Showing posts with label ராகு. Show all posts
Showing posts with label ராகு. Show all posts

Friday, May 29, 2020

சனி ராகு கிரக சேர்க்கை

சனி + ராகு கிரக சேர்க்கை 
ஒருவருக்கு ஜாதகத்தில் இது வேண்டாத..... கூடாத....... கிரக சேர்க்கைகளில் முக்கியமான ஒன்று.
இது கர்ம தோஷம் இருப்பதை சுட்டிக் காட்டும்.
ஜாதகர் எதை செய்தாலும் தவறாகவே முடியும்.
கடுமையான தொழில் தடையை ஏற்படுத்தும்....
வாழ்வில் எவ்வளவு உயரமாக சென்றாலும் பெரும் வீழ்ச்சி ஏற்படுத்தும்......
ஆயுள் தோஷத்தை கூட ஏற்படுத்தும்....
பூர்வீகத்தை விட்டு வெளியேற்றும்....
பூர்வீக ஊரில்.... பூர்வீக சொத்தில் குடியிருக்க விடாது...
குலதெய்வம் அனுகிரகம் இருக்காது...
சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்தும்.... கஷ்டப்பட்டு உழைத்தும்... குறைந்த ஊதியத்தை பெறுதல் என்ற நிலை ஏற்படும்....
சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை, தொழில் செய்பவர்களுக்கு இக்கிரக சேர்க்கை இருக்கும்.
கிரக சேர்க்கை உள்ளவர்கள் அதிக முதலீடு செய்து தொழில் செய்யாமல் இருப்பது நல்லது.
இன்னொருவரிடம் வேலை செய்வதே நல்லது.....
கண்டிப்பாக... பூர்வீக இடத்தில் இருக்கக்கூடாது... பூர்வீக சொத்து இல்லாமல் இருப்பது நல்லது.
எவ்வளவுதான் பெரிய படிப்பு படித்திருந்தாலும்,, தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத... தகுதிக்கு குறைவான இடத்தில்.... குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும்.
மேலும் இக்சேர்க்கை உள்ளவர்களின் நடவடிக்கைகள், யாருக்கும் பிடிக்காது....
யாரையும் மதிக்காமல் தான்தோன்றித்தனமாகவும், சுதந்திரமாகவும் செயல்படக் கூடியவர்களாக இருப்பர்.
விதி வயப்பட்டு செயல்படுவதால் இவர்கள் வாழ்வில் எந்த விதத்திலும் சிறப்படைவதில்லை.
நல்ல திறமை இருந்தும் சரியாக சம்பாதிப்பதிக்காமலும்.... வருமானம் இல்லாமலும் இருப்பர்.
திடீர் வீழ்ச்சியையும் கொடுக்கும்......
ஒரு சிலருக்கு 40 வயது ஆகியும் கூட.... சொல்லிக்கொள்ளும்படி வேலை இல்லாமலும்.... சூதாட்டம்.... திருட்டு என வாழ்ந்து கொண்டிருக்க சூழ்நிலை கூட ஏற்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட முறை விபத்து மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நிலை ஏற்படும்....
ஒரு சிலருக்கு நல்ல திறமை இருந்தும்... தொழில் அமைந்தும்... தன்னுடைய ஒழுக்கக் குறைவினால்... சம்பாதித்த பணத்தை எல்லாம் தொலைத்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.
பூர்வீக சொத்தையும் சேர்த்து அழிக்கும் நிலை ஏற்படும்.
மேலும் முக்கியமாக...... அறியாமல் தவறு செய்து ஏமாறுபவர்களுக்கு கூட இக்கிரக சேர்க்கை இருக்கும்.
இவர்களுக்கு கர்மாவே... தோசமாக இருப்பதால், திடீர் திடீர் என அசுபகாரியங்கள் நடக்கும்.
முக்கியமாக....
இது ""விதி"" கிரகம் என்பதால்.......
நடப்பது..... நடந்தே தீரும்.... ஜாதகர் விரும்பினாலும்......................... விரும்பாவிட்டாலும்......
இச்சேர்க்கை உள்ள ஜாதகர்.... வெளிநாடு அல்லது வெளி மாநிலம் சென்றால்.... மட்டுமே...
தீமை குறைந்து... ஓரளவு நிம்மதியாகவும்.. சிறப்பாகவும்.... வாழலாம்.
இது முழுக்க முழுக்க அந்நிய மதம்....
அந்நிய மொழி.... அந்நிய நாடு...
அந்நிய மனிதர்களாலே லாபம் அடையக் கூடிய கிரகச்சேர்க்கை....
மொத்தத்தில் இது கர்ம வினை பயன்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.... பாவக ரீதியாக இருக்கும் இடத்தை பொருத்து...
அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை...

சூரியன் ராகு கிரக சேர்க்கை

சூரியன் ராகு கிரக சேர்க்கை பலன் 
(குரு பார்வையும்... குருவுடன் இருந்தாலும்.. பலன் மாறும்)
என்னடா இவன்.. கெட்ட விஷயங்களா.... சொல்கிறாரே.... என நண்பர்கள் யாரும் நினைக்கவேண்டாம். இந்தமாதிரி கஷ்டமான சூழ்நிலை இருக்கிறவங்கதான்... ஜோதிடராகிய எங்கள தேடி வருகிறார்கள்.
அவர்களுக்கு அன்பான வார்த்தைகளையும்... ஜோதிட ஆலோசனைகளையும்... அதன் மூலம் பரிகார தெய்வ வழிபாடுகளையும் சொல்லி அனுப்புகிறோம். இப்படிப்பட்ட அனுபவங்கள் தான் எம்முடைய எழுத்துக்களாக வந்துள்ளது... அந்த அனுபவங்களையே முகநூல் வாட்ஸ் அப் நண்பர்களுக்கு பகிர்கின்றேன்....
இது.... பொதுமக்கள் விழிப்புணர்வுக்காகவும்... நாம்... எமது ஜோதிட மாணவர்களுக்காகவும் எழுதும் கட்டுரை பதிவு இது.
தந்தை வழி முன்னோர்கள் சிறப்பானதொரு வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள்.... வாழ்ந்திருக்கக் கூடும்.
ஜாதகரின் அப்பா சட்டத்திற்கு புறம்பானவராகவும், சூதாட்டங்களில் ஈடுபடுபவராகவும், பொய்யராகவும், வியாதி உடையவராகவும், மனைவியை பிரிந்து வாழ்பவராகவும், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவராகவும் இருப்பார்.
பொதுவா சொல்லப் போனால் அப்பா ஒழுக்கம் இல்லாதவராகவும் இருப்பார்.
ஜாதகரின் அப்பாவுக்கு கோச்சார கிரகங்களின் சூழ்நிலையை பொருத்து எதிர்பாராத கண்டங்கள் தரும், அப்பாவுக்கும் மகனுக்கும் உறவுநிலை சிறப்பாக இருக்காது.
ஜாதகர் பிறந்த காலத்தில் ஜாதகரின் அப்பா மிகவும் கஷ்டப்பட்டு இருப்பார்.
ஜாதகர்... நிர்வாகத்திறமை இல்லாதவராக இருப்பார். அரசாங்கத்தாலும் அரசியல்வாதிகளாலும் தொல்லைகளை அனுபவிப்பார்.
அரசியல் ஈடுபாடு இவர்களுக்கு பயனைத் தராது.
ஜாதகருக்கு அரசு மற்றும் அரசியல் ரீதியான தொல்லைகள் ஏற்படும். அரசியலில் பதவி கிடைக்காது அல்லது பதவியை தவறாக பயன்படுத்துவார். அப்படி பயன்படுத்தும் போது..... ஒரு நாளேனும்.... அரசு தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு.
கண் பார்வை கோளாறு... உயிரனு குறைபாடு.... எலும்பு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாக வாய்ப்பு உண்டு...
இந்த கிரக சேர்க்கை அமைப்பு சீரான வருமானத்தை தடை செய்யும்.
இவர்களுக்கு கடன் கிடைக்காது அல்லது கடன் வாங்கினால் திருப்பிக் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால் போலீஸ் ஸ்டேஷன் படியேறும் சூழ்நிலை கூட வரும்
இந்த கிரக சேர்க்கை பரம்பரை தோஷம் உள்ளதை சுட்டிக்காட்டும். இந்த தோஷம் அவர்கள் பரம்பரையில் யாராவது ஒருவருக்கு திருமண வாழ்வு பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும்.
எமக்கு தெரிந்து மேஷத்தில் இந்த அமைப்பு உள்ளவர்களின்.... தந்தை அரசு உத்தியோகத்தில் இருந்தும்... சூதாட்டத்தில் ஈடுபடுவராக இருக்கிறார். அதனால் சொத்துக்களை இழந்து விடுகிறார்.... ஜாதகரும் அப்பாவும் ஒருவருக்கு ஒருவர் எதிரியைப் போல் நடந்து கொள்கிறார்கள்... நடந்து கொள்வார்கள்.
மேலும் துலாமில் இருக்கும் போது இந்த சேர்க்கை அமைப்பு உள்ள ஜாதகரின் தந்தையார்... கூலி வேலை செய்கிறார் அவர் இரண்டு திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது மேலும் அப்பா செய்த குற்றத்திற்காக... ஜாதகராகிய மகன் தண்டனை அனுபவிக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.... இது ஒருவகையான பித்ரு தோஷம்.... என எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் இவரது தந்தை தன் இனத்தாருடனோ அல்லது தன் சமுதாயத்தினரிடனோ... ஒத்துப் போய் வாழும் சூழ்நிலை இருக்காது.
இது பொதுவான பலன்களே.... அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

