Wednesday, May 22, 2013

காலசர்ப்ப யோகம்: ஒரு பார்வை; பகுதி - 4 ஜோதிடக்குறிப்பு


      காலசர்ப்ப யோகத்தில்....
   ராகு 1ம் இடத்திலும், கேது 7ம் இடத்திலும்
      ஜாதகர் எளிதில் எரிச்சலடைபவராகவும், பொருமை இல்லாதவராகவும், எதிலும் திருப்தி இல்லாதவராகவும், கூட்டணி மற்றும் கூட்டுதொழில் குழப்பம் மற்றும் ஏமாற்றம் நிறைந்ததாகவும் இருக்கும்.
      ராகு 1ம் இடத்தில், ஜாதகரின் திருமண பந்தத்தில் பிடித்தம் இல்லாதவராகவும், மனைவி மேல் பிரியம் இல்லாதவராக இருப்பார்.
      கேது 7ம் இடத்தில், மனைவி ஜாதகருடன் வேற்றுமையும், ஜாதகரை உதாசீனம் செய்பவளாக இருப்பாள்.
   ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும்
      ராகு 2ம் இடத்தில், ஜாதகரின் பேச்சு தேள் கொட்டுவது போல் கொட்டுவார், அதே நேரம் விஷகடி அல்லது விஷம் உட்கொள்ளுதல் நிலை ஏற்படலாம்.
      கேது 8ம் இடத்தில், நோய் குணமடைவதில் தாமதம், அறுவை சீகிச்சை, சிறிது மனநலம் பதிப்பு ஏற்படலாம்.
 ராகு 3ம் இடத்திலும், கேது 9ம் இடத்திலும்
      ஜாதகரின் நண்பர்கள், ஜாதகரை விட குறைந்த நிலையை உடையவர்கள் ஏமாற்றுபவர்களாக இருப்பர், கெட்ட கிரகங்களான சனி, செவ்வாய், ராகு போன்றவர்கள் 3ம் இடத்தில் மிக நல்ல பலன்களைத்தரும் என்பது விதி.
      ராகு 3ம் இடத்தில், ஜாதகரின் இளைய சகோதர சகோதரிகள் நல்ல நிலையில், உயர்ந்த லட்சியத்துடன், உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பர்.
      கேது 9ம் இடத்தில், ஜாதகர் தன்னுடைய மதம் மீது நம்பிக்கைகள் இருந்தாலும் அதில் திருப்தி இல்லாமல், அது சம்பந்தமான் விசயங்களை நீக்கிவிட்டு, பொதுவாக மக்களுக்கு சரியாக‌ நன்மை செய்யும் விசயங்களை (சீர்திருத்தவாதியாக‌) மட்டுமே நாடுவர்.
                                                                                                        ..............தொடரும்

1 comment:

தனி காட்டு ராஜா said...

///// ஜாதகரின் நண்பர்கள், ஜாதகரை விட குறைந்த நிலையை உடையவர்கள் ஏமாற்றுபவர்களாக இருப்பர், கெட்ட கிரகங்களான சனி, செவ்வாய், ராகு போன்றவர்கள் 3ம் இடத்தில் மிக நல்ல பலன்களைத்தரும் என்பது விதி.
ராகு 3ம் இடத்தில், ஜாதகரின் இளைய சகோதர சகோதரிகள் நல்ல நிலையில், உயர்ந்த லட்சியத்துடன், உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பர்.
கேது 9ம் இடத்தில், ஜாதகர் தன்னுடைய மதம் மீது நம்பிக்கைகள் இருந்தாலும் அதில் திருப்தி இல்லாமல், அது சம்பந்தமான் விசயங்களை நீக்கிவிட்டு, பொதுவாக மக்களுக்கு சரியாக‌ நன்மை செய்யும் விசயங்களை (சீர்திருத்தவாதியாக‌) மட்டுமே நாடுவர்.//////////


Yes..U are correct...

Post a Comment