Wednesday, November 30, 2011

கலாநிதி யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு இரண்டாமிடத்திலோ, 5ம் இடத்திலோ அல்லது 9ம் இடத்திலோ இருந்து அதனுடன் சுக்கிரனும் புதனும் இனைந்திருந்தாலோ அல்லது அப்படி அமைந்த குருவை சுக்கிரனும் புதனும் பார்த்தாலோ அதற்கு கலாநிதி யோகம் என்று பெயர். இது மூன்று சுபகிரகங்களால் ஏற்படும் மிகச்சிறந்த ராஜ யோகமாகும். இதில் குரு, புதன், சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றால் சிறப்பு இன்னும் கூடுதல்.....
      ஜாதகத்தில் கலாநிதி யோகம் அமையப் பெற்றவர்கள், நீண்ட ஆயுளுடன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில், மரியாதைக்குறியவர்களாக, மிகநல்லவர்களாக, எல்லாவித சுக செளக்கியங்களை அனுபவிப்பவர்களாக, நோயற்றவர்களாக இருப்பர்.

Friday, November 18, 2011

பாரிஜாத யோகம்


      ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியோ அல்லது லக்கினாதிபதி நவாம்சத்தில் அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியோ ராசியில்(இதில் ஒருவரோ அல்லது இருவருமே இணைந்தோ) கேந்திரத்திலோ, கோணத்திலோ அல்லது உச்சம் பெற்றோ அமர்ந்திருந்தால் அதன் பெயர் பாரிஜாத யோகமாகும்
      இந்த மாதிரி அமைப்புடைய ஜாதகர் தன்னுடைய மத்திம வயதிற்க்கு மேல் சுகபோகங்களை அனுபவிப்பராக இருப்பார். அவருக்கு அரசு அரசாங்க மரியாதைகள் கிடைக்கும். அவரிடம் அதிகமான வசதி வாய்ப்புகள் குவியும்.

Wednesday, November 16, 2011

பேரியோகம் ஜோதிடக்குறிப்பு


1) லக்கினாதிபதியும் குருவும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
2) லக்கினாதிபதியும் சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
3) லக்கினாதிபதியும், குருவும், சுக்கிரனும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேந்திரம் பெற்று, 9ம் இடத்ததிபதி ஆட்சி, உச்சம் அல்லது நட்பு நிலையில் இருந்தாலும்,
அதற்க்கு பெயர் பேரியோகம் எனப்படும்.
      இந்த அமைப்பு உடையவர்கள் நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், நோயற்ற வாழ்வு உடையவர்களாகவும், பல வழிகளில் வருமான‌ம் உடையவர்களாகவும், மகிழ்ச்சியாகவும், சகல வசதிகளுடைய வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருப்பர். அவர்களுக்கு நல்ல குடும்பம், குழந்தைகள் அமையும், புண்ணிய ஆத்மாவாக இருப்பர், அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருப்பர். அறிவியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஆர்வமுடயவர்களாக இருப்பர்.

Sunday, November 13, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-5 ஜோதிடக்குறிப்பு


 ஒரு ஜாதகத்தில் சனியின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 6ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
1) அதிக நன்மை தராத வேலை, அதிகவேலையால் பளு.
2) பலர் உங்களைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பது
3) எதிரிகளால் தொல்லை
4) சகமனிதர்கள் ஒத்துழையாமை
5) நோய்களால் தொல்லை
6) திருமண முறிவு
7) தொழில் தொடர்புகள் முறிவு
போன்றவை ஏற்படலாம்...

Friday, November 11, 2011

வித்யுத் யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில், 11ம் இடத்ததிபதி உச்சம் பெற்று சுக்கிரனுடன் கூடி லக்கினாதிபதிக்கு கேந்திரம் பெற வேண்டும், அவ்வாறு அமைந்தால் அது வித்யுத் யோகம் எனப்படும்.
      அந்த அமைப்பு உடைய‌ ஜாதகர் ஒரு உயந்தமனிதர், அன்பானவர், பண்பானவர், மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர், பெரும் புகழுடையவர், பொருளுடையவர், அரசனுக்கு நிகரானவர்.

Thursday, November 10, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-4 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குருவின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 6ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
1) கடவுள் நம்பிக்கை குறையும்
2) ஆன்மீக எண்ணமே தவறு என்ற முடிவுக்கு வரலாம்
3) தான் என்கிற ஆகங்காரம் தலை தூக்கும்
4) மத நம்பிக்கை குறையும்