சந்திரன் ராகு கிரக சேர்க்கை

சந்திரன் ராகு கிரக சேர்க்கை பலன்... பார்வை பலன்... பார்வைங்கறப்ப இங்க கேதுவும்...ஜ வந்துவிடுவார்....
பலன் என்னவென்று பார்ப்போமா நண்பர்களே.....
ஜாதகருக்கு அடிக்கடி கண்டங்களும் விபத்துக்களும் ஏற்படும் ஜாதகர் தகுதிக்கு மீறி பேராசை காரராக இருப்பார்... அதனால் அவமானத்தையும் அடைவார்
சட்டத்திற்கு புறம்பான செயல்களில் துணிந்து ஈடுபடுவார்கள்... ஙவந விஷ பூச்சிகளால் தொல்லைகள் ஏற்படும்
செய்வினை பாதிப்புகளும் ஆவிகள் தொல்லைகளும் ஏற்படும்..... எதையும் புரிந்து கொள்ளாமல் தான் சொல்வதே சரி.... என்று வாதிடுவார்..
எதைக் கொடுத்தாலும் திருப்தி இருக்காது ... அதிகம் பேராசை காரணமாகவும்.... பொய்யராகவும், நோய் உள்ளவராகவும், அவமானங்களை சந்திப்பராகவும் பழிவாங்கும் உணர்வு உள்ளவராகவும் மாந்திரீக ஈடுபாடு அதிகம் உள்ளவராகவும் இருப்பார்.. ஜாதகருக்கு அடிக்கடி கண்டங்களும் கஷ்டங்களை இருக்கும்
சந்திரன் உணவு என்பதால் ஜாதகருக்கு எது சாப்பிட்டாலும் ஒவ்வாமை நோயாக மாறும் வாய்ப்புண்டு... கட்டுப்பாடில்லாத உணவு பழக்க வழக்கத்தால் அடிக்கடி நோய்வாய்ப் பட்டு அவதியுடக்கூடிய சூழ்நிலை ஏற்படும்
விதவைப் பெண்கள் மீது மோகம் கொள்வார் வெளிநாடு செல்லும் யோகத்தை பெறுவார்.... காரணம் தெரியாத நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு
கிரக சேர்க்கை அம்மாவை இளமையிலே மிகவும் கஷ்டப்பட வைக்கும்... (மனதளவில், உடலளவில், வாழ்க்கை அளவில்)..வறுமையாலும் நோயாலும் கஷ்டப்படக் கூடிய நிலையும் ஏற்படும்...
தன் தாயாராலே தவறாக வழி நடத்தப்பட்டு( தவறு என்று உணர கூடிய சூழ்நிலை இல்லாமலே) வாழ்க்கைக் எ
கெடுத்துக் கொள்பவர்களுக்கும் கிரக சேர்க்கை உண்டு.
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் அதிகம் வாய் பேசாமல் தானுண்டு தன் வேலையுண்டு என தொழிலில் கருத்தாக இருப்பார்களேயானால் *மஹாசக்தி யோகம்* என்னும் யோகத்தை தந்து பெரும் பணக்காரராகவும்... புகழுடையவராகவும்.. மாற்றும்.|
ஜாதகர் வெளிப்பார்வைக்கு தைரியசாலியாக தெரிந்தாலும் கூட.... வாழ்க்கையில் திடீரென ஏற்படும் மாற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை எண்ணம் அல்லது முயற்சி செய்யும் அளவுக்கு செல்வார்கள்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....

