Friday, May 29, 2020

சனி ராகு கிரக சேர்க்கை

சனி + ராகு கிரக சேர்க்கை 
ஒருவருக்கு ஜாதகத்தில் இது வேண்டாத..... கூடாத....... கிரக சேர்க்கைகளில் முக்கியமான ஒன்று.
இது கர்ம தோஷம் இருப்பதை சுட்டிக் காட்டும்.
ஜாதகர் எதை செய்தாலும் தவறாகவே முடியும்.
கடுமையான தொழில் தடையை ஏற்படுத்தும்....
வாழ்வில் எவ்வளவு உயரமாக சென்றாலும் பெரும் வீழ்ச்சி ஏற்படுத்தும்......
ஆயுள் தோஷத்தை கூட ஏற்படுத்தும்....
பூர்வீகத்தை விட்டு வெளியேற்றும்....
பூர்வீக ஊரில்.... பூர்வீக சொத்தில் குடியிருக்க விடாது...
குலதெய்வம் அனுகிரகம் இருக்காது...
சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்தும்.... கஷ்டப்பட்டு உழைத்தும்... குறைந்த ஊதியத்தை பெறுதல் என்ற நிலை ஏற்படும்....
சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை, தொழில் செய்பவர்களுக்கு இக்கிரக சேர்க்கை இருக்கும்.
கிரக சேர்க்கை உள்ளவர்கள் அதிக முதலீடு செய்து தொழில் செய்யாமல் இருப்பது நல்லது.
இன்னொருவரிடம் வேலை செய்வதே நல்லது.....
கண்டிப்பாக... பூர்வீக இடத்தில் இருக்கக்கூடாது... பூர்வீக சொத்து இல்லாமல் இருப்பது நல்லது.
எவ்வளவுதான் பெரிய படிப்பு படித்திருந்தாலும்,, தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத... தகுதிக்கு குறைவான இடத்தில்.... குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும்.
மேலும் இக்சேர்க்கை உள்ளவர்களின் நடவடிக்கைகள், யாருக்கும் பிடிக்காது....
யாரையும் மதிக்காமல் தான்தோன்றித்தனமாகவும், சுதந்திரமாகவும் செயல்படக் கூடியவர்களாக இருப்பர்.
விதி வயப்பட்டு செயல்படுவதால் இவர்கள் வாழ்வில் எந்த விதத்திலும் சிறப்படைவதில்லை.
நல்ல திறமை இருந்தும் சரியாக சம்பாதிப்பதிக்காமலும்.... வருமானம் இல்லாமலும் இருப்பர்.
திடீர் வீழ்ச்சியையும் கொடுக்கும்......
ஒரு சிலருக்கு 40 வயது ஆகியும் கூட.... சொல்லிக்கொள்ளும்படி வேலை இல்லாமலும்.... சூதாட்டம்.... திருட்டு என வாழ்ந்து கொண்டிருக்க சூழ்நிலை கூட ஏற்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட முறை விபத்து மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நிலை ஏற்படும்....
ஒரு சிலருக்கு நல்ல திறமை இருந்தும்... தொழில் அமைந்தும்... தன்னுடைய ஒழுக்கக் குறைவினால்... சம்பாதித்த பணத்தை எல்லாம் தொலைத்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.
பூர்வீக சொத்தையும் சேர்த்து அழிக்கும் நிலை ஏற்படும்.
மேலும் முக்கியமாக...... அறியாமல் தவறு செய்து ஏமாறுபவர்களுக்கு கூட இக்கிரக சேர்க்கை இருக்கும்.
இவர்களுக்கு கர்மாவே... தோசமாக இருப்பதால், திடீர் திடீர் என அசுபகாரியங்கள் நடக்கும்.
முக்கியமாக....
இது ""விதி"" கிரகம் என்பதால்.......
நடப்பது..... நடந்தே தீரும்.... ஜாதகர் விரும்பினாலும்......................... விரும்பாவிட்டாலும்......
இச்சேர்க்கை உள்ள ஜாதகர்.... வெளிநாடு அல்லது வெளி மாநிலம் சென்றால்.... மட்டுமே...
தீமை குறைந்து... ஓரளவு நிம்மதியாகவும்.. சிறப்பாகவும்.... வாழலாம்.
இது முழுக்க முழுக்க அந்நிய மதம்....
அந்நிய மொழி.... அந்நிய நாடு...
அந்நிய மனிதர்களாலே லாபம் அடையக் கூடிய கிரகச்சேர்க்கை....
மொத்தத்தில் இது கர்ம வினை பயன்.
இது பொதுவான பலன்களே....
அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.... பாவக ரீதியாக இருக்கும் இடத்தை பொருத்து...
அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... சேர்க்கையில் அல்லது அசுபர்களின் பார்வையில்... சேர்க்கையில்்....
பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை...

No comments:

Post a Comment