Tuesday, November 8, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-3 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் புதனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 3ல் உள்ள‌ கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
      பொதுவாக புதனுக்கு மூன்றில் உள்ள கிரகங்கள் புதன் தசையில் அதன் புத்தி நடைபெறும் போது மனஅழுத்தம், மிக‌அதிகமான சிந்தனை,  வித்தியாசமான் விபரீதமான சிந்தனைகள், அதிகப்படியான‌ பேச்சு, ஓய்வின்மை, கவலை, நரம்புத்தளர்ச்சி போன்றவைகளை உண்டாக்கலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் சனி இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் எதிர்மறையான சிந்தனைகள், குரூர சிந்தனைகள், சிந்திக்க முடியாத நிலை, அளவுக்கு அதிகமான மூளைக்கு வேலை, எரிச்சல், எதிர்பாராத பண இழப்பு(fine போன்ற‌வற்றால்) முக்கியமாக மிகுந்த மன அழுத்தத்திற்க்கு உள்ளாகலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் ராகு இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் ஆபத்தான, தைரியாமான, மற்றவர்கள் செய்யத் தயங்கும் செயல்களைப் பற்றிய‌ சிந்தனைகள், விபரீதமான ஆசைகள், அதை நிறைவேற்றிக்கொள்ளும் செயல்கள், கலாச்சாரத்திற்க்கு ஒத்து வராத செயல்கள் ஆகியவை நடக்கலாம்.
      புதனுக்கு மூன்றாம் இடத்தில் கேது இருந்து சுபகிரகங்களின் பார்வையோ/சேர்க்கையோ இல்லாதிருந்தால் அதன் புத்தியில் பொருளாதார வாழ்க்கை கசக்கும், சகோதர சகோத‌ரிகள் மேல் பற்று சற்று குறையும், அவர்களிடம் இருந்து விலகுவீர்கள் அல்லது அவர்கள் விலகுவார்கள். ஆன்மீகத்தை நோக்கி மனம் செல்லும்; அதில் ஆர்வமுள்ளவர்கள் அதில் முழுமையாக ஈடுபடுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வமில்லாதவர்கள் குழப்பத்திலேயே ஆழ்ந்திருப்பர்.

Monday, November 7, 2011

எப்போது திருமணம்? இன்னுமொரு பார்வை ஜோதிடக்குறிப்பு


ஒரு ஜாதகத்திற்க்கு திருமணம் எப்போது கூடிவரும் என்றால்
1) குரு கோச்சார ரீதியாக ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 5, 7 மற்றும் 9ல்(வியாழ நோக்கம் என்று சொல்வார்கள்) வரும் காலத்திலும்
2) அதே போல் லக்கினத்திற்க்கு 7ம் இடத்தை(அதாவது லக்கினத்திற்க்கு 11, லக்கினம், மற்றும் லக்கினத்திற்க்கு 3ம் இடத்தில் குரு வரும் காலம்) கோச்சார ரீதியாக குரு பார்வையிடும் காலத்திலும்.
3) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு குரு கோச்சார ரீதியாக‌ வரும் காலத்திலும் (இந்த அமைப்பு திருமணம் நடப்பதற்க்கு கொஞ்சம் வலுவான அமைப்பு)
4) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டை குரு கோச்சார ரீதியாக பார்க்கும் காலத்திலும்
5) லக்கினாதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
6) 7ம் அதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
7) ராகு/கேது கோச்சார ரீதியாக ஜாதகத்தில் லக்கினம், ராசி, நவாம்ச லக்கினம், சுக்கிரன் இருக்கும் ராசி ஆகிய இடங்களுக்கு வரும் காலத்திலும்
8) சனி தசை அல்லது புத்தி காலத்திலும்
9) ஏழரைச் சனி காலத்திலும்
10) சுக்கிரனின் தசை அல்லது புத்தி காலத்திலும்
11) ராகு/கேதுவின் தசை அல்லது புத்தி காலத்திலும்


இவ்வனைத்திலும் ஒரு சில அமைப்புகளாவது ஒன்றாக கூடி வரும் போது கண்டிப்பாக ஜாதகருக்கு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திருமணம் நடைபெரும்

Friday, November 4, 2011

சரஸ்வதி யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு, சுக்கிரன், புதன் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ, 1ம் இடம், 2ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் அகிய இடங்களில் நின்றால் அதற்கு பெயர் சரஸ்வதி யோகம் எனப்படும்.
      சரஸ்வதி யோகம் பெற்ற ஜாதகர் நல்ல கற்றவறாக, புத்திசாலியாக, அணைவரும் பாராட்டத் தக்க வகையில் வாழ்க்கை இருக்கும். மிக நல்ல வசதியுடன், நல்ல மனைவி, குழந்தைகள், குடும்பம், வண்டி வாகனம் அணைத்தும் நல்ல முறையில் அமைந்திருக்கும். அவர் இந்த பூமிதனில் போற்றத் தக்க மனிதராக‌ திகழ்வார்.

Thursday, November 3, 2011

நன்மை செய்யாத அமைப்புகள்-2 ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் சந்திரனின் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 12ல் இருக்கும் கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாரா, அதன் பலன்களாவன.......
1) எதிலும் ஒரு குழப்பமான நிலை, சரியாக முடிவெடுக்க முடையாத தன்மை.
2) எதிலும் அதிகமான அலைச்சல்,பெற்றோர்களிடம் இணக்கம் குறைந்து போதல்.
3) எல்லாவற்ரிலும் கவலை, சோர்வு.
4) ஏமாற்றம், நம‌க்குறியவர்கள் கூட நம்மை அரவணைக்கதது போன்ற உணர்வு.
5) எல்லாவற்றிலும் தவறான முடிவு எடுத்து, அதனால் பாதிக்கப்பெறுதல், இதனால் நிம்மதி குழந்து போதல்.