Wednesday, November 20, 2019

கேந்திர,கோணங்களில் இருக்கும் ராகு தரும் பலன்கள்

நமது பூமியில் உயிரினங்கள் தோன்றக் காரணமான சூரியனின் ஒளியையே, சிறிதுநேரம் மறைத்துத் தடுக்கும் ஆற்றல் ராகு,கேதுக்களுக்கு இருப்பதாலேயே நமது மூலநூல்கள் கிரகங்களின் வலிமையைக் கணக்கிடும்போது சாயாக் கிரகங்களுக்கு முதலிடம் அளிக்கின்றன.
ஒரு கிரகத்தின் காரகத்துவம் மற்றும் ஜாதகத்தில் அந்தக் கிரகம் ஏற்றுள்ள ஆதிபத்தியத்தின் தன்மைகளைத் தர விடாமல் முழுமையாகத் தடுக்கும், அல்லது குறைக்கும் ஆற்றல் நவ கிரகங்களில் ராகுவிற்கு மட்டுமே உண்டு
சூரியனுக்கு அருகே ஒரு குறிப்பிட்ட டிகிரிக்குள் நெருங்கும் கிரகங்கள் அஸ்தங்கம் எனும் பெயரில் எவ்வாறு வலுவிழக்கின்றனவோ, அதேபோல் ராகுவிடம் நெருங்கும் கிரகமும் வலுக் குறையும். குறிப்பாக ராகுவிற்கு எட்டு டிகிரிக்குள் நெருங்கும் ஒரு கோள் ராகுவினால் சுத்தமாக பலவீனமாக்கப்பட்டு தனது இயல்புகள் அனைத்தையும் பறி கொடுத்து விடும்.
அதாவது அதிக ஒளியையும்ஒளியே இல்லாத ஆழமான இருட்டையும் நெருங்கும் கிரகங்கள் தங்களின் சுயத் தன்மையை இழப்பார்கள்.
உதாரணமாக, ராகுவிடம் மிக நெருங்கும் குரு, குழந்தைகளையும், அதிகமான பண வசதியையும், நேர்மையான குணத்தையும், ஆன்மீக ஈடுபாட்டையும் தரும் சக்தி அற்றவர்.
ராகுவுடன் நெருங்கி இணையும் சுக்கிரன், பெண் சுகத்தையும், உல்லாசத்தையும், காதல் அனுபவம் மற்றும் சுக வாழ்வையும் தர மாட்டார். செவ்வாய் தன் இயல்புகளான கோபம், வீரம், வெறித்தனம், கடினமனம், சகோதரம் போன்றவற்றை இழப்பார்.
ராகுவிடம் சரணடையும் சனியால் வறுமை, தரித்திரம், கடன், நோய், உடல் ஊனம் போன்றவற்றைத் தர இயலாது. சந்திரன் மனதிற்கும், மனம் எடுக்கும் முடிவுகளுக்கும் காரணமானவர் என்பதால் ராகுவிடம் நெருங்கும்போது மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை ஜாதகர் இழந்து மனநலம் குன்றுவார். தாயன்பு பறி போகும்.
புதனுடன் இணையும் ராகுவால் நிபுணத்துவம் குறையும். அறிவாற்றல் அளவோடுதான் இருக்கும். கணிதத் திறமை காணாமல் போகும். சூரியன் ஆன்ம பலத்தையும், அரசுத் தொடர்பு, அரசலாபம், தந்தையின் ஆதரவு போன்றவற்றைத் தரும் வலிமையை இழப்பார்.
ஒரு கிரகம் உச்சம், மூலத் திரிகோணம், ஆட்சி போன்ற எத்தகைய வலிமை நிலையில் இருந்தாலும் சரி…! அது ராகுவுடன் மிகவும் நெருங்கினால் அத்தனை வலிமையையும் இழக்கும். மேலே சொன்னவைகளை நீங்கள் நன்றாக அறிந்த ஜாதகத்தில் ஒப்பிட்டுப் பாருங்கள். சரியாக இருக்கும்.
உதாரணத்திற்கு நம் காலத்தில் வாழ்ந்த தெய்வம், காமாட்சி என்ற பெயர் தவிர பெண்ணின் வாசனை கூட அறியாமல், துறவுக்கு உண்மை அர்த்தமாய் சொகுசு வாழ்க்கை தவிர்த்து, நம் கண்முன் நடமாடிய மகான் காஞ்சி மகாபெரியவரின் அவதார ஜாதகத்தில் மீனத்தில் உச்ச சுக்கிரனுடன் ராகு இணைந்ததைச் சொல்லலாம்.
சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் பெற்றிருக்கும் நிலையில் கூட ஒரு கிரகம் பரிவர்த்தனை அடைந்திருந்தால் தன் சுயபலத்தை பெறும் என்று நமது கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ராகுவிடம் இணைந்த கிரகங்களுக்கு அவ்வாறு விமோசனம் கிடையாது.
(எப்போதும் சூரியனுடன் இணைந்தே இயங்குவதால் புதனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்று மகாபுருஷர் காளிதாசர் சொல்லுகிறார். அதுபோல சுக்கிரனுக்கும் அஸ்தங்க தோஷம் இல்லை என்று வேறு சில மூலநூல்கள் சொல்லுகின்றன.)
நான் மேலே சொன்னவைகள் குறிப்பிட்ட கிரகங்களின் காரகத்துவங்கள் மட்டும்தான். ஜாதகத்தில் மேற்கண்ட கோள்கள் எந்த ஆதிபத்தியங்களுக்கு உரியனவோ அவைகளும் அந்தக் கிரகங்கள் வலுவிழந்ததால் பாதிக்கப்படும்.
அதாவது ஐந்துக்குடையவன் ராகுவுடன் நெருங்கினால் புத்திர பாக்கியம், அதிர்ஷ்டம், சிந்தனை மற்றும் செயல்திறன் பாதிக்கப்படும். ஆறுக்குடையவன் ராகுவுடன் இணைந்தால் ஜாதகர் நோயற்ற நிலை, கடன் வாங்க அவசியமின்மை, எதிரிகளற்ற வாழ்வு போன்றவைகள் அமையப் பெறுவார்.
ஏழுக்குடையவனுடன் ராகு இணைவு பெற்றால் தாமத திருமணம் அல்லது திருமணமே இல்லாத நிலை, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் போன்ற பலன்கள் நடைபெறும். அஷ்டமாதிபதி ராகுவுடன் மிக நெருங்கி இருந்தால் அந்த ஜாதகர் தீர்க்காயுள் வாழுவது கடினம்.
அதேநேரத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். தன்னுடன் மிக நெருங்காமல் அதேராசியில் குறிப்பிட்ட டிகிரி இடைவெளியில் இருக்கும் கிரகங்களின் இயல்பை ராகு பெறுவார் என்பதால், தன்னுடன் இணைந்த கிரகங்களின் காரக மற்றும் ஆதிபத்திய பலன்களை ராகுபகவான் தனது தசை, புக்திகளில் செய்வார். அதாவது அவர்களிடமிருந்து பறித்ததை ராகு தனது தசையில் தருவார்.
உதாரணமாக, குருவுடன் இணைந்து நல்ல ஸ்தானங்களில் அமர்ந்த ராகுவின் தசையில் மிகப் பெரிய தனலாபம், புத்திர பாக்கியம் போன்றவைகளும், சுக்கிரனுடன் இணைந்து நல்ல இடங்களில் அமர்ந்த ராகுவின் தசையில் சொகுசு வாழ்க்கையும், பெண்களால் சுகமும் இருக்கும்.
அதேபோல பாபக் கிரகங்களுடன் இணைந்த ராகு அவர்களின் கெட்ட காரகத்துவங்களை தனது தசையில் பிரதிபலித்து ஜாதகரை கஷ்டங்களுக்கு உள்ளாக்குவார். குறிப்பாக சனி, செவ்வாயின் பார்வை மற்றும் இணைவைப் பெற்ற ராகு தன் தசையில் நல்ல பலன்களைச் செய்வது கடினம். மேற்கண்ட இருவரும் லக்ன சுபர்களாக இருந்தாலும் இதே நிலைதான்.
ஒரு கிரகம் ராகுவுடன் எத்தனை டிகிரியில் இணைந்திருக்கிறது, வேறு ஏதாவது பலவீனத்தை அந்தக் கிரகம் அடைந்திருக்கிறதா, அதோடு அவர்கள் இருக்கும் ராசி எப்படிப்பட்டது, லக்னத்திற்கு அந்த ராசி எத்தனையாவது பாவம், மற்றும் ராகுவிற்கு அந்த பாவம் வலிமையான இடமா என்பதோடு,
வேறு யாருடைய பார்வை மற்றும் தொடர்பு ராகுவிற்கு இருக்கிறது, ராகுவும் அவருடன் இணைந்த கிரகமும் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார்கள், அந்த நட்சத்திரநாதன் லக்னத்திற்கு சுபரா, அசுபரா, என்ன பாவத்திற்கு உரியவர், போன்ற நுணுக்கமான விஷயங்களை சரியாகக் கணிக்க முடிந்தால் போதும். ஒருவருக்கு ராகுதசை எத்தகைய பலன் தரும் என்பதை துல்லியமாகச் சொல்லி விடலாம்.
கேந்திர, கோணங்களில் இருக்கும் ராகு என்ன பலன்களைத் தருவார்?
கேந்திர, கோணங்களில் இருக்கும் ராகு தனது தசா, புக்திகளில் அந்த பாவத்தைக் கெடுப்பார் என்பது பொதுவான ஜோதிட விதி.
ஆனால் இயற்கைச் சுப கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற விதியின் மறைவில் இயற்கை பாபக் கிரகங்கள் திரிகோணங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற சூட்சுமம் உள்ளது. இதுவே பாதகாதிபதிகளின் தத்துவம் என்ற எனது ஆய்வு முடிவினை ஒட்டியும், இயற்கைப் பாபரான ராகு, தான் இருக்கும் வீட்டு அதிபதியின் தன்மையை பிரதிபலிப்பவர் என்பதாலும், சனி செவ்வாயின் வீடுகள் ஐந்து, ஒன்பதாம் இடங்களாகி அந்த வீடுகளில் இருந்தால் மிகக் கடுமையான பலன்களைத் தருவார்.
இந்த அமைப்பின்படி கடகம், துலாம் ஆகிய லக்னக்காரர்களுக்கு ராகு ஐந்தாமிடத்தில் கெடுதல்களைச் செய்வார்.
மேற்கண்ட அமைப்பில் நடக்கும் ராகு தசை, புக்திகளில் குழந்தைகள் சம்பந்தப் பட்டவைகளில் கெடுபலன்களும், புத்திர சோகமும், வாரிசு விரோதம், அவர்களால் அவமானம், அதிர்ஷ்டக்குறைவு, பூர்வீக சொத்துக்கள் இழப்பு போன்ற பலன்கள் நடக்கும். மேலும் ஐந்தாமிட ஆதிபத்தியங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.
அதேபோல மிதுனம், மீனம் ஆகிய லக்னத்தவர்களுக்கு ராகு ஒன்பதாமிடத்தில் கெடுபலன்களை நடத்துவார்.
இந்த லக்னத்தவர்களின் ஒன்பதாமிட ராகு தசையில் தந்தையின் ஆதரவை இழத்தல், தந்தையின் மறைவு, விரோதம், பாக்யங்கள் பறிபோகுதல் போன்றவை நடக்கும்.
மேலே கண்ட லக்னங்களுக்கு திரிகோணங்களில் ராகு தனித்த நிலையில் இருந்தால் சொன்ன பலன்களே நடக்கும். அதேநேரத்தில் ராகு இந்த இடங்களில் சுபர் பார்வை பெற்றோ, ஒரு கேந்திராதிபதியுடன் இணைந்திருந்தாலோ சிறிது மாறுபாடான பலன்களைத் தருவார். ஆனாலும் அடிப்படையில் கெடுபலன்கள் என்பது மாறாதது.
இதைப் போலவே சுப கிரகங்கள் கேந்திராதிபத்திய தோஷம் பெறும் கேந்திர ஸ்தானங்களில் தனித்திருக்கும் ராகு அந்த பாவத்தை முழுமையாகக் கெடுப்பார்.
ஏற்கனவே இந்தத் தொடரில் “காரஹோ பாவ நாஸ்தி” அமைப்பை செயல்படுத்துவது ராகு,கேதுக்கள் தான் என்று நான் எழுதியதைப் போலவே கேந்திராதிபத்திய தோஷத்தை எடுத்துச் செயல்படுத்துவதும் பெரும்பாலும் ராகு, கேதுக்கள் தான்.
அதிலும் சந்திரன் பூரணத்தை நெருங்கும் சமயத்தில் வளர்பிறைச் சந்திரனாக இருக்கும்போது கடகத்தில் தனித்து அமரும் ஏழாமிட ராகு மிகவும் கடுமையானவர். இந்த அமைப்பில் மகரத்தில் சந்திரன் அமர்ந்து ராகுவைப் பார்க்கும் நிலையில் ராகுதசை, புக்திகளில் வாழ்க்கைத் துணையைப் பாதிப்பார்.
அதாவது கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகங்களின் தொடர்பைப் பெற்ற ராகு,கேதுக்கள் அவர்களின் செயல்களை தாங்களே எடுத்து நடத்துவார்கள். இது ராகுதசை, கேதுபுக்தியிலோ அல்லது சம்பந்தப்பட்ட கிரகங்களின் புக்தியிலோ நடக்கும்.

Thursday, August 8, 2019

ராகு யோக பலன்

ரிசபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு ராகுதசா யோகம் தரும். இது பொதுவிதி.
மற்ற லக்னத்திற்கும் ராகு சுபர்களின் தொடர்பில் யோகபலனை தரும். அதிலும் லக்ன சுபர்களின் வீடுகளில் இயற்கை சுபர்களின் வீடுகளில் உள்ள ராகு சிறந்த யோக பலன்களை தரும்.
ராகுவை போல மிக உயர்ந்த யோகபலன்களை மற்ற கிரகங்களால் எந்த நிலையிலும் தரவே முடியாது என்பது எனது கருத்து.
பல விளையாட்டு வீரர்கள் உச்ச நிலையை ராகுதசாவில் தான் அடைந்துள்ளனர்.
பல தொழிலதிபர்கள், அதிகாரத்துறையினர் நம்பர் நிலையை ராகுதசாவில் தான் அடைந்துள்ளனர்
ராகுவிற்கு 3,6,11 ,12 நல்ல இடங்கள்.
ராகுவின் ராசிநாதன் உச்சமடைவது உச்சபச்ச யோகம் தரும்.
ராகுவிற்கு நான்கு கேந்திரங்களிலோ, மூன்று கேந்திரங்களிலோ ( கேதுவை தவிர்த்து) கிரகங்கள் இருப்பது யோகம்.
ராகுவிற்கு சுபரின் பார்வை சேர்க்கை பரிவர்த்தனை நல்ல யோக பலன்களை தரும்.
ராகு புஷ்கராம்சத்தில் இருந்தாலும் ராகு இருந்த ராசிநாதன் புஷ்கராம்சத்தில் இருந்தாலும் யோகபலனை தரும்.
ராகு கேந்திரத்தில் கோணாதிபதியுடனும் கோணத்தில் கேந்திராதிபதியுடனும் இருந்தால் அத்தசாக்காலம் யோகம் தரும்.
லக்ன சுபர்களின் வீடுகளில் உள்ள ராகு நல்ல ராகு.
மேசம், ரிசபம், கடகம், கன்னி, மகரம், தனுசு ராகுவிற்கு நல்ல இடங்கள்.
ராகு லக்ன அசுபராயினும் சுபக்கிரகங்களின் பார்வையையோ சேர்க்கையோ பெற்று நவாம்சத்திலும் சுபர்களின் ராசிகளில் இருப்பது நல்ல பலனையே தரும்.
எனது நண்பர்களின் ஜாதகங்களில் ராகு 12 ல் இருந்தாலும் யோகத்தை தருவதை நிறைய கண்டிருக்கிறேன். அதற்கு அதன் கேந்திரங்களில் பலமான கிரகங்கள் இருப்பதே காரணம் ஆகும்.
தர்ம கர்மாதிபதிகள் போன்ற கேந்திரகோணாதிபதிகளின் சேர்க்கை பெற்ற ராகு யோகமான பலனையே தரும்.
ஐந்திரம், திருதி, வியதிபாதம் ஆகிய யோகத்தில் பிறந்தவர்களுக்கு ராகுதசா சிறந்த யோகத்தை தரும்.
பாலவ கர்ணம், நாகவம் கர்ணம் ஆகிய கர்ணங்களில் பிறந்து ராகு கேந்திர கோணத்தில் இருந்து தசா நடத்தினால் நல்ல சுப பலன்களை தரும். இது மற்ற தசாக்காலங்களை விட வாழ்வின் உன்னத நிலையை தரும்.
பஞ்சாங்கப்படி திதிசூன்ய ராசியில் உள்ள ராகு சிறந்த செல்வந்த யோகத்தை தரும்.
இவை எல்லாம் பொதுபலனே ஆகும். உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள மற்ற அமைப்புகளையும் ஆய்வுசெய்து இதனுடைய பலன்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதாவது லக்னம் வலுவடையாமல் யோகம் இல்லை.

