Wednesday, July 3, 2013

கலைத்துறையில் பிரகாசிக்க ஜோதிடக்குறிப்பு

      கலைத்துறையில் பிரகாசிக்க, கவிஞ‌ர்களாக, இசைக்கலைஞர்களாக, எழுத்தாளர்களாக, நடிகர், நடிகையாக, கதாசிரியர்களாக, பிரகாசிக்க புதன், சுக்கிரன், சந்திரன், குருவின் பலமே பெரிதும் உதவுகின்றது.
1) ப‌லமுள்ள சுக்கிரனை, சந்திரன் பார்த்தால், தமது திறமையை எழுத்து கவிதைகள் மூலம் பேரும் புகழும் பெற்று பிரகாசிப்பர்
2) சுக்கிரன் புதன் சேர்ந்து இரண்டில் இருந்து குரு பார்த்தால் கவிஞர்களாக, எழுத்தாளர்களாக திகழ்வர்.
3) 1ம் இடம் 5ம் இடம் கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்தால் நல்ல கலைஞர்களாவர்.
4) சுக்கிரன் லக்கினத்தில் இருந்து அத‌ற்கு கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ சந்திரன் இருந்தாலும் அல்லது சந்திரன் லக்கினத்தில் இருந்து அத‌ற்கு கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ சுக்கிர‌ன் இருந்தாலும் கலைத்துறையில் பிரகசிப்பர்.
5) லக்கினத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று, 1ம் இடத்திலோ அல்லது 2ம் இடத்திலோ புதன் இருந்து, 10ம் இடத்தை குரு பார்த்தால் கலையுலகில் சிறப்புடன் பிரகாசிப்பர்.
6)சூரியன் புதன் சந்திரன் செவ்வாய் சேர்க்கை நல்ல எழுத்தாற்றலைத் தருகிறது.
7) கேது 1, 5, 9 ல் நவம்சத்தில் இருந்தால் புத்தக எழுத்தாளர்.
8) குரு சந்திரன் இனைந்து 5 அல்லது 9ம் இடத்தில் இருந்தாலும், சந்திரன் 5 அல்லது 9ம் இடத்தில் இருந்து குருவின் பார்வை பெற்றிருந்தால் கதை, கட்டுரை எழுதுபவர்.
9) சந்திரன் இருக்கும் இடத்திற்க்கு 10ல் புதன் சனி சேர்க்கை பெற்று கெடாமல் இருந்தால், கவிதை, கதை, கட்டுரை எழுதுபவர்.
10) புதனும் குருவும் இனைந்து 1, 2, 5 அல்லது 9ல் பழுதுராமல் இருந்தால் சிறந்த கவிஞர், கதாசிரியராவார்.

No comments:

Post a Comment