Saturday, June 18, 2011

அதிர்ஷ்டசாலி-ஜோதிடக் குறிப்பு


9,10க்கு உடையவர்கள் தரும கருமாதிபதி ஆவர். இவர்கள் பரிவர்தனையாகி நின்றாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக விளங்க முடியும்.
ரிஷப லக்கினகாரர்களுக்கு 9,10க்கு உடையவர் சனியாவார். அவர் கெடாது நல்ல நிலையில் இருந்தாலே ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக விளங்க முடியும்.
9, 10க்கு உடையவர் பரிவர்த்தனை மகர லக்கினகரர்களைத் தவிர இதர லக்கினகாரர்களுக்கு யோக பலன்களைத் தரும்.
மகர லக்கினகாரர்களுக்கு 9, 10ம் இடம் கன்னி, துலாம் ஆகும். கன்னியில் சுக்கிரன் நீசமடைவார். இவர்களுக்கு கன்னியில் சுக்கிரனும் புதனும் இனைந்து நின்றால் சுக்கிரனுக்கு நீச பங்கம் ஏற்ப்படும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக விளங்க முடியும்.
9, 10க்கு உடையவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அமைப்பில் இருவரும் கெடாது சாதாரண நிலையில்(ந‌ட்பு, சமம்) இருந்தால் யோகம் தான். இருவரில் ஒருவர் வலுவாகவும் ஒருவர் சாதாரணமாக இருந்தால் யோகம் அதிகமுண்டு. இருவரும் வலுவாக சுபர் பார்வையுடன் சேர்க்கையுடன் இருந்தால் பிரபல யோகமாகும்.

No comments:

Post a Comment