பவர்களால் மிகவும் மதிக்கப்படுபவர்களாகவும் இருப்பர் என ஜோதிட சாஸ்திரம் உரைக்கிறது.

Thursday, November 3, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-2 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சந்திரனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 12ல் இருக்கும் கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
1) எதிலும் ஒரு குழப்பமான நிலை, சரியாக முடிவெடுக்க முடையாத தன்மை.
2) எதிலும் அதிகமான அலைச்சல்,பெற்றோர்களிடம் இணக்கம் குறைந்து போதல்.
3) எல்லாவற்ரிலும் கவலை, சோர்வு.
4) ஏமாற்றம், நம‌க்குறியவர்கள் கூட நம்மை அரவணைக்கதது போன்ற உணர்வு.
5) எல்லாவற்றிலும் தவறான முடிவு எடுத்து, அதனால் பாதிக்கப்பெறுதல், இதனால் நிம்மதி குழந்து போதல்.