Thursday, July 25, 2019

கேதுவின் சூட்சுமங்கள்

ஒரு கிரகத்தின் செயல்பாடுகள் எனப்படும் காரகத்துவங்களை வைத்து அடையாளப் படுத்தப் படுகையில் வேத ஜோதிடத்தில் ராகு போகக் காரகன் என்றும் கேது ஞானக் காரகன் என்றும் குறிப்பிடப் படுகிறார்கள்.
அருள் அணி, பொருள் அணி என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படும் குரு, சுக்ர தலைமையிலான இரண்டு பிரிவுகளுக்கிடையே, குருவின் நண்பர்களான சூரிய, சந்திர, செவ்வாயின் லக்னங்களுக்கும், குருவின் லக்னங்களுக்கும் சாதகமாகச் செயல்படும் குணத்தைக் கொண்டவர் கேது.
ராகுவும், கேதுவும் ஒரு நேர்கோட்டின் இரண்டு எதிரெதிர் முனைகள் என்பதை வேத ஜோதிடம் ஏற்கெனவே நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறது.
ஒளி உட்புக முடியாத, ஒரு ஆழமான இருட்டின் கடினமான, கருப்பான மையப் பகுதி ராகு என்றால், அதன் மையத்தில் இருந்து விலக விலக, இருள் குறைந்து கொண்டே வந்து ஒளியும், இருளும் சங்கமிக்கும் லேசான ஆரஞ்சு நிறமான ஓரப் பகுதி கேது ஆவார். இதன் காரணமாகவே நமது மூலநூல்கள் ராகுவை கரும்பாம்பு என்றும், கேதுவை செம்பாம்பு என்றும் குறிப்பிடுகின்றன.
இவ்வுலகில் கிடைக்கும் மண், பெண், பொன் போன்ற சராசரி உலக இன்பங்களை அனுபவிக்க வைப்பவர் ராகு என்றால் அவ்வுலக இன்பமான அளப்பரிய ஆன்மிக அருள் இன்பத்தை அனுபவிக்க வைப்பவர் கேது ஆவார்.
அருளாட்சி அற்புதங்களான நமது பேராற்றல் மிக்க திருக் கோவில்களுக்குச் செல்பவர்கள் ஒரு விஷயத்தை தெளிவாகக் கவனித்திருக்கலாம். நம்முடைய  கோவில்களில் வரிசையாக வீற்றிருக்கும் ஆழ்வார்கள், நாயன்மார்களில் பெரும்பாலானோர் கேது மற்றும் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பவர்கள் என்பதே அது.
இன்னும் நுணுக்கமாகச் சொல்லப் போனால் நமது மேலான இந்து மதத்தைத்   தழைத்தோங்கச் செய்த அருட் பெரியார்களான தவத்திரு திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், அருள்திரு மாணிக்க வாசகர், அருளாளர் சுந்தர் ஆகிய நால்வரும் ராகு-கேதுக்களின் நட்சத்திரங்களில் பிறந்தவர்களே
இவர்களில் சம்பந்தர் வைகாசி மூலம், நாவுக்கரசர் சித்திரை சதயம், சுந்தரர் ஆடி சுவாதி, மாணிக்க வாசகர் ஆனி மகம் என்பதே ராகு-கேதுக்களின் ஞானம் தரும் பெருமையை நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கும்.
ஒன்பது கிரகங்களிலும் ஒரு மனிதனை ஆன்மிகத்தில் ஈடுபடுத்தக் கூடியவை குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களாகும். இவர்களில் கேது சுபத்துவம் பெற்ற குருவுடனும், சூட்சும வலுப் பெற்ற சனியுடனும் தொடர்பு கொள்ளும்போது ஒருவருக்கு அளவற்ற ஆன்மிக ஈடுபாட்டினைத் தருவார்.
இதுபோன்ற அமைப்புகளில் கேதுவிற்கு வலுவான இடங்கள் என்று நமது மூல நூல்கள் குறிப்பிடும் கும்பம், விருச்சிகம், கன்னி ஆகிய இடங்களிலோ தனுசு, மீனமாகிய குருவின் வீடுகளிலோ, சனியின் மகரத்தில் சூட்சும வலுப் பெற்றோ, குரு அல்லது சனியின் தொடர்பு அல்லது இணைவில் கேது இருக்கும் நிலையில் ஒருவரை ஞானத்தின் உச்ச நிலைக்குச் செல்ல வைப்பார்.
லக்னத்துடனோ, ராசி எனப்படும் சந்திரனுடனோ சுபத்துவமும், சூட்சும வலுவும் பெற்று கேது சம்பந்தப்படுவாரே எனில், ஒருவரால் பிரம்மத்தை உணரும் ஞானியாக முடியும். போலித்தனமற்ற, பற்றற்ற, உண்மையான, உலகை உய்விக்க வந்த ஞானப் பெரியார்கள் கேதுவால் உருவாக்கப்பட்டவர்கள்.
அதேபோல மனம், சிந்தனை, பாக்கியம் எனப்படும் ஒரு ஜாதகத்தின் ஐந்து ஒன்பது எனப்படும் வீடுகளோடு, கேது நல்ல நிலையில் சம்பந்தப்பட்டிருந்தாலும் ஒருவருக்கு ஆன்மிக ஈடுபாடு வரும். இதுபோன்ற ஜாதக அமைப்புள்ள ஒருவர் கேதுவின் சுப, சூட்சும வலுவினைப் பொருத்து ஒரு ஆன்மிக மடத்தின் தலைவர், ஜகத்குரு, ஆகிய நிலையிலிருந்து சிறு கிராமத்துக் கோவிலின் பூசாரி என்ற நிலை வரை இருப்பார்.
உண்மைகளையும், ரகசியங்களையும், சூட்சுமங்களையும் உணர வைப்பவர் கேது தான். ஒருவரின் ஜாதகத்தில் கேது இருக்கும் படிநிலை வலுவைப் பொருத்தும், அவரது சுப, சூட்சும வலுவைப் பொருத்தும் ஒருவரால் தான் இருக்கும் துறையின் மறைபொருள் அம்சங்களை உணர முடியும்.
இதுபோன்ற ஜாதக அமைப்புள்ளவர்களுக்கு ஒரு பொருளின் அல்லது ஒரு கருத்தின் இன்னொரு பரிமாணம் புரியும். இது விஞ்ஞானத்திற்கும், ஆன்மிகம் எனப்படும் மெய்ஞானத்திற்கும் பொருந்தும்.
விஞ்ஞானியும், ஞானியும் ஒரு கண்டுபிடிப்பாளன் என்ற வகையில் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள் இருவரையும் உருவாக்குபவர் கேது தான். ஜாதகத்தில் புதன் நேர்வலுப் பெற்று கேதுவோடு சம்பந்தப்பட்டால் அவர் விஞ்ஞானியாகவும், புதனை விட குருவோ சனியோ வலுப்பெற்று அவர் கேதுவோடு சம்பந்தப்பட்டால் அவர் மெய்ஞானியாகவோ இருப்பார்.
அதேபோல கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகியவற்றில் சந்திரனோ லக்னமோ அமர்ந்திருந்தாலும் அந்த ஜாதகருக்கு நமது வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்ற சூட்சுமங்களை உணரும் ஆற்றலும் வரும்.
இன்னுமொரு கருத்தாக ராகுவும், கேதுவும் இருவேறு கிரகங்களாக நமக்குச் சொல்லப் பட்டிருந்தாலும் அடிப்படையில் இவை இரண்டும் ஒரே கிரகம் தான். அதனால்தான் ராகுவும், கேதுவும் ஒரு பாம்பாக வர்ணிக்கப்பட்டு பாம்பின் தலையாக ராகுவும், வாலாக கேதுவும் உருவகப் படுத்தப்பட்டு நமக்குச் சொல்லப்பட்டன.
எனவே ராகு அல்லது கேது நல்ல பலன்களைத் தரவேண்டுமெனில் இருவருமே ஒரே அமைப்பின், ஒரே விஷயத்தின் நேரெதிர்  முனைகளைத் தொடர்பு கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த ஜாதகருக்கு எதிலும் ஒரு முழுமைத்தனத்தை, சாதிக்கக்கூடிய அமைப்பை ராகு, கேதுக்கள் தங்களது தசையில் தருவார்கள்.
இதற்கு உதாரணமாக இணை அமைப்புகளாகச் சொல்லப்படும் லக்னம், ராசி இரண்டும் ராகு,கேதுக்களின் தொடர்பில் அல்லது நட்சத்திரங்களில் இருப்பது, கணவன் சதயம் நட்சத்திரமாகி, மனைவி மகம் நட்சத்திரமாக இருப்பது போன்ற அமைப்புகளைச் சொல்லலாம்.
அதேநேரத்தில் ராகு தசையைப் போல, பொருள் வரவை கேது தசை அளிப்பது இல்லை. பொருளைத் தருவது ராகு என்றும் அருளைத் தருவது கேது என்றும் நமது மூலநூல்கள் தெளிவாக பிரித்து சொல்வதாலேயே பொருளால் கிடைக்கும் போகங்களை அனுபவிக்க வைக்கும் ராகு போகக் காரகன் என்றும் அருளால் கிடைக்கும் தெய்வீக ஞானத்தை அனுபவிக்க வைக்கும் கேது ஞானக்காரகன் என்றும் ஞானிகளால் பிரித்துக் காட்டப்பட்டன.
இருக்கும் வீட்டின் அதிபதியின் செயல்களைப் பிரதிபலிக்கக் கூடியவர்கள் ராகு-கேதுக்கள் என்பதால் ஒரு ஜாதகத்தில் கேது பொருளைத் தரும் சுக்கிரனின் வீடுகளில் அமர்ந்தோ, சுக்கிரனுடன் நல்ல நிலைகளில் சம்பந்தப்பட்டோ, அல்லது அந்த ஜாதகத்தின் யோகாதிபதியுடன் தொடர்பு கொண்டோ இருக்கும் நேரத்தில் பொருளையும் தனது தசையில் நேர்வழிகளில் தருவார்.
பொருள் தரும் விஷயத்தில் ராகுவிற்கும், கேதுவிற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் எப்படி இந்த பணம் வந்தது என்று மறைமுகமான வழிகளில், வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு ராகு பணம் தருவார் என்றால் வெளிப்படையாகச் சொல்லக் கூடிய கவுரவமான வழிகளில் கேது பணத்தைத் தருவார்.
அதுபோலவே தோஷ அமைப்புக்களிலும் ராகுவைப் போல கடுமையான கெடுபலன்களை கேது செய்வது இல்லை. உதாரணமாக ஒரு கிரகத்தின் அருகில் மிக நெருக்கமாகச் செல்லும் ராகு அக் கிரகத்தின் அனைத்து காரகத்துவங்களையும் பறித்து தானே தன் தசை வரும் போது அந்த ஜாதகருக்கு அளிப்பார் என்பதே ஏற்கனவே ராகுவின் சூட்சுமங்களில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
இதன் உண்மையான அர்த்தம் என்னவெனில் ராகுவுடன் மிக நெருக்கமாக இணையும் கிரகம் முழுமையாக ராகுவிடம் சரணடைந்து வலிமை இழக்கும் என்பதுதான்.
இதுபோன்ற வலுக்கட்டாயமாகப் பறிக்கும் வேலைகளையும், மற்றக் கிரகத்தை ஆக்கிரமிக்கும் வேலைகளையும் கேது செய்வது இல்லை. கேதுவுடன் மிக நெருக்கமாக இணையும் ஒரு கிரகம் ஒருபோதும் தனது சக்திகளை முழுக்க இழப்பது இல்லை. தன்னுடைய செயல்பாடுகளை ஜாதகருக்குத் தரும் வலிமை அந்தக் கிரகத்திற்கு இருக்கவே செய்யும்.
ராகு என்பது ஆழமான, ஒளி புக முடியாத, எதையும் பார்க்க முடியாத ஒரு இருட்டு என்பதால் அதனுடன் இணையும் ஒரு கிரகத்தின் ஒளி வெளியே தெரிய முடியாது. ராகுவிடமிருந்து அந்தக் கிரகத்தின் ஒளி தப்பித்து அந்த மனிதனுக்கு நன்மைகளையோ, தீமைகளையோ செய்ய முடியாது.
ஆனால் கேது என்பது ஆழமற்ற, நாம் ஊடுருவிப் பார்க்கக்கூடிய, மேலோட்டமான இருட்டு என்பதால் கேதுவுடன் இணையும் ஒரு கிரகத்தின் சுய ஒளி ஓரளவு உயிர்ப்புடன், தாக்குப் பிடிக்கும் திறனுடன் இருக்கும். முழுக்க முழுக்க அந்தக் கிரகத்தின் ஒளி கேதுவுக்குள் அமிழ்ந்து விடுவதில்லை, மறைந்து விடுவதில்லை. எனவே கேதுவுடன் இணையும் ஒரு கிரகத்திற்கு நன்மை, தீமைகளைச் செய்யும் தகுதி இருக்கும்.

