Sunday, July 3, 2011

வளமான வாழ்வு அமைய‌


1) லக்கினம், லக்கினாதிபதி சிறப்பாக அமைய வேண்டும். ஜாதகருக்கு செல்வம் செல்வாக்கு பெற இந்த அமைப்பு உதவும்...
   அ) லக்கினாதிபதி ஆட்சி, உச்ச, நட்பு வீட்டில் இருப்பது.
   ஆ) லக்கினத்தை குரு பார்ப்பது, ராசியை குரு பார்ப்பது.
   இ) லக்கினாதிபதி சுபர் பார்வை, சேர்க்கை பெற்றிருப்பது.
2) 5,9ம் இடங்கள் அதன் அதிபதிகள் சிறப்பாக இருக்க வேண்டும்
   5,9ம் இடத்ததிபதிகள் ஜாதகத்தில் வலுபெற்றிருக்க வேண்டும், அவிடங்கள் சுபர் பார்வை பெற்றிருந்தால் இன்னும் சிறப்பு. ஜாதகரின் பூர்வபுண்ணிய பலன் அதிகரித்து, நல்ல சுக செளக்கியங்களை அனுபவிப்பார்.
3) தன ஸ்தானமும் லாப ஸ்தானமும் அதன் அதிபதிகளும் பலம் பெற வேண்டும். இருவரும் பரிவர்த்தனை ஆகிருப்பது பிரபல யோகமாக க‌ருதப்படுகிறது.
4) சுகமான வாழ்வு பெற சுகஸ்தானதிபதியும், சுகஸ்தானமும் சிறப்பாக இருக்க வேண்டும்.கல்வி, சொந்தவீடு, வாகனம், நிம்மதியான வாழ்வு, தாய் குறித்த ஸ்தானம் ஆகையால் இந்த ஸ்தானம் நன்றாக அமைவது சிறப்பு.
5) ஒருவரது வேலை, தொழில் முயற்சி வெற்றி பெறவும், நல்ல விதமாக அமையவும் ஜீவன ஸ்தானம் நல்ல விதமாக அமைய வேண்டும். பத்தில் ஒரு பாவியாவது அமைய வேண்டும் என்ற் ஜோதிட மொழிப்படி, பத்தில் கிரகம் நிற்க்க சுபர் பார்வை சேர்க்கை பதமிடத்திற்க்கும், பத்தம்மதிபதிக்கும் ஏற்படுமாயின் வளமான வாழ்வு அமையும்.
6) நல்ல மனைவி அமைந்தால் தானே இல்லறம் இனிக்கும். அதற்க்கு கள‌த்திர ஸ்தானம், அதன் அதிபதி நல்லவிதமாக அமைய வேண்டும். களத்திர ஸ்தானத்தில் பகை நீசம் பெறும் கிரகங்கள் அமராதிருத்தலும், களத்திர ஸ்தானாதிபதி பகை நீசம் மறைவு பெறமலும், சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் அமரமலும் இருந்தாலே போதுமானது, இல்லற வாழ்வு இனிக்கும்.

   வளமான வாழ்வு பெற ஒருவரது ஜாதகத்தில் லக்கினாதிபதி, தானாதிபதி, சுகாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி, களத்திராதிபதி, பாகியாதிபதி, ஜீவனாதிபதி, லாபாதிபதி ஆகிய 8 பேரும் அந்த 8 இடங்களும் சிறப்பாக அமைய வேண்டும். ஆனால் அவ்வாறு அமைவது அபூர்வமே.
   அதனால் இதில் ஏதாவது 3, 4 இடங்கள் அதன் அதிபதிகள் சிறப்பாக இருந்தாலே வளமான வாழ்வு அமையும்.

1 comment:

Vasagan said...

மிக்க நன்றி.லக்கினாதிபதி, தானாதிபதி, சுகாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி, களத்திராதிபதி, பாகியாதிபதி, ஜீவனாதிபதி, லாபாதிபதி பற்றி ஒரு இதழ் வெளியுடுங்கள்.

Post a Comment