Wednesday, July 24, 2019

6ம் இடம் மற்றும் 8ம் இடம் ஒரு வித்தியாசமான பார்வை

6 - ஆம் இடம். ருண ரோக சத்ரு ஸ்தானம் (கடன், நோய், எதிரி) ஏன்?
ஆறாமிட அதிபதி மற்றும் ஆறாம் இடத்தில் அமர்ந்த கிரகங்களின் தசை அல்லது புத்தியில் கடன், நோய் அல்லது எதிரி தொந்தரவுகள் உண்டு.
முன்ஜென்ம கர்ம வினைகளைப் பொருத்தே, இந்த ஜென்ம பிறப்பு நல்லதாகவோ அல்லது பாதகமாகவோ அமையும்.
6 - ஆம் இடத்தைத் தெரிந்து கொள்ளும் முன் 8 - ஆம் இடத்தைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம். 8 எட்டாம் இடம் என்பது மனைவி, பங்குதாரர்கள் மற்றும் எதிராளி (புதிதாக அறிமுகமாகுபவர்கள்), பொதுஜனத் தொடர்பு. இவர்களின் கையிருப்பு பணம் மற்றும் அசையும் சொத்துக்களை குறிப்பது. பொதுவாக ஒருவர் நமக்கு பணம் தருகிறார் அல்லது கடன் தருகிறார் என்றால் அது 8 ஆம் இடம்(அவருக்கு இரண்டாமிடம்). நம் கைக்கு பணம் வந்து சேருவது 2 ஆம் இடம்.
சரி 6-ஆம் இடத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?
நமக்கு பணம் கொடுத்தவர் 7 ஆம் இடம். அவருக்கு விரயம் 6 ஆம் இடம்.
ஒருவரின் விரயமே (6 ஆம் இடம்) நமக்கு கடன் ஆகிறது.
சரி, ஒருவருக்கு 6 ல் அதிக கிரகம் இருந்து அதன் தசை மற்றும் புக்தி நடந்தால், அவர் பூர்வ ஜென்ம கடனை அடைக்க பிறந்து இருக்கிறார் எனலாம். ஏனென்றால் ஆறாமிடம் பூர்வ புண்ணியத்துக்கு இரண்டாமிடம். (முற்பிறவி கையிருப்பு பணம், கொடுக்காமல் இருந்திருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் அல்லது ஏமாற்றி இருக்கலாம்).
எனவே ஜாதகர் 6 ல் உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடக்கும் போது கடன் படுவார். சொத்து பத்துக்கள் அதிகம் இருந்து கடன் பட வாய்ப்பு இல்லை என்றால், எவரிடமாவது கொடுத்து (கோர்ட் கேஸ் என்று பணத்தைக் கொடுத்து இழத்தல், சீட்டுப்போட்டு ஏமாறுதல், மனைவி,எதிராளி, பங்குதாரர்கள் இவர்களிடம் ஏமாறுவது, லஞ்சம் கொடுத்து ஏமாறுவது, உதவி செய்து ஏமாறுவது, உறவினர்களிடம் கொடுத்து ஏமாறுவது இது போன்ற பல).
சரி, கடனும் படவில்லை. பணத்தை இழந்து எதிரியையும் சம்பாதிக்கவில்லை, ஜாதகர் உஷாராக இருக்கிறார் என்றால், கடைசி ஆயுதம் நோய்தான். நோய் வர ஜாதகர் கடன் பட்டே ஆகவேண்டும். அல்லது நோயின் கடுமையை(உடல் உறுப்புகளை இழத்தல், நோயுடனே வாழ்வது) ஜாதகர் அனுபவித்தே ஆக வேண்டும். இவ்வாறு ஜாதகர் கடன்பட்டு பணத்தை இழந்தே ஆகவேண்டும்.
ஏனென்றால் 8 ஆம் இடத்திற்கு லாபஸ்தானம் 6 ஆம் இடம். ஏழாம் இடத்திற்கு இரண்டாம் இடத்திற்கு (எதிராளிக்கு) பணம் போய்ச் சேர வேண்டும்.
இப்பொழுது புரிந்திருக்கும். எட்டாம் இடத்திற்கு ஏன் லாபஸ்தானம் ஆறாம் இடம் என்று. அதனால் கடன் வாங்கியவர்கள், அடுத்தவரை ஏமாற்றியவர்கள், நம்மை மதித்து பணம் கொடுத்தவர்களுக்கு, அந்தந்த ஜென்மத்திலேயே கடனை திருப்பி சரியாக செலுத்திவிட வேண்டும். இல்லையென்றால் பூர்வ ஜென்ம கர்ம வினைப்படி இந்த பிறப்பில் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் அதிக கிரகம் இருந்து தசை புத்தி நடக்கும்போது ஜாதகர் கடன்பட்டு பூர்வஜென்ம கடனை Balance செய்வார். 

No comments:

Post a Comment