Tuesday, July 16, 2019

மூச்சு

ஜாதகத்தில் குரு+கேது சேர்க்கை உள்ளவர்களால் அதிக நேரம் மூச்சை அடக்கியிருக்க முடியும். கேதுவின் அம்சமான மீன்கள் நாம் சுவாசிப்பது போல் காற்றை நேரடியாக மூக்கு வழியாக சுவாசிப்பதில்லை. ஆனால் வாய் வழியே நீரை உள்ளிழுத்து நீரில் உள்ள பிராண வாயுவை நேரடியாக ரத்தத்தில் சேர்த்துக்கொள்கிறது. 
ஜாதகத்தில் குரு+ராகு சேர்க்கை உள்ளவர்களால் அதிக நேரம் மூச்சை அடக்கமுடியாது. ராகுவின் அம்சமான பன்றிகள் வேக வேகமாக மூச்சை விடுபவை , அது போல் குரு+ராகு சேர்க்கை உள்ளவர்கள் வேக வேகமாக மூச்சை விடுவார்கள். பன்றி போல் மூச்சு விட்டால் அது ஆயுளைக்குறைக்கும். 
மீன் மூச்சு விடுவது குரு+கேது 
பன்றி மூச்சு விடுவது குரு+ராகு
ஆமை மூச்சு விடுவது குரு+சனி

பூச்சியினால் அவதி

கோச்சார சனி கோசார கேது ஜாதகத்தில் உள்ள ராகு, குருவை சந்திக்கும் நேரம் அந்த அந்த காலகட்டத்தில் ஜாதகர் ஏதாவது ஒரு பூச்சியினால் தினமும் தூங்காமல் அவதிப்படுவார்.. 
குறிப்பு: 
சனி- இருட்டு,
ராகு- கடித்தல், 
கேது - பூச்சிகள் ( insects)
குரு - Native...

Friday, July 5, 2013

களத்திர தோசம் சில‌ விதிகள் ஜோதிடக்குறிப்பு

      களத்திர தோசம் என்பது திருமண தாமதம், திருமணம் அமையாத நிலை, திருமணம் நடந்தும் பிரச்சனைகள், பிரிவு, மறுமணம் ஆகியவையே. அதற்கான சில விதிகள் இதோ...............

1) களத்திர காரகன் சுக்கிரன் (அ) களத்திராதிபதி கன்னியில் அமரக்கூடாது. அது களத்திரதோஷத்தை உண்டு பன்னும்.

2) எந்த ஒரு கிரகங்களாயிருந்தாலும் கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்தால் பலம் வாய்ந்தவர்களாகி விடுவார்கள். பொதுவாக 7ம் அதிபதியை விட 11ம் அதிபதி பலம் பெற்றால் மறுதார அமைப்பை ஏற்ப்படுத்தி விடும். 11ம் இடம் மறுதாரத்திற்க்குரிய இடம்.

3) பொதுவாக சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோசத்தை உண்டு பன்னுவார்கள். காலம் க்டந்த திருமணம், திருமணம் நடக்காத நிலை, திருமணம் நடந்தாலும் சற்று சன்னியாச வாழ்க்கை தான்.

4) களத்திர பாவத்திற்கு (அ) களத்திராதிபதிக்கு (அ) சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோசம் தான்.

5) 2ல் வக்கிரகிரகங்கள் இருந்தாலும், 2ம் இடத்தை வக்கிரகிரகங்கள் பார்த்தாலும், 2ம் அதிபதி பகை நீசம் பெற்று கெட்டிருந்தாலும் குடும்பம் அமைவதை தடை செய்யும், திருமணம் காலதாமதமாகும்.

6) சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை பல தாரத்தை உண்டு பண்ணும்.

7) பொதுவாக களத்திர காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி, சந்திரனுக்கு 7ம் இடத்ததிபதி, சுக்கிரனுக்கு 7ம் அதிபதி ஆகிய அனைவருக்கும் களத்திரத்தில் பங்கு உண்டு. அனைவரையுமே ஆராய வேண்டும்.

8) 7ம் இடத்திற்கு அம்சாதிபதி நின்ற அம்சாதிபதி அலி கிரகமானாலும் மறுமணத்திற்க்கு வித்திடும்.

Monday, May 27, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 7 ஜோதிடக்குறிப்பு

காலசர்ப்பயோகத்தில்......
      ராகு 10ம் இடத்திலும் கேது 4ம் இடத்திலும்

   ராகு இந்த இடத்தில் கெட்டிருந்தால் மட்டும் ஜாதகரின் முடிவெடுக்கும் தன்மை, தலைமைப்பண்பு ஆகியவற்றை கெடுக்கககூடும் அதுவும் ஜாதகரின் அளவற்ற ஆசையால் மற்றும் பொருமையின்மையால் மட்டுமே நடைபெறும் விதமாக அமையும்.

