Friday, May 29, 2020

செவ்வாய் சுக்கிரன் கிரக சேர்க்கை

அடுத்தடுத்து கிரகச் சேர்க்கை பலன் வரிசையில்.....
நாம் காண இருப்பது செவ்வாய் சுக்கிரன் கிரக சேர்க்கை பலன்கள்.....
இந்த செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை தசாவதாரிணி யோகம் என சொல்லக்கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட திறமை உள்ளவர்களாக இருப்பர்... பெரும்பாலும் வாழ்க்கைத்துணை பக்கத்திலேயே அமையும்.
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் பெரும்பாலும் காதல் கலப்பு திருமணம் செய்துகொள்வார்கள்....
இவர்கள் சிறுவயதில் பாலியல் விஷயங்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.
முன் ஜென்மத்தில் வாழ்க்கை துணையாக யாராக இருந்தார்களோ... இந்த ஜென்மத்தில் வாழ்க்கைத் துணையாக ஆவார்கள் என முனிவர்களால் கூறப்பட்டுள்ளது.
கணவன் மனைவி மிக அன்னியோன்யமாக இருப்பார்கள். இவர்களுக்குள் நல்ல வசிய சக்தி இருக்கும். கலைத்துறையில் பிரகாசிக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.
ஜாதகருக்கு சொகுசான வீடு வாகனம் அமையும்
இக்கிரக சேர்க்கை உள்ளவர்கள் காமத்தில் அதிக அதீத ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்...
அழகான வாழ்க்கை துணை அமையும் ஒன்றுக்கு மேற்பட்ட திறமை உள்ளவர்களாக இருப்பார்கள்... எனக்குத்தெரிந்து நீசம் பெற்ற செவ்வாயுடன் இணைந்த சுக்கிரன்.... நீசம் பெற்ற சுக்கிரன் உடன் இணைந்த செவ்வாய் உள்ள ஆண் ஜாதகர்.. காதல் திருமணம் செய்து நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்
ஆட்சி பெற்ற சுக்கிரனோடு இணைந்த செவ்வாய் அமைப்பு உள்ள பெண் ஜாதகரும்..... காதல் திருமணம் புரிந்து நல்லதொரு வாழ்க்கை வாழ்கிறார்.... வாழ்கிறார்கள்.
இந்த கிரக சேர்க்கையுடன் ராகு கேது சேருமானால் சேர்ந்து இருக்குமானால்.... அசுபர்களின் பார்வையும்... தசா புத்தியும் இருக்குமானால்.... ஒழுக்கம் கேள்விக்குறியாக இருக்கும் மிக தவறான வகையில் வருமானம் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் (சூழ்நிலையை ஏற்படுத்தும்). மேலும் காமம் எண்ணங்கள் அதிகமாகும். கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கும்.
இந்த கிரகங்களின் இருப்பு அதன் தன்மை கணவன் மனைவி ஒற்றுமையை கடுமையாக பாதிக்கும். எப்படி எனில் செவ்வாய் சுக்கிரன் இரண்டும் ஒருவருக்கு ஒருவர் 6 / 8 ஆக இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை குறைவாகவே இருக்கும் தசாபுத்தி சாதகமாக இல்லாத பட்சத்தில்... பிரச்சனை மற்றும் பிரிவினையை கூட தந்துவிடும். அல்லது தாம்பத்தியத்தில் திருப்தி இருக்காது அல்லது தாம்பத்தியம் இல்லாமல் செய்துவிடும்.
ஜாதகர் மனைவி கூடவே..... இருந்தாலும் கூட மனைவியுடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ள பிடிக்கவில்லை என சொல்பவர்களும் உண்டு.
இவ்விரண்டு கிரகங்களில் ஏதேனும் ஒன்றுடன் ராகு அல்லது கேது சேரும்போது திருமணம் மிகவும் தாமதமாகவும் திருமணத்திற்கு பிறகு பிரிவினையை தருவதும் எளிதில் நடந்து விடும்.
இந்த அமைப்பு உள்ள ஆண் ஜாதகம் கணவன்-மனைவியும் அடிக்கடி பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலையில் உள்ளனர்... மேலும் இந்த அமைப்பில் தாம்பத்திய சுகம் குறைவாகவே இருக்கும் கணவன்-மனைவி ஈர்ப்பு குறைவாகவும் இருக்கும்.... அந்த இடத்தில் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு குருவின் பார்வை இருக்கும்பட்சத்தில் மனைவியை கடைசிவரை கைவிடமாட்டார்.
செவ்வாய் சுக்கிரன் சம சப்தம பார்வையில் ராகு கேது உடன் இருக்கும்பொழுது கணவன் மனைவிக்கிடையில் வழக்கு வம்புகள் கண்டிப்பாக இருக்கும் அல்லது நடைபெறும். திருமணமாகியும் ஒரு சில வருடங்கள் சேர்ந்து இருந்து..... அதன்பிறகு கோர்ட் கேஸ் வழக்கு என்ன என அலைந்து தீர்ப்பும் வராமல் 15 வருடங்களாக இருப்பவர்களும் உண்டு...
ஆறுதலான விஷயம் என்றால் இவர்களுக்கு கலைத்துறையில் யோகமுண்டு... சொகுசான வீடு வாகனம் யோகம் உண்டு.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்.... உச்ச நீச அடிப்படையில்....
*பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை....*

1 comment:

Anonymous said...

இதற்கான பரிகாரம் எதாவது உண்டா

Post a Comment