Tuesday, September 4, 2012

கொடுமனம் கொண்டவர்கள்? ஜோதிடக்குறிப்பு


      ராகு இருந்த இடத்தில் இருந்து 5ல் மற்றும் 9ல் சனி, குரு இருந்தால் ஜாதகர் சண்டாளன் ஆவார்.
      ராகு இருந்த இடத்துக்கு பத்தாம் அதிபதி நீச்சமடைந்து ராகுவுடன் இருப்பின், அந்த ஜாதகர் செய்யும் பாவச்செயல்கள் பெரும் பிரசித்தி அடையும்.
      சனி லக்கினாதிபதியாகி 6ல் அமர, 6ம் அதிபதி 10ல் அமர்ந்து அவருக்கு இருபுறமும் பாபர்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகம் அடைந்தால். அந்த ஜாதகர்கள் தமக்கு யார் நன்மை செய்திருந்தாலும் பதிலுக்கு அவர்களுக்கு தீமையே செய்வர்.
      லக்கினாதிபதியும் 5ம் அதிபதியும் நீசமடைந்திருந்தாலும் அல்லது லக்கினத்திலும் ஐந்திலும் நீசமடைந்த கிரகங்கள் அமர்ந்திருந்தாலும் அவர்கள் கொடுமையான சித்தம் கொண்டவர்கள்.
      லக்கினாதிபதி லக்கினத்தில் அமர, அவருடன் 5, 6, 10, 11ம் அதிபதிகள் இனைந்திருந்தால், ஜாதகர் தினமும் பலரை ஏமாற்றுபவராக இருப்பார்.
      லக்கினத்திற்க்கு 2ம் வீட்டில் சனியோ, சுக்கிரனோ அமர்ந்து இருந்தாலும் அல்லது 2ம் வீட்டைப் பார்த்தாலும், 5,10ம் அதிபதிகள் பகை நீசமடைந்து 2ல் இருந்தாலும், இத்தகையோர் பேசிப் பேசியே பிறரை ஏமாற்றுபவர்களாக இருப்பர்

No comments:

Post a Comment