   ராகு 10ல் உபஜெய ஸ்தானத்தில் நல்ல பலன்களையே வழங்குவார். ஆனால் கேது 4ல் சுகமான ஒரு வாழ்க்கைத் தேடலுக்கு தடையாகவே இருக்கும். அதாவது ராகு 10ல் பொது வாழ்க்கைக்கான பொருப்புகளுடன் ஜாதகர் இருப்பதால், குடும்ப, வீட்டு விசயங்கள் பலமிலந்து காண‌ப்படும்.

   ஆனால் 10ல் உள்ள ராகு பொது வாழ்க்கைகான தலைமைப்பண்பை தலைமை வாழ்வை பல வருடம் யாரும் உடைக்க முடியாத அளவுக்கு வழங்குவார். அதே நேரம் 4ல் கேது ஜாதகருக்கு ஒரு பாதுகாப்பு இல்லாதது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது, வாழ்க்கைகான அடித்தளம் நகருவதைப் போல் ஒரு உணர்வைத்தருகிறது.
 
   4ல் கேது பாதுகாப்பு இல்லாத உணர்வையும், பலவீனமான இதயத்தையும் தருவதால், உடல் நிலையில் கவனம் தேவை.

ராகு 11ம் இடத்திலும் கேது 5ம் இடத்திலும்

   ராகு 11ல் ஜாதகருக்கு, சம்பாத்தியத்தில் பிரச்சனையும், மூத்த சகோதரர் எதிரியாகக்கூடும், மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.

   இங்கே ராகு பலமுடன் இருந்தால், இது லாப ஸ்தானதுடன் சம்பந்தமாதலால், உபஜெய ஸ்தானமாதலால் குறிபிடப்படும்படியான வருமானமும் அதுவும் புத்திசாலியான வழியிலும் மற்றும் வேறு மற்ற வழிகளிலும் உதாரணத்திற்கு கிரிக்கெட் சூதாட்டம், ஷேர் மார்கெட் போன்ற வழிகளிலும் வரவு வரும்.

   கேது 5ல் பிள்ளைகளுக்கு சரியில்லாத‌ நிலை என்பர், புத்திசாலித்தனத்தை குறைக்கும் நிலை அல்லது புத்திசாலித்தனம் பயன்படாத நிலை என்று சொல்லுவர்.

 ராகு 12ம் இடத்திலும் கேது 6ம் இடத்திலும்

   பொதுவாக ஜாதகருக்கு ராகு 12ல் துர்ஸ்தானத்தில் நல்ல பலன்களையே வழங்க வேண்டும். ராகு இந்த இடத்தில் ஜாதகரை எப்பொழுதும் கற்பனையிலேயே மிதக்க வைத்து விடுவார். நிகழ்காலத்தில் ஜாதகர் இருக்கவே மாட்டார். பொய்ய்த்தோற்றத்திலேயே வாழ்வார்.

    6ல் உள்ள கேது உடல் நிலையை பற்றிய கவலை என்பதே இருக்காது, கருத்துவேறுபாடுகள் என்பதே இவரிடம் இருக்காது. இவரிடம் வாக்குவாதம், ஒப்பந்தம் என்பது வீண்.

   பொதுவாக கேது 6ல் ஜெயிலுக்கு கூட அனுப்பலாம், ஆனல் அதில் இருந்து இவர்கள் வெளிவர மாட்டார்கள், ஜெயிலில் இருந்து வெளிவர முயற்ச்சிக்கக்கூட மாட்டார்கள். வேலை செய்யும் இடத்தில் புதிதாக ஏதாவது செய்வதாக் நினைத்துக்கொண்டு சிக்கலில் மேலும் மேலும் மாட்டிக்கொள்வார்கள்.
                                                     ..........தொடரும்

Thursday, May 23, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 6 ஜோதிடக்குறிப்பு


காலசர்ப்பயோகத்தில்......
      ராகு 7ம் இடத்திலும் கேது 1ம் இடத்திலும்
 
   ஜாதகரின் கூட்டளிகள், மனைவி ஆகியவர்கள் சுயநல வாதிகளாகவே இருப்பர், கெட்டவர்கள் இந்த இடத்தில் ராகு கெட்டிருந்தால் நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
 
   ராகு 7ல் பலமுடன் இருந்தால், ஜாதகரின் கூட்டளிகள், மனைவி ஆகியவரின் ஆசை மிகுந்த குறிக்கோள் ஜாதகருக்கு நன்மை செய்வதாகவே அமைகிறது.
 
   ஆனால் 1ல் உள்ள கேது ஜாதகருக்கு ரத்தக்க்கொதிப்பு, தலைவலி, வாழ்க்கையில் உற்சாகமின்மை, அதனால் நோய் சாதரணமாக பீடிக்கும் தன்மை ஆகியவற்றை வழங்குகிறது.

ராகு 8ம் இடத்திலும் கேது 2ம் இடத்திலும்

   ஜாதகருக்கு, புது விதமான சமயத்தில் தீர்க்க முடியாத நோயாலும், செய்வினையாலும், திடீர் அதிர்ச்சியாலும் பிரச்சனைகள் வரக்கூடும், மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.

   இங்கே ராகு பலமுடன் இருந்தால், திடீர் பண வரவு, வாழ்க்கையில் பல ரகசியமான நடவடிக்கைகள், சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்கும் தன்மை, விஷத்தை பயண்படுத்தி நோய் தீர்க்கும் தனமை, மனநலத்திற்கு தீர்வு சொல்பவர்களாக அமைவர்.

   கேது 2ல் மிகுந்த வருமானம் ஆனால் சேமிப்பற்ற நிலை, குடும்ப நபர்களிடம் ஏதும் எதிர்பார்க்க முடியாத நிலை, முகத்திலும், பல்லிலும் மருத்துவம் பார்க்கும் நிலை ஆகியவற்றை ஏற்படுத்தும். பொதுவாக ஜாதகர் செல்வத்தில் ஒரு உறுதியற்ற நிலையும், தன்னுடைய குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் இருப்பார்.

 ராகு 9ம் இடத்திலும் கேது 3ம் இடத்திலும்

   பொதுவாக ஜாதகருக்கு ராகு 9ல் கெட்டிருந்தால் பணநஷ்டத்தை சூதாட்டத்தில் ஏற்படுத்துவார் என்றும் ஜாதகருக்கு தெய்வந‌ம்பிக்கை என்பதே இருக்காதென்பது விதி.

   இந்த இடத்தில் ராகு பலமுடன் இருந்தால் அதிக ஆன்மீக நம்பிக்கையும், அதைப்பற்றியே போதிக்கும் போதகர்களாகவும் இருப்பர். ஆனால் அவர்கள் போதிக்கும் போதனைகள் சற்று முரண்பட்டதாகவே இருக்கும்.
 
   3ல் உள்ள கேது கெட்டிருந்தால் ஜாதகருக்கு குடும்ப உறவு சுமூகமாக இருக்காது, அத்துடன் அமைதியான மனநிலை என்பது அமையவே அமையாது, அதனால் ஜாதக்ர் வாழ்க்கையை எப்போதும் தவ‌றாகவே எடுத்துக்கொள்வார். இவருக்கு மற்றவர்களுடன் பேச்சு வழி உறவு என்பது எல்லோருக்கும் போல் சரியானதாகவே அமையாது, முரண்பட்டதாகவே அமையும்.

   பொதுவாக கேது உபஜெய ஸ்தானத்தில், 3ல் கெட்ட பலன்களைத்தராது. 3ல் கேது, பேச்சில் சிலர் முரண்பாடானவர்களாக இருந்தாலும் அது மிகப்பெரிய ஒரு பாதிப்பைத் தராது.
                                                     ..........தொடரும்

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 5 ஜோதிடக்குறிப்பு


காலசர்ப்பயோகத்தில்......
      ராகு 4ம் இடத்திலும் கேது 10ம் இடத்திலும்
 
   ஜாதகரின் அதிக பட்ச ஆசையால் தன் தாயாருடன் சுமூக உறவு இருக்காது என்றும் மற்றும் வீடு, வண்டி, வாகனம் ஆகிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்க்கை பிரச்சனைக்குறியதாகவே இருக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
 
   ராகு 4ல் பலமுடன் இருந்தால், ஜாதகர் அசையும் அசையா சொத்துக்கள் சேர்ப்பதில் குறியாக இருகிறார்கள், அதனால் அவர்கள் பல சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கென்று தனி செக்கியூரிடி வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கை அமைகிறது.
 
   ஆனால் 10ல் உள்ள கேது ஜாதகரை பொதுமக்களிடம் இருந்து தனித்து செயல்பட வைப்பதால் இவர்கள் தலைவராகவெல்லாம் ஆக முடியாது.

ராகு 5ம் இடத்திலும் கேது 11ம் இடத்திலும்

   ஜாதகருக்கு, குழந்தைகள், அறிவுத்திறமை, திடீர் பணவரவு, ஆண்மை ஆகியவை பாதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மேலே சொல்லப்ப்பட்டிருக்கும் பலன் ராகு கெட்டிருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஒத்து வருகிறது.

   கேது 11ல் கெட்டிருந்தால் லாபம், புகழ்,  பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது ஆனால் கேது 11ல் பலமுடன் இருந்தால், ஜாதகருக்கு லாபம் நன்றாகவே வருகிறது, கெட்ட கிரகங்கள் உபஜெய ஸ்தானங்களில் 3, 6, 10, 11ல் நல்ல பலன்களையே வாரி வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 ராகு 6ம் இடத்திலும் கேது 12ம் இடத்திலும்

   பொதுவாக கெட்டகிரகங்கள் கெட்ட இடத்தில் மிக நல்ல பலன்களையே வழங்கும் என்பது விதி. குறிப்பாக ராகு 6ல் மிக உயர்வான பலன்களையே தருவார்.

   ஜாதகருக்கு ராகு 6ல் மிக சக்திவாய்ந்த எதிரிகளை தருவார், ஆரோக்கியம் கெடும், கடன்சுமை ஏறும், ஆனால் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி வாழ்க்கையின் உயர்வுப் பாதைக்கு இட்டுச்செல்லும் வழியையும் தருவார்.

   இந்த இடத்தில் ராகு கேதுக்கள் கேந்திரங்களைப் பாதிக்காததால் ஜாதகரின் சமூகத்தோற்றம் கெடாது, உயர்வாகவே இருக்கும்.

   12ல் உள்ள கேதுவால் ஜாதகருக்கு சுக சயனம் கெடலாம். ஆனால் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலைக்கு செல்ல நல்ல ஒரு நிலை இது. ஆனால் தவறான ஆன்மீக குருக்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம்.

Wednesday, May 22, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 4 ஜோதிடக்குறிப்பு


      காலசர்ப்ப யோகத்தில்....
   ராகு 1ம் இடத்திலும், கேது 7ம் இடத்திலும்
      ஜாதகர் எளிதில் எரிச்சலடைபவராகவும், பொருமை இல்லாதவராகவும், எதிலும் திருப்தி இல்லாதவராகவும், கூட்டணி மற்றும் கூட்டுதொழில் குழப்பம் மற்றும் ஏமாற்றம் நிறைந்ததாகவும் இருக்கும்.
      ராகு 1ம் இடத்தில், ஜாதகரின் திருமண பந்தத்தில் பிடித்தம் இல்லாதவராகவும், மனைவி மேல் பிரியம் இல்லாதவராக இருப்பார்.
      கேது 7ம் இடத்தில், மனைவி ஜாதகருடன் வேற்றுமையும், ஜாதகரை உதாசீனம் செய்பவளாக இருப்பாள்.
   ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும்
      ராகு 2ம் இடத்தில், ஜாதகரின் பேச்சு தேள் கொட்டுவது போல் கொட்டுவார், அதே நேரம் விஷகடி அல்லது விஷம் உட்கொள்ளுதல் நிலை ஏற்படலாம்.
      கேது 8ம் இடத்தில், நோய் குணமடைவதில் தாமதம், அறுவை சீகிச்சை, சிறிது மனநலம் பதிப்பு ஏற்படலாம்.
 ராகு 3ம் இடத்திலும், கேது 9ம் இடத்திலும்
      ஜாதகரின் நண்பர்கள், ஜாதகரை விட குறைந்த நிலையை உடையவர்கள் ஏமாற்றுபவர்களாக இருப்பர், கெட்ட கிரகங்களான சனி, செவ்வாய், ராகு போன்றவர்கள் 3ம் இடத்தில் மிக நல்ல பலன்களைத்தரும் என்பது விதி.
      ராகு 3ம் இடத்தில், ஜாதகரின் இளைய சகோதர சகோதரிகள் நல்ல நிலையில், உயர்ந்த லட்சியத்துடன், உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பர்.
      கேது 9ம் இடத்தில், ஜாதகர் தன்னுடைய மதம் மீது நம்பிக்கைகள் இருந்தாலும் அதில் திருப்தி இல்லாமல், அது சம்பந்தமான் விசயங்களை நீக்கிவிட்டு, பொதுவாக மக்களுக்கு சரியாக‌ நன்மை செய்யும் விசயங்களை (சீர்திருத்தவாதியாக‌) மட்டுமே நாடுவர்.
                                                                                                        ..............தொடரும்

Tuesday, May 21, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 3 ஜோதிடக்குறிப்பு


      காலசர்ப்ப யோகமானது, விஷ கடி, திடீர் ஆபத்து, வாழ்க்கையே புரட்டி போடுமளவுக்கு திடீர் மாற்றம், எல்லா விதமாகவும் அவமானப்படுதல் ஆகியவற்றைத் தரலாம்.
      காலசர்ப்ப யோகம், ஜாதகருக்கு, வேலையின்மை, திருமணம் நடக்காமை, வீடற்ற நிலமை, பரதேசி போல் ஒரு வாழ்க்கை, இந்த ஒரு கிரக அமைப்பே தரலாம்.
      இந்த யோகமானது,வாழ்க்கையில் ஒருமுறை மிகமுன்னேற்றமான பாதையில் பயணிக்கவும் (பொருள் வாழ்க்கையில் இதை எற்படுத்துபவர் ராகு), பின் ஒரு முறை பொருள் ப்யணத்தில் தடங்கல் ஏற்ப்பட்டு, அசிங்கப்பட்டு ஆன்மீக வாழ்க்கை அல்லது ஏதுமற்ற ஒரு குழப்பமான் நிலைக்கு தள்ளப்படுதல் (இதை ஏற்படுத்துபவர் கேது). அதாவது பற்று மற்றும் பற்றற்ற நிலையை ஏற்படுத்தும்.
      இதில் ராகுவானவர் பயங்கர தன்னம்பிக்கையை கொடுத்து வாழ்க்கையில் உயர்ந்த பாதைக்கு(பொருள் வாழ்க்கைக்கு) பயணிக்கச் செய்துவிடுவார், இதில் ராகுவனவர் லக்கினம் முதல் ஆறு இடங்களில் அமைய வேண்டும்.
      காலசர்ப்ப யோகத்தில் லக்கினம் முதல் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்கிடையில் அமைய வேண்டும். இதில் லக்கினம் அல்லது ஒரு கிரகம் வெளியே இருந்தாலும் அது காலசர்ப்ப யோகத்தில் வராது.
      அந்த மாதிரி அமைப்பை(ஒரு கிரகமோ அல்லது லக்கினமோ வெளியே அமையப்பெற்றவர்கள்) உடையவர்கள், மிகசிறந்த ஒரு இனத்துக்கோ அல்லது நாட்டுக்கோ தலைவனாகக் கூட ஆகிவிடுவர். அதுவும் உலகப் புகழ் பெற்ற மிக நல்ல தலைவராக இருப்பர்(முக்கியமாக சுக்கிரனோ அல்லது குருவோ ராகு கேதுவை விட்டு வெளியே இருந்தால்).
      பல உலகப்புகழ் பெற்ற நல்ல தலைவர்களின் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்களுக்கு இடையில் அடைபட்டு, ஒரு சில கிரகங்கள் ராகு கேது அமைந்திருக்கும் அதே இடத்தில் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ அதே டிகிரியில் அமையப்பெற்று இருப்பதைக்காணலாம்..........
                                                                                         தொடரும்

Friday, May 17, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 2 ஜோதிடக்குறிப்பு


      ஒன்றாமிடத்திற்கும் மற்றும் ஏழாமிடத்திற்க்கும் இடையில் காலசர்ப்ப யோகம் அமைந்தால் ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல. ஜாதகரின் திருமணவாழ்க்கை மிகவும் கஷ்டமானதாக, சதா தம்பதியருக்கிடையே சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும், தம்பதியருக்கிடையே புரிதல் வரவே வராது. ஆனால் ஏழாமதிபதியோ அல்லது சுக்கிரனோ வலிமையாக இருந்தால் இந்த இன்னல்கள் மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலே கூட இருக்கலாம்.
      நான்காமிடத்திற்கும் மற்றும் பத்தாமிடத்திற்க்கும் இடையில் காலசர்ப்ப யோகம் அமைந்து பத்தாமதிபதி பலம் பெறாவிட்டால், ஜாதகரின் தொழில் அல்லது வேலை சம்பந்தப்பட்ட விசயங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
      காலசர்ப்ப யோகம் ஒரு யோகமாக அமையும் போது அதன் பலன்கள்....
      ஜாதகர் மன அமைதி இல்லாவிட்டாலும், அவர்கள் மிகச்சிறந்த உழைப்பளிகளாகவும், அவர் இருக்கும் தொழில் சார்ந்த துறையில் மிக உயர்ந்த நிலையை அடையவைக்கும்(மற்ற யோகங்கள் இருப்பின் அவற்றின் நிலைகேற்ப்ப). அதற்கான திறமையும் அவரிடம் முழுமையாக காணலாம்.
      அத்துடன் ஜாதகருக்கு நல்ல நண்பர்கள் மற்றும் உற‌வினர்கள் என்பவர்கள் கடைசியில் ஏமாற்றுப் பேர்வழிகளாகவே இருப்பர். காலசர்ப்ப யோக ஜாதகர் அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் பல நிகழ்வுகளால், மனவுறுதி படைத்தவராகவும், ஒரு சாத்வீகமானவராகவும் மெல்ல மெல்ல மாறிவிடுவார்.
                                                                                               தொடரும்..........

Wednesday, May 15, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 1 ஜோதிடக்குறிப்பு


      காலசர்ப்ப யோகம் என்பது அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேது இந்த இருவருகிடையே அமைந்து இருப்பது. காலசர்ப்ப யோகம் என்பதே ஒரு அவயோகம் போல் நம்பப்படுகிறது. காலசர்ப்ப யோகம் அமையப்பெற்ற ஜாதகத்தில் உள்ள மற்ற மிகப்பெரிய யோகங்களைக்கூட தடுத்துவிடும் என்று நம்பப்படுகிறது. ஆனால் காலசர்ப்ப யோகம் அமையப்பெற்றுள்ள வீடுகளைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். காலசர்ப்ப யோகம் அமைந்துள்ள வீடுகள் பின் வருவன மாதிரி அமைந்தால், ஒவ்வொரு அமைப்பிற்கும் பலன்கள் மாறும்....
1. ஒன்றாமிடத்திற்கும் மற்றும் ஏழாமிடத்திற்க்கும் இடையில்.
2. இரண்டாமிடத்திற்கும் மற்றும் எட்டமிடத்திற்க்கும் இடையில்.
3. மூன்றாமிடத்திற்கும் மற்றும் ஒன்பதாமிடத்திற்க்கும் இடையில்.
4. நான்காமிடத்திற்கும் மற்றும் பத்தாமிடத்திற்க்கும் இடையில்.
5. ஐந்தாமிடத்திற்கும் மற்றும் பதினொன்றாமிடத்திற்க்கும் இடையில்.
6. ஆறாமிடத்திற்கும் மற்றும் பன்னிரெண்டாமிடத்திற்க்கும் இடையில்.

      ஒவ்வொரு அமைப்பிற்க்கும் மற்ற ஜாதக அமைப்பை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

      ஆறாமிடத்திற்கும் மற்றும் பன்னிரெண்டாமிடத்திற்க்கும் இடையில் காலசர்ப்ப யோகம் அமைந்தால் ஜாதகருக்கு உலக வாழ்க்கைக்கான பிடிப்புக்கான பலமான யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும், உலக வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் ஆன்மீக வாழ்க்கையை நாடுவார். அதில் மிக உயர்ந்த நிலையை அடைவார்.
                                                       தொடரும்....

Wednesday, September 26, 2012

ஜாதகங்களில் யோகம் அமைய‌ வேண்டிய நிலைகள் ஜோதிடக்குறிப்பு


1. யோகர்கள் லக்கினத்திற்கு 6, 8, 12ல் அமையக்கூடாது.
2. யோகர்கள் ஆறு பலம்(ஷட் பலம்) பொருந்தியவர்களாக இருக்க வேண்டும்.
3. யோகர்கள் நின்ற ராசினாதன் 6, 8, 12ல் இருக்க‌க்கூடாது.
4. யோகர்கள் நீசமாகி நிற்கக்கூடாது.
5. யோகர்கள் அஷ்டமாதிபதி சாரம் பெற்று நிற்கக்கூடாது.
6. யோகர்களுடன் ராகு, கேது நிற்கக்கூடாது.
7. யோகர்களுடன் துர்ஸ்தானாதிபதிகள் நிற்கக்கூடாது.
8. யோகர்களின் தசா இளவயதில் வராமல், மத்திம வயதில் 25க்கு மேல் வரவேண்டும்.
9. ஒரு கோள் இன்னொரு கோளுடன் சேர்ந்து யோகம் உருவாகிறபோது, அவர்களுடைய சொந்த வீடுகளில் இருந்தால் யோக பலன் அபரீதமாக இருக்கும்.
10. யோகருடன் லக்கினத்திற்கு மற்றொரு யோகர் கூடிநின்றாலும், அல்லது கேந்திர கோணாதிபதி கூடிநின்றாலும் பலன் அதன் திசா புத்திகளில் பிரமாதமாக இருக்கும்.
11. யோகனாதன் நின்று பார்கின்ற இடங்களும் பலம் பெறும், அந்த யோகர் செவ்வாய் சனியே ஆனாலும் பலன் நன்றாக இருக்கும்.
12. யோகனதர்களை சுபகிரகங்கள் பார்த்தால் பலன் நன்றாக இருக்கும்.
13. லக்கினாதிபதி நல்ல முறையில், 6, 8, 12ல் அமராமல், யோகங்களில் ஒன்றிரண்டு இருந்தால் ஜாதகரின் முன்னேற்றம் நன்றாகவே இருக்கும்.
14. பரிவர்த்தனை யோகத்தில், பரிவர்த்தனை பெறும் கிரகங்கள் தனது சொந்த வீட்டில் இருப்பதைப் போன்று பலன்கள் வழங்கும்.
15. லக்கினாதிபதி மற்ற வீட்டதிபர்களுடன் பரிவர்த்தனை பெற்றால்(6, 8, 12 வீட்டதிபர்களைத் தவிர) அது மகாசுப பரிவர்த்தனை யோகமாகும்.
16. லக்கினாதிபதி 3ம் வீட்டதிபனுடன் பரிவர்த்தனை பெறுவது களயோகம் என்று ஜோதிடம் பெருமை படகூறுகிறது.
17. லக்கினாதிபதி 6, 8, 12ம் அதிபர்களுடன் பரிவர்த்தனை ஆவது அசுபபரிவர்த்தனை யோகம் என்று பெயர். இதன் பலன் ஒன்றை இழந்து மற்றொன்றை பெருவது ஆகும். உதாரணமாக, இதனால் சமயத்தில் சோகம், அவமரியாதை, அவப்பெயர், நன்மதிப்பு கெடலாம். திடீரென பொருள் ஈட்டுபவராகவும், பதவிசுகத்தை அனுபவிப்பவராகவும் இருக்கலாம்.

Tuesday, September 4, 2012

கொடுமனம் கொண்டவர்கள்? ஜோதிடக்குறிப்பு


      ராகு இருந்த இடத்தில் இருந்து 5ல் மற்றும் 9ல் சனி, குரு இருந்தால் ஜாதகர் சண்டாளன் ஆவார்.
      ராகு இருந்த இடத்துக்கு பத்தாம் அதிபதி நீச்சமடைந்து ராகுவுடன் இருப்பின், அந்த ஜாதகர் செய்யும் பாவச்செயல்கள் பெரும் பிரசித்தி அடையும்.
      சனி லக்கினாதிபதியாகி 6ல் அமர, 6ம் அதிபதி 10ல் அமர்ந்து அவருக்கு இருபுறமும் பாபர்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகம் அடைந்தால். அந்த ஜாதகர்கள் தமக்கு யார் நன்மை செய்திருந்தாலும் பதிலுக்கு அவர்களுக்கு தீமையே செய்வர்.
      லக்கினாதிபதியும் 5ம் அதிபதியும் நீசமடைந்திருந்தாலும் அல்லது லக்கினத்திலும் ஐந்திலும் நீசமடைந்த கிரகங்கள் அமர்ந்திருந்தாலும் அவர்கள் கொடுமையான சித்தம் கொண்டவர்கள்.
      லக்கினாதிபதி லக்கினத்தில் அமர, அவருடன் 5, 6, 10, 11ம் அதிபதிகள் இனைந்திருந்தால், ஜாதகர் தினமும் பலரை ஏமாற்றுபவராக இருப்பார்.
      லக்கினத்திற்க்கு 2ம் வீட்டில் சனியோ, சுக்கிரனோ அமர்ந்து இருந்தாலும் அல்லது 2ம் வீட்டைப் பார்த்தாலும், 5,10ம் அதிபதிகள் பகை நீசமடைந்து 2ல் இருந்தாலும், இத்தகையோர் பேசிப் பேசியே பிறரை ஏமாற்றுபவர்களாக இருப்பர்

Monday, March 12, 2012

நன்மை செய்யாத அமைப்புகள்6 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சுக்கிரனின் தசை நடை பெறும் போது அதில் சுக்கிரனுக்கு நாலில் இருக்கும் கிரகத்தின் புத்தியில் நன்மைகள் தாரா...
      சுக்கிரனுக்கு நாலில் இருக்கும் கிரகத்தின் புத்தியில் தன் துணைவருடன் ஒற்றுமை குறையும். ஆனால் பிரிவைத்தராது மனதளவில் அன்யோன்யத்தை குறைக்கும். இதில் சுக்கிரன் மேஷ‌த்தில் இருந்து சந்திரன் நாலில் இருந்தால் சிக்கல் அதிகம் தான். அதே போல் ராகுவும் சுக்கிரனுக்கு நாலில் இருந்தால் துணைவருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ந‌ம்முடைய நிலைபற்றிய‌ போராட்டத்தை கொடுக்கும்
      ஆனால் தாய்/தகப்பன் உணர்வை அதிகரிக்க செய்யும். அதாவது பிள்ளைகளின் மீது பொறுப்பைக் கொடுக்கும்.
     

Tuesday, November 8, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-3 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் புதனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 3ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
      பொதுவாக புதனுக்கு மூன்றில் உள்ள கிரகங்கள் புதன் தசையில் அதன் புத்தி நடைபெறும் போது மனஅழுத்தம், மிக‌அதிகமான சிந்தனை,  வித்தியாசமான் விபரீதமான சிந்தனைகள், அதிகப்படியான‌ பேச்சு, ஓய்வின்மை, கவலை, நரம்புத்தளர்ச்சி போன்றவைகளை உண்டாக்கலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் சனி இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் எதிர்மறையான சிந்தனைகள், குரூர சிந்தனைகள், சிந்திக்க முடியாத நிலை, அளவுக்கு அதிகமான மூளைக்கு வேலை, எரிச்சல், எதிர்பாராத பண இழப்பு(fine போன்ற‌வற்றால்) முக்கியமாக மிகுந்த மன அழுத்தத்திற்க்கு உள்ளாகலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் ராகு இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் ஆபத்தான, தைரியாமான, மற்றவர்கள் செய்யத் தயங்கும் செயல்களைப் பற்றிய‌ சிந்தனைகள், விபரீதமான ஆசைகள், அதை நிறைவேற்றிக்கொள்ளும் செயல்கள், கலாச்சாரத்திற்க்கு ஒத்து வராத செயல்கள் ஆகியவை நடக்கலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் கேது இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் பொருளாதார வாழ்க்கை கசக்கும், சகோதர சகோத‌ரிகள் மேல் பற்று சற்று குறையும், அவர்களிடம் இருந்து விலகுவீர்கள் அல்லது அவர்கள் விலகுவார்கள். ஆன்மீகத்தை நோக்கி மனம் செல்லும்; அதில் ஆர்வமுள்ளவர்கள் அதில் முழுமையாக ஈடுபடுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வமில்லாதவர்கள் குழப்பத்திலேயே ஆழ்ந்திருப